KalviseithiDaily: Government of Tamil Nadu

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Government of Tamil Nadu. Show all posts
Showing posts with label Government of Tamil Nadu. Show all posts

Wednesday, October 26, 2022

தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

October 26, 2022 0
தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் 1990-91ம் ஆண்டு மற்றும் 2002-2003ம் ஆண்டு முதல் 2006-2007ம் கல்வி ஆண்டு வரை 45 பள்ளிகளுக்கு 45 முதுநிலை வணிகவியல் ஆசிரியர்களும், 45 முதுநிலை பொருளாதார ஆசிரியர்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். மேலும் 2011-2012ம் கல்வி ஆண்டில் 100 நகராட்சி, மாநகராட்சி, அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் என 9 பாடங்களுக்கு 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து 2014-2015ம் கல்வி ஆண்டிலும் இதேபோல் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

மேலும் 2018-2019ம் கல்வி ஆண்டில் 5 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால் அதன் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் நிலை உயர்த்தப்பட்டு அதற்கான பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அத்துடன் 5 பள்ளிகளிலும் தலா 6 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என 30 பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டன.

இப்பணியிடங்களை பணி நிரவல் மூலம் நிரப்பவும் அரசு உத்தரவிட்டது. இதுதவிர 2018-2019ம் கல்வி ஆண்டில் 95 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் 5 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து 5 அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளும் உருவாக்கப்பட்டது. இவ்வாறு 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு 100 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டது.

அதேபோல் 2018-2019ம் கல்வி ஆண்டில் 95 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு 95 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளில் தலா 6 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 570 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

இவ்வாறு 200 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 100 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 2,460 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 2,760 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.12.2021 வரை ஏற்கனவே வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை, பணி நீட்டிப்பு முடிவடைந்த நிலையில், அவர்களுக்கு 1.01.2022 முதல் 31.12.2022 வரை ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் செப்டம்பர் மாதத்துக்கான ஊதியத்தை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
Read More

Monday, September 26, 2022

தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை! இருக்கா? இல்லையா? - New education policy in Tamil Nadu! is there Isn't it?

September 26, 2022 0
👨🏻 IV & V பொதுத் தேர்வு Question Paper எங்க வச்சிருக்காங்க?

👦🏻 CRC மையத்துல Sir

👨🏻 ஓ... CRC மையம்னா எது? பழைய Primary / Middle ஸ்கூலா? இல்ல Higher Secondary ஸ்கூலா?

👦🏻 Higher Secondary ஸ்கூல்தேன் Sir

👨🏻 CRC மையமா HSS மாறியது எப்ப? எதனால? 

👦🏻 அதிமுக ஆட்சி நடைமுறைப்படுத்திய வளாகப் பள்ளி முறையால Sir.

👨🏻 வளாகப் பள்ளி முறை பற்றி எதுல சொல்லீருக்கு?

👦🏻 NEP 2020 பகுதி I உட்பிரிவு 7-ல் இருக்கு Sir.

👨🏻 ஓ. . . NEP-ல இருக்குல. . .! அப்ப இதுவரை தமிழ்நாட்டுல NEP-2020 நடைமுறைக்கு வரவே இல்ல அப்படித்தான?

👦🏻 யோவ் லூசாயா நீ! NEP-2020-ல் உள்ள School Complex நடைமுறைப்படிதேன் Higher Secondary ஸ்கூல CRC மையமா மாத்திருக்காங்கனு சொல்றேன். . . நீ என்னடானா NEP-2020 தமிழ்நாட்டுல நடைமுறைக்கு வரவே இல்லேனு முழுப்பூசணிக்காய சோத்துல மறைக்கப்பாக்குற. . . பைத்தியமாயா நீ?

👨🏻 ஏம்ப்பா NEP-2020 தமிழ்நாட்டுல நடைமுறைக்கு வரவே இல்லேனு நானா சொல்றேன். . . IV & V பொதுத் தேர்வு பற்றி பேசுவோர்தான் இது NEP-யை தமிழ்நாட்டில் நுழைக்கும் முயற்சீனு புதுசா பொங்குறாக.

👦🏻 ஆமால. . . . Sorry Sir. Already தமிழ்நாடு NEP-2020 நடைமுறைப்படிதேன் நடந்துக்குட்டு இருக்கு.
.
.
.
.
புதிதாக நான் எதுவும் சொல்லவில்லை. இன்றைய தேதியில் தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித்துறையில் நடைமுறையில் உள்ள NEP-2020 சரத்தைத் தான் தங்களது நினைவிற்கு உட்படுத்தியுள்ளேன்.

இது முதல் பதிவுதான். நினைவூட்டல்கள் தொடரும். . .

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

தமிழக அரசே! NEP நடைமுறைகளை முழுமையாகத் திரும்பப் பெற்று தமிழ்நாட்டு பள்ளிக் கல்வியை மீட்டெடு!!
Read More

Saturday, September 24, 2022

Employment registration - 73.99 lakh people are waiting in Tamil Nadu - ‘பயனற்றதாக’மாறுகிறதா வேலைவாய்ப்பு பதிவு? - தமிழகத்தில் 73.99 லட்சம் பேர் காத்திருப்பு

September 24, 2022 0
How do I register for employment in TN?
What is employment registration in Tamilnadu?
How do I renew my TN employment?
How can I check my employment seniority status in Tamilnadu?
*‘பயனற்றதாக’* *மாறுகிறதா வேலைவாய்ப்பு பதிவு? - தமிழகத்தில் 73.99 லட்சம் பேர் காத்திருப்பு*

*தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 73.99 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் உயர் கல்வி படிப்பு முடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆண்டுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளி மற்றும் உயர் கல்வி முடித்து வெளியே வருகின்றனர். இவர்களில் பலரும் வருடம் தவறாமல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்களின் பதிவை புதுப்பித்து வருகின்றனர்*.

*தமிழகத்தில் 2015-ம் ஆண்டுக்கு முன்பு வரை அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் வராத துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் வேலைவாய்ப்பு அலுவலங்கள் மூலம் பதிவு மூப்பு பட்டியல் பெற்றப்பட்டு, அதன்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தது. ஆனால், அதன் பிறகு அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது*.

*அனைத்துத் துறைகள், அரசின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பொது அறிவிப்பு வெளியிட்டு காலி இடங்களை நிரப்பத் தொடங்கின. குறிப்பாக, எந்த தேர்வும் இல்லாமல் நேர்காணல் மூலம் நிரப்படும் இடங்கள் கூட பொது அறிவிப்பு வெளியிட்டு நிரப்பப்பட்டது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போனது*.

*இந்நிலையில், தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு 73.99 பேர் அரசு வேலைக்காக காத்துக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி வரை 34,53,380 ஆண்கள், 39,45,861 பெண்கள், 271 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 73,99,512 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இதன் விவரம்*:

*18 வயதுக்கு கீழ் - 23,01,800*

*19 முதல் 30 வயது வரை - 29,88,001*

*31 முதல் 45 வயது வரை - 18,68,931*

*45 முதல் 60 வயது வரை - 2,35,190*

*60 வயதுக்கு மேல் - 5,590*

Read More

Saturday, September 17, 2022

The Tamil Nadu Teachers' Advancement Association commended the Chief Minister - முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பாராட்டு

September 17, 2022 0
காலை சிற்றுண்டி திட்டம் துவங்கிய முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பாராட்டு - மாநில தலைவர் கு.தியாகராஜன் அறிக்கை - The Tamil Nadu Teachers' Advancement Association commended the Chief Minister

Read More

Tuesday, September 6, 2022

தில்லி பல்கலை.யில் தமிழ் இலக்கியவியல் துறை: தமிழக அரசு ரூ.5 கோடி நிதி

September 06, 2022 0
தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை தொடங்கிட தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத்தில் தமிழ்ப் பிரிவு, இந்திப் பிரிவு, உருதுப் பிரிவு, இந்தி மொழியாக்கப் பிரிவு, கன்னட மொழி இருக்கை, ஒடிய மொழி இருக்கை, வங்க மொழி இருக்கை, ஆகிய அமைப்புகளைக் கொண்டு இயங்குகின்றது.

தமிழ் இலக்கியவியல் ஆய்வு, தமிழ் மற்றும் திராவிட மொழியியல் ஆய்வு, தமிழ் மற்றும் தென்னக வரலாற்றியல், சமூகவியல் ஆய்வு என மூவகையாக விரிவுப்படுத்தி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ்ப் பிரிவு இனி, தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறையாக தமிழ்நாடு அரசு முகிழ்த்து எழச் செய்துள்ளது . இதற்கென ரூபாய் 5 கோடி நிதி வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

தனிப்பெரும் துறையாக உருவெடுக்கும் தமிழ் இலக்கியவியல் துறை வாயிலாக ஒப்பாய்வு, முதுகலை தமிழிலக்கியப் படிப்பு, வல்லுநர்வழி மொழியாக்கம், விருந்துநிலைப் பேராசிரியர்வழி ஆய்வுப் பெருந்திட்டம், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி, தமிழாசிரியர்களுக்கு ஆய்வுப் பயிலரங்கம், அயலகப் பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல், தரமான நூல்களை வெளியிடுதல், ஜே என் யூ தமிழியல் எனும் பெயரில் 100 பக்க அளவில் ஆண்டுக்கு இருமுறை ஆய்வு இதழ் வெளியிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More

Thursday, June 30, 2022

ஜூலை 10ஆம் தேதி பொது விடுமுறை - தமிழக அரசு

June 30, 2022 0
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.

ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜில் ஹாஜி பிறை நேற்று தென்பட்டதால் ஜூலை 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இந்த பண்டிகைக்கு ஆடுகள் குா்பானி கொடுக்கப்பட்டு இறைச்சியை பகிர்ந்தளிப்பது வழக்கம். அந்நாளில் அனைத்து மதத்தினருக்கும் பிரியாணி வழங்குவதும் இஸ்லாமியா்களின் வழக்கம்.

இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 10ஆம் தேதி தமிழக அரசு சார்பாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Read More

Sunday, April 24, 2022

ஒரு தரப்பினருக்கு மட்டும் மும்மொழி கொள்கை: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழக அரசு

April 24, 2022 0
தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் உருதை தாய்மொழியாக கொண்ட மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலத்துடன், மூன்றாவதாக அவர்களின் தாய்மொழியை கற்கும் முறை, தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில் ஒரு தரப்பினருக்கு, மும்மொழி கொள்கை அமலில் இருப்பது, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

விருப்ப மொழி தேர்வு

தமிழக பள்ளிக்கல்வி துறை வெளியிட்ட, பள்ளி ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலத்துடன், மூன்றாவதாக விருப்ப மொழி தேர்வும் நடத்தப்படும் என்று பட்டியலிடப் பட்டது. இதனால், மும்மொழி கொள்கை மறைமுகமாக அமலாவது குறித்து, நம் நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியானது.

இதையடுத்து, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், நீண்ட காலமாக அமலில் உள்ள இருமொழி கொள்கையை மாற்றி, மும்மொழி கொள்கையை புகுத்தும் நடவடிக்கைகள் சத்தமின்றி துவங்கி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. தமிழக அரசு தங்களின் மொழி கொள்கையை, பல்வேறு கால கட்டங்களில் தெளிவுபடுத்தி வருகிறது. தாய்மொழியான தமிழ், உலகின் இணைப்பு மொழியாகிய ஆங்கிலம் என, இருமொழி கொள்கை மட்டுமே, வழக்கத்தில் இருந்து வருகிறது. இருமொழி கொள்கை மட்டுமே தொடரும். இருமொழி கொள்கை தமிழக அரசின், தமிழ் மொழி கற்கும் - 2006ம் ஆண்டு சட்டப்படி, ஒவ்வொரு மாணவரும், 10ம் வகுப்பு வரை, தமிழ் மொழியை கட்டாய பாடமாக படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழை தாய்மொழியாக கொள்ளாத தெலுங்கு, கன்னடம்,மலையாளம், உருது மாணவர்களும், தமிழ் மொழியுடன் சேர்த்து, அவர்களின் தாய்மொழியையும் விருப்ப பாடமாக தேர்வு செய்து எழுதும் முறை, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

எனவே, தமிழக அரசின் தெளிவுபடுத்தப்பட்ட மொழி பாட கொள்கை குறித்து, மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், தமிழக பாடத்திட்டத்தின்படி இரு மொழிகளை மட்டுமே படிக்க முடியும்.

கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலத்தவர்கள் மற்றும் உருது மொழி பேசுவோர், தமிழக அரசின் மொழி கொள்கைப்படி, மூன்று மொழிகளை படிக்க முடியும் என்று, அரசு தெளிவுபடுத்தி உள்ளது. அதாவது, தமிழர்களுக்கு இருமொழி கொள்கையும், மற்ற அண்டை மாநிலத்தவருக்கு மும்மொழி கொள்கையும் அமலில் உள்ளது தெளிவாகி உள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot