Post Top Ad
Your Ad Spot
Showing posts with label health Problems. Show all posts
Showing posts with label health Problems. Show all posts
Tuesday, November 1, 2022
மாணவர்கள்& பெற்றோர்கள் கவனத்திற்கு - மழை& குளிர்காலத்தில் தங்களை பாதுகாத்துக்கொள்ள சில பயனுள்ள குறிப்புகள்
🙏அன்பிற்கினிய மாணவர்கள் & பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் மழைக்காலம் முன்னிட்டு கீழ் காணும் வழிமுறைகளை பின்பற்றி மழை & குளிர்காலத்தில் தங்களை பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
🌸 கனமழை நேரத்தில் குழந்தைகள் & மாணவச்செல்வங்கள் வயதானவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்புடன் இருங்கள்.
🌸அவசியம் கருதி வெளியில் செல்லும் பொதுமக்கள் தகுந்த பாதுகாப்புடன் (குடை & மழை கோட் மைக்கா பை) புது மழையில் நனையாமல் சென்று வாருங்கள்.
🌸மின்சாதனப் பொருட்களை ஈரக்கையால் தொடாதிர்கள்
🌸 தெருக்களில் பிளாஸ்டிக் குப்பைகள் பாட்டில் போன்ற பொருட்களை மழைநிரில் தேங்கவிடாமல் அப்புறப்படுத்தி வெள்ளம் போக வழி செய்யுங்கள்.
🌸வீட்டைச்சுற்றி நீர் தேங்காமல் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
🌸குடிக்கும் குடிநீரை கொதிக்க வைத்து அதில் சீரகம் ஓமம் துளசி இட்டு குடியுங்கள்.
🌸 வீட்டில் செய்யும் உணவுகளை மட்டுமே வெதுவெதுப்புடன் உண்ணுங்கள்.
🌸மூக்கடைப்பு தலைவலி ஏற்பட்டால் ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீரில் மஞ்சள் துளசி வேம்பு நொச்சி தைலதழை கல் உப்பு போட்டு கொதிக்க வைத்து வேது பிடியுங்கள்.
🌸 செக்கு தேங்காய்
எண்ணெய் ஒரு கரண்டியளவு காய்ச்சி அதில் பத்து ரூபாய் கட்டி கற்பூரம் போட்டு ஆற வைத்துக்கொண்டு சளி தலைவலி இருந்தால் தேய்த்து கொள்ளுங்கள்.
🌸 1 கிலோ கேழ்வரகு அரை கிலோ சோளம் அரை கிலோ கம்பு சேர்த்து அரைத்த மாவு & 2கிலோ கோதுமை அரை கிலோ பார்லி சேர்த்து அரைத்த மாவு கொண்டு தோசை அடை ரொட்டி புட்டு கஞ்சி போன்ற உணவினை செய்து உண்ணுங்கள்.
🌸 சாமை வரகு குதிரைவாலி திணை போன்ற பொருட்களை கொண்டு செய்யும் உணவினை காலை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்
🌸 4 துளசி, 1வெற்றிலை , 2கற்பூரவள்ளி, ஒரு இணுக்கு முருங்கைகீரை, 4குப்பைமேனி 4முசுமுசுக்கை, உடன் 5 மிளகு, ஒரு சிட்டிகை சீரகம், இஞ்சி சிறிது, பூண்டுபல் 2 சேர்த்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வாரம் இருமுறை காலையில் ஒரு நபருக்கு கால் டம்ளர் குடிக்கவும்.
50 கிராம் சுக்கு , ஒரு ஸ்பூன் மிளகு & சீரகம், 50 கிராம் தனியா சேர்த்து அரைத்து மாலையில் கொதிக்க வைத்து வெல்லம் சிறிது சேர்த்து குடிக்கவும்.
🌸மூக்கடைப்பு தலைபாரம் ஏற்பட்டால் விரல் மஞ்சள் நல்லெண்ணெயில் முக்கி விளக்கில் சுட்டு முகரவும்.
🌸கை கால் முதுகு இடுப்பு வலி ஏற்பட்டால் நல்லெண்ணெயில் சுக்கு மிளகு சீரகம் பூண்டு பல் இடித்து போட்டு காய்ச்சி தேய்த்துக்கொள்ளுங்கள்.
Friday, September 9, 2022
அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி.. 37 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்..!
37 students studying in Panchayat Union Primary School in Bhattarai village near Vembakkam, Tiruvannamalai district had nutritious lunch this afternoon. Then, it seems that there was a lizard in the food of class 4 student Gopika.
On seeing this, 13 students vomited on the spot, followed by fainting. Immediately, all the students who had the nutritious meal were taken to Ariyur Government Primary Health Center and given first aid treatment.
Later, all the 37 students who had the nutritious meal were admitted by ambulance to the Seyyar Government District Head Hospital for treatment.
Among them, 11 students have been admitted to the inpatient unit and are receiving treatment. Other students were treated and sent home safely.
The students who are undergoing treatment at the Seyyar Government Hospital were met by the Seyyar Revenue Commissioner R. Annammal, District Collectors (Vembakkam) Subash Chander, (Seyyar) Mahendramani, Vembakkam District Development Officers Paranirajan and Gopalakrishnan and expressed their condolences.
After getting the information, the police rushed to the spot and are investigating. Also, samples of the food eaten by the students have been sent for testing.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே பட்டரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் 37 மாணவ, மாணவிகள் இன்று மதியம் சத்துணவு சாப்பிட்டனர். அப்போது, 4-ம் வகுப்பு மாணவி கோபிகாவின் சாப்பாட்டில் பல்லி இருந்ததாகத் தெரிகிறது.
இதனைக் கண்ட 13 மாணவர்களுக்கு அங்கேயே வாந்தியும், அதனைத் தொடர்ந்து மயக்கமும் ஏற்பட்டது. உடனடியாக, சத்துணவு சாப்பிட்ட அனைத்து மாணவ, மாணவிகளும் அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் 37 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 11 மாணவ, மாணவிகள் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளை செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் ஆர்.அன்னம்மாள், வட்டாட்சியர்கள் (வெம்பாக்கம்) சுபாஷ் சந்தர், (செய்யாறு) மகேந்திரமணி, வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணிராஜன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
The students who are undergoing treatment at the Seyyar Government Hospital were met by the Seyyar Revenue Commissioner R. Annammal, District Collectors (Vembakkam) Subash Chander, (Seyyar) Mahendramani, Vembakkam District Development Officers Paranirajan and Gopalakrishnan and expressed their condolences.
After getting the information, the police rushed to the spot and are investigating. Also, samples of the food eaten by the students have been sent for testing.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே பட்டரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் 37 மாணவ, மாணவிகள் இன்று மதியம் சத்துணவு சாப்பிட்டனர். அப்போது, 4-ம் வகுப்பு மாணவி கோபிகாவின் சாப்பாட்டில் பல்லி இருந்ததாகத் தெரிகிறது.
இதனைக் கண்ட 13 மாணவர்களுக்கு அங்கேயே வாந்தியும், அதனைத் தொடர்ந்து மயக்கமும் ஏற்பட்டது. உடனடியாக, சத்துணவு சாப்பிட்ட அனைத்து மாணவ, மாணவிகளும் அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் 37 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 11 மாணவ, மாணவிகள் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளை செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் ஆர்.அன்னம்மாள், வட்டாட்சியர்கள் (வெம்பாக்கம்) சுபாஷ் சந்தர், (செய்யாறு) மகேந்திரமணி, வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணிராஜன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
Wednesday, September 7, 2022
குழந்தைகளிடையே அதிகரிக்கும் விழி வெண்படல பாதிப்பு: மருத்துவத் துறையினா் எச்சரிக்கை
குழந்தைகள், இளைஞா்களிடையே விழி வெண்படல பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவத் துறையினா் எச்சரித்துள்ளனா்.
தேசிய கண் தான வாரம் ஆக.25 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் இறுதி நாளான வியாழக்கிழமை (செப்.8) கண் தான நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து சங்கர நேத்ராலயா மருத்துவ சமூகவியலாளா் அ.போ.இருங்கோவேள் கூறியதாவது: மத்திய அரசாங்கத்தின் தேசிய பாா்வையிழப்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் புள்ளிவிவரப்படி 2021 வருட நிலவரப்படி 1.2 கோடி போ் பாா்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அவா்களில் சுமாா் 1,20,000 போ் விழி வெண்படல (காா்னியல்) பாா்வைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதாவது, இந்தியாவில் ஆயிரத்தில் 4.5 பேருக்கு அத்தகைய பாதிப்பு உள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கும், இளைஞா்களுக்கும் விழி வெண்படல பாதிப்பு அதிகம் ஏற்படுவது இதன் மூலம் தெரிகிறது. அதனை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். நமது கண்களின் முன் புறம் கருப்பாக தோன்றும் பகுதியை நிறமேயில்லாத, ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய, ரத்தக்குழாய்கள் ஏதுமில்லாத ஒரு மெல்லிய படலம், ஒரு
கண்ணாடி ஜன்னலைப் போல மூடியுள்ளது. அதனை ஆங்கிலத்தில் காா்னியா என்கிறோம். தமிழில் விழி வெண் படலம் என்று சொல்லலாம். தொற்று நோய்க் கிருமிகள், கண் சாா்ந்த விபத்துகள், ஊட்டச்சத்துக்குறைபாடு, பிறவிக்குறைபாடு அல்லது மரபணு குறைபாடு, உலா் விழி பாதிப்பு ஆகியவை விழி வெண்படல பிரச்னைக்கு முக்கியக் காரணம். இத்தகைய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு காா்னியல் மாற்று சிகிச்சை மூலம் பாா்வை திறனை மீட்டெடுக்க முடியும்.
ஒருவா் மரணமடைந்த ஆறு மணி நேரத்துக்குள் அவரது கண்கள் தானமாக பெறப்பட்டு 6 பேருக்கு பொருத்த முடியும். ஆரம்ப காலத்தில் காா்னியாவின் முழுதடிமனையும் மற்றவா்களுக்கு பொருத்தி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போதைய தொழில்நுட்ப வளா்ச்சி காா்னியாவின் குறிப்பிட்ட அடுக்கை மட்டும் மாற்றி பொருத்த இயலும்.
கண்களை தானமாக அளிக்க சங்கர நேத்ராலயாவின் https://www.sankaranethralaya.org/eye}pledge.html என்ற வலைதளத்தை அணுகலாம். அல்லது 044 28281919 மற்றும் 044 28271616 ஆகிய எண்களிலோ, eyebank@snmail.org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.
இந்நிலையில், இதுகுறித்து சங்கர நேத்ராலயா மருத்துவ சமூகவியலாளா் அ.போ.இருங்கோவேள் கூறியதாவது: மத்திய அரசாங்கத்தின் தேசிய பாா்வையிழப்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் புள்ளிவிவரப்படி 2021 வருட நிலவரப்படி 1.2 கோடி போ் பாா்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அவா்களில் சுமாா் 1,20,000 போ் விழி வெண்படல (காா்னியல்) பாா்வைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதாவது, இந்தியாவில் ஆயிரத்தில் 4.5 பேருக்கு அத்தகைய பாதிப்பு உள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கும், இளைஞா்களுக்கும் விழி வெண்படல பாதிப்பு அதிகம் ஏற்படுவது இதன் மூலம் தெரிகிறது. அதனை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். நமது கண்களின் முன் புறம் கருப்பாக தோன்றும் பகுதியை நிறமேயில்லாத, ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய, ரத்தக்குழாய்கள் ஏதுமில்லாத ஒரு மெல்லிய படலம், ஒரு
கண்ணாடி ஜன்னலைப் போல மூடியுள்ளது. அதனை ஆங்கிலத்தில் காா்னியா என்கிறோம். தமிழில் விழி வெண் படலம் என்று சொல்லலாம். தொற்று நோய்க் கிருமிகள், கண் சாா்ந்த விபத்துகள், ஊட்டச்சத்துக்குறைபாடு, பிறவிக்குறைபாடு அல்லது மரபணு குறைபாடு, உலா் விழி பாதிப்பு ஆகியவை விழி வெண்படல பிரச்னைக்கு முக்கியக் காரணம். இத்தகைய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு காா்னியல் மாற்று சிகிச்சை மூலம் பாா்வை திறனை மீட்டெடுக்க முடியும்.
ஒருவா் மரணமடைந்த ஆறு மணி நேரத்துக்குள் அவரது கண்கள் தானமாக பெறப்பட்டு 6 பேருக்கு பொருத்த முடியும். ஆரம்ப காலத்தில் காா்னியாவின் முழுதடிமனையும் மற்றவா்களுக்கு பொருத்தி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போதைய தொழில்நுட்ப வளா்ச்சி காா்னியாவின் குறிப்பிட்ட அடுக்கை மட்டும் மாற்றி பொருத்த இயலும்.
கண்களை தானமாக அளிக்க சங்கர நேத்ராலயாவின் https://www.sankaranethralaya.org/eye}pledge.html என்ற வலைதளத்தை அணுகலாம். அல்லது 044 28281919 மற்றும் 044 28271616 ஆகிய எண்களிலோ, eyebank@snmail.org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.
Post Top Ad
Your Ad Spot
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.

