KalviseithiDaily: anbil mahesh

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label anbil mahesh. Show all posts
Showing posts with label anbil mahesh. Show all posts

Thursday, January 19, 2023

ஒருவன் ஒருவன் முதலாளி.. முத்து பட ரஜினியான அமைச்சர் அன்பில் மகேஷ்...அனல் பறக்கும் குதிரை வண்டியில் மாஸ் Entry!

January 19, 2023 0
ஒருவன் ஒருவன் முதலாளி.. முத்து பட ரஜினியான அமைச்சர் அன்பில் மகேஷ்...அனல் பறக்கும் குதிரை வண்டியில் மாஸ் Entry!
தமிழகத்தில் முதல் முறையாக திருவாரூரில் பசுமை பள்ளி திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார். கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ரிப்பன் வெட்டி துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்ந்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணனுடன் குதிரை வண்டியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்து மகிழ்ந்தார்
Read More

Wednesday, January 4, 2023

உயா் கல்வி வளா்ச்சியில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

January 04, 2023 0
உயா் கல்வி வளா்ச்சியில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

உயா் கல்வி வளா்ச்சியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

சென்னையை அடுத்த படூா் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி முகாம் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: உயா் கல்வி வளா்ச்சியில் தமிழகம் 51.4 சதவிகிதம் பெற்று நாட்டில் முதல் இடத்தில் உள்ளது. இந்த எண்ணிக்கை 100 சதவீதமாக உயா்த்த வேண்டும்.

நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவா்களுக்கு வழங்கப்படும் ஆளுமைத் திறன் உள்ளிட்டவை தனித்திறன் மேம்பாடு, உயா் கல்விக்கான நுழைவுத் தோ்வு பயிற்சி ஆகியவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவா்களின் அறிவாற்றலை மேம்படுத்தும் பள்ளி ஆசிரியா்கள் அவா்களின் தனித்திறன் மேம்பாட்டுக்கும், உயா் கல்வி பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், வழிகாட்டி உறுதுணை புரிய வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கல்லூரி இயக்குநா் டாக்டா் சூசன் வா்கீஸ் ,துணை இயக்குநா் டாக்டா் வி. ஜே. பிலிப், கல்லூரி முதல்வா் சீ.திருமகன், பேராசிரியா்கள் சா.உதயகுமாா், ஏஞ்சலின் கிறிஸ்டோபெல், வா. ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Read More

Thursday, December 22, 2022

தமிழக மாணவர்கள் ஜே.இ.இ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கல் - அமைச்சர் அன்பில் மகேஷின் அறிவிப்பு

December 22, 2022 0
தமிழக மாணவர்கள் ஜே.இ.இ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

தமிழக மாணவர்கள் ஜே.இ.இ நுழைவுத்தேர்வுக்கு விண்ணபிப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி தெரிவித்துள்ளார். 10-ம் வகுப்பு மார்க் குறிப்பிட வேண்டும் என்பதை என்டிஏ கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் எனவும் கூறியுள்ளார்
Read More

Wednesday, October 26, 2022

நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு கோரிக்கை - DRPGTA 26.10.22

October 26, 2022 0
*DRPGTA 26.10.22*
📱📱📱📱📱📱📱
*அரசுமேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணி மூப்பு பட்டியலை விரைவில் வெளியிடவும்*
*அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்*-

 நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை*

அனுப்புநர்:-
ஆ.இராமு,
மாநிலத் தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA,
7373761517.

பெறுநர்:-
           மாண்புமிகு 
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள், 
தலைமை செயலகம், 
சென்னை 09.


ஐயா,
          பொருள்:-
அரசுமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணி மூப்பு பட்டியலை விரைவில் வெளியிடவும், 
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுதல் சார்பு...

                பள்ளிக்கல்வி துறையில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கக்கூடிய முன்னுரிமை பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது...

.அதேபோல காலியாக உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப பணி மூப்பு உடைய முதுகலை ஆசிரியர்களின் பட்டியலை வெளியிட தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

பள்ளிக்கல்வித் துறையில் மேல்நிலைக் கல்வியில் நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை அதிக பதவி உயர்வு இல்லாமல் பணிபுரிந்து வருகிறார்கள். 

மேல்நிலை வகுப்புகளில் கற்றல்,கற்பித்தல் பணிகளைச் செய்து வந்தாலும் உயர்நிலை வகுப்புகளை கையாளும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சமமான ஊதியத்தையே முதுகலை ஆசிரியர்கள் பெற்று வருகின்றனர் .

மேலும் 01.06.2009 க்கு முன்பு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களை விட 01.06.2009 க்கு பிறகு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்கள் மாத ஊதியத்தில் 14000 ரூபாய் ஊதிய இழப்போடு பணிபுரிந்து வருகிறார்கள்.

கடந்த கல்வி ஆண்டு நடந்த 
கலந்தாய்வு 100% நேர்மையாகவும் சிறப்பாகவும் நடந்தது.

ஆனால் அதில் கூட உபரி ஆசிரியர்களாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு வெளி மாவட்டம் செல்ல அனுமதிக்கப்பட்டது. 

ஆனால் உபரி ஆசிரியர்களாக இருந்த
முதுகலை ஆசிரியர்கள், வெளி மாவட்டத்திற்கு செல்ல மறுக்கப்பட்டு 
 தாங்கள் பணிபுரிந்து வரும் மாவட்டத்திற்குள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதனாலும் பல முதுகலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்

இது போன்று பல நிகழ்வுகளில் முதுகலை ஆசிரியர் பணி தொகுதி சம நீதி வழங்கப்படாத பணித் தொகுதியாகவே இன்று வரை இருந்து வருகிறது.

பள்ளிக்கல்வித் துறைக்கு மற்ற பணி தொகுதிகள் ஒரு கண் என்றால் அதற்கு வெண்ணையும், 
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி தொகுதி ஒரு கண் என்றால் அதற்கு சுண்ணாம்பும் வைப்பது போல தான் பல ஆண்டுகளாக பல நிகழ்வுகள் தொடர்கிறது.

எனவே சமநீதி வழங்கப்படாத பணித் தொகுதியாக இருந்து வரும் முதுகலை ஆசிரியர் பணி தொகுதிக்கு 
பதவி உயர்வு, பொதுமாறுதல் கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் இனிவரும் காலங்களில் பிற பணித் தொகுதிக்கு வழங்கப்படுவது போல உரிய சமூக, சமநீதியை தாங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 எனவே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை விரைவில் 
நிரப்புவதற்கு இருக்கும் 
 தடைகளை நீக்கி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணி மூப்பு பட்டியலை விரைந்து வெளியிட தாங்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் 

 மேலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடத்தை பொறுப்பு ஏற்று நடத்தி வரும் முதுகலை ஆசிரியர்கள் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செய்து பொதுத் தேர்வுக்கு தயார் செய்வது,
அலுவலக பணிகளைத் தொய்வின்றி செய்வது,
பள்ளியை நிர்வாகம் செய்வது, 
தலைமை ஆசிரியர் சார்ந்த பயிற்சிக்கும், கூட்டத்திற்கும் மாவட்டத்திற்குள்ளும், வெளி மாவட்டத்திற்கும் சென்று வருவது என அதிக பணி பளுவோடு பணியாற்றி வருகின்றனர்.

எனவே பணி மூப்பு உடைய முதுகலை ஆசிரியர்களின் பட்டியலை வெளியிட்டு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்பவும் தாங்கள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி வணக்கம

ஆ.இராமு 
மாநிலத் தலைவர்,
 நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்
 73 73 76 15 17
DRPGTA

நாமக்கல்
26.10.22

நகல்:-

மதிப்பிற்கும் நேர்மைக்கும் உரிய பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்கக வளாகம்,
சென்னை 06.

மதிப்பிற்குரிய
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்கக வளாகம்,
 சென்னை. 6.
Read More

Tuesday, September 6, 2022

ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் உறுதி

September 06, 2022 1
ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் உறுதி

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை அமைச்சர்கள் சேகர்பாபு, மகேஷ் பொய்யாமொழி வழங்கினர். அருகில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி, பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர்.
ஆசிரி யர்களின் கோரிக்கைகளை படிப்படியாகதீர்த்து வைப் பது எங்கள் கடமை. ஆசி ரியர்கள் தங்கள் பணியை சிறப்பாக தொடர்ந்து செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல் வித்துறை அமைச்சர் மகேஷ் பொய் யாமொழி தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்து றையின் கீழ் உள்ள பள் ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர் கள் 393 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கள் வழங்கப்பட்டன.இதற் கான விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங் கில் நேற்று நடந்தது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய் யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன். இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் பங்கேற்று, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 342பேருக்கு டாக்டர்ராதா கிருஷ்ணன் விருதுகள், மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரியர்கள் 34, ஆங்கிலோ இந்தியப் பள்ளி ஆசிரியர் கள் 5. தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தத்துறை பள்ளிகள் 1, மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரி கள் 10 என மொத்தம் 393 பேருக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய் யாமொழி,சேகர்பாபு ஆகி யோர் வழங்கினர்.

அப்போது அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி. நல்லாசிரியர் விருது என்பதை டாக்டர் ராதா உறவு வேறுபட்டது. கிருஷ்ணன் விருது என்று மாற்றி அமைத்தவர் முன் னாள் முதல்வர் கலைஞர் தான். ஆசிரியர்கள் ஏங் கினால், வகுப்பறைகள் தூங்கும் என்று அண்ணா சொன்னார். ஆசிரியர் களை பொறுத்தவரை யில் அவர்களுக்கு தேவை

பள்ளிக் கல்வி துறைக்கு இயக்குநர் தேவை

தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, டிபிஐ வளாகத்துக்கு வரும் பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அதிக அளவில் என்னைத்தான் வந்து சந்திக்கின்றனர். அப்போது. ஆணையரை பார்க்க முடியவில்லை என்று கவலை தெரிவித்தனர்.

எனவே பள்ளிக் கல்வித்துறையில் முன்பு இருந் தது போல, பள்ளிக் கல்வி இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை தெரிவித்தனர். அடுத்தபடியாக, ஆசிரியர்களுக்கு அதிக அளவில் எழுத்து வேலை, புள்ளி விவரம் எடுக்கும் பணிதான் கொடுக்கப்படுகிறது. அதனால் அதைதவிர்த்து கற்றல் பணிக்கு நேரம் ஒதுக்கவும் கோரிக்கையாக வைத்து இந்த 2 கோரிக்கைகளையும் நீங்கள் தான் அமைச்சருக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதனால் பள்ளிக் கல்வி அமைச்சர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்,
Read More

Monday, July 25, 2022

அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை; நடவடிக்கை என்ன? - அமைச்சர் அன்பில் பதில்

July 25, 2022 0
இதை தொலைபேசியில்‌ நாம்‌ பேசினால்‌ நமக்கு உரிய தீர்வு கிடைக்குமா என்று பயப்படுகிறவர்களுக்கு என்று நாங்கள்‌ இப்போது துறையின்‌ சார்பாக portal கொண்டு வர இருக்கிறோம்‌.

பள்ளி மாணவர்களின்‌ தற்கொலை அதிகரித்து வருகிறதே, இதைத்‌ தடுப்பதற்கு ஏதாவது முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறதா என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது:

’’வருகிற 27ஆம் தேதி நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சரின்‌ தலைமையில்‌ கூட்டம்‌ நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே, RDS case scheme மூலமாக கல்வி என்று வரும்போது 413 blocks இருக்கிறது. ஒவ்வொரு blocks-க்கும்‌ இரண்டு மருத்துவர்கள்‌ இருக்கிறார்கள்‌. மனநல counselling எப்படி கொடுக்க வேண்டும்‌ என்று அவர்களுக்கு நாங்கள்‌ பயிற்சி கொடுத்து வருகிறோம்‌.

கிட்டத்தட்ட 800 மருத்துவர்கள்‌ தயாராக இருக்கிறார்கள்‌. அதில்‌ ஒவ்வொரு ஒன்றியத்திலும்‌ இரண்டு மருத்துவர்கள்‌ அங்கே இருக்கின்ற ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கு சென்று அங்கே உள்ள குழந்தைகளுக்கு கவுன்சிலிங்‌ வழங்குவது ஆகியவற்றைச் செய்வர். அதற்கான நிகழ்ச்சியை நம்முடைய முதலமைச்சர்‌ வருகிற 27ஆம்‌ தேதி அன்று தொடங்கி வைக்கிறார்‌. அதுமட்டுமல்ல, மாணவர்களுக்கு ஏற்கனவே மனரீதியாக மன அழுத்தம்‌ இருக்கின்றது, ஏதாவது ஒன்றை நண்பனிடம்‌ சொல்ல முடியவில்லை. ஆசிரியரிடம்‌ சொல்ல முடியவில்லை. பெற்றோரிடம்‌ சொல்லமுடியவில்லை. அப்படியிருப்பவர்கள்‌ எப்படி மற்றவர்களிடம்‌ பகிர்ந்து கொள்ளமுடியும்‌ என்பதற்காகத்‌ தான்‌, “மாணவர்‌ மனசு” என்று ஒரு பெட்டியை ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும்‌ வைத்து, ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை அது திறக்கப்படும்‌ என்று நாம்‌ சொல்லியிருக்கின்றோம்‌.

அதுமட்டுமல்லாமல்‌, 14417 எண்ணாக இருந்தாலும்‌ சரி, 1098 ஆக இருந்தாலும்‌ சரி, அந்த மாணவச்‌ செல்வங்களுக்கு இந்த எண்ணை ஒவ்வொரு வகுப்பறையிலும்‌ POCSO issue வரும்போது அதை நாங்கள்‌ ஒட்டி வைத்திருக்கின்றோம்‌.

அதையும்‌ பேசுவதற்கு அவர்கள்‌ சங்கடப்படுகிறார்கள்‌, தயங்குகிறார்கள்‌, இதை தொலைபேசியில்‌ நாம்‌ பேசினால்‌ நமக்கு உரிய தீர்வு கிடைக்குமா என்று பயப்படுகிறவர்களுக்கு என்று நாங்கள்‌ இப்போது துறையின்‌ சார்பாக portal கொண்டு வர இருக்கிறோம்‌. அதை website மூலமாக, அந்தக்‌ குழந்தைகள்‌ உள்ளே சென்று தங்களைப்‌ பற்றி சொல்லலாம்‌, சொல்லாமலும்‌ கூட அவர்கள்‌, என்ன பிரச்சனை அந்தப்‌ பள்ளியில்‌ நடக்கிறது என்பதை பதிவு செய்யலாம்‌, அலலது சுற்றுவட்டார சமூகத்தில்‌ என்ன பிரச்சனைகள்‌ வருகிறது என்று சொல்லலாம்‌.

கண்டிப்பாக அது ஒரு accountability ஆக வரும்போது, அந்தப்‌ பிரச்சினைக்கு தீர்வுகாண்கின்ற பணியில்‌ அதற்கான portalலையும்‌ மிக விரைவில்‌ நாங்கள்‌ வெளியிட இருக்கின்றோம்‌’’.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். ஏற்கெனவே உள்ள நடமாடும்‌ ஆலோசனை மையம்‌ தற்போது செயல்படுகின்றதா என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த அவர், ''ஏற்கனவே 17 பேர்‌ இருந்தார்கள்‌, இப்போது பலர்‌ பணி ஓய்வில்‌ சென்று விட்டதால்‌, தற்போது 7 பேர்‌ மட்டுமே இருக்கின்றார்கள்‌. ஆகவே, அந்த 7 பேர்‌ என்பது கண்டிப்பாக போதாது.

38,000 அரசுப்‌ பள்ளிகள்‌ இருக்கின்றன. எல்லாப்‌ பள்ளிகளும்‌ சேர்த்து மொத்தம்‌ 58,000 பள்ளிகள்‌ இருக்கின்றன. அதற்காகத்தான்‌ நான்‌ சொன்னது போல, ஒவ்வொரு ஒன்றியத்திறகும்‌ 413 கல்வி ஒன்றியம்‌ வைத்திருக்கிறோம்‌ என்று சொன்னால்‌, அதில்‌ நம்முடைய RDS Case scheme மூலமாக இரண்டு மருத்துவர்கள்‌ இருப்பார்கள்‌. கிட்டத்தட்ட 600 மருத்துவர்கள்‌ இருக்கிறார்கள்‌. அவர்களைத்தான்‌ நாங்கள்‌ இதற்கு பயன்படுத்த இருக்கிறோம்‌'' என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Read More

Sunday, July 10, 2022

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது ஏன்? அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

July 10, 2022 0
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது ஏன்? அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதால் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழாவிற்காக அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை நேற்று ஆய்வு செய்த, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: எல்கேஜி, யுகேஜி வகுப்பில் 93ஆயிரம் மாணவர்கள் படித்தனர். தற்போது கூடுதலாக 52 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு ஏற்கனவே எப்படி பாடம் எடுக்கப்பட்டதோ அதே முறையை பின்பற்ற கூறியுள்ளோம். தற்போது சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. சிறப்பு ஆசிரியர்களை நியமித்த பிறகு முழுமையாக எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடைபெறும். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 5.34 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் தனியார் பள்ளிகளையும் சேர்ந்து 7 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் என சேர்த்தால் 9 லட்சம் மாணவர்கள் இந்தாண்டு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம். இதன் காரணமாக அரசுப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்தாண்டு நீட் தேர்வுக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக அரசு சார்பில் இலவச பயிற்சி அளித்து வருகிறோம். இந்தாண்டு முழுமையாக பள்ளிகள் நடைபெறுகிறது. எந்த பாடத்தையும் குறைக்க போவதாக இல்லை. இதற்காக ஒளிபரப்பப்படும் சிறார் சினிமா மூலம் மாணவர்களின் மனநிலையில் மாற்றம் வரும். போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக போலீசாருடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Saturday, June 4, 2022

அரசு பள்ளி வறுமையின் அடையாளமல்ல; பெருமையின் அடையாளம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

June 04, 2022 0
அரசு பள்ளி வறுமையின் அடையாளமல்ல; பெருமையின் அடையாளம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளமல்ல பெருமையின் அடையாளம் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில், மாணவர்களுக்கான புதியன விரும்பு என்ற தலைப்பில் 5 நாள் கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறியதாவது:

"கோடை விடுமுறை காலத்தை பயனுள்ள வகையிலும் மாணவ மாணவிகளின் தனித் திறமையினை வெளிக் கொணரும் விதமாக புதியன விரும்பு என்ற தமிழக அரசின் சிறப்பு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிப் பிள்ளைகள் பாடங்களை மட்டும் கற்பதை காட்டிலும் மனித உரிமைகள், தன்னம்பிக்கையுடன் வாழ்வது, நிர்வாகத் திறமை, கலை இலக்கியம் மற்றும் தன்னுள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொணரவும் தெரியாதை கற்றுக் கொள்ளவும் இந்த 5 நாள் பயிற்சி முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: "மலை மாவட்டங்களில் இலவச பேருந்து அட்டைகளுக்கு ஏற்ப பேருந்து வசதி இல்லை. இதை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படவுள்ளது.

பழங்குடியினர் கல்வி கற்க தேவையான விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது. அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளமல்ல பெருமையின் அடையாளம்" என்று அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் அம்ரித், கல்வித்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Read More

Friday, May 20, 2022

Friday, May 13, 2022

நாளை தொடங்கும் கோடை விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் வேண்டுகோள்

May 13, 2022 0
நாளை தொடங்கும் கோடை விடுமுறை

மாணவர்கள் கோடை விடுமுறையில் நீர்நிலைகளுக்கு செல்லும்பொழுது கவனமாக இருக்க வேண்டும்

விளையாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்
Read More

Saturday, April 23, 2022

மூர்க்கமான மாணவர்களை ஆசிரியர்கள் தான் திருத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

April 23, 2022 1
பள்ளிகளில் மூர்க்கமாக நடக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் தான் திருத்த வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த இளம் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க மாநாட்டில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சி முடிவில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், பள்ளியில் மாணவர்கள் மூர்க்கமாக நடப்பது குறித்து பத்திரிக்கையாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே என்ற பாடலை மேற்கோள் காட்டினார்.

' மூர்க்கமாக நடந்து கொள்ளும் மாணவர்களை ஆசிரியர்கள் தான் திருத்த வேண்டும்'. ஆசிரியர்களுக்கும் மாணவர்களை வழிநடத்த பயிற்சி தேவை' இவ்வாறு அமைச்சர் பேசினார்
Read More

Wednesday, April 20, 2022

பள்ளி மாணவர்களுக்கு சைக்காலஜி கவுன்சலிங்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

April 20, 2022 0
Speaking at the book launch in Raipuram, Chennai, Minister Mahesh Poyamozhi: Teachers need to identify and motivate a student for his or her talents. Studenthood is about living without counterfeiting. All school students should study well and rise in life. Students consider it fashionable to hang on the bus stairs. I myself have seen and condemned such actions many times. Parents should be advised of the dangers of bus stair travel.

When such students come to school, the teachers should also take them in a way that raises awareness for them. Psychology counseling is provided to prevent students from getting angry and clashing with teachers when they are reprimanded in various ways and to prevent students from traveling on the bus stairs. Thus Minister Mahesh lied.

மாணவர்களுக்கு சைக்காலஜி கவுன்சலிங்

சென்னை ராயபுரத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: ஒரு மாணவனிடம் இருந்து அவரது திறமைகளை ஆசிரியர்கள் கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும். மாணவ பருவம் என்பது கள்ளங்கபடம் இல்லாமல் வாழக்கூடியது. பள்ளி மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து, வாழ்வில் உயரவேண்டும். பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிசெல்வதை மாணவர்கள் பேஷனாக கருதுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை நானே பலமுறை பார்த்து கண்டித்துள்ளேன். பேருந்து படிக்கட்டு பயணம் எத்தகைய ஆபத்து என்பதை பெற்றோரும் அறிவுறுத்த வேண்டும்.
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

இத்தகைய மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, அவர்களுக்கு ஆசிரியர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுத்து சொல்லவேண்டும். பல்வேறு வகைகளில் ஆசிரியர்கள் கண்டிக்கும்போது, அவர்கள் மீது மாணவர்கள் கோபப்பட்டு மோதல் ஏற்படுவதை தடுக்கவும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்கவும் சைக்காலஜி கவுன்சலிங் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
Read More

Tuesday, April 5, 2022

பொதுத் தேர்வில் நடத்தி முடிக்காத பாடத்திலிருந்து கேள்விகள் இருக்காது - அமைச்சர் அன்பில் மகேஷ்

April 05, 2022 1
Minister Anbil Mahesh has lied that there will be no questions in the general examination from the unfinished subject conducted in the tenth and twelfth class general examinations.

A two-day consultation meeting with school education primary education officers was held in Chennai. On the second day today, the Minister of School Education, Anil Mahesh, had a false consultation with the District Primary Education Officers.

He later told reporters that ‘there is no need to formulate an education policy for the state based on the new education policy laid down by the central government. The committee set up by the Tamil Nadu government to formulate state education policy has excellent experts. Therefore, the state education policy of Tamil Nadu will set an example for other states, he said. He said questions would not be asked from subjects which were not completed in the Class X and XII general examinations. Education Minister Anbil Mahesh Poyamozhi has said that it will not be appropriate to take questions from subjects which have not been completed in the general examination as only 2 subjects have been included in the 2 diversion examinations which have been completed so far.

பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தி முடிக்கப்படாத பாடப்பகுதியிலிருந்து பொதுத்தேர்வில் கேள்விகள் இடம்பெறாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி முதன்மை கல்வி அலுவலர்களுடன் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மத்திய அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்கை சார்ந்து அதன் அடிப்படையில் மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை உருவாக்க தேவையில்லை. மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் சிறந்த வல்லுநர்கள் உள்ளனர். எனவே மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகத்தின் மாநில கல்விக்கொள்கை விளங்கும் என கூறினார்.

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நடத்தி முடிக்கப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் இடம் பெறாது என்று கூறினார். தற்போது நடைபெற்று முடிந்துள்ள 2 திருப்புதல் தேர்வுகளில் குறிப்பிட்ட பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம் பெற்றதால் பொதுத்தேர்வில் நடத்தி முடிக்கப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் இடம் பெறுவது முறையாக இருக்காது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Read More

Thursday, March 31, 2022

'நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓய மாட்டோம்': பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி..

March 31, 2022 0
நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மதுரை புதுநத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜனுடன் அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மருத்துவ கல்விக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு உள்பட எந்த நுழைவுத் தேர்வும் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. தி.மு.க தேர்தல் அறிக்கையிலும், இது குறிப்பிட்டிருந்தது. நீட் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஹைடெக் லேப் மூலமாக நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓய மாட்டோம் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், பள்ளிக்கூடங்களில் பாலியல் தொல்லை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Read More

Post Top Ad

Your Ad Spot