KalviseithiDaily: Syllabus

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Syllabus. Show all posts
Showing posts with label Syllabus. Show all posts

Saturday, December 17, 2022

1 முதல் 12 ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாய பாடம்

December 17, 2022 0
1 முதல் 12 ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாய பாடம்

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வியை கட்டாய பாடமாக்கவேண்டும் என வலியுறுத்தி மாநில கல்விக் கொள்கை உயர்மட்டக் குழு நீதியரசர் முருகேசனி டம் உடற்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்த னர்.

தமிழகத்தில் கல்வித்து றையை சீரமைக்க மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான உயர் மட்டக்குழுவை நீதியரசர் முருகேசன் தலைமையில் தமிழக அரசு அமைத்துள் ளது. இந்தக் குழுவினர் பல்வேறு கல்வியாளர்கள், கல்விச்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களிடம் கருத்து கேட்டு வருகின்ற னர். உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்கு நர் சங்க மாநில தலைவர் தேவி செல்வம், பொதுச் செயலாளர் பெரியதுரை மற்றும் நிர்வாகிகள் உயர் மட்டக் குழுவை சந்தித்து மனு அளித்து தங்கள் கருத் துக்களை தெரிவித்தனர்.

அவர்கள் அளித்தமனு வில் கூறியிருப்பதாவது:

தற்போதைய கல்விக் கொள்கையில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உடற்கல்வி பாடமும், உடற் கல்வி ஆசிரியர் நியமன மும்இல்லை. குழந்தை பரு வம்5வயது முதல் 10 வயது வரை உடற்கல்வி மூலமாக உடல் இயக்கங்களையும், அதன் செயல்பாடுகளை யும் கற்கவும், விளையாட்டு அடிப்படை விதிகளை தெரிந்து கொண்டு விளை யாடவும் வாய்ப்பு வழங்க வேண்டும். இளம் வளரும் குழந்தை பருவமாகிய 5 மதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உடற் கல்வி போதிக்கவும், விளையாட்டு பயிற்சி அளிக்கவும் உடற்கல்வி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். தற்போதைய கல்வி முறையில் உடற் கல்வி பாடமும், அதை கற் றுக்கொடுக்க உடற்கல்வி ஆசிரியரும் இல்லை. இந்த நிலை தொடராமல் இருக்க மாநில கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட வேண் டும்.

6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி பாடத்தை கட்டாயமாக்கி, 10ம் வகுப்பு பொதுத்தேர் வில் உடற்கல்வி பாடத் திற்கு 50:50 விகிதத்தில் எழுத்து தேர்வும், செய் வேண்டும். முறை தேர்வும் இடம் பெற செய்ய வேண்டும்.

அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும் உடற்கல்வி இயக்குனர் நிலை 2 பணி யிடம் வழங்க வேண்டும்.

தற்போதைய கல்வி முறையில் உடற்கல்வி பாடவேளை வாரத்திற்கு 2 மட்டுமே உள்ளது. இதை உயர்த்திதினமும் ஒரு உடற் கல்வி பாடவேளை ஒதுக்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு ஏக்கர் விளையாட்டு மைதானம் கட்டாயம் இருக்க வேண் டும். உயர்,மேல்நிலைப்பள் ளிகளில் 3 முதல் 5 ஏக்கர் அளவில் விளையாட்டு மைதானம் இருக்க வேண் டும். விளையாட்டு மைதா னம் பள்ளி வளாகத்தில் அல்லது அருகே அரசு ஏற் பாடு செய்ய வேண்டும்.

விளையாட்டு போட்டி களுக்கு செல்லும் மாண வர்களுக்கு பஸ் மற்றும் ரயில்களில் இலவசமாக செல்ல அனுமதி அளிக்க வேண்டும். அல்லது தனி யாக நிதி ஒதுக்கீடு செய்து உடற்கல்விக்கு மட்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். உடற்கல்வி பாடத்திட்டம், பாடக்கு றிப்புகளை அரசு வழங்க இவ்வாறு தெரிவித் துள்ளனர்.

Read More

Wednesday, November 23, 2022

தமிழ் வழி படிப்பை அதிகரிக்க நான் முதல்வன் திட்டம் - அமைச்சர் பொன்முடி

November 23, 2022 0
தமிழ் வழி படிப்பை அதிகரிக்க நான் முதல்வன் திட்டம்

அமைச்சர் பொன்முடி மேலும் கூறியதாவது: தமிழ் வழியில் இன்ஜினியரிங் சேர்க்கை அதிகாரிக்க நான் முதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய பாடதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் வழியில் அவற்றை கற்று கொடுக்கும்பொழுது அவர் களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். வருகின்ற காலங்களில் தமிழ்வழி இன்ஜினியரிங் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும். வேலை வாய்ப் புகள் பெறவேண்டுமென்றால் தமிழில் தேர்வு எழுத வேண்டும். எனவே அடுத்த ஆண்டில் இருந்து தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.

அடுத்த கல்வியாண்டில் இருந்து புதிய பாடத்திட்டம்: அமைச்சர் பொன்முடி

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், அடுத்த கல்வியாண்டில் இருந்து புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருப்பதாவது:

பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் விவகாரத்தில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில், குழு அமைக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், அடுத்த கல்வியாண்டில் இருந்து புதிய பாடத்திட்டம்கொண்டுவரப்படும்.

அனைத்து பல்கலைகழகங்களிலும் ஒரே மாதிரியான மொழிப்பாடம்(தமிழ் மற்றும் ஆங்கிலம்) கொண்டு வரப்படும். ஆராய்ச்சி படிப்பிற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

திமுக அரசு ஊழல் செய்கிறது என்ற எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, தமிழ் மக்களுக்கு யார் ஊழல் செய்கிறார்கள் என்பது தெரியும் என்று கூறினார்
Read More

Friday, April 29, 2022

Hr Sec Second year - Priority Syllabus (English Medium) - PDF

Thursday, April 28, 2022

இன்ஜினியரிங் படிப்பில் பிளம்பிங் பாடம்

April 28, 2022 0
நாடு முழுவதிலும் உள்ள இன்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்சர் கல்வி நிறுவனங்களில் பிளம்பிங் படிப்பை வழங்க, ஏ.ஐ.சி.டி.இ., என அழைக்கப்படும் அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு, இந்தியன் பிளம்பிங் அசோசியேஷன் - ஐ.பி.ஏ., உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சகஷ்ரபுத்தே மற்றும் ஐ.பி.ஏ., தேசிய தலைவர் குர்மித் சிங் அரோரா ஆகியோர் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதன் வாயிலாக, இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர், இன்டீரியர் டிசைனிங் படிக்கும் மாணவர்கள் மற்றும் சிவில், என்விரான்மெண்டல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர் பட்டதாரிகள், பிளம்பிங் - வாட்டர் மற்றும் சானிடேஷன் பாடத்தை படித்து 4 கிரெடிட் பெறலாம்.

கட்டடத்தின் வலிமையை அதிகரிக்க ’பிளம்பிங்’ மிக அவசியம் என்பதை உணர்ந்து 80 சதவீத தியரி மற்றும் 20 சதவீத செயல்முறை பயிற்சி அடங்கிய இந்த 50 மணிநேர பாடம் இன்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்சர் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
Read More

Monday, April 25, 2022

CBSE பாடத்திட்டங்கள் நீக்கத்திற்கு கடும் கண்டனம்!

April 25, 2022 0
Statement by Secretary-General of the Presidency, Waikoloa: The CBSE has removed the subjects of History and Political Science from Class XI and XII, Cold War, Rise of the Islamic Empires in Africa-Asia, History of the Mughal Courts, and the Industrial Revolution. Two poems by the Urdu poet Faiz Ahmad have been translated into the categories of religion-classism and political-communalism, secular state, and removed the subjects of democracy and pluralism.

The CBSE has announced that these subjects will be dropped from the next academic year (2022-23) on the recommendation of the National Council for Educational Research and Training. This is how the German Hitler government and the Italian Mussolini government imposed fascist toxic ideas in the curriculum to brainwash school children. But let us not forget that those states were thrown in the dustbin of history. As such, the BJP government's historic distortion work will not succeed. Therefore, the BJP government must stop deleting historical lessons, obscuring and imposing Hindutva ideas. CBSE பாடத்திட்டம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:

சிபிஎஸ்இ 11 மற்றும் 12ம் வகுப்புக்கான வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்தில் இருந்து பனிப்போர் யுகம், ஆப்பிரிக்க-ஆசியாவில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு, தொழிற் புரட்சி ஆகிய பாடங்களை நீக்கி உள்ளது. ஃபயஸ் அகமது என்ற உருதுக் கவிஞரின் இரண்டு கவிதைகள், மதம்-வகுப்பு வாதம் மற்றும் அரசியல்-வகுப்புவாதம், மதச்சார்பு அற்ற அரசு என்ற பிரிவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இடம் பெற்று இருந்த பாடங்களையும், ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகிய பாடங்களையும் நீக்கி விட்டனர்.

வைகோ கடும் கண்டனம்

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் பரிந்துரையின்படி, இந்தப் பாடங்கள் வரும் கல்வி ஆண்டு (2022-23) முதல் நீக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்து இருக்கின்றது.கடந்த கல்வி ஆண்டில், 11ம் வகுப்பு அரசியல் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கூட்டு ஆட்சி, குடி உரிமை, தேசியவாதம் மற்றும் மதச் சார்பு இன்மை போன்ற பாடங்களை நீக்கினார்கள். ஜெர்மனிய ஹிட்லர் அரசும், இத்தாலியின் முசோலினி அரசும் இப்படித்தான் பள்ளிக் குழந்தைகளுக்கு மூளைச் சலவை செய்வதற்கு, பாடத் திட்டங்களில் பாசிச நச்சுக் கருத்துகளைத் திணித்தார்கள். ஆனால் அந்த அரசுகள், வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட்டன என்பதை மறந்து விடக் கூடாது. அதுபோல, பா.ஜ அரசின் வரலாற்றுத் திரிபு வேலைகள் வெற்றி பெறாது. எனவே, வரலாற்றுப் பாடங்களை நீக்குவதையும், இருட்டடிப்புச் செய்வதையும், இந்துத்துவக் கருத்துகளைத் திணிப்பதையும் பா.ஜ அரசு கைவிட வேண்டும்.
Read More

9-ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாயப் பாடம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

April 25, 2022 0
தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்விப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

நாடு முழுவதும் உடற்கல்விப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்விப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, செய்முறை மற்றும் எழுத்து முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அனைத்து பள்ளிகளில் இரண்டு விளையாட்டுகள் கட்டாயமாக்கப்பட்டு, வாரத்தில் இரண்டு நாள்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்
Read More

Saturday, January 8, 2022

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உயர்கல்வித்துறை உத்தரவு

January 08, 2022 0
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், தங்கள் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்!

அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும், உயர்கல்வித்துறை உத்தரவு.
பாடத்திட்டத்தை மாற்றி வடிவமைத்த பின் தமிழ், கணிதம், புள்ளியியல் பாடங்களை மட்டும் ஆய்வுக்காக அரசுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவு.
Read More

Post Top Ad

Your Ad Spot