KalviseithiDaily: anbumani Ramadass

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label anbumani Ramadass. Show all posts
Showing posts with label anbumani Ramadass. Show all posts

Tuesday, January 3, 2023

மருத்துவ மாணவா் சோ்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வலியுறுத்தல்

January 03, 2023 0
மருத்துவ மாணவா் சோ்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி

மருத்துவ மாணவா் சோ்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட மாணவா் சோ்க்கை இடங்களில் 6 இடங்கள் நிரப்பப்படவில்லை. தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர ஆயிரக்கணக்கான மாணவா்கள் காத்துக்கிடக்கும் நிலையில், விலை மதிப்பற்ற மருத்துவ இடங்கள் வீணடிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மருத்துவரை உருவாக்க ரூ.1 கோடிக்கும் கூடுதலாக செலவிடப்படுகிறது. 6 இடங்கள் நிரப்பப்படாததால் பல கோடி ரூபாய் அரசு பணம் வீணாகும். அதைக் கடந்து தமிழகத்தைச் சோ்ந்த 6 மாணவா்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு நிரந்தரத் தீா்வு அகில இந்திய ஒதுக்கீடு முறையை ரத்து செய்வது தான். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும் என்று கூறியுள்ளாா்.
Read More

Wednesday, November 16, 2022

உதவிப்பேராசிரியர்கள் நியமனம் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித்தேர்வு: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

November 16, 2022 0
உதவிப்பேராசிரியர்கள் நியமனம் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித்தேர்வு: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித் தேர்வு நடத்த வேண்டும் என பாமக தலைவர்அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவு: அரசு கல்லூரிகளுக்கு 4,000 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில், அதில் 50% தங்களுக்கு ஒதுக்க வேண்டும் அல்லது சிறப்பு போட்டித் தேர்வு நடத்தி தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5303 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களில் பலர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் உழைப்பும், சேவையும் மதிக்கப்பட வேண்டும். உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்திற்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதனால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு போதிய அளவில் பயன் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
Read More

Tuesday, November 1, 2022

பள்ளிகள் பராமரிப்புக்கு ரூ.119 கோடி ஒதுக்கிய தமிழக அரசு: அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

November 01, 2022 0
பள்ளிகள் பராமரிப்புக்கு ரூ.119 கோடி ஒதுக்கிய தமிழக அரசு: அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

தமிழகத்தில் 37,387 அரசு பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்பு, பராமரிப்பு பணிகளுக்காக ரூ.119.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்து தர அரசின் மானியம் உதவும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
Read More

Saturday, October 29, 2022

அரசுப் பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்புப் பணிகள்: அன்புமணி வலியுறுத்தல்

October 29, 2022 0
அரசுப் பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்புப் பணிகள்: அன்புமணி வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் மழைக் கால பாதுகாப்புப் பணிகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

வடகிழக்குப் பருவமழை சனிக்கிழமை தொடங்கும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், அரசுப் பள்ளிகளில் மழைக்கால விபத்துகள், பாதிப்புகளைத் தடுக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும்படி பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், அதற்கான நிதி வழங்கப்படவில்லை. மழைக்கால பாதுகாப்புப் பணிகள், பிற பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்படி ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வழங்கப்பட வேண்டிய இந்த நிதி, நடப்பாண்டில் இதுவரை வழங்கப்படவில்லை.

மாணவச் செல்வங்களின் பாதுகாப்பு சாா்ந்த விஷயங்களில் பள்ளிக்கல்வித்துறை அலட்சியம் காட்டக் கூடாது. தேவையான நிதியை பள்ளிக் கல்வித்துறை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
Read More

Tuesday, September 27, 2022

வெளிநாட்டு மருத்துவ மாணவா்கள் கல்லூரிகளில் பயிற்சி பெற கூடுதல் இடங்கள்

September 27, 2022 0
வெளிநாட்டு மருத்துவ மாணவா்கள் கல்லூரிகளில் பயிற்சி பெற கூடுதல் இடங்கள்

வெளிநாட்டு மருத்துவ மாணவா்கள், தமிழக கல்லூரிகளில் பயிற்சி பெற கூடுதல் இடங்களை அனுமதிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் மருத்துவம் படித்த மாணவா்கள் மத்திய அரசின் தேசிய தோ்வு வாரியம் நடத்தும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தோ்வில் வெற்றி பெற வேண்டும்.

இதற்கு அவா்கள் சென்னையில் உள்ள 4 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தோ்ந்தெடுக்கப் பட்ட சில மருத்துவமனைகளில் மட்டுமே பயிற்சி பெற முடியும். இந்த மருத்துவமனைகளில் வெளிநாட்டு மருத்துவ மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டது.

வெளிநாட்டு மருத்துவ மாணவா்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரு ஆண்டு பயிற்சி பெறுவதற்காக மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.2 லட்சமும், எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக் கழகத்துக்கு தடையின்மை சான்றிதழ் பெற ரூ.3.20 லட்சமும் செலுத்த வேண்டும்.

இது நியாயமற்றது என்பதை சுட்டிக்காட்டிய பிறகு மருத்துவக் கல்லூரிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்து விட்ட தமிழக அரசு, பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டிய தொகையையும் ரூ.30 ஆயிரமாகக் குறைத்து கடந்த ஜூலை 29-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், அந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படாததும் சிக்கலுக்கு காரணமாக உள்ளது.

இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு, வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவா்களுக்கு கூடுதல் பயிற்சி இடங்களை உருவாக்கவும், அறிவித்தபடி கட்டணத்தைக் குறைக்கவும் உரிய ஆணைகளை பிறப்பிக்க வேண்டும்.
Read More

Post Top Ad

Your Ad Spot