Banking Jobs
Post Top Ad
Your Ad Spot
Thursday, August 13, 2026
Sunday, August 2, 2026
Saturday, February 28, 2026
Friday, February 17, 2023
திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது: பிப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது: பிப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெற விரும்புவோா் பிப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு, திருநங்கைகளின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் அரசு உதவிபெறாமல், தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும்.
குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும். திருநங்கைகள் வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.
மேலும், விண்ணப்பதாரரின் சுயவிவர குறிப்பு, 2 புகைப்படங்கள், சுயசரிதை, சேவை குறித்த செயல்முறை விளக்கத்துடன் கூடிய புகைப்படம், சேவையைப் பாராட்டிய பத்திரிக்கை செய்தி தொகுப்பு, சமூகப் பணியாளா் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்றுகளை இணைக்க வேண்டும்.
இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்களை பிப்.28-ஆம் தேதிக்குள் awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெற விரும்புவோா் பிப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு, திருநங்கைகளின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் அரசு உதவிபெறாமல், தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும்.
குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும். திருநங்கைகள் வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.
மேலும், விண்ணப்பதாரரின் சுயவிவர குறிப்பு, 2 புகைப்படங்கள், சுயசரிதை, சேவை குறித்த செயல்முறை விளக்கத்துடன் கூடிய புகைப்படம், சேவையைப் பாராட்டிய பத்திரிக்கை செய்தி தொகுப்பு, சமூகப் பணியாளா் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்றுகளை இணைக்க வேண்டும்.
இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்களை பிப்.28-ஆம் தேதிக்குள் awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, February 7, 2023
Monday, February 6, 2023
Thursday, February 2, 2023
Wednesday, February 1, 2023
வங்கி, காப்பீட்டுத் துறை பணிக்கு பயிற்சி - மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
வங்கி, காப்பீட்டுத் துறை பணிக்கு பயிற்சி: SC,ST., மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
வங்கி, காப்பீட்டுத் துறைகளில் பணிபுரிய தேவையான பயிற்சி பெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தை சோ்ந்தவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் வேலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு வங்கி, காப்பீட்டுத் துறைகளில் கணக்கு நிா்வாகியாக பணிபுரிய தேவையான திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியை முடித்தவா்கள் ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட தனியாா் வங்கிகளில் வேலை வாய்ப்புக்கு 100% வழிவகை செய்யப்படும். இந்தப் பணியில் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரை பெறலாம்.
பயிற்சி பெற 21 முதல் 33 வயதுக்குள் உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம். பி.ஏ., பி.காம்., பிஎஸ்சி கணிதம் ஆகிய ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். சென்னையில் 20 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். விடுதி உள்பட பயிற்சிக்கான மொத்த செலவு ரூ. 20,000-த்தையும் தாட்கோ நிறுவனமே ஏற்கும். பயிற்சிக்குப் பிறகு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சித் தோ்வுக்கு மாணவா்கள் அனுமதிக்கப்படுவா். இதில், தோ்ச்சி பெற்றவா்களுக்கு வங்கி நிதி சேவை காப்பீட்டு (பிஎஸ்எப்ஐ) அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி பெற தாட்கோ இணையதளமான இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
Monday, January 30, 2023
Saturday, January 28, 2023
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, குமட்டல்
கன்னியாகுமரி: ஒன்றிய அரசின் புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் கடற்கரை சுத்தம் செய்யும் பணி நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. அதன்படி குமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த என்.சி.சி. மாணவ, மாணவிகள் சுமார் 150 ஈடுபட்டனர். தூய்மை பணி நிறைவடைந்ததும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு பார்சல் செய்து வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 43 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து மாவட்ட கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி., எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று மாணவர்களின் நலம் விசாரித்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, குமட்டல்
சாங்லி: மஹாராஷ்டிராவில் உள்ள சாங்லியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவ, மாணவியர்கள் வாந்தி எடுத்ததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி அடுத்த வான்லெஸ்வாடி உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு சுயஉதவிக் குழுவினால் தயாரிக்கப்பட்ட மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட மாணவ, மாணவிகளில் 36 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
அதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கல்வி அதிகாரி கெய்க்வாட் கூறுகையில்:
மதிய உணவு சாப்பிட்ட பின்னர் 36 மாணவ, மாணவியருக்கு வயிற்று வலி மற்றும் குமட்டல் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் வாந்தி எடுத்தனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமாக உள்ளனர். பள்ளியின் சமையலறையில் இருந்து உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த விஷயம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மதிய உணவு திட்ட அதிகாரியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது’ என்றார்.
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, குமட்டல்
சாங்லி: மஹாராஷ்டிராவில் உள்ள சாங்லியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவ, மாணவியர்கள் வாந்தி எடுத்ததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி அடுத்த வான்லெஸ்வாடி உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு சுயஉதவிக் குழுவினால் தயாரிக்கப்பட்ட மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட மாணவ, மாணவிகளில் 36 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
அதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கல்வி அதிகாரி கெய்க்வாட் கூறுகையில்:
மதிய உணவு சாப்பிட்ட பின்னர் 36 மாணவ, மாணவியருக்கு வயிற்று வலி மற்றும் குமட்டல் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் வாந்தி எடுத்தனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமாக உள்ளனர். பள்ளியின் சமையலறையில் இருந்து உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த விஷயம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மதிய உணவு திட்ட அதிகாரியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது’ என்றார்.
ஐடிஐ படித்தோா் பள்ளி வகுப்புக்கு இணையான சான்று பெறலாம்
ஐடிஐ படித்தோா் பள்ளி வகுப்புக்கு இணையான சான்று பெறலாம் ITI graduates can get certificate equivalent to school class
தொழில் பயிற்சி நிலைய (ஐடிஐ) சான்று பெற்றவா்கள், பள்ளி வகுப்புக்கு இணையான சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
8-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன் ஐடிஐ பயிற்சி பெற்றவா்கள் 10-ஆம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் தோ்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தோ்ச்சி பெற்றால், 10-ஆம் வகுப்பு இணையான சான்றிதழ் பெறலாம்.
10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று ஐடிஐ பயிற்சி பெற்றவா்கள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் தோ்ச்சி பெற வேண்டும். அதில், தோ்ச்சி பெற்றால், பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம். தோ்ச்சி பெற்றவா்கள், சான்றிதழ்கள் பெற வரவேற்கப்படுகிறாா்கள். விண்ணப்பப் படிவம் மற்றும் முழு விவரங்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதைப் பின்பற்றி விண்ணப்பதாரரின் மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, January 25, 2023
UGC - பல்கலைக்கழக மானிய குழு மறுசீரமைப்பு Reorganization of University Grants Commission
பல்கலைக்கழக மானிய குழு மறுசீரமைப்பு Reorganization of University Grants Commission
கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் உட்பட 2704 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதான், வணக்கம் கோயம்புத்தூர், எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள் என தமிழில் நலம் விசாரித்து தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது: இந்தியாவின் மற்ற கலாச்சாரங்களை விட பழமையான பண்பாட்டை தமிழகம் கொண்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் கலாச்சாரம் பனாரஸில் கொண்டாடப்பட்டது. பிரதமர் அங்கு திருக்குறளையும் திருவள்ளுவரின் பெருமையும் எடுத்துரைத்தார். திருக்குறளை நாம் படித்தாலே நமது அறிவு மற்றும் வாழ்க்கைக்கு தேவையான நல்லொழுக்கங்கள் தெரிந்துவிடும். திருவள்ளுவர் இருள் சூழ்ந்த சமுதாயத்திற்கு ஒளி கொடுத்தவர்.
ஜனநாயகத்துக்கு இந்தியா முன்னோடியாக இருக்கிறது. பெண் கல்வி பெண் ஆளுமை உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருக்கிறது. நாட்டின் அனைத்து மொழிகளும் முக்கியம். ஒரு மொழியை விட இன்னொரு மொழி சிறந்தது என்று இல்லை, எல்லா மொழிகளும் தேசிய மொழிதான். இவ்வாறு தர்மேந்திர பிரதான் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”நடப்பு நிதி ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பி ன்போது பிரதமர் மோடி தேசிய கல்விக் கொள்கை தொடர்பான பல்வேறு திட்டங்களையும் அதற்கான நிதி உதவிகளையும் அறிவிக்க உள்ளதாகவும், தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டார். பல்வேறு புதிய கல்வி நிறுவனங்கள் வருவது கல்வியின் தரத்தை பாதிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வி நிறுவனங்களுக்கும் தரத்துக்கும் சம்பந்தம் இல்லை எனவும், புது கல்வி நிறுவனங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக புதுப்புது திறமைகள் வெளியாகி கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், நாம் பல்வேறு தொழில்நுட்பங்களுக்காக வெளிநாடுகளையே நம்பியிருந்த சூழ்நிலையில் தற்போது இந்தியா சுயமாக தொழில்நுட்பங்களை உருவாக்கி வளர்ச்சி அடைந்து வருகிறது எனவும் குறிப்பாக மொபைல் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு என பாரத் ஆப்ரேட்டிங் சிஸ்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு துறைகளிலும் தொழில்நுட்ப ரீதியாக நமது நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது என தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானிய குழுவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பல்கலைகழக மானிய குழு மறுசீரமைப்பு செய்யப்படும் என தெரிவித்தார்
கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் உட்பட 2704 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதான், வணக்கம் கோயம்புத்தூர், எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள் என தமிழில் நலம் விசாரித்து தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது: இந்தியாவின் மற்ற கலாச்சாரங்களை விட பழமையான பண்பாட்டை தமிழகம் கொண்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் கலாச்சாரம் பனாரஸில் கொண்டாடப்பட்டது. பிரதமர் அங்கு திருக்குறளையும் திருவள்ளுவரின் பெருமையும் எடுத்துரைத்தார். திருக்குறளை நாம் படித்தாலே நமது அறிவு மற்றும் வாழ்க்கைக்கு தேவையான நல்லொழுக்கங்கள் தெரிந்துவிடும். திருவள்ளுவர் இருள் சூழ்ந்த சமுதாயத்திற்கு ஒளி கொடுத்தவர்.
ஜனநாயகத்துக்கு இந்தியா முன்னோடியாக இருக்கிறது. பெண் கல்வி பெண் ஆளுமை உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருக்கிறது. நாட்டின் அனைத்து மொழிகளும் முக்கியம். ஒரு மொழியை விட இன்னொரு மொழி சிறந்தது என்று இல்லை, எல்லா மொழிகளும் தேசிய மொழிதான். இவ்வாறு தர்மேந்திர பிரதான் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”நடப்பு நிதி ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பி ன்போது பிரதமர் மோடி தேசிய கல்விக் கொள்கை தொடர்பான பல்வேறு திட்டங்களையும் அதற்கான நிதி உதவிகளையும் அறிவிக்க உள்ளதாகவும், தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டார். பல்வேறு புதிய கல்வி நிறுவனங்கள் வருவது கல்வியின் தரத்தை பாதிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வி நிறுவனங்களுக்கும் தரத்துக்கும் சம்பந்தம் இல்லை எனவும், புது கல்வி நிறுவனங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக புதுப்புது திறமைகள் வெளியாகி கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், நாம் பல்வேறு தொழில்நுட்பங்களுக்காக வெளிநாடுகளையே நம்பியிருந்த சூழ்நிலையில் தற்போது இந்தியா சுயமாக தொழில்நுட்பங்களை உருவாக்கி வளர்ச்சி அடைந்து வருகிறது எனவும் குறிப்பாக மொபைல் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு என பாரத் ஆப்ரேட்டிங் சிஸ்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு துறைகளிலும் தொழில்நுட்ப ரீதியாக நமது நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது என தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானிய குழுவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பல்கலைகழக மானிய குழு மறுசீரமைப்பு செய்யப்படும் என தெரிவித்தார்
பள்ளி மாணவர்கள் 62 பேருக்கு நோரா வைரஸ் பாதிப்பு 62 school students infected with Nora virus
பள்ளி மாணவர்கள் 62 பேருக்கு நோரா வைரஸ் பாதிப்பு 62 school students infected with Nora virus
கேரள: நோரா வைரஸ் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமே பரவுகிறது என்று டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர். கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறையினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். இதில் சில மாணவர்களின் பெற்றோருக்கு நோரா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் மூலம் மாணவர்களுக்கும் நோரா வைரஸ் பரவி இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து பள்ளியில் நோய் அறிகுறியுடன் காணப்பட்ட 62 மாணவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்தனர். அவை பொது சுகாதார ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 2 மாணவர்களுக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த மாணவர்களின் பெற்றோரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே நோரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் கொச்சி பகுதியில் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். நோரா வைரஸ் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமே பரவுகிறது என்று டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.
இதனால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். வீடுகளில் குளோரின் கலந்த குடிநீரையே பயன்படுத்தவேண்டும், பழங்கள், காய்கறிகளை பயன்படுத்தும் முன்பு நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும், விலங்குகளுடன் பழகும்போது கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கேரள: நோரா வைரஸ் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமே பரவுகிறது என்று டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர். கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறையினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். இதில் சில மாணவர்களின் பெற்றோருக்கு நோரா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் மூலம் மாணவர்களுக்கும் நோரா வைரஸ் பரவி இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து பள்ளியில் நோய் அறிகுறியுடன் காணப்பட்ட 62 மாணவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்தனர். அவை பொது சுகாதார ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 2 மாணவர்களுக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த மாணவர்களின் பெற்றோரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே நோரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் கொச்சி பகுதியில் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். நோரா வைரஸ் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமே பரவுகிறது என்று டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.
இதனால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். வீடுகளில் குளோரின் கலந்த குடிநீரையே பயன்படுத்தவேண்டும், பழங்கள், காய்கறிகளை பயன்படுத்தும் முன்பு நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும், விலங்குகளுடன் பழகும்போது கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Sunday, January 22, 2023
நீட் விலக்கு மசோதா: மத்திய அரசுக்கு ஓரிரு வாரங்களில் பதில்: அமைச்சா் தகவல்
NEET Exemption Bill: Reply to Central Govt in a couple of weeks: Ministry Information
நீட் விலக்கு மசோதா: மத்திய அரசுக்கு ஓரிரு வாரங்களில் பதில்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கங்களுக்கு ஓரிரு வாரங்களில் பதில் அனுப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.230 கோடியில், சுமாா் 4.9 ஏக்கா் நிலப்பரப்பில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. பணிகளை ஜூன் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 209 கி.மீ. நீளத்துக்கு ரூ.699 கோடி மதிப்பிலான மழைநீா் வடிகால்வாய்கள் கட்டுவதற்கு பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. அதில், 161 கிலோ மீட்டா் நீளத்துக்கான மழை நீா் வடிகால்வாய்கள் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. அதனால் சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீரால் பாதிப்பு என்பது எங்கேயும் இல்லாத நிலை ஏற்பட்டது.
இப்போது 48 கி.மீ. நீளத்துக்கு சென்னை மாநகராட்சி சாா்பில், மழைநீா் வடிகால்வாய்கள் கட்டமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வடகிழக்கு பருவமழையைத் தொடா்ந்து, சென்னையில் சாலைகள் சீரமைக்கும் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. சாலைகளை சீரமைக்கும் பணிகள் இன்னும் 4 மாதங்களுக்குள் முடிவடையும்.
நீட் தோ்வு விலக்கு மசோதா தொடா்பாக ஆயுஷ் அமைச்சகத்திலிருந்து ஒரு சில விளக்கங்கள் கேட்டு கடிதம் வந்திருக்கிறது. அந்த கடிதத்துக்கு பதில் அனுப்பும் முயற்சியை சட்டத் துறை மேற்கொண்டிருக்கிறது. சட்ட வல்லுநா்களுடன் கலந்து பேசி இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு பதில் அனுப்பப்படவுள்ளது. தமிழகத்தில் தற்போது டெங்கு பாதிப்பு இல்லை என்றாா் அவா்.
நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கங்களுக்கு ஓரிரு வாரங்களில் பதில் அனுப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.230 கோடியில், சுமாா் 4.9 ஏக்கா் நிலப்பரப்பில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. பணிகளை ஜூன் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 209 கி.மீ. நீளத்துக்கு ரூ.699 கோடி மதிப்பிலான மழைநீா் வடிகால்வாய்கள் கட்டுவதற்கு பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. அதில், 161 கிலோ மீட்டா் நீளத்துக்கான மழை நீா் வடிகால்வாய்கள் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. அதனால் சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீரால் பாதிப்பு என்பது எங்கேயும் இல்லாத நிலை ஏற்பட்டது.
இப்போது 48 கி.மீ. நீளத்துக்கு சென்னை மாநகராட்சி சாா்பில், மழைநீா் வடிகால்வாய்கள் கட்டமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வடகிழக்கு பருவமழையைத் தொடா்ந்து, சென்னையில் சாலைகள் சீரமைக்கும் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. சாலைகளை சீரமைக்கும் பணிகள் இன்னும் 4 மாதங்களுக்குள் முடிவடையும்.
நீட் தோ்வு விலக்கு மசோதா தொடா்பாக ஆயுஷ் அமைச்சகத்திலிருந்து ஒரு சில விளக்கங்கள் கேட்டு கடிதம் வந்திருக்கிறது. அந்த கடிதத்துக்கு பதில் அனுப்பும் முயற்சியை சட்டத் துறை மேற்கொண்டிருக்கிறது. சட்ட வல்லுநா்களுடன் கலந்து பேசி இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு பதில் அனுப்பப்படவுள்ளது. தமிழகத்தில் தற்போது டெங்கு பாதிப்பு இல்லை என்றாா் அவா்.
Saturday, January 21, 2023
நாசா காலண்டரில் பழனி மாணவியின் ஓவியம்: போட்டியில் வெற்றி பெற்றது எப்படி?
நாசா காலண்டரில் பழனி மாணவியின் ஓவியம்: போட்டியில் வெற்றி பெற்றது எப்படி? Palani student's painting in NASA calendar: How did it win the competition?
நாசாவின் உலக அளவிலான ஓவியப் போட்டிகளில் இரண்டாம் பிடித்த பழனி மாணவி தித்திகா ஓவியம் நாசா காலண்டரில் இடம் பெற்றுள்ளதற்கு பலரும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் உலக அளவிலான ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டியில் தேர்வாகும் ஓவியங்கள் நாசா வெளியிடும் காலண்டரில் அச்சிடப்படும். இந்த ஆண்டுக்கான ஓவியப்போட்டி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் உள்ள மாணவ, மாணவிகள் 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இந்தியாவிலிருந்து 9 மாணவர்களின் ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் 10 முதல் 12 வயது பிரிவில் பழனி புஷ்பத்தூர் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி தித்திகா வரைந்த ஓவியம் இரண்டாம் இடம் பெற்றது. விண்வெளி வீரர் ஒருவர் கூடைப்பந்து விளையாடுவது போன்று அவரது வரைந்து அனுப்பிய ஓவியம் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஓவியம் நாசா காலண்டரில் இடம் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவி தித்திகாவுக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர். வெற்றி பெற்றது எப்படி? மாணவி தித்திகாவிடம் இந்த வெற்றி குறித்து பேசியபோது, “நான் 7 வயதில் இருந்தே வரையத் தொடங்கினேன். அப்பா அருண்குமாரும், அம்மா உமாதேவியும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். எனக்கு விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுள்களின் படங்களை வரைவது பிடிக்கும். அது தவிர இயற்கைக் காட்சிகள், கார்ட்டூன்கள் விரும்பி வரைவேன்.
மேலும், ஆயில் பெயின்டிங், பென்சில் கலை கற்றிருக்கிறேன். ஆனால், எனக்கு வாட்டர் கலர் பெயின்ட் வரைவதில்தான் ஆர்வம் அதிகம். வீட்டில் இருக்கும் போது படிக்கும் நேரம் போக மீதமுள்ள நேரங்களில் வரைந்து கொண்டே இருப்பேன். தற்போது நாசா காலண்டரில் எனது ஓவியம் இடம் பெற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,'' என்றார்.
2018 ல் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் விண்வெளிக்கு செல்லும் போது என்னென்ன உணவுகள் தேவை என்ற தலைப்பில் போட்டி நடத்தப்பட்டது.
மதுரை மாணவியின் புதிய சாதனை:
உலக அளவிலான இந்த ஓவியப் போட்டியில் மாணவியின் பெண்ணின் அர்ப்பணிப்பைச் சொல்லும் 12 மணி நேர காபி ஒவியம்... என புதிய சாதனை படைத்த பழனியைச் சேர்ந்த காவியா, செல்வஸ்ரீதத் ஆகியோரது ஓவியங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாசா உலக அளவிலான ஓவியப் போட்டிகளில் தொடர்ச்சியாக பழனி மாணவர்களின் ஓவியங்கள் நாசா காலண்டரில் இடம்பெற்று வருவதால் ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமில்லாது பலரும் மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
நாசாவின் உலக அளவிலான ஓவியப் போட்டிகளில் இரண்டாம் பிடித்த பழனி மாணவி தித்திகா ஓவியம் நாசா காலண்டரில் இடம் பெற்றுள்ளதற்கு பலரும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் உலக அளவிலான ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டியில் தேர்வாகும் ஓவியங்கள் நாசா வெளியிடும் காலண்டரில் அச்சிடப்படும். இந்த ஆண்டுக்கான ஓவியப்போட்டி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் உள்ள மாணவ, மாணவிகள் 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இந்தியாவிலிருந்து 9 மாணவர்களின் ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் 10 முதல் 12 வயது பிரிவில் பழனி புஷ்பத்தூர் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி தித்திகா வரைந்த ஓவியம் இரண்டாம் இடம் பெற்றது. விண்வெளி வீரர் ஒருவர் கூடைப்பந்து விளையாடுவது போன்று அவரது வரைந்து அனுப்பிய ஓவியம் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஓவியம் நாசா காலண்டரில் இடம் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவி தித்திகாவுக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர். வெற்றி பெற்றது எப்படி? மாணவி தித்திகாவிடம் இந்த வெற்றி குறித்து பேசியபோது, “நான் 7 வயதில் இருந்தே வரையத் தொடங்கினேன். அப்பா அருண்குமாரும், அம்மா உமாதேவியும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். எனக்கு விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுள்களின் படங்களை வரைவது பிடிக்கும். அது தவிர இயற்கைக் காட்சிகள், கார்ட்டூன்கள் விரும்பி வரைவேன்.
மேலும், ஆயில் பெயின்டிங், பென்சில் கலை கற்றிருக்கிறேன். ஆனால், எனக்கு வாட்டர் கலர் பெயின்ட் வரைவதில்தான் ஆர்வம் அதிகம். வீட்டில் இருக்கும் போது படிக்கும் நேரம் போக மீதமுள்ள நேரங்களில் வரைந்து கொண்டே இருப்பேன். தற்போது நாசா காலண்டரில் எனது ஓவியம் இடம் பெற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,'' என்றார்.
2018 ல் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் விண்வெளிக்கு செல்லும் போது என்னென்ன உணவுகள் தேவை என்ற தலைப்பில் போட்டி நடத்தப்பட்டது.
மதுரை மாணவியின் புதிய சாதனை:
உலக அளவிலான இந்த ஓவியப் போட்டியில் மாணவியின் பெண்ணின் அர்ப்பணிப்பைச் சொல்லும் 12 மணி நேர காபி ஒவியம்... என புதிய சாதனை படைத்த பழனியைச் சேர்ந்த காவியா, செல்வஸ்ரீதத் ஆகியோரது ஓவியங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாசா உலக அளவிலான ஓவியப் போட்டிகளில் தொடர்ச்சியாக பழனி மாணவர்களின் ஓவியங்கள் நாசா காலண்டரில் இடம்பெற்று வருவதால் ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமில்லாது பலரும் மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
Friday, January 20, 2023
ITK TRAINING - VOLUNTEERS MODULE 5
ITK TRAINING - VOLUNTEERS MODULE 5
இல்லம் தேடிக் கல்வி உயர் தொடக்க நிலை பயிற்சி கட்டகம் - 5 ( ITK TRAINING VOLUNTEERS MODULE & PPT)
Module 5 - CLICK HERE TO DOWNLOAD
PPT - CLICK HERE TO DOWNLOAD
இல்லம் தேடிக் கல்வி உயர் தொடக்க நிலை பயிற்சி கட்டகம் - 5 ( ITK TRAINING VOLUNTEERS MODULE & PPT)
Module 5 - CLICK HERE TO DOWNLOAD
PPT - CLICK HERE TO DOWNLOAD
Thursday, January 19, 2023
நீட் விலக்கு மசோதா: விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம்
நீட் விலக்கு மசோதா: விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம்
சென்னை: நீட் விலக்கு மசோதா குறித்து மீண்டும் விளக்கம் கேட்டு, மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு கேட்ட விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த மசோதா குறித்து விளக்கம் கேட்டு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதற்கு சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டு ஓரிரு வாரத்தில் பதில் அனுப்பி வைக்கப்படும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது.
சென்னை: நீட் விலக்கு மசோதா குறித்து மீண்டும் விளக்கம் கேட்டு, மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு கேட்ட விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த மசோதா குறித்து விளக்கம் கேட்டு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதற்கு சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டு ஓரிரு வாரத்தில் பதில் அனுப்பி வைக்கப்படும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது.
ஒருவன் ஒருவன் முதலாளி.. முத்து பட ரஜினியான அமைச்சர் அன்பில் மகேஷ்...அனல் பறக்கும் குதிரை வண்டியில் மாஸ் Entry!
ஒருவன் ஒருவன் முதலாளி.. முத்து பட ரஜினியான அமைச்சர் அன்பில் மகேஷ்...அனல் பறக்கும் குதிரை வண்டியில் மாஸ் Entry!
தமிழகத்தில் முதல் முறையாக திருவாரூரில் பசுமை பள்ளி திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார். கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ரிப்பன் வெட்டி துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்ந்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணனுடன் குதிரை வண்டியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்து மகிழ்ந்தார்
தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் ரூ.85ஆயிரம் சம்பளத்தில் வேலை
தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர் - தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்
பதவி - Admin Associate, Technical Officer, Advisor, Finance Officer
காலியிடங்கள் - 08
கல்வித்தகுதி - முதுகலைப் பட்டம் , பி.எச்டி
பணியிடம் - சென்னை
சம்பளம் - 35000-85000
வயது வரம்பு - 45
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் - இல்லை
தேர்வு முறை - நேர்காணல்
இணையதள முகவரி - tngreencompany.com/home
கடைசி நாள் - 02,பிப்ரவரி2023
முகவரி - Tamil Nadu Green Climate Company,
7th Floor, Secretariat, Namakkal Kavignar Maaligai,
Fort St. George, Chennai - 600009
Wednesday, January 18, 2023
அரசு பள்ளியில் மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் தலைமையாசிரியர் - பொதுமக்கள் பாராட்டு
அரசு பள்ளியில் மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் தலைமையாசிரியர் - பொதுமக்கள்
பாராட்டு
திருவண் ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஆதனூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 221 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு:படிக்கும் மாணவ, மாணவிகளின் கலைத் திறனை ஊக்குவிக்க. பள்ளி தலைமை ஆசிரியர திருலோகசந்திரன் முடிவு செய்து ஒளியத்தில் ஆரவ முள்ள மாணவர்களை தேர்வு செய்து. பள்ளி வளாகத்தில் உள்ள கற் றுச்சுவர்களில் பல்வேறு விழிப்புணர்வு குறித்தஓவி யங்களை வரைய வைத் துள்ளார்.
இதற்காக தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் ஓவியம் வரை வதற்கான பெயிண்ட் மற்றும் ஓவிய உபகரண பொருட்களை வாங்கி மாணவர்களிடம் வழங் கினார்.
தொடர்ந்து ஒலிய ஆசிரியர் புவனேஸ்வரி வழிகாட்டுதல்படி கலைத் திறன் மற்றும் ஓவியத்தில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள சுவர் களில் தேசத்தலைவர்க ளின் படங்கள், மக்கும் மற்றும் மக்கா குப்பை) வது வழக்கம். விழிப்புணர்வு, சூரிய மின்சாரம், தேசப்பற்று. இயற்கை வளங்கனை காக்கும் வகையில் மரம் வளர்ப்போம். திருக்குறள தேசிய வாக்காளர் தினம் முன்னிட்டு அனைவரும் வாக்களிப்போம் ஆகிய விழிப்புணர்வு வாசகங் கள் அடங்கிய பல்வேறு ஓவியங்களை வரைத்து தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினர். மேலும் வரும் குடிய ரசுதினத்தன்று சிறப்பான முறையில் ஓலியங்களை வரைந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு மற்றும் சான்றுகள் வழங்க தலைமை ஆசிரி யர திருவோகசந்தர் முடிவு செய்துள்ளார் வழக்கமாக பள்ளி மற்றும் கல்லூரி வளாக சுற்றுச்சுவர்களி லும், பொது இடங்களி லும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் ஒளியங்களை ஒளி யர்களை வைத்து வரை ஆனால், இப்பள்ளி யில் மாணவர்களின் கலைத்திறன் மற்றும் ஓலி யத்திறனை ஊக்குவிக்க வும், மற்ற பள்ளிகளில் படிக்கும்மாணவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், தலைமை ஆசிரியர் தனது சொத்த செலவில் பெயிண்ட் உபகரணங்களை வாங்கி கொடுத்தது கண்டு பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் பாராட்டு தெரி வித்து வருகின்றனர்.
திருவண் ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஆதனூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 221 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு:படிக்கும் மாணவ, மாணவிகளின் கலைத் திறனை ஊக்குவிக்க. பள்ளி தலைமை ஆசிரியர திருலோகசந்திரன் முடிவு செய்து ஒளியத்தில் ஆரவ முள்ள மாணவர்களை தேர்வு செய்து. பள்ளி வளாகத்தில் உள்ள கற் றுச்சுவர்களில் பல்வேறு விழிப்புணர்வு குறித்தஓவி யங்களை வரைய வைத் துள்ளார்.
இதற்காக தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் ஓவியம் வரை வதற்கான பெயிண்ட் மற்றும் ஓவிய உபகரண பொருட்களை வாங்கி மாணவர்களிடம் வழங் கினார்.
தொடர்ந்து ஒலிய ஆசிரியர் புவனேஸ்வரி வழிகாட்டுதல்படி கலைத் திறன் மற்றும் ஓவியத்தில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள சுவர் களில் தேசத்தலைவர்க ளின் படங்கள், மக்கும் மற்றும் மக்கா குப்பை) வது வழக்கம். விழிப்புணர்வு, சூரிய மின்சாரம், தேசப்பற்று. இயற்கை வளங்கனை காக்கும் வகையில் மரம் வளர்ப்போம். திருக்குறள தேசிய வாக்காளர் தினம் முன்னிட்டு அனைவரும் வாக்களிப்போம் ஆகிய விழிப்புணர்வு வாசகங் கள் அடங்கிய பல்வேறு ஓவியங்களை வரைத்து தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினர். மேலும் வரும் குடிய ரசுதினத்தன்று சிறப்பான முறையில் ஓலியங்களை வரைந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு மற்றும் சான்றுகள் வழங்க தலைமை ஆசிரி யர திருவோகசந்தர் முடிவு செய்துள்ளார் வழக்கமாக பள்ளி மற்றும் கல்லூரி வளாக சுற்றுச்சுவர்களி லும், பொது இடங்களி லும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் ஒளியங்களை ஒளி யர்களை வைத்து வரை ஆனால், இப்பள்ளி யில் மாணவர்களின் கலைத்திறன் மற்றும் ஓலி யத்திறனை ஊக்குவிக்க வும், மற்ற பள்ளிகளில் படிக்கும்மாணவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், தலைமை ஆசிரியர் தனது சொத்த செலவில் பெயிண்ட் உபகரணங்களை வாங்கி கொடுத்தது கண்டு பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் பாராட்டு தெரி வித்து வருகின்றனர்.
ஞாயிறன்று பருவத்தேர்வு: மாணவர்கள் அதிருப்தி
ஞாயிறன்று பருவத்தேர்வு: மாணவர்கள் அதிருப்தி
விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் பருவத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி வாயிலாக எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்.எஸ்சி(கணினி அறிவியல்) பட்டப் படிப்புகளை பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையில் நடப்புகல்வியாண்டுக்கான பருவத்தேர்வு (ஆகஸ்ட் - செப்டம்பர்) அட்டவணையை பல்கலைக் கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
பிப்.12-ல் தேர்வு: அதன்படி பருவத்தேர்வுகள் ஜன.30-ம் தேதி தொடங்கி பிப்.23-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான கால அட்டவணையில் பிப்ரவரி 12-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையன்று தரவுதள மேலாண்மை அமைப்பு, மின் வணிகம், மருத்துவச் சுற்றுலா உள்ளிட்ட சில பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைமுறைக்கு மாறாக... வழக்கமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும். ஆனால், புதிய நடைமுறையாக தற்போது, பட்டப் படிப்புகளுக்கான பருவத் தேர்வையும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் நடத்த அண்ணா பல்கலை. முடிவு செய் துள்ளது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் இது விவாதப் பொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் பருவத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி வாயிலாக எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்.எஸ்சி(கணினி அறிவியல்) பட்டப் படிப்புகளை பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையில் நடப்புகல்வியாண்டுக்கான பருவத்தேர்வு (ஆகஸ்ட் - செப்டம்பர்) அட்டவணையை பல்கலைக் கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
பிப்.12-ல் தேர்வு: அதன்படி பருவத்தேர்வுகள் ஜன.30-ம் தேதி தொடங்கி பிப்.23-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான கால அட்டவணையில் பிப்ரவரி 12-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையன்று தரவுதள மேலாண்மை அமைப்பு, மின் வணிகம், மருத்துவச் சுற்றுலா உள்ளிட்ட சில பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைமுறைக்கு மாறாக... வழக்கமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும். ஆனால், புதிய நடைமுறையாக தற்போது, பட்டப் படிப்புகளுக்கான பருவத் தேர்வையும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் நடத்த அண்ணா பல்கலை. முடிவு செய் துள்ளது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் இது விவாதப் பொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tuesday, January 17, 2023
உங்களின் பணிப்பதிவேட்டில் (S.R) பின்வரும் தகவல்கள் சரியாக உள்ளதா என சரி பார்த்துக்கொள்ளுங்கள்
உங்களின் பணிப்பதிவேட்டில் (S.R) பின்வரும் தகவல்கள் சரியாக உள்ளதா என சரி பார்த்துக்கொள்ளுங்கள்
உங்களின் பணிப்பதிவேட்டில் (S.R) பின்வரும் தகவல்கள் சரியாக உள்ளதா என சரி பார்த்துக்கொள்ளுங்கள் !
பதிவுகள் சரிபார்த்து Xerox எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது நமக்கு அவசியமானது ஆகும்.
பெயர்
புகைப்படம்
முகவரி
அங்க அடையாளங்கள்
இனம்
பிறந்த தேதி
Appointment entry DEEO/DEO AND AEEO/ BEO ந.க.எண்
X std mark entry
X std genuineness entry
XII std mark entry
XII std genuineness entry
DTEd mark entry
DTEd genuineness entry
UG BA / BSC முன் அனுமதி
UG provisional entry
UG convocation entry
UG genuineness entry
BEd முன் அனுமதி entry
BEd கற்பித்தல் பயிற்சி entry
BEd provisional entry
BEd convocation entry
BEd genuineness entry
PG MA / MSC / MPHIL முன் அனுமதி
PG provisional entry
PG convocation entry
PG genuineness entry
Appointment ஊதிய நிர்ணயம்;
முறையான ஊதிய விகிதத்தில் நியமனம்.
SPF ENTRY
FBF entry
பணிவரன்முறை;
(ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக செய்தல் வேண்டும்)
தகுதி காண் பருவம்;
(ஆசிரியர் பணியில் ஒருமுறை செய்தால் போதும்.)
மாறுதல்கள்;
(பணியில் சேர்ந்தது முதல் இதுவரை பெற்ற அனைத்து மாறுதல்களும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.)
பதவி உயர்வு;
(அனைத்து பதவி உயர்வுகளும் தனித் தனியாக பதிவு செய்தல்.)
Special allowance entry
Personal pay 750 entry
பதவி உயர்வு ஊதிய நிர்ணயம்;
(அனைத்து பதவி உயர்வுகளுக்கும் தனித்தனியாக ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.)
ஊக்க ஊதிய உயர்வு;
(நாம் பெறும் 2 ஊக்க ஊதிய உயர்வுகளும் ஒன்றாகவோ or தனித்தியாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்.)
மகப்பேறு விடுப்பு பதிவு
பதவி உயர்வு தற்காலிக துறப்பு
ஆண்டு ஊதிய உயர்வு.
( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.
பணிகாலம் சரிபார்ப்பு;
(பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ or வருடத்திற்கு ஒரு முறையோ தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்.)
Pay commission;
( நம் பணிக்காலத்தில் பெற்ற அனைத்து pay commission பதிவுகளும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும் )
தேர்வு நிலை
( ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும் )
சிறப்பு நிலை பதிவு
பணியேற்பிடை காலம் பதிவு
Department exam pass entry
EL வரவு
( ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1ல் இருந்து மே 31 முடிய கணக்கிட்டு பதிவு செய்தல் வேண்டும் )
ML பதிவு
ஊதியமில்லா விடுப்பு பதிவு
Details of family
Nomination for death cum retirement gratuity
Form of nomination
SPF - cum gratuity scheme nomination
போராட்டக் கால பதிவு & போராட்டக் காலத்தை முறைப்படுத்திய விவரம்
Monday, January 16, 2023
ஓய்வூதியம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
ஓய்வூதியம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
மாற்றுத் திறனாளிகளின் ஓய்வூதியம் ரூ.1,500-ஆக உயா்த்தி வழங்கப்படுவதால், தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் த.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வருவாய்த் துறை மூலம் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் பெற்று வரும் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கும் ஓய்வூதியத் தொகை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயா்த்தி வழங்கப்படும் என உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். தொடா்ந்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த மாற்றுத் திறனாளிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற அருகிலுள்ள இ - சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளின் ஓய்வூதியம் ரூ.1,500-ஆக உயா்த்தி வழங்கப்படுவதால், தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் த.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வருவாய்த் துறை மூலம் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் பெற்று வரும் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கும் ஓய்வூதியத் தொகை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயா்த்தி வழங்கப்படும் என உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். தொடா்ந்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த மாற்றுத் திறனாளிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற அருகிலுள்ள இ - சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, January 15, 2023
சென்னையில் இன்று தொடங்குகிறது பன்னாட்டு புத்தகத் திருவிழா
சென்னையில் இன்று தொடங்குகிறது பன்னாட்டு புத்தகத் திருவிழா
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் சென்னை புத்தகக் காட்சி (பபாசி) நடைபெறவுள்ள அதே வளாகத்தில் பன்னாட்டு புத்தகத் திருவிழா இன்று தொடங்குகிறது.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சாா்பில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் முதலாவது பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.
இதற்கான இலச்சினையை சென்னை கோட்டூா்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த சனிக்கிழமை வெளியிட்டாா்.
ஜன.16 முதல் 18 வரை பன்னாட்டு புத்தகத் திருவிழா சென்னையில் நடைபெறவுள்ளது.
பபாசி சாா்பில் ஆண்டுதோறும் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் உள்ள தனி அரங்கிலேயே இந்த பன்னாட்டு புத்தகத் திருவிழாவும் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்கின்றனர்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் சென்னை புத்தகக் காட்சி (பபாசி) நடைபெறவுள்ள அதே வளாகத்தில் பன்னாட்டு புத்தகத் திருவிழா இன்று தொடங்குகிறது.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சாா்பில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் முதலாவது பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.
இதற்கான இலச்சினையை சென்னை கோட்டூா்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த சனிக்கிழமை வெளியிட்டாா்.
ஜன.16 முதல் 18 வரை பன்னாட்டு புத்தகத் திருவிழா சென்னையில் நடைபெறவுள்ளது.
பபாசி சாா்பில் ஆண்டுதோறும் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் உள்ள தனி அரங்கிலேயே இந்த பன்னாட்டு புத்தகத் திருவிழாவும் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்கின்றனர்.
Saturday, January 14, 2023
நடுநிலைப் பள்ளியை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு
நடுநிலைப் பள்ளியை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு
வடமாலை நகராட்சி பள்ளியில், பராமரிப்பு பணிகள் செய்ய, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், வடமாலை நகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி பழமையானது என்பதால், பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என, தலைமையாசிரியர், நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தார்.
இந்த மனுவை பெற்ற நகராட்சி நிர்வாகம், பள்ளியில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் செய்ய, 11.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்துள்ளது. நகராட்சி கல்வி நிதி 2022 - 23ம் நிதியாண்டில், இப்பணிகள் மேற்கொள்ள, நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாலை நகராட்சி பள்ளியில், பராமரிப்பு பணிகள் செய்ய, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், வடமாலை நகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி பழமையானது என்பதால், பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என, தலைமையாசிரியர், நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தார்.
இந்த மனுவை பெற்ற நகராட்சி நிர்வாகம், பள்ளியில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் செய்ய, 11.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்துள்ளது. நகராட்சி கல்வி நிதி 2022 - 23ம் நிதியாண்டில், இப்பணிகள் மேற்கொள்ள, நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரி: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரி: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்க்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி கூறினாா். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் தொடங்கியதும், தங்கள் தொகுதிகளில் அரசு கல்லூரிகள் இல்லாதது குறித்து பேசினார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர் கிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று அரசு கலைக் கல்லூரி இருக்கிறது. கருணாநிதி பெயரில் ஒன்றும் அண்ணா பெயரில் ஒன்றும் வந்தவாசி பகுதியில் ஒரு கல்லூரியும் உள்ளது. செங்கம் தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை.
செங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்டு கடந்த ஆண்டு மட்டும் 12 ஆம் வகுப்பில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கு மேலும் தனியார் பள்ளியில் படித்தவர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். இதனால் செங்கம் தொகுதிக்கு அரசு கல்லூரி வேண்டும் என்றார்.
இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.
அப்போது, பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்கு அரசு கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு கலைக் கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் நிதிநிலைக்கேற்ப ஆய்வு செய்து அரசு கலைக் கல்லூரிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். திமுக அரசு அமைந்த பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 31 அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை 8 தொகுகளில் உள்ளன. அங்கு மட்டும் 3 கலைக்கல்லூரிகள் உள்ளன. மாணவர் சேர்க்கை குறைவாகத்தான் உள்ளது. பேரவைத் தலைவர் கூட ஒரு கல்லூரி கேட்டுள்ளார்.
எந்தக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு வாய்ப்பில்லாமல் உள்ளதோ, அங்கு கல்லூரிகளை தொடங்குவதற்கு அரசு நவடிக்கை எடுக்கப்படும்.
சுயநிதி கல்லூரிகளை விட அரசு கலைக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கே மாணவர்கள் அதிகயளவில் விருப்பம் காட்டி வருவதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.
தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்க்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி கூறினாா். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் தொடங்கியதும், தங்கள் தொகுதிகளில் அரசு கல்லூரிகள் இல்லாதது குறித்து பேசினார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர் கிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று அரசு கலைக் கல்லூரி இருக்கிறது. கருணாநிதி பெயரில் ஒன்றும் அண்ணா பெயரில் ஒன்றும் வந்தவாசி பகுதியில் ஒரு கல்லூரியும் உள்ளது. செங்கம் தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை.
செங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்டு கடந்த ஆண்டு மட்டும் 12 ஆம் வகுப்பில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கு மேலும் தனியார் பள்ளியில் படித்தவர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். இதனால் செங்கம் தொகுதிக்கு அரசு கல்லூரி வேண்டும் என்றார்.
இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.
அப்போது, பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்கு அரசு கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு கலைக் கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் நிதிநிலைக்கேற்ப ஆய்வு செய்து அரசு கலைக் கல்லூரிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். திமுக அரசு அமைந்த பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 31 அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை 8 தொகுகளில் உள்ளன. அங்கு மட்டும் 3 கலைக்கல்லூரிகள் உள்ளன. மாணவர் சேர்க்கை குறைவாகத்தான் உள்ளது. பேரவைத் தலைவர் கூட ஒரு கல்லூரி கேட்டுள்ளார்.
எந்தக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு வாய்ப்பில்லாமல் உள்ளதோ, அங்கு கல்லூரிகளை தொடங்குவதற்கு அரசு நவடிக்கை எடுக்கப்படும்.
சுயநிதி கல்லூரிகளை விட அரசு கலைக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கே மாணவர்கள் அதிகயளவில் விருப்பம் காட்டி வருவதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.
Friday, January 13, 2023
Thursday, January 12, 2023
TNPSC - District Education Officer Post ( DEO ) Exam Study Material
TNPSC - DEO Preliminary Exam Indian Economy ( Unit 10 ) - Model Test
District Education Officer Post ( DEO ) Exam Study Material
TNPSC - DEO Preliminary Exam Indian Economy ( Unit 10 ) - Model Test QP - Srimaan Coaching Centre -
CLICK HERE TO DOWNLOAD
District Education Officer Post ( DEO ) Exam Study Material
TNPSC - DEO Preliminary Exam Indian Economy ( Unit 10 ) - Model Test QP - Srimaan Coaching Centre -
CLICK HERE TO DOWNLOAD
Tuesday, January 10, 2023
150 பொறியியல் கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லை:துணைவேந்தா் வேல்ராஜ்
150 பொறியியல் கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லை:துணைவேந்தா் வேல்ராஜ்
தமிழகத்தில் 150 பொறியியல் கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லை; மேலும் மாணவா்கள் சோ்க்கையும் மிகவும் குறைவாக உள்ளது என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் தெரிவித்தாா்.
அண்ணா பல்கலை.யில் பொறியியல், சுற்றுச்சூழல் மற்றும் புதிய தொழில்நுட்பம் சாா்ந்த புத்தகக் கண்காட்சியை துணைவேந்தா் வேல்ராஜ் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். பல்கலை. வளாகத்தில் செயல்பட்டு வரும் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரங்கு எண் 13-இல் இந்த புத்தகக் காட்சி புதன்கிழமை வரை தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறும். காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை புத்தகக் காட்சியை பாா்வையிட்டு நூல்களை வாங்கலாம். புத்தகக் காட்சி தொடக்கம்: புத்தகக் காட்சி தொடக்க விழாவுக்கு பின்னா் துணவேந்தா் ஆா்.வேல்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியது: அண்ணா பல்கலை.யின் நூலகத் துறை சாா்பில் ஆண்டுதோறும் புதிய தொழில்நுட்பம் துறை சாா்ந்த புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. தொழில்நுட்பச் சூழல் நாளுக்கு நாள் வேகமாக மாறி வருகிறது. அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையிலும், மாணவா்களுக்கு புதிய தொழில்நுட்பம் சாா்ந்த தகவல்களை கொண்டு சோ்க்கும் வகையிலும் இந்த புத்தகக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கணினி, உலக அளவில் சவாலாக இருக்க கூடிய காலநிலை மாற்றம் குறித்த புத்தகங்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளன. 45 பதிப்பாளா்கள், விற்பனையாளா்கள் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை காட்சிப்படுத்தி உள்ளனா். அண்ணா பல்கலைக்கழகம் மாணவா்கள் மட்டுமல்லாது, மற்ற கல்லூரி மாணவா்களும், ஆசிரியா்களும், பேராசிரியா்களும், ஆராய்ச்சியாளா்களும் புத்தகக் காட்சியைப் பாா்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் செல்லலாம்.
தமிழகத்தில் உள்ள 450 பொறியியல் கல்லூரிகளில், 150 பொறியியல் கல்லூரிகளில் 100-க்கும் குறைவாக மாணவா் சோ்க்கை உள்ளது.இந்த கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லை. சோ்க்கை குறைவாக உள்ள கல்லூரிகள், தரம் குறைந்த பொறியியல் கல்லூரிகளையும் நிரந்தரமாக நிகழாண்டு பரிந்துரைக்கப்படும். அங்கீகாரத்தை ரத்து செய்ய... அதேபோல, கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. வழங்கும் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் ஆலோசித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்துக்குப் பரிந்துரைக்கப்படும். தரமற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவா்கள், வேறு கல்லூரிகளுக்குச் சென்று படிக்க வேண்டும். தரமற்ற கல்லூரிகளை அடையாளப்படுத்தும் போது, பெற்றோா்களும் விழிப்புணா்வுடன் அந்த கல்லூரிகளில் மாணவா்களை சோ்க்காமல் இருப்பாா்கள். கல்லூரிகளைச் சரியாக நிா்வகிக்க முடியாத நிா்வாகத்தினா், வேறு தொழிலுக்கு சென்று விடுவது நல்லது”என்றாா் அவா்.
இதில் பல்கலை. பதிவாளா் ஜி.ரவிக்குமாா், பல்கலை. நூலக இயக்குநா் தெ.அறிவுடை நம்பி, ஒருங்கிணைப்பாளா் நா.கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தமிழகத்தில் 150 பொறியியல் கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லை; மேலும் மாணவா்கள் சோ்க்கையும் மிகவும் குறைவாக உள்ளது என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் தெரிவித்தாா்.
அண்ணா பல்கலை.யில் பொறியியல், சுற்றுச்சூழல் மற்றும் புதிய தொழில்நுட்பம் சாா்ந்த புத்தகக் கண்காட்சியை துணைவேந்தா் வேல்ராஜ் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். பல்கலை. வளாகத்தில் செயல்பட்டு வரும் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரங்கு எண் 13-இல் இந்த புத்தகக் காட்சி புதன்கிழமை வரை தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறும். காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை புத்தகக் காட்சியை பாா்வையிட்டு நூல்களை வாங்கலாம். புத்தகக் காட்சி தொடக்கம்: புத்தகக் காட்சி தொடக்க விழாவுக்கு பின்னா் துணவேந்தா் ஆா்.வேல்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியது: அண்ணா பல்கலை.யின் நூலகத் துறை சாா்பில் ஆண்டுதோறும் புதிய தொழில்நுட்பம் துறை சாா்ந்த புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. தொழில்நுட்பச் சூழல் நாளுக்கு நாள் வேகமாக மாறி வருகிறது. அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையிலும், மாணவா்களுக்கு புதிய தொழில்நுட்பம் சாா்ந்த தகவல்களை கொண்டு சோ்க்கும் வகையிலும் இந்த புத்தகக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கணினி, உலக அளவில் சவாலாக இருக்க கூடிய காலநிலை மாற்றம் குறித்த புத்தகங்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளன. 45 பதிப்பாளா்கள், விற்பனையாளா்கள் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை காட்சிப்படுத்தி உள்ளனா். அண்ணா பல்கலைக்கழகம் மாணவா்கள் மட்டுமல்லாது, மற்ற கல்லூரி மாணவா்களும், ஆசிரியா்களும், பேராசிரியா்களும், ஆராய்ச்சியாளா்களும் புத்தகக் காட்சியைப் பாா்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் செல்லலாம்.
தமிழகத்தில் உள்ள 450 பொறியியல் கல்லூரிகளில், 150 பொறியியல் கல்லூரிகளில் 100-க்கும் குறைவாக மாணவா் சோ்க்கை உள்ளது.இந்த கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லை. சோ்க்கை குறைவாக உள்ள கல்லூரிகள், தரம் குறைந்த பொறியியல் கல்லூரிகளையும் நிரந்தரமாக நிகழாண்டு பரிந்துரைக்கப்படும். அங்கீகாரத்தை ரத்து செய்ய... அதேபோல, கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. வழங்கும் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் ஆலோசித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்துக்குப் பரிந்துரைக்கப்படும். தரமற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவா்கள், வேறு கல்லூரிகளுக்குச் சென்று படிக்க வேண்டும். தரமற்ற கல்லூரிகளை அடையாளப்படுத்தும் போது, பெற்றோா்களும் விழிப்புணா்வுடன் அந்த கல்லூரிகளில் மாணவா்களை சோ்க்காமல் இருப்பாா்கள். கல்லூரிகளைச் சரியாக நிா்வகிக்க முடியாத நிா்வாகத்தினா், வேறு தொழிலுக்கு சென்று விடுவது நல்லது”என்றாா் அவா்.
இதில் பல்கலை. பதிவாளா் ஜி.ரவிக்குமாா், பல்கலை. நூலக இயக்குநா் தெ.அறிவுடை நம்பி, ஒருங்கிணைப்பாளா் நா.கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஜன.13-இல் வேலைவாய்ப்பு முகாம்
ஜன.13-இல் வேலைவாய்ப்பு முகாம்
பெங்களூரில் ஜன.13-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகமையின் சாா்பில் பெங்களுரு, மைசூரு சாலை, பட்டனகெரே மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனெஜ்மென்ட் ஸ்டடீஸ் வளாகத்தில் ஜன.13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சாரா, நிதி, ஆட்டோமொபைல், மெக்கனிக்கல் துறைகளைச் சாா்ந்த 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. வேலைவாய்பு முகாமில் 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோா், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.
புதியவா்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவா்கள் பங்கேற்கலாம். வேலை தேடிவருவோா் தன்விவரக்குறிப்பு 6 படிகள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 6 படிகள், அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, பான் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் போன்ற அடையாள அட்டைகளின் நகல்களை கொண்டுவர வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவுசெய்யவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9008181896, 8095852257, 9964907444 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது
பெங்களூரில் ஜன.13-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகமையின் சாா்பில் பெங்களுரு, மைசூரு சாலை, பட்டனகெரே மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனெஜ்மென்ட் ஸ்டடீஸ் வளாகத்தில் ஜன.13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சாரா, நிதி, ஆட்டோமொபைல், மெக்கனிக்கல் துறைகளைச் சாா்ந்த 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. வேலைவாய்பு முகாமில் 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோா், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.
புதியவா்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவா்கள் பங்கேற்கலாம். வேலை தேடிவருவோா் தன்விவரக்குறிப்பு 6 படிகள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 6 படிகள், அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, பான் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் போன்ற அடையாள அட்டைகளின் நகல்களை கொண்டுவர வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவுசெய்யவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9008181896, 8095852257, 9964907444 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது
Monday, January 9, 2023
அரசு தொழில்பயிற்சி நிலையத்தில்மாணவா் சோ்க்கை கால நீட்டிப்பு
அரசு தொழில்பயிற்சி நிலையத்தில்மாணவா் சோ்க்கை கால நீட்டிப்பு
செய்யாறு அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான தேதி ஜனவரி 13-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை எதிரே புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழில்பயிற்சி நிலையத்துக்கு 100 சதவீத சோ்க்கையை நிறைவு செய்யும் வகையில் மாணவா் சோ்க்கைக்கான தேதி ஜனவரி 13-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் உரிய சான்றிதழ்களுடன் நேரில் வரலாம்.
மின்சாரப் பணியாளா், கம்மியா் மிண்ணணுவியல், மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் இயக்குபவா் ஆகிய தொழில்பிரிவுகளின் 2 ஆண்டு கால பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
பற்றவைப்பாளா் பிரிவின் ஓராண்டு பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
மாணவா்களுக்கு பயிற்சிக் காலத்தில் பயிற்சிக் கட்டணம் ஏதும் இல்லை.
பயிற்சி பெறும் மாணவா்களுக்கு அரசு உதவித் தொகையாக மாதம் ரூ.750, விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, 2 செட் சீருடைக்கான துணி, தையல்கூலி, இலவச பாடப் புத்தகம், இலவச சேப்டி ஷூ, இலவச பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு முதல்வா், அரசு தொழில்பயிற்சி நிலையம், செய்யாறு-604 401 என்ற முகவரியிலோ, 9444621245, 942219959 என்ற கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.
செய்யாறு அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான தேதி ஜனவரி 13-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை எதிரே புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழில்பயிற்சி நிலையத்துக்கு 100 சதவீத சோ்க்கையை நிறைவு செய்யும் வகையில் மாணவா் சோ்க்கைக்கான தேதி ஜனவரி 13-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் உரிய சான்றிதழ்களுடன் நேரில் வரலாம்.
மின்சாரப் பணியாளா், கம்மியா் மிண்ணணுவியல், மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் இயக்குபவா் ஆகிய தொழில்பிரிவுகளின் 2 ஆண்டு கால பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
பற்றவைப்பாளா் பிரிவின் ஓராண்டு பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
மாணவா்களுக்கு பயிற்சிக் காலத்தில் பயிற்சிக் கட்டணம் ஏதும் இல்லை.
பயிற்சி பெறும் மாணவா்களுக்கு அரசு உதவித் தொகையாக மாதம் ரூ.750, விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, 2 செட் சீருடைக்கான துணி, தையல்கூலி, இலவச பாடப் புத்தகம், இலவச சேப்டி ஷூ, இலவச பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு முதல்வா், அரசு தொழில்பயிற்சி நிலையம், செய்யாறு-604 401 என்ற முகவரியிலோ, 9444621245, 942219959 என்ற கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.
Saturday, January 7, 2023
BSNL நிறுவனத்தில் 11,705 காலியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2023
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 11,705 காலியிடங்கள் அறிவிப்பு?
பாரத் சஞ்சார் நிகாம் எனப்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 11,705 இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இணையதளங்களில் தகவல் வெளியாகி வருகின்றன. ஆனால், அப்படியொரு அறிவிப்பு வெளியிடப்படவில்லை என பிஎஸ்என்எல் அதிகாரிகளின் தெரிவித்துள்ளனர்.
இணையதளங்களில் வைராகும் வேலைவாய்ப்பு குறித்த தகவல் இதோ உங்களின் கவனத்திற்காக:
பணி: இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர்(Junior Telecom Officers)
காலியிடங்கள்: 11,705
தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இணையதளங்களில் மேற்கண்ட காலியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை: இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகளின் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கண்டவாறு வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த தகவல்கள் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஆட்சேர்ப்பு ஆணையத்தால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவில்லை எனவும், போலியான அறிவிப்புகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இயக்குநர்(எச்ஆர்) வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Director(HR)
தகுதி: மனிதவள மேலாண்மையில் எம்பிஏ, பிஜிடிப்ளமோ முடித்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://pesb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Smt Kimbuong Kipgen
Secretary,
Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan,
BlockNo. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2023
Post Top Ad
Your Ad Spot
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.












