KalviseithiDaily: Education Minister

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Education Minister. Show all posts
Showing posts with label Education Minister. Show all posts

Tuesday, November 1, 2022

தேசியக் கல்விக்கொள்கைக்கு மாநிலங்களிலிருந்து நேரடி எதிா்ப்பு கிடையாது: மத்திய இணை அமைச்சா்

November 01, 2022 0
தேசியக் கல்விக்கொள்கைக்கு மாநிலங்களிலிருந்து நேரடி எதிா்ப்பு கிடையாது: மத்திய இணை அமைச்சா்

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு எந்த மாநிலமும் நேரடியாக எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை என்றாா் மத்திய கல்வித் துறை இணை அமைச்சா் சுபாஷ் சா்காா்.

இதுகுறித்து திருச்சி பாஜக மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியது :

நாடு முழுவதும் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. தமிழகத்தில் கேந்திர வித்யாலயா பள்ளிகள், தமிழக அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்திலும் இது சிறப்பாகப் பின்பற்றப்படுகிறது. நாட்டில் எந்த மாநிலமும் தேசியக் கல்வி கொள்கையை நேரடியாக எதிா்க்கவில்லை. அதேசமயம் இதகுறித்த தங்களது கருத்துகளை மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளனா்.

தேசியக் கல்விக் கொள்கைக்கான புதிய பாடத்திட்டத்தை மத்திய அரசு தயாரித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மாநில அரசுகள் கருத்து தெரிவிக்கவும் அழைப்பு விடுத்துள்ளது.

திருச்சியில் தேசிய தொழில் நுட்பக்கழகம் (என்ஐடி) சிறப்பாகச் செயல்படுகிறது. அங்கு பயிலும் மாணவா்களில் 90 சதத்தினருக்கு மேல் வேலைவாய்ப்பும் உடனடியாகக் கிடைக்கிறது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அமைக்கப்படும் நகரும் படிக்கட்டுகள் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும். அது தவிர திருச்சி கோட்டத்தில் 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கிகளும் (லிப்ட்) பிப்ரவரிக்குள் பயன்பாட்டுக்கு வரும். திருச்சி மாவட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன. ஆய்வுக்கூட்டங்களின்போது பயனாளிகளிடமே இதுகுறித்து நேரடியாகக் கேட்டறிந்தேன்.

தமிழக அரசு அதிகாரிகள் யாரையும் மத்திய அரசு மிரட்டவில்லை. மத்திய அரசு அலுவல் ரீதியாக சரியாக தனது பணிகளை மேற்கொள்கிறது. பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தரை நியமிப்பதில் உள்ள வழக்கமான நெறிமுறைகளைத்தான் பின்பற்ற வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஆளுநா்தான் வேந்தா் என்பதால் அவருக்கே அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் கூடாது.

அனைத்து மாநிலங்களிலும் மாவட்டத்துக்கு ஒரு நவோதயா பள்ளி செயல்படுகிறது. தமிழகத்திலும் நவோதயா பள்ளிகளைத் தொடங்க தமிழக அரசு கோரிக்கை வைத்து இடம் ஒதுக்கி தந்தால் உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. மத்திய பல்கலைக்கழகத்தின் கிளையை திருச்சி அருகே தொடங்கவும் தமிழக அரசு இடம் ஒதுக்கித் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாநில இணைப் பொருளாளா் சிவசுப்பிரமணியன், மாநகா் மாவட்டத் தலைவா் ராஜசேகரன், பெரம்பலுாா் மாவட்ட அமைப்பாளா் இல. கண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

முன்னதா நவல்பட்டு பகுதி கேந்திர வித்யாலயா பள்ளியிலும், பூலாங்குடி காலனி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் இணை அமைச்சா் ஆய்வு செய்தாா்.
Read More

Wednesday, October 26, 2022

நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு கோரிக்கை - DRPGTA 26.10.22

October 26, 2022 0
*DRPGTA 26.10.22*
📱📱📱📱📱📱📱
*அரசுமேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணி மூப்பு பட்டியலை விரைவில் வெளியிடவும்*
*அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்*-

 நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை*

அனுப்புநர்:-
ஆ.இராமு,
மாநிலத் தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA,
7373761517.

பெறுநர்:-
           மாண்புமிகு 
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள், 
தலைமை செயலகம், 
சென்னை 09.


ஐயா,
          பொருள்:-
அரசுமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணி மூப்பு பட்டியலை விரைவில் வெளியிடவும், 
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுதல் சார்பு...

                பள்ளிக்கல்வி துறையில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கக்கூடிய முன்னுரிமை பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது...

.அதேபோல காலியாக உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப பணி மூப்பு உடைய முதுகலை ஆசிரியர்களின் பட்டியலை வெளியிட தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

பள்ளிக்கல்வித் துறையில் மேல்நிலைக் கல்வியில் நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை அதிக பதவி உயர்வு இல்லாமல் பணிபுரிந்து வருகிறார்கள். 

மேல்நிலை வகுப்புகளில் கற்றல்,கற்பித்தல் பணிகளைச் செய்து வந்தாலும் உயர்நிலை வகுப்புகளை கையாளும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சமமான ஊதியத்தையே முதுகலை ஆசிரியர்கள் பெற்று வருகின்றனர் .

மேலும் 01.06.2009 க்கு முன்பு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களை விட 01.06.2009 க்கு பிறகு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்கள் மாத ஊதியத்தில் 14000 ரூபாய் ஊதிய இழப்போடு பணிபுரிந்து வருகிறார்கள்.

கடந்த கல்வி ஆண்டு நடந்த 
கலந்தாய்வு 100% நேர்மையாகவும் சிறப்பாகவும் நடந்தது.

ஆனால் அதில் கூட உபரி ஆசிரியர்களாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு வெளி மாவட்டம் செல்ல அனுமதிக்கப்பட்டது. 

ஆனால் உபரி ஆசிரியர்களாக இருந்த
முதுகலை ஆசிரியர்கள், வெளி மாவட்டத்திற்கு செல்ல மறுக்கப்பட்டு 
 தாங்கள் பணிபுரிந்து வரும் மாவட்டத்திற்குள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதனாலும் பல முதுகலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்

இது போன்று பல நிகழ்வுகளில் முதுகலை ஆசிரியர் பணி தொகுதி சம நீதி வழங்கப்படாத பணித் தொகுதியாகவே இன்று வரை இருந்து வருகிறது.

பள்ளிக்கல்வித் துறைக்கு மற்ற பணி தொகுதிகள் ஒரு கண் என்றால் அதற்கு வெண்ணையும், 
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி தொகுதி ஒரு கண் என்றால் அதற்கு சுண்ணாம்பும் வைப்பது போல தான் பல ஆண்டுகளாக பல நிகழ்வுகள் தொடர்கிறது.

எனவே சமநீதி வழங்கப்படாத பணித் தொகுதியாக இருந்து வரும் முதுகலை ஆசிரியர் பணி தொகுதிக்கு 
பதவி உயர்வு, பொதுமாறுதல் கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் இனிவரும் காலங்களில் பிற பணித் தொகுதிக்கு வழங்கப்படுவது போல உரிய சமூக, சமநீதியை தாங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 எனவே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை விரைவில் 
நிரப்புவதற்கு இருக்கும் 
 தடைகளை நீக்கி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணி மூப்பு பட்டியலை விரைந்து வெளியிட தாங்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் 

 மேலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடத்தை பொறுப்பு ஏற்று நடத்தி வரும் முதுகலை ஆசிரியர்கள் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செய்து பொதுத் தேர்வுக்கு தயார் செய்வது,
அலுவலக பணிகளைத் தொய்வின்றி செய்வது,
பள்ளியை நிர்வாகம் செய்வது, 
தலைமை ஆசிரியர் சார்ந்த பயிற்சிக்கும், கூட்டத்திற்கும் மாவட்டத்திற்குள்ளும், வெளி மாவட்டத்திற்கும் சென்று வருவது என அதிக பணி பளுவோடு பணியாற்றி வருகின்றனர்.

எனவே பணி மூப்பு உடைய முதுகலை ஆசிரியர்களின் பட்டியலை வெளியிட்டு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்பவும் தாங்கள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி வணக்கம

ஆ.இராமு 
மாநிலத் தலைவர்,
 நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்
 73 73 76 15 17
DRPGTA

நாமக்கல்
26.10.22

நகல்:-

மதிப்பிற்கும் நேர்மைக்கும் உரிய பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்கக வளாகம்,
சென்னை 06.

மதிப்பிற்குரிய
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்கக வளாகம்,
 சென்னை. 6.
Read More

Tuesday, September 20, 2022

No legitimate reason to oppose education policy: Union Education Minister - கல்விக் கொள்கையை எதிர்க்க நியாயமான காரணம் இல்லை’: மத்திய கல்வி அமைச்சர்

September 20, 2022 0
No legitimate reason to oppose education policy': Union Education Minister - கல்விக் கொள்கையை எதிர்க்க நியாயமான காரணம் இல்லை’: மத்திய கல்வி அமைச்சர்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்க யாரிடமும் நியாயமான காரணம் இல்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகின்றது.



இந்நிலையில், சென்னை வந்துள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,



“தமிழ் ஒரு தேசிய மொழி. தாய்மொழியில் கல்வி பயில வேண்டும். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக நியாயமான எதிர்ப்பை நான் இதுவரை பார்க்கவில்லை. இன்று சில நண்பர்கள் ஆதரவாக இல்லை, நாளை அவர்களும் ஆதரிப்பார்கள்.



கல்வியில் தமிழ்நாடு மிகப்பெரிய பாரம்பரியம் கொண்ட மாநிலம். தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பில் தமிழ்நாடு எப்பொழுதும் முன்னிலையில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Read More

Post Top Ad

Your Ad Spot