KalviseithiDaily: NewsPapers

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label NewsPapers. Show all posts
Showing posts with label NewsPapers. Show all posts

Thursday, December 9, 2021

வரும் 11ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

December 09, 2021 0
டிச.9:திரு வண்ணாமலை யில் வரும் IIம் தேதி நடைபெ றும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகா மில் இளைஞர் கள் பங்கேற்று பயன் பெறுமாறு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து, பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட் டுள்ள அறிக்கையில்தெரி வித்திருப்பதாவது: தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் ஆணைப் படி, மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு ஆண் டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முதல் வர் அறிவித்ததுடன். அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, வரும் IIம் தேதி காலை 8 மணிமு தல் மாலை 3 மணிவரை திருவண்ணாமலை தென்மாத்தூரில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில், திருவண் ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ் வாதார இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் அருணை பொறியியல் கல் லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனி யார்துறை மற்றும் திறன் பயிற்சி ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள் ளது.

இந்த முகாமில் ஆண் கள். பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்கிறேன். முகாமில், 100க்கும் மேற் பட்ட தனியார் நிறுவ னங்கள் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ. பட்டய பயிற்சி. கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரி கள், செவிலியர் பட்டம் பெற்று வேலை நாடுப வர்கள் ஆதார் அட்டை, சுயவிவர குறிப்பு (பையோ டேட்டா) மற்றும் புகைப்படத்துடன் கலந்து கொள்ள வேண்டும். மேலும், வேலை வாய்ப்பு முகாமில் பங் கேற்க விருப்பம் உள்ள வர்கள் www.privatejobs. tn.gov.in என்ற இணையத் தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். முகாமில், 18 வயதிற்கு மேற்பட்ட படித்த இளை ஞர்கள் அனைவரும் பங்கேற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன். பணிநியமனம் பெறுபவர் கள் 315ஆயிரம் முதல், 850 ஆயிரம் வரை மாத ஊதி யம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இருந்து வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை தரும் இளைஞர்களுக்கு திரு வண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகில், வேலூர் சாலை (தீபம் நகர்) அரு கில் என இரண்டு இடங்க ளில் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு முகா மில் கலந்து கொள்ளும் அனைவரும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது,

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள். உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், தன்னார்வ லர்கள், வேலை வாய்ப்பு முகாம் குறித்தான கைப் பிரதிகளை மாணவர்கள் இளைஞர்களுக்கு வழங்கி யும், விளம்பர படுத்தியும் வேலை வாய்ப்பு முகாம் வெற்றியடைய ஒத்து ழைக்க கேட்டுக்கொள்கி றேன். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.
Read More

Monday, December 6, 2021

மாணவர்களுக்கு வாசிப்புத் திறனை அதிகரிக்க வாரம் ஒருமுறை நூலகப் பாடவேளை கட்டாயம் - புத்தகங்கள் வழங்கப்பட்ட பதிவேடு தயார் செய்ய வேண்டும்.

December 06, 2021 0
மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க பள்ளியில் வாரம் ஒருமுறை நூலக பாடவேளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று சிஇஓக்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நூலகங்கள் மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் பெருக்கும் பேராதாரமாகும். நாடு போற்றும் பெரிய தலைவர்கள் பாட நூல்களுக்கு அப்பால் தங்கள் பள்ளிகளில் உள்ள இருப்பிடங்களுக்கு அருகிலுள்ள நூலகங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தியுள்ளனர். மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க ஒவ்வொரு பள்ளியிலும் பல்லாண்டு காலமாக நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வகுப்புக்கும் நூலக பாடவேளை வாரம் ஒருமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகள் சிறப்பான முறையில் இப்பாட வேளையை செயல்படுத்தி வருகின்றன. எனினும், சில இடங்களில் நூலக பாடவேளை மற்றும் பள்ளி நூலகங்களின் பயன் முறையாக மாணவர்களைச் சென்றடையாமல் இருப்பது தெரியவருகிறது. எனவே, பள்ளி நூலகங்களையும் பாட வேளைகளையும் முறையாகப் பயன்படுத்தவும், அவற்றின் பயன் மாணவர்களை நன்கு சென்றடையவும் பாடநூல்களுக்கு வெளியே புத்தக வாசிப்பை ஒரு வாழ்வியல் முறையாக மாணவர்கள் கைகொள்வதை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு வகுப்புக்கும் வாரம் ஒருமுறை நூலக பாடவேளை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கூடுமானவரை தனி அறை ஒதுக்கீடு செய்து தேவையான மேஜை, அலமாரி வசதி ஏற்படுத்த வேண்டும். புத்தகங்கள் வழங்கல் பதிவேடு தயார் செய்ய வேண்டும். இடப்பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் இருக்கும் வகுப்பறையில் ஏதேனும் ஒரு வகுப்பறையை நூலகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளிகளில் தேவையான அளவிற்கு புத்தகங்கள் இல்லாவிட்டால், அருகிலுள்ள பிற நூலகத்தையும் அணுகி மாணவர்கள் வாசிப்பதற்கு தகுந்த நூல்களைப் பெறலாம். பள்ளிகள் தங்களுக்கு தேவையான தமிழ், ஆங்கில நாளிதழ்களை தற்போது வாங்கி வருகின்றன. நூலக நேரம் தவிர காலை, மாலை, உணவு இடைவேளை போன்ற நேரங்களில் மாணவர்கள் நாளிதழ்களை வாசிக்க ஏதுவாக நூலகம் திறந்து வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாரமும் நூலக பாட வேளையில் மாணவர்களை பள்ளி நூலகத்திற்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு புத்தகத்தை கட்டாயம் வாசிக்க தர வேண்டும். மாணவர்கள் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். அடுத்த வாரங்களில் புத்தகத்தை வாசித்து முடித்த மாணவனுக்கு வேறு புத்தகம் கட்டாயம் அளிக்க வேண்டும். நூலை மாணவன் வாசித்து முடிக்கவில்லை எனில், அதே புத்தகத்தை மீண்டும் வழங்கலாம்.

எனவே அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுப்பதற்கும், நூலக பாடவேளைகளையும் மற்றும் பள்ளி நூலகங்களை முறையாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகளை வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Monday, November 29, 2021

ஆசிரியர்களுக்கு சுதந்திரம் அளியுங்கள்!!

November 29, 2021 1
வழக்கறிஞர் அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

இன்று, நம் சமூகம் ஒழுக்கமற்றதாக மாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம், நம் கல்வி முறை சரியில்லாமல் இருப்பதும், ஒழுக்கம் இல்லாத தலைவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் தான்!தவறான நபர்கள் உயர்ந்த பதவியில், பெரும் செல்வாக்கோடு வலம் வருவது, மக்களிடையே எப்படி வாழ்ந்தால் என்ன என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டது.குற்றவாளிகள், மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; இது, குற்றங்கள் பெருகுவதற்கு காரணமாக மாறி விட்டது.தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்கக் கூடாது என, ஆசிரியர்கள் கைகள் எப்போது கட்டப்பட்டதோ, அப்போதே சமூகம் தீய வழியில் நடக்க துவங்கி விட்டது.மாணவர் மது குடிப்பதும், போதையோடு பள்ளிக்கு வருவதும், மாணவியர் மீது பாலியல் தாக்குதல்கள் நடத்துவதும் ஆங்காங்கே நடக்கிறது.

ஆசிரியரின் கண்டிப்பால் ஒழுக்கமான பிள்ளைகள் உருவான காலம் மலையேறி விட்டது. இன்று மாணவர்களிடம், ஒழுக்கம் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.அதிலும், இந்த கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளாக வகுப்பறை கல்வி இல்லாததால், மாணவர்களின் மனநிலை பாதை தவறி விட்டது.ஏராளமான குழந்தைகள், மொபைல் போன் எனும் மாய வலையில் சிக்கி விட்டனர். ஏழை, எளிய மாணவர்கள் பலர், சூழல் காரணமாக குழந்தை தொழிலாளர்களாக மாறி விட்டனர்.இளம் வயதில் சம்பாதிக்கும்போது, தீயப்பழக்கங்களுக்கு ஆளாகின்றனர். மேலும், இன்றைய சினிமாவில் பொறுக்கி, ரவுடிகள் தான், கதாநாயகனாக காட்டப்படுகின்றனர். அதை பார்த்து, இளைஞர்களும் தறுதலைகளாக திரிகின்றனர்.தற்போது, காவலர் பூமிநாதன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒருவர் ஒன்பதாம் வகுப்பு; மற்றொருவர் ஐந்தாம் வகுப்பு படிக்கின்றனராம். இவர்களை ஆடு திருட அழைத்து சென்ற முக்கிய குற்றவாளியின் வயதோ, 19 என்பதும், அவன் மது அருந்தியிருந்தான் என்பதும் மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.இதன் மூலம், எப்படிப்பட்ட இளைய சமூகத்தை நாம் உருவாக்கி வருகிறோம் என்பதை அறிய முடிகிறது.இந்த மூன்று குற்றவாளிகள் உருவாக முக்கிய காரணமே, ஒழுக்கமின்மை தான்; அதை கற்று கொடுக்க இயலாதது கல்வி துறை தான்!ஒழுக்கமான மாணவர்களை உருவாக்க, ஆசிரியர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
Read More

Wednesday, November 24, 2021

மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உரையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

November 24, 2021 0
திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாடினார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காஞ்சீபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வகுப்பறைகள், காணொலி காட்சி வகுப்பறைகள், கணினி வகுப்பறை உள்ளிட்டவைகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களோடு மாணவர்களாய் தரையில் அமர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் படிப்பதை ரசித்து பார்த்து, அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் பள்ளியை மேலும் தரம் உயர்த்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆய்வகம் திறப்பு

இதையடுத்து உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் உள்ள அரசினர் மாதிரி மேல்நிலை பள்ளியில் குழந்தை விஞ்ஞானிகள் ஆய்வகத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார். அப்போது மாணவ-மாணவிகள் தங்களது கண்டுபிடிப்புகளின் சிறப்பம்சங்கள் குறித்து அமைச்சரிடம் விளக்கி கூறினர்.

சுழற்சி முறை வகுப்புகள் தொடரும்

சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறுகையில், ‘பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே தினமும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சுழற்சி முறை வகுப்புகள் அடிப்படையில் தான் வரவழைக்கப்படுகின்றனர். அதனை இப்போது நிறுத்த முடியாது. கொரோனா தொற்று முழுவதும் குறைந்தவுடன் சுழற்சி முறை வகுப்புகள் கைவிடப்படும்' என்றார்.
Read More

1 முதல் 5ம் வகுப்பு வரை 81 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்க ஒரே ஆசிரியர்!!

November 24, 2021 0
நாகை மாவட்டம் வேதா ரண்யம் தாலுகா தகட்டூர் ராமகோவிந்தன்காடு அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 68 மாண வர்களுடன் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு ஒரு மாணவரை வைத்து பள்ளி நடத்திய போது மூடப்பட்டது. பெற் றோர் வலியுறுத்ததால் மீண் டும் திறக்கப்பட்ட அந்த பள்ளிக்கு சுப்பிரமணியன் என்ற ஆசிரியர் பணி அமர்த்தப்பட்டார். அதன் பிறகு ஆசிரியர் சுப்பிரம ணியன் 38 மாணவர்களை இப்பள்ளியில் சேர்த்து, தற்போது மாணவர் எண் ணிக்கை 68 உயர்ந்தது.

இத்தகைய சிறப்புமிக்க இந்த அரசு பள்ளி பள்ளி பல விருதுகளை பெற்றுள் ளது. ஸ்மார்ட் கிளாஸ் மூல மும் ஆன்லைன் வகுப்பு கள் உள்ளிட்டவை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக ஒரே ஒரு ஆசிரியரை மட்டும் வைத்து இப்பள்ளியில் பாடம் நடை பெற்று வருகிறது. தலை மையாசிரியர் கிடையாது. கடந்த 18 மாதங்களாக ஒரே ஆசிரியர் மட்டும் இப்பள் ளியில் 1 முதல்5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கு முதல் வகுப் பிற்கு சேருவதற்காக 13 மாணவர்கள் தற்போதே பள்ளிக்கு வருகின்றனர். பதிவேட்டின்படி 68 மாணவ, மாணவிகளும் அடுத்த ஆண்டு சேர்க்கைக்கு 13 பேர் என மெத்தம் 81 மாணவர்கள் இப்பள்ளி யில் உள்ளனர். மாணவர் கள் இல்லாமல் முடியப் பட்ட இப்பள்ளி, மீண்டும் திறக்கப்பட்டது மகிழ்ச்சி யாக இருந்தாலும், ஆசி ரியர் இல்லாமல் மூடும் நிலைக்கு சென்றுவிடுமோ என்று பெற்றோர்கள் மத்தி யில் அச்சம் எழுந்துள்ளது.

இது குறித்து மேலும் பள்ளியின் அவலம் குறித்து பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியும் நடவடிக்கைஎடுக்க வில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இப்பள்ளிக்கு ஆசிரியரை நியமித்து மாணவர்களின் நலனில் அக்கறை காட்டு மாறு பெற்றோர்கள் வேண் டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதா வது, விரைவில் ஆசிரி யர்களை நியமித்து மாணவர்களுக்கு பாடம் நடைபெறவில்லை என் றால் வரும் இரண்டாம் தேதி வேதாரண்யத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் என் றும். எங்கள் குழந்தைக ளின் கல்வி நலன்கருதி மாற்று சான்றுபெற்று வேறு பள்ளியில் சேர்க்கும் நிலை ஏற்படும் என பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
Read More

Saturday, November 20, 2021

வட்டாரக் கல்வி அலுவலர் பணிநியமனம் எப்போது? 42,000 தேர்வர்கள் காத்திருப்பு

November 20, 2021 0
தமிழ்நாட்டில் 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வானது கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில் இணைய வழியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டது. இத்தேர்வினை சுமார் 42 ஆயிரத்து 686 தேர்வர்கள் எழுதினார்கள்.

தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தொலைதூரங்களுக்குப் பயணித்து தேர்வர்கள் இத்தேர்வை எழுதினார்கள். பெரும்பாலும் தேர்வர்களுக்கான தேர்வு மையமானது அவர்களின் சொந்த மாவட்டத்தில் ஒதுக்கப்படாமல் பிற மாவட்டங்களிலேயே ஒதுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு இணைய வழியில் நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் வழக்கமாக ஓரிரண்டு மாதங்களில் வெளியிடப்படும். ஆனால் வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வின் முடிவுகள் சுமார் 11 மாதங்களுக்குப் பின்னர் நிகழாண்டு ஜனவரி 27 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியாகி 6 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்படாதது தேர்வர்களிடையே மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கொரோனா பெருந்தொற்றுப் பரவலால் இப்பணிகள் தொய்வு அடைந்திருக்கலாம் எனக் கருதினாலும் இவற்றைக் கடந்து மற்ற அனைத்துப் பணியாளர் தேர்வு வாரியங்களும் செயல்படத் தொடங்கிவிட்டன.

மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வினை நடத்திய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பணிநியமன ஆணையை கடந்த மாதமே வழங்கிவிட்டது. ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 5 மாதங்களாக எவ்விதச் செயல்பாடும் இன்றி அமைதி காத்து வருகிறது. தேர்வு நடந்து சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பணிநியமனம் தொடர்பான பணிகளைத் தொடங்காமல் காலந் தாழ்த்துவதற்கான காரணம் என்னவென்று புரியவில்லை. இணையவழியில் தேர்வு நடத்தப்படுவதன் நோக்கமே தேர்வுப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதே. ஆனால் இத்தேர்விற்குப் பிறகு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடானது அந்நோக்கத்திற்கு எதிரான வகையில் அமைந்துள்ளது.

சுமார் 42 ஆயிரம் தேர்வர்கள் பணிநியமனத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் 130 க்கும் மேற்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அவற்றை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தேர்வின் வெற்றியாளர்களுக்கு உடனடியாக சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை முடித்து அவர்களுக்குப் பணிநியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேர்வர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

கி.ராமராஜ், காட்பாடி,

வேலூர் மாவட்டம்
Read More

Monday, November 15, 2021

பத்திரிக்கையாளர் குடும்ப நிதி உதவி உயர்த்தி வழங்கி அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

November 15, 2021 0
நிர்வாகம் - செய்தி மக்கள் தொடர்புத்துறை - மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதி 2021-2022-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் மீதான மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - தமிழ் நாட்டிலுள்ள பத்திரிகை துறையினருக்கான பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி உயர்த்தி வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நிர்வாகம்-4)த் துறை

அரசாணை (ப) எண்.116

நாள் 10.11.2021

திருவள்ளுவர் ஆண்டு 2052 பிலவ வருடம் ஐப்பசி 24-ஆம் நாள் படிக்கப்பட்டவை:

1. அரசாணை (நிலை) எண்.66, செய்தி மற்றும் சுற்றுலா (செ.வெ.)த் துறை, நாள் 20.3.1997.

2. அரசாணை (நிலை) எண்.85. செய்தி மற்றும் சுற்றுலா (செ.வெ.)த் துறை. நாள் 28.4.1999.

3. அரசாணை (நிலை) எண்.78. செய்தி மற்றும் சுற்றுலா (செ.வெ.}த் துறை, நாள் 11.4.2000.

4. அரசாணை (நிலை) எண்.144, செய்தி மற்றும் சுற்றுலா (செ.வெ.)த் துறை, நாள் 28.9.2001.

5. அரசாணை (நிலை) எண்.246, செய்தி மற்றும் சுற்றுலா (நிர்.4.)த் துறை, நாள் 16.10.2006.

6. அரசாணை (நிலை) எண். 121. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நிர்வாகம்-4)த் துறை, நாள் 30.07.2018

7. 2021-2022 ஆம் ஆண்டுக்கான மாண்புமிகு அமைச்சர் (செய்தி) அவர்களின் அறிவிப்பு நாள் 06.09.2021.

ஆணை:

தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகைத் துறையினர் நலன் கருதி. பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள். செய்தியாளர்கள். புகைப்படக்காரர்கள் மற்றும் பிழை திருத்துபவர்கள் ஆகியோர் பணியிலிருக்கும்போது இயற்கை எய்தினால் அவர்களின் குடும்பத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, குடும்ப உதவி நிதியாக பார்வை ஒன்று முதல் நான்கு வரை படிக்கப்பட்ட அரசாணைகளின்படி, முறையே ரூ.25,000/-, ரூ.40,000/-, ரூ.50,000/ ரூ.2,00,000/- என வழங்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

2. மேலே ஐந்தாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் நிலையில் இறந்து விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.2,00,000/- என்றும். 15 ஆண்டுகள் பணிபுரிந்து இருப்பார்களேயானால், ரூ.1.50,000/- என்றும். 10 ஆண்டுகள் பணிபுரிந்து இருப்பார்களேயானால், ரூ.1,00,000/- என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து இருப்பார்களேயானால், ரூ.50,000/- என்றும் குடும்ப உதவி நிதி வழங்க ஆணை வெளியிடப்பட்டது.

3. மேலே ஆறாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் நிலையில் இறந்து விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.3,00,000/- என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து இருப்பார்களேயானால் ரூ2,25,000/- என்றும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து இருப்பார்களேயானால் ரூ.1.50,000/- என்றும். 5 ஆண்டுகள் பணிபுரிந்து இருப்பார்களேயானால் ரூ.75,000/- என்றும் குடும்ப உதவி நிதி வழங்க ஆணை வெளியிடப்பட்டது.

4. 2021-2022-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் அறிவிப்பினை அறிவித்தார்:

"பத்திரிகைத் துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர் மற்றும் பிழைதிருத்துவோர் பணிக்காலத்தில் இயற்கை எய்திட நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தற்பொழுது குடும்ப உதவி நிதியாக அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கேற்ப ரூபாய் மூன்று இலட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் குடும்ப உதவி நிதி மூன்று இலட்சத்திலிருந்து ரூபாய் ஐந்து இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும்"

5. அரசின் கவனமான பரிசீலனைக்குப்பின்னர். மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது. பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, இறந்து விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்து விடுவார்களேயானால் ரூ3,75,000/ (ரூபாய் மூன்று இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் மட்டும்) என்றும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்து விடுவார்களேயானால் ரூ.2,50,000/- (ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்து விடுவார்களேயானால் ரூ.1,25,000/- (ரூபாய் ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் மட்டும்) என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி, குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

6. முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தில் உதவி பெற உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை பெற்று இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Read More

Sunday, November 14, 2021

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் இன்டர்னல் மதிப்பெண் அளிப்பதில்லை தேர்ச்சி பெற முடியாமல் தனித்தேர்வர்கள் அவதி

November 14, 2021 0
தமிழகத் தில் பல்வேறு காரணங்க ளினால்பள்ளியில்இருந்து பாதியில் நின்றவர்கள் மற்றும் வேலைக்கு செல் லும் நபர்கள் என பலர் ஒவ்வொரு வருடமும், 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பாடங்களை தனித்தேர் வர்களாக தேர்வு எழுதி வருகின்றனர்.

இதில், தேர்ச்சி பெறு வதால் அவர்கள் கல்லூரி படிக்கவும், வேலையில் சேரவும் வாய்ப்பு ஏற்படு கிறது. பிளஸ்-1 பொதுத் தேர்வு அறிவிப்பிற்கு முன்பு வரை தனித்தேர் வர்கள் முழு மதிப்பெண் களுக்கு தேர்வு எழுதி வந்துள்ளனர். பொதுத் தேர்வு அறிவிப்புக்குபிறகு தனித்தேர்வர்களுக்கு எழுத்து தேர்வு 90 மதிப் பெண்களுக்கு நடத்தப்ப டுகிறது. 10 மதிப்பெண் இன்டர்னல் மதிப்பெண் என அளிக்கப்படுகிறது. மேலும், எழுத்து தேர் வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் 200 மதிப் பெண்ணிற்கு கணக்கீட்டு ரிசல்ட் வெளியிடப்படு கிறது.

இத்நிலையில், அரசு தேர்வுகள் இயக்சுகம் தனித்தேர்வர்களுக்குஇன் டர்னல்மதிப்பெண்ணாக 10-ஐஅளிப்பதில்லைஎன வும்,நேரடியாகபள்ளியில் படிக்கும் மாணவர்க ளுக்கு மட்டுமே இன்டர் னல் மதிப்பெண் வழங் குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி, தனித்தேர்வர்கள் எழு

தும் 90 மதிப்பெண்களை நூறு மதிப்பெண்ணாக கணக்கிட்டு மதிப்பெண் வழங்குவதாகதேர்வர்கள் புகார்தெரிவித்துள்ளனர். இதனால் பலர் தேர்ச்சி அடைய முடியாத நிலை ஏற்படுவதாக பாதிக்கப் பட்டவர்கள் கூறுகின்ற னர்.

இது குறித்து கோவை காரமடை கிராமம் குட் டையூர் பகுதியை சேர்ந்த பூபதி (40) என்ற பெண் தனித்தேர்வர் கூறியதா வது: எனது கணவர் கடந்த சிலவருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.எனக்கு ஒருமகள் உள்ளார். அவர் பிளஸ்2 படித்து வருகி றார். நான் கம்யூட்டர் சென்டர் வைத்து நடத்தி வருகிறேன். பள்ளி படிக் கும்போது பல்வேறு கார ணங்களினால் பிளஸ்-2 தேர்வு எழுதவில்லை; இந்நிலையில், கடந்த இரண்டுதனித்தேர்வராக பிளஸ்-2 அக்வுண்ட்ஸ், வணிக கணிதம் தேர்வு எழுதினேன்.

இதில், அக்வுண்ட்ஸ் பாடத்தில் தேர்ச்சி பெற் றேன். வணிக கணிதம் பாடத்தில் 90-க்கு 28 மதிப் பெண் எடுத்து தோல்வி அடைந்தேன். இதனால், தொடர்ந்து தற்போது நடந்த பொதுத்தேர்வில் பங்கேற்று எழுதினேன். இதிலும். எனக்கு 28 மதிப் பெண் பெற்றுள்ளேன். இதனை 200-க்கு மாற்றி 56 என அளித்துள்ளனர். இன்டர்னல் மதிப்பெண் 10 அளிக்கவில்லை. மறுகூட்டலுக்குவிண்

ணப்பிக்க முயன்றபோது, அதிகாரிகள் இன்டர்னல் மார்க் வராது என தெரி வித்தனர். இன்டர்னல் மதிப்பெண் 10 அளித்து இருந்தால், நான் 90-க்கு 38 மதிப்பெண் எடுத்து இருப் பேன். என்னை போல் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக கோவை அதிகாரிகளி டம் கேட்டபோது, பள் ளியில் படிக்கும் மாண வர்களுக்கு மட்டுமே இன்டர்னல் மதிப்பெண் அளிக்கப்படும் என தெரிவிக்கின்றனர். எங் களை போல் தனித்தேர் வர்களுக்கு இன்டர்னல் மதிப்பெண் அளிக்க தேர் வுத்துறை இயக்குனரகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்கு னர்சேதுராமவர்மாகூறு கையில், “தனித்தேர்வர் கள் 90 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதி, அவர்கள் எடுக்கும் மதிப்பெண் 100 க்கு மாற்றப்படுகிறது.

அவர்களுக்கு இன்டர் னல் மதிப்பெண் அளிக்க வாய்ப்பு இல்லை. நேர டியாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மட் டுமே இன்டர்னல் மதிப் பெண் அளிக்க முடியும். அவர்களுக்கும் முழு மதிப்பெண் கிடைப்பது இல்லை. மாணவர்க ளின் செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப் பெண் வழங்கப்படுகிறது" என்றார்.
Read More

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.11.2021

November 14, 2021 1
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பதவிகளில் நியமனம் செய்வதற்காக கீழ்வரும் விவரங்கள்படி காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்தகால அடிப்படையில் தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: மருத்துவ அலுவலர் - 02

தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.75,000

பதவி: செவிலியர் - 02

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: செவிலியர் பிரிவில் டிப்ளமோ இன் ஜெனரல் நர்சிங் மிட்வைஸ் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.14,000

பதவி: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் - 02

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.6,000

விண்ணப்பிக்கும் முறை:

http://www.samayapurammariammantemple.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621 112

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.11.2021
Read More

Saturday, November 13, 2021

அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவு

November 13, 2021 0
சென்னை விடுமுறை நாட்களை ஈடுகட்ட, அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகளை நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் பள்ளிகள் மூடப்பட்டு, 19 மாதங்களுக்கு மேலாக வகுப்புகள் நடக்கவில்லை.

அரசு பள்ளிகளில் பாடங்கள் நடத்தாமல், மாணவர்களுக்கு கற்பித்தல் குறைந்து பாதிக்கப்பட்டனர். தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் 'ஆன்லைன்' வழியில் படித்தனர்.

இந்நிலையில், செப்டம்பர் 1 முதல், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.அதன்பின் பல்வேறு தரப்பிலும் எழுந்த கோரிக்கையால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.அதன்பின் தீபாவளிக்காகவும், பின் மழைக்காகவும் விடுமுறை விடப்பட்டது.

இதையடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளை திறந்து, பாடங்களை நடத்த ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, தனியார்பள்ளிகள் தரப்பில்முழு வீச்சில்பாடங்களை நடத்த முடிவு செய்துஉள்ளனர்.

இந்நிலையில், அரசு பள்ளிகளிலும் கற்பித்தல் பணிகளை கொஞ்சமாவது மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறந்து, பாடங்களை நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
Read More

Post Top Ad

Your Ad Spot