KalviseithiDaily: COVID-19

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label COVID-19. Show all posts
Showing posts with label COVID-19. Show all posts

Thursday, July 7, 2022

ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை

July 07, 2022 0
மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை கட்டாயம் எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் பாதுகாப்புடன் சென்று வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மதுரையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை கட்டாயம் எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், முதல்வர்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பள்ளி மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் அதற்கான சூழ்நிலைக்கேற்ப மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அனைத்து குழந்தைகளும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பள்ளிகளில் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கண்டிப்பாசு வெப்பமானி கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் பின்னர் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். வெப்பமானி பரிசோதனையில் மாணவர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவரை தனிமைப்படுத்தி, மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதிகப்படியான மாணவர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக சுகாதார துறையினை தொடர்பு கொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவ்வப்போது கிருமி நாசினியைக் கொண்டு மாணவர்கள் கைகளை சுத்தம் செய்ய ஏதுவாக பள்ளிகளில் கை சுத்திகரிப்பான் (சானிடைசர்) போதுமான அளவு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் மாவட்ட கல்வி அலுவலர் குறிப்பிட்டுள்ளார்.
Read More

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனை கட்டாயம் - CEO சுற்றறிக்கை

July 07, 2022 0
மதுரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை கட்டாயம் என முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அனைத்து மாணவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் அவரை தனிமைப்படுத்தி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Read More

Monday, June 20, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 686 பேருக்கு கரோனா பாதிப்பு - Media Bulletin 20.06.2022 - PDF

Wednesday, June 1, 2022

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100ஐ கடந்த கரோனா பாதிப்பு

June 01, 2022 0
Another 139 people have been diagnosed with corona virus in Tamil Nadu in the last 24 hours.

The Department of Public Welfare has released the details of the corona affected data in Tamil Nadu. Of these, 139 new cases have been confirmed today. A maximum of 59 people have been diagnosed with the disease in Chennai.

Thus the total impact increased to 34,55,613. No new casualties were reported in the last 24 hours. The total death toll is 38,025. Another 52 people recovered from Corona in a single day and returned home.

This brings the total number of survivors so far to 34,16,959. In the last 24 hours, 14,066 people have been tested for corona. At present, 629 people are being treated, according to the Department of Public Welfare. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 139 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 59 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 34,55,613-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து ஒரேநாளில் மேலும் 52 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,16,959-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 14,066 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 629 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
Read More

Tuesday, May 24, 2022

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

May 24, 2022 0
6 students at Anna University, Chennai confirmed corona exposure *

Corona infection has been confirmed in 6 students of Anna University, Chennai.

Of the 40 students tested, 6 have been confirmed so far.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி*

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

40 மாணவர்களை பரிசோதனை செய்ததில் இதுவரை 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Read More

Friday, April 22, 2022

சென்னை ஐஐடி.,யில் மேலும் 25 பேருக்கு கோவிட்

April 22, 2022 0
சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி.,யில் ஏற்கனவே 30 பேருக்கு கோவிட் உறுதியான நிலையில் மேலும் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அங்கு கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆனது.

அங்கு ஆய்வு செய்த பின்னர் சுகதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், சென்னை ஐஐடி.,யில் கோவிட்டால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான அறிகுறி மட்டுமே உள்ளது.

சிலருக்கு தொண்டை வலியும், சிலருக்கு காய்ச்சல் மட்டுமே உள்ளது. நலமுடன் உள்ளனர். ஆக்சிஜன் அளவு 98,99 சதவீதம் உள்ளது. பரிசோதனை அதிகமாக்கி உள்ளோம். தற்போது, அங்கு 95 சதவீதம் பேர் மாஸ்க் அணிய துவங்கி உள்ளனர்.

தமிழகத்தில் கோவிட் பரிசோதனை படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் கோவிட்டால் பாதிக்கப்பட்ட 286 பேரில் 17 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 7 பேர் மட்டுமே ஆக்சிஜன் பிரிவிலும் 2 பேர் ஐசியு.,விலும் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

Monday, January 10, 2022

‛ஒமைக்ரானை தொடர்கிறது புதிய வகை கோவிட் ‛டெல்டாக்ரான்

January 10, 2022 0
உலகில் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஓமைக்ரானைத் தொடர்ந்து டெல்டாக்ரான் என்ற புதிய வகை கோவிட் சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு பரவத் துவங்கிய கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் உலகில் பல நாடுகளிலும் பரவியது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து 2021ல் கோவிட்டின் இரண்டாவது அலை ஏற்பட்டது. அதில் கோவிட் 19, டெல்டா என்று உருமாற்றம் அடைந்தது

இதனால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மிகவும் பாதிப்பு அடைந்தன. தற்போது 2022ல் கோவிட் வைரஸின் மூன்றாவது அலையில் ‛ஒமைக்ரான்' என்ற புதிய வகை கோவிட் பரவி வருகிறது. இதன் பரவல் டெல்டா வகை கோவிட்டை காட்டிலும் வேகமாக இருந்தாலும் இதுவரை பாதிப்பு குறைந்த அளவே உள்ளது. இந்நிலையில் சைப்ரஸ் நாட்டில் 'டெல்டாக்ரான்' என்ற புதிய வகை உருமாற்றம் அடைந்த கோவிட்டினை கண்டு பிடித்துள்ளனர். இது டெல்டா மரபு பின்னணியையும் ஒமைக்ரான் வகை கோவிட்டின் குணங்களை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். டெல்டாக்ரானால் சைப்ரஸ் நாட்டில் இது வரை 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
Read More

தடுப்பூசி: சுகாதாரம், பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் பினராயி உத்தரவு

January 10, 2022 0
கேரளத்தில் 15 - 18 வயதுக்குட்பட்டோருக்கு இந்த வார இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா தொற்று திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். கடந்த வாரம் திருமணம், இறப்பு, அரசியல், கலாசார நிகழ்வுகளில் 75 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது 50 நபர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசியல், கலாசார, பொது மற்றும் தனியார் அமைப்பு சார்ந்த நிகழ்வுகளை இணையம் வாயிலாக நடத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வார இறுதி நாள் ஊரடங்கு அல்லது மாலை நேர ஊரடங்கு விதிக்கப்படவில்லை. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து கரோனாவைக் கட்டுப்படுத்திவதில் அரசுக்கு உதவ வேண்டும்.

தற்போதைய சூழலில் பள்ளிகள் வழக்கம்போன்று செயல்படும். பள்ளிகளை மூடுவது குறித்து அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித் துறை அதிகாரிகளுடன் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

பள்ளிகளில் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Read More

Sunday, January 9, 2022

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் கோவிட் அதிகரிப்பு

January 09, 2022 0
தடுப்பூசிக்கு தகுதி பெறாத வயதினர்களான 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அமெரிக்காவில் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவது உயர்ந்து வருகிறது. இதனால் குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோர்கள், இளைஞர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், முகக்கவசம் அணியவும் நோய் தடுப்பு மையம் அறிவுறுத்துகிறது. இது தொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியிருப்பதாவது: டிசம்பரிலிருந்து நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் குழந்தைகள் விகிதம் 1 லட்சத்திற்கு 2.5 ஆக இருந்தது, தற்போது ஒரு லட்சத்துக்கு நான்கு குழந்தைகள் என்ற அளவில் உள்ளது. இது முந்தைய புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகம். 12 முதல் 18 வயதினரில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோரும், 5 முதல் 11 வயதினரில் 16 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.

ஜார்ஜியா, கனெக்டிகட், டென்னசி, கலிபோர்னியா மற்றும் ஓரிகான் ஆகிய ஐந்து மாநிலங்களில் தான் கோவிட் கண்டறியப்பட்ட குழந்தைகள் அதிகம் மருத்துவமனைகளில் உள்ளனர். டெல்டா வகையுடன் ஒப்பிடும் போது ஒமைக்ரானில் நோய் பாதிப்பு குறைவாகவே உள்ளது. கோவிட் கண்டறியப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் வெவ்வேறு பிரச்னைகளுக்கு வந்தவர்கள். அவர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனைகளில் கோவிட் பாசிடிவ் முடிவுகள் கிடைத்துள்ளது. அவர்கள் கோவிட்டிற்காக மருத்துவமனையில் உள்ளார்கள் என கருதக் கூடாது. இவ்வாறு தெரிவித்துள்ளது
Read More

Wednesday, January 5, 2022

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!

January 05, 2022 0
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!

பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் கருதி தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்..

தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவுப்படி ஜனவரி 10 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் மற்றும் அவசியம் ஏற்படின் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 144-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தத் தவறினால் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் தலைமையில் 4.1.2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொது மக்கள் நலன் கருதியும் பின்வரும் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகள் தொடர்பான கட்டுப்பாடுகள்..

1) மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரிப் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.

2) அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

3) பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.

4) அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது. 5) பயிற்சி நிலையங்கள் செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

6) பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

7) திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

8) உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பயிற்சியும், 50 சதவீத பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.

9) அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Tuesday, January 4, 2022

Omicron தொற்றினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் விவரம்! (04.01.2022)

January 04, 2022 0
Read More

Sunday, January 2, 2022

15-18 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி பள்ளிகளுக்கு அதிகாரி உத்தரவு

January 02, 2022 0
பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரில் 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு 15 முதல் 18 வயதுக்குள்ளவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று சமீபத்தில் வழிகாட்டி நெறிமுறையை வெளியிட்டது. இதையடுத்து சென்னை நகரில் இயங்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பு ஊசி போடுவதற்கான ஏற்பாடுகளை அனைத்து தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்துள்ளார். அதில், கடந்த டிசம்பர் 31ம் தேதி அரசு வெளியிட்டுள்ள ஆணையின்படி, ஜனவரி 10ம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை என அறிவித்துள்ளது. ஆகவே அந்த நாட்களில் எந்த ஒரு பள்ளியிலும் மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தக் கூடாது. மேலும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளில் படித்து வரும் மாணவ மாணவியருக்கு ஏற்கெனவே தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்த வேண்டும். இது தவிர 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்காக மருத்துவப் பணியாளர்கள் தங்கள் பள்ளிகளுக்கு வரும் போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
Read More

Monday, December 20, 2021

அரையாண்டு விடுமுறை கிடையாது? Thanthi Tv Video

December 20, 2021 0
Read More

Tuesday, December 14, 2021

சென்னை வரும் பயணிகள் அனைவரும் கொரோனா சோதனைக்கு முன்பதிவு செய்வது கட்டாயம்!

December 14, 2021 0
அதிகம் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகள் அனைவரும் கொரோனா சோதனைக்கு முன்பதிவு செய்வது கட்டாயம்!

20ம் தேதி முதல் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வரும்.

விமான நிறுவனங்கள் பயணிகள் முன்பதிவு செய்து இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தல்.
Read More

Saturday, December 11, 2021

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்பவர்கள் கவனத்திற்கு - கோயில் நிர்வாகம் புதிய உத்தரவு

December 11, 2021 0
கொரோனா 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதி - கோயில் நிர்வாகம்.
Read More

Thursday, December 9, 2021

தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது

December 09, 2021 0
தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது - மின்சார வாரிய உத்தரவால் ஊழியர்கள் அதிர்ச்சி!

மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வரும் 7 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உத்தரவு.
Read More

அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா

December 09, 2021 0
அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து கல்லூரி மாணவர்கள் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் விடுதி வளாகத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கல்லூரி மாணவர்கள் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளார். தமிழ்நாட்டில் விமானநிலையத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேரில் ஒருவருக்கு கூட ஓமிக்ரான் பரவல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். தான்சானியா, கனடா போன்ற நாடுகளும் அதிக பாதிப்புள்ள ஓமிக்ரான் பரவல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதால் இனி அந்நாட்டிலிருந்து வருபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக விடுதியில் உள்ள 300 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
Read More

Monday, December 6, 2021

மீண்டும் அதிகரித்த கொரோனோ எண்ணிக்கை.! அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவு.!

December 06, 2021 0
கர்நாடகா மாநிலம் சிவமொக்காவில் 29 நர்சிங் மாணவர்களுக்கு கொரோனோ உறுதியானதை அடுத்து அப்பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரிகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் ஓமிக்ரான் மாறுபாட்டின் வருகையைத் தவிர, மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான கொரோனோ வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தொற்றுநோயின் மூன்றாவது அலை மாநிலத்தைத் தாக்கும் என்ற அச்சத்தை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் சிவமொக்கா மற்றும் சிக்கமகளூர் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 68 மாணவர்கள் கொரோனோவுக்கு நேர்மறை சோதனை செய்துள்ளனர்.

சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள சீகோடு கிராமத்தில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா விடுதியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்ததில் 40 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஆரம்பத்தில், மூன்று மாணவர்கள் மற்றும் நான்கு ஊழியர்களுக்கு பாதிப்பு உறுதியானது. மற்றொரு சம்பவத்தில், சிவமொக்காவில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 29 நர்சிங் மாணவர்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என துணை கமிஷனர் கே.சிவக்குமார் கூறினார். மேலும் பாதிப்புக்கு உள்ளான அனைவரும் அறிகுறியற்றவர்கள் என்றும் கூறினார். மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுதி மூடி வைக்கப்பட்டுள்ளது. இதே போல அப்பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இதுமட்டுமின்றி, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களையும் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை கமிஷனர் கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மாணவர்களிடையே அதிக எண்ணிக்கையிலான கொரோனோ வழக்குகள் இருப்பது மட்டுமல்லாமல், ஓமிக்ரான் மாறுபாட்டின் வழக்குகளைப் பதிவு செய்த முதல் மாநிலமாகும். இதுவரை, இந்தியா முழுவதும் ஓமிக்ரான் மாறுபாட்டின் மொத்தம் ஐந்து வழக்குகள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் இரண்டு வழக்குகளும், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லியில் தலா ஒரு வழக்கும் சில நாட்களில் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

Friday, November 26, 2021

ஆப்ரிக்க நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா; உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

November 26, 2021 0
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி தலைமையில் தற்போது ஆலோசனை நடைபெறுகிறது. கோவிட்-19 நிலைமை மற்றும் தடுப்பூசி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் விகே பால் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஆப்ரிக்க நாடுகளில் வீரியமிக்க கொரோனா பரவி வரும் நிலையில் அரசு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசிக்கிறார். புதிய கொரோனாவான ‘ஒமிக்ரான்’ பரவியுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் மற்றும் இந்த நாடுகளின் வழியாக வருபவர்களையும் தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புகளின் தற்போதைய நிலைமை மற்றும் தடுப்பூசிகளை தயார் நிலையில் வைக்கவும் அதிகாரிகளுக்கு பிரதமர் கூறியுள்ளார். இந்தியாவில் நேற்று தினசரி பாதிப்பு சற்று அதிகம் காணப்பட்ட நிலையில் இன்று குறைந்துள்ளது. கடந்த 24-ம் தேதி 9,283-க்கும், 25-ம் தேதி 9,119 பேருக்கும், 26-ம் தேதி 10,549 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மேலும் இன்று 8,318 பேருக்கு கொரோனா கண்டறியபட்ட நிலையில் 465 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10,967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய அரசு நேற்று தகவல் தெரிவித்தது. பிப.1.1529 என்ற புதிய வகை கொரோனா ஆப்ரிக்க நாடுகளில் பரவி வரும் நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. தென் ஆப்பிக்கா உள்பட 3 நாடுகளிலிருந்து இந்தியாவரும் பயணிகளை ஏர்போர்ட்டிலேயே பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தில் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் நேற்று கூறப்பட்டது.
Read More

Post Top Ad

Your Ad Spot