KalviseithiDaily: 50 crore to provide financial assistance to pensioners families

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label 50 crore to provide financial assistance to pensioners families. Show all posts
Showing posts with label 50 crore to provide financial assistance to pensioners families. Show all posts

Wednesday, May 11, 2022

ஓய்வூதியர் குடும்ப நிதியுதவி வழங்க ரூ.50 கோடி ஒதுக்கீடு

May 11, 2022 0
ஓய்வூதியர் குடும்ப நிதியுதவி

தமிழக அரசின் ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்துக்கு, சிறப்பு ஒதுக்கீடாக 50 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுஉள்ளது.

அரசு ஓய்வூதியர்கள் மரணம் அடைந்தால், குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின்கீழ், 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக ஓய்வூதியம் பெறுவோரிடம் மாதம் 150 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது.கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஓய்வூதியம் பெறுவோர் இறப்பு அதிகம் இருந்தது.இதன் காரணமாக, இறப்புக்கான நிதி கோரி, 2019 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை, 1,600 விண்ணப்பங்கள் வர பெறப்பட்டன. இவற்றில், 800 விண்ணப்பதாரர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. ரூ.50 கோடி ஒதுக்கீடு

கடந்த ஆண்டு ஜூனிற்கு பின், 3,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில், 1,400 விண்ணப்பங்களுக்கு மட்டும் பணம் வழங்கப்பட்டுள்ளது. 'நிலுவையில் உள்ள, 19 ஆயிரத்து 871 மறைந்த ஓய்வூதியதாரர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க, 86.56 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.

தற்போது பிடித்தம் செய்யப்படும் சந்தா தொகை, 150 ரூபாய் போதுமானதாக இல்லை' என, ஓய்வூதியத்துறை இயக்குனர், அரசுக்கு கடிதம் அனுப்பினார்.அதை பரிசீலித்த அரசு, 50 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த தொகையை, ஐந்து ஆண்டுக்கு வட்டி இல்லாமல், ஓய்வூதியத்துறை திரும்ப செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot