KalviseithiDaily: CEO

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label CEO. Show all posts
Showing posts with label CEO. Show all posts

Monday, July 25, 2022

பள்ளி ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தகவல்

July 25, 2022 0
சாத்தூர் பாலியல் விவகாரத்தில் சிக்கிய பள்ளி ஆசிரியர் தமோதரன் தற்காலிக பணியிடை நீக்கம் - விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தகவல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவிகளுக்கு கணித ஆசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக கூறி பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளி முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தால் பரபரப்பு. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம்.

Read More

Thursday, July 7, 2022

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனை கட்டாயம் - CEO சுற்றறிக்கை

July 07, 2022 0
மதுரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை கட்டாயம் என முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அனைத்து மாணவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் அவரை தனிமைப்படுத்தி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Read More

Tuesday, July 5, 2022

CEO அலுவலக ஆய்வு உத்தரவு: தலைமையாசிரியர்கள் வரவேற்பு

July 05, 2022 0
முதன்மை கல்வி அலுவலகங்களில் (சி.இ.ஓ.,) நடக்கும் ஆண்டாய்வில் தலைமையாசிரியரின் 'கான்பிடன்ஷியல் ரிப்போர்ட்' (சி.ஆர்.,) பராமரிப்பை பார்வையிட உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து சி.இ.ஓ.,க் கள் அலுவலகங்களிலும் ஜூலை 31க்குள் ஆண்டாய்வு செய்ய கமிஷனர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். மதுரை, நாமக்கல்லில் இணை இயக்குனர் பி.குமார், திண்டுக்கல், துாத்துக்குடியில் இணை இயக்குனர் ஜெயக்குமார், தேனி, நீலகிரியில் இணை இயக்குனர் செல்வக்குமார், சிவகங்கை, திருப்பத்துாரில் இணை இயக்குனர் அமுதவல்லி, ராமநாதபுரத்தில் இணை இயக்குனர் சுகன்யா, விருதுநகர், தருமபுரியில் கோபிதாஸ் உட்பட கமிஷனர், இயக்குனர் என 40 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 27 செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், 'டி.இ.ஓ.,க்கள் ஓய்வு அல்லது மாறுதல் பெற்று செல்லும்போது அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர், வட்டாரக் கல்வி அலுவலரின் சி.ஆர்., விவரம் பூர்த்தி செய்திருக்க வேண்டும்' என கமிஷனர் தெரிவித்துள்ளார்.இந்த சி.ஆர்., விவர பராமரிப்பை பெரும்பாலான டி.இ.ஓ.,க்கள் பின்பற்றுவதில்லை.

பதவி உயர்வு பேனல் தயாரிப்பின் போது தலைமையாசிரியர் அவர் பணியாற்றிய டி.இ.ஓ.,க்களை தேடி சென்று அறிக்கை பெற்று வரும் நடைமுறையே உள்ளது.தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'சி.ஆர்., பதிவு பராமரிப்பு அவசியம் என வலியுறுத்தினோம். பெரும்பாலும் பின்பற்றப்படவில்லை. தற்போது கமிஷனர் வலியுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. இது தொடர வேண்டும்,' என்றனர்.
Read More

Post Top Ad

Your Ad Spot