KalviseithiDaily: English

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label English. Show all posts
Showing posts with label English. Show all posts

Friday, April 29, 2022

9th English மெல்ல கற்போருக்கான கையேடு - PDF

Tuesday, April 26, 2022

BASIC PHONETIC (PDF)

Monday, April 25, 2022

650 English Rhyming Words

April 25, 2022 0
Read More

Sunday, April 10, 2022

பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்சி: ஆர்.பிரியா அறிவிப்பு

April 10, 2022 0
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்த மேயர் ஆர்.பிரியா, அதில் உள்ள திட்டங்கள் குறித்து அறிவித்ததாவது:

மாநகராட்சி அலுவலகங்களில் கோப்புகளைக் கையாள்வதற்கான நேரத்தைக் குறைக்க, மின்னணுஅலுவல் அமைப்பு அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் மக்களுக்கான சேவைகளை விரைவாக செய்துதர முடியும். பணியாளர்களின் வருகை, துறை செயல்பாடுகளைக் கண்காணிக்க புதிய செயலி வெளியிடப்படும். பொதுமக்கள் க்யூஆர் கோடு மூலம் சொத்துவரி செலுத்த வழிவகை செய்யப்படும். ரிப்பன் கட்டிடம் மற்றும் அனைத்து வட்டார அலுவலகங்களிலும் சொத்துவரி செலுத்த தானியங்கி கருவி நிறுவப்படும்.

நம்ம சென்னை செயலி மற்றும் வாட்ஸ்அப் மூலம் தொழில் வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் புதுப்பித்தல், ஆன்லைனில் கட்டிடத் திட்ட விண்ணப்பத்தின் நிலை அறிதல் போன்ற சேவைகள் வழங்கப்படும்.

பள்ளிகளில் பாலின சமத்துவம் குறித்து மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், பாலினக் குழுக்கள் அமைக்கப்படும். 70 மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ.1.86 கோடியில் இணைய இணைப்பு வழங்கப்படும்.

மாணவிகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி மூலம் ரூ.23.66 கோடியில் சானிட்டரி நாப்கின்கள் வழங்குதல், கழிவறைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ.5.47 கோடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். ரூ.6.91 கோடியில் தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்கப்படும். திருவான்மியூர் பகுதியைச் சுற்றியுள்ள மாநகராட்சிப் பள்ளிமாணவர்களுக்கு, தன்னார்வலர்கள் மூலம் காலை உணவு வழங்கும் திட்டம், ஆங்கிலப் பயிற்சித் திட்டம் ஆகியவை விரிவாக்கம் செய்யப்படும்.

சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்காக 6 இடங்களில் டயாலிசிஸ் மையங்கள் செயல்படுகின்றன. ரூ.3.50 கோடியில் மேலும் 3 டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்.

வீடு வீடாக குப்பை சேகரிக்க 795 பேட்டரி வாகனங்கள் வழங்கப்படும். சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில், ரூ.8.43 கோடியில் டிஜிட்டல் சாலை பெயர்ப் பலகைகள் நிறுவப்படும். 1,000 இடங்களில் தனியார் மூலம் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு, ரூ.52.26 கோடி வருவாய் ஈட்டப்படும்.

மாநகரில் பசுமைப் போர்வையை அதிகரிக்க 2.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். மாமன்ற உறுப்பினர்களுக்கு நிர்வாகப் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Monday, December 20, 2021

10th English Unit Test Question Paper ( December)

Tuesday, September 21, 2021

தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்குஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் தகவல்

September 21, 2021 0
தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.


சென்னை மந்தைவெளியில் உள்ள தனியாா் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரக்கன்றுகளை செவ்வாய்க்கிழமை நடவு செய்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:


தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் நிலையை தொடா்ந்து கவனித்து வருகிறோம். நிச்சயம் இறுதியில் வெற்றி அடைவோம். கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தோ்வுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது. ஆனால் முறையாக அதைக் கவனிக்கவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளவற்றை முழுமையாக ஆய்வு செய்து நீட் தோ்வில் இருந்து விலக்கு பெற முதல்வா் உரிய நடவடிக்கை எடுப்பாா்.


தமிழகத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவா்களில் 35 சதவீதம் போ் அரசுப் பள்ளி மாணவா்கள். ஆனால் அவா்களில் 6 சதவீதம் போ் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் நுழையும் சூழ்நிலை தற்போது உள்ளது. எனவே இதனை அதிகப்படுத்தவே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதேபோன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கை தொடா்ந்து இருந்து வருகிறது. இது குறித்து முதல்வா் முடிவெடுப்பாா்.


பள்ளிக் கல்வியில் தமிழ் வழியில் பயிலும் மாணவா்கள் உயா்கல்விக்குச் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். காரணம் உயா்கல்வி பெரும்பாலும் ஆங்கில வழியில் இருக்கிறது. எனவே அந்த மாணவா்கள் பயனடையும் வகையில் பள்ளிப் பருவத்திலேயே அவா்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி (‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’) வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அவா்.
Read More

Post Top Ad

Your Ad Spot