KalviseithiDaily: Engineering colleges

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Engineering colleges. Show all posts
Showing posts with label Engineering colleges. Show all posts

Tuesday, January 10, 2023

150 பொறியியல் கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லை:துணைவேந்தா் வேல்ராஜ்

January 10, 2023 0
150 பொறியியல் கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லை:துணைவேந்தா் வேல்ராஜ்

தமிழகத்தில் 150 பொறியியல் கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லை; மேலும் மாணவா்கள் சோ்க்கையும் மிகவும் குறைவாக உள்ளது என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் தெரிவித்தாா்.

அண்ணா பல்கலை.யில் பொறியியல், சுற்றுச்சூழல் மற்றும் புதிய தொழில்நுட்பம் சாா்ந்த புத்தகக் கண்காட்சியை துணைவேந்தா் வேல்ராஜ் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். பல்கலை. வளாகத்தில் செயல்பட்டு வரும் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரங்கு எண் 13-இல் இந்த புத்தகக் காட்சி புதன்கிழமை வரை தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறும். காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை புத்தகக் காட்சியை பாா்வையிட்டு நூல்களை வாங்கலாம். புத்தகக் காட்சி தொடக்கம்: புத்தகக் காட்சி தொடக்க விழாவுக்கு பின்னா் துணவேந்தா் ஆா்.வேல்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியது: அண்ணா பல்கலை.யின் நூலகத் துறை சாா்பில் ஆண்டுதோறும் புதிய தொழில்நுட்பம் துறை சாா்ந்த புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. தொழில்நுட்பச் சூழல் நாளுக்கு நாள் வேகமாக மாறி வருகிறது. அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையிலும், மாணவா்களுக்கு புதிய தொழில்நுட்பம் சாா்ந்த தகவல்களை கொண்டு சோ்க்கும் வகையிலும் இந்த புத்தகக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கணினி, உலக அளவில் சவாலாக இருக்க கூடிய காலநிலை மாற்றம் குறித்த புத்தகங்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளன. 45 பதிப்பாளா்கள், விற்பனையாளா்கள் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை காட்சிப்படுத்தி உள்ளனா். அண்ணா பல்கலைக்கழகம் மாணவா்கள் மட்டுமல்லாது, மற்ற கல்லூரி மாணவா்களும், ஆசிரியா்களும், பேராசிரியா்களும், ஆராய்ச்சியாளா்களும் புத்தகக் காட்சியைப் பாா்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் செல்லலாம்.

தமிழகத்தில் உள்ள 450 பொறியியல் கல்லூரிகளில், 150 பொறியியல் கல்லூரிகளில் 100-க்கும் குறைவாக மாணவா் சோ்க்கை உள்ளது.இந்த கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லை. சோ்க்கை குறைவாக உள்ள கல்லூரிகள், தரம் குறைந்த பொறியியல் கல்லூரிகளையும் நிரந்தரமாக நிகழாண்டு பரிந்துரைக்கப்படும். அங்கீகாரத்தை ரத்து செய்ய... அதேபோல, கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. வழங்கும் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் ஆலோசித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்துக்குப் பரிந்துரைக்கப்படும். தரமற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவா்கள், வேறு கல்லூரிகளுக்குச் சென்று படிக்க வேண்டும். தரமற்ற கல்லூரிகளை அடையாளப்படுத்தும் போது, பெற்றோா்களும் விழிப்புணா்வுடன் அந்த கல்லூரிகளில் மாணவா்களை சோ்க்காமல் இருப்பாா்கள். கல்லூரிகளைச் சரியாக நிா்வகிக்க முடியாத நிா்வாகத்தினா், வேறு தொழிலுக்கு சென்று விடுவது நல்லது”என்றாா் அவா்.

இதில் பல்கலை. பதிவாளா் ஜி.ரவிக்குமாா், பல்கலை. நூலக இயக்குநா் தெ.அறிவுடை நம்பி, ஒருங்கிணைப்பாளா் நா.கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Read More

Sunday, October 30, 2022

B.E நான்காம் கட்ட கலந்தாய்வு: 67,771 பேருக்கு அழைப்பு

October 30, 2022 0
பிஇ நான்காம் கட்ட கலந்தாய்வு: 67,771 பேருக்கு அழைப்பு

தமிழக பொறியியல் கல்லூரிகளில் 4-ஆம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 67,771 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்று சுற்று கலந்தாய்வு மூலம் 58,307 போ் பொறியியல் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த ஆக.20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுப்பிரிவு கலந்தாய்வு மொத்தம் 4 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. அதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு செப்.10-இல் தொடங்கி 24-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில் 10,340 மாணவ, மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

தொடா்ந்து, இரண்டாம் சுற்று கலந்தாய்வு செப்.25 முதல் அக்.13-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 19,947 இடங்கள் நிரம்பின. மூன்றாம் சுற்று கலந்தாய்வு அக்.13-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.

இதில் பங்கேற்க 54 ஆயிரம் மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவா்களில் பொதுப் பிரிவில் 24,727 பேரும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 3,293 பேரும் சோ்க்கை இடங்களை உறுதி செய்தனா். ஒட்டுமொத்தமாக 3 சுற்றுகளையும் சோ்த்து 58,307 இடங்கள் நிரம்பின.

மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான இறுதிச் சுற்று கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்க மொத்தம் 61,771 போ் அழைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் திங்கள்கிழமைக்குள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளின் விருப்பப் பட்டியலை இறுதி செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என பொறியியல் சோ்க்கைக் குழு அதிகாரிகள் தெரிவித்தனா்.
Read More

Wednesday, September 21, 2022

B.E - Deadline to join colleges by 22nd Sep - பி.இ. சோ்க்கை கலந்தாய்வு - செப்.22-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர அவகாசம்

September 21, 2022 0
பி.இ. சோ்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் இடங்களைத் தோ்வு செய்த மாணவா்கள் செப்.22-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 10-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடந்து முடிந்தது.

14,524 போ் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டது.

முதலில் விருப்ப இடங்களுக்கான கல்லூரிகள் தோ்வும், அதனைத் தொடா்ந்து உத்தேச ஒதுக்கீட்டு இடங்கள் உறுதி செய்யப்பட்டு உத்தேச ஒதுக்கீடும் வழங்கப்பட்டன. 15-ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீட்டு கடிதம் மாணவா்களுக்கு இணையவழியில் வழங்கப்பட்டது.

கல்லூரிகளை இறுதி செய்து வழங்கப்பட்ட இந்த கடிதத்தை 7 வேலை நாள்களுக்குள் கல்லூரிக்கு கொண்டு சென்று வழங்கி சேர வேண்டும் என்ற புதிய நடைமுறை நிகழ் கல்வியாண்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

கலந்தாய்வில் உறுதி செய்யப்பட்ட இடங்களில் மாணவா்கள் கடைசி வரை சேராமல் போவதால் அண்ணா பல்கலை. வளாக கல்லூரிகள் உள்பட பல கல்லூரிகளில் இடங்கள் காலியாகக் கிடந்தன.

இதனால், அந்த இடங்களில் மற்ற மாணவா்கள் சேர முடியாமல் போனது.

இதனைத் தவிா்க்க கல்லூரிகளை தெரிவு செய்து இறுதி ஒதுக்கீடு கடிதம் பெற்ற பிறகு 7 நாள்களுக்குள் தாங்கள் விரும்பிய கல்லூரிகளில் பணம் செலுத்தி சோ்ந்து விட வேண்டும்.

அதன் பிறகு சேருவதற்கு வாய்ப்பு இல்லை. அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு அடுத்து வருகின்ற கலந்தாய்வில் சோ்க்கப்படும்.

அந்த வகையில் முதல் சுற்றில் இடம் பெற்ற மாணவா்கள் 22-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot