KalviseithiDaily: NEET

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label NEET. Show all posts
Showing posts with label NEET. Show all posts

Thursday, January 19, 2023

நீட் விலக்கு மசோதா: விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம்

January 19, 2023 0
நீட் விலக்கு மசோதா: விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம்

சென்னை: நீட் விலக்கு மசோதா குறித்து மீண்டும் விளக்கம் கேட்டு, மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு கேட்ட விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த மசோதா குறித்து விளக்கம் கேட்டு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதற்கு சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டு ஓரிரு வாரத்தில் பதில் அனுப்பி வைக்கப்படும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது.
Read More

Wednesday, January 4, 2023

அடுத்தாண்டு நீட் தேர்வு எழுத முடியாது: ஒன்றிய அரசு அறிவிப்பு

January 04, 2023 0
முதுநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்புவோர் கலந்தாய்வின் போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வீணடித்தால் அடுத்தாண்டு நீட் தேர்வு எழுத முடியாது: ஒன்றிய அரசு அறிவிப்பு..!

முதுநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்புவோர் கலந்தாய்வின் போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வீணடித்தால் அடுத்தாண்டு நீட் தேர்வு எழுத முடியாது என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை படிப்பில் 15% இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடங்கள் ஒன்றிய தொகுப்பிற்கு வழங்கப்பட வேண்டும். இந்த மருத்துவ இடங்களுக்கு 2 கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரப்படாத இடங்கள் மீண்டும் அந்தந்த மாநில அரசுகளுக்கே திருப்பி அளிக்கப்படும்.

ஆனால், 2021-2022 கல்வியாண்டு முதல் இந்த இடங்கள் மீண்டும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது என்று ஒன்றிய மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்தது. அதன்படி நிரப்படாத இடங்கள் வீணாவதை தடுக்க மேலும் நான்கு கட்ட கலந்தாய்வுகள் நடத்தப்படும். அப்போது ஒன்றிய தொகுப்பு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்படவில்லை எனில் அவ்விடங்கள் காலியாகவே இருக்கும். இந்த விதிமுறைக்கு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழ்நாடு அளித்த இடங்களில் 6 இடங்கள் வீணாகி உள்ளன. மொத்தமாக 2224 இடங்கள் காலியாக உள்ளன.

இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவோர் தங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களை கண்டிப்பாக தேர்வு செய்தே ஆக வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கான இடங்களை ரத்து செய்தால் அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுத முடியாது எனவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ரூ.50,000 இழப்பீட்டுத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது
Read More

Monday, September 19, 2022

கோவை அரசுப்பள்ளிகளுக்கு...என்னதான் ஆச்சு?

September 19, 2022 0

What are the problems in government schools?
Which school is better in Coimbatore?
Which is the No 1 school in Tamilnadu?
How many government schools are there in Coimbatore?
கோவை அரசுப்பள்ளிகளுக்கு...என்னதான் ஆச்சு? - What's wrong with Coimbatore government schools?

அதிக கல்வி நிறுவனங்கள் கொண்ட, கோவை மாவட்டத்தில், அரசுப்பள்ளிகளில் இருந்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், 50 சதவீதம் பேர் மட்டுமே, தேர்வு எழுதியுள்ளனர். மாணவர்களின் மத்தியில் உள்ள தயக்கத்தை போக்கி, வரும் ஆண்டுகளிலாவது அதிக மாணவர்களை பங்கேற்கச் செய்ய, பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்வர வேண்டும்.'நீட்' எனும் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வு, கடந்த ஜூலை, 17 ம் தேதி நடந்தது. தேர்வு ரிசல்ட், கடந்த 7 ம் தேதி வெளியான நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், கட்-ஆப் மதிப்பெண்கள் குறித்த, எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக, இத்தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் குறித்த விபரம், இயக்குனரகத்தில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளது.

35 சதவீத தேர்ச்சி மட்டுமே

மொத்தம், 17 ஆயிரத்து 972 அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், இத்தேர்வை 12 ஆயிரத்து 840 பேர் எழுதினர். இதில், 4 ஆயிரத்து 447 பேர் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசுப்பள்ளிகள், 35 சதவீத தேர்ச்சி மட்டுமே பெற்றன.அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் இருந்து, ஆயிரத்து 912 பேர் விண்ணப்பித்தனர். இதற்கு அடுத்த நிலையில், திருவண்ணாமலை, திருவள்ளூர், தர்மபுரி மாவட்டங்களில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர்.ஆனால், கோவை மாவட்டத்தில், 116 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ள நிலையில், 166 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

இதில் தேர்வுக்கு, 50 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 82 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதில் 74 பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர். 90 சதவீத தேர்ச்சி விழுக்காடு பெற்றிருப்பினும், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை சொற்பம் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னைக்கு அடுத்தபடியாக, அதிக கல்வி நிறுவனங்கள் கொண்ட, கோவை மாவட்டத்தில், அரசுப்பள்ளி மாணவர்கள் மத்தியில், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாதது, இதற்கு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது தகைசால் மற்றும் மாடல் பள்ளி ஆகிய இரு திட்டங்களிலும், கோவை மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலாவது, நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்போரின் சதவீதத்தை அதிகரிக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்வர வேண்டுமென்ற, கருத்து எழுந்துள்ளது.

ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில ஆலோசகர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''போட்டியில் முதலிடம் பெறுவது என்பது, பங்கேற்பாளரின் எண்ணிக்கையை பொறுத்ததே. அதிக தேர்ச்சி சதவீதம் பெறுவதற்கு, முக்கியத்துவம் அளிக்காமல், அதிக மாணவர்களை இதுபோன்ற தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, ஊக்குவிக்க வேண்டும்.

இம்முயற்சி, பள்ளிகளின் முன்னெடுப்பில்தான் சாத்தியமாகும். தலைமையாசிரியர், பாட ஆசிரியர்கள், நுழைவுத்தேர்வு எழுதுவதன் அவசியத்தை, மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும், இடஒதுக்கீட்டில் சீட் கிடைக்க போவதில்லை. ஆனால், இதுபோன்ற முயற்சிகள், போட்டித்தேர்வுகளுக்கு கைகொடுக்கும். குறைந்தபட்சம் ஒரு பள்ளியில் இருந்து, 10 மாணவர்களையாவது நீட் தேர்வுக்கு அனுப்ப வேண்டியது அவசியம்,'' என்றார்.
Read More

Saturday, September 17, 2022

NEET answer sheet - நீட் தேர்வு விடைத்தாளை பார்க்க மாணவிக்கு அனுமதி

September 17, 2022 0

நீட் தேர்வு எழுதி குறைவான மதிப்பெண் கிடைத்த மாணவி விடைத்தாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உயர் நீதிமன்றக் கிளை அனுமதி அளித்துள்ளது.



மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெயசித்ரா நீட் தேர்வின் ஓஎம்ஆர் சீட்டை நேரில் ஆய்வு செய்ய அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நீட் தேர்வில் 200 கேள்விகளுக்கு 141 கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதி இருப்பதாக மாணவி ஜெயசித்ரா தெரிவித்தார்.



தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த ஓஎம்ஆர் சீட்டில் எனக்கு 720-க்கு 564 மதிப்பெண் என இருந்தது. ஆனால் நீட் தேர்வு முடிவுகளில் எனக்கு 114 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாகக் கூறி மாணவி ஜெயசித்ரா வழக்கு தொடர்ந்தார்.



மனுவை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன் நீட் விடைத்தாளை நேரில் பார்க்க மாணவிக்கு அனுமதியளித்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Read More

Saturday, September 10, 2022

நீட் தேர்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் மாஸ் காட்டிய அரசு பள்ளி மாணவர்கள்..

September 10, 2022 0
Ramanathapuram NEET Result 2022 : ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளே பெரும்பாலும் நீட் தேர்வில் தகுதியில் வெற்றி பெற்று மாஸ் காட்டியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளே பெரும்பாலும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மாஸ் காட்டியுள்ளனர். தற்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் மீது தனியார் பள்ளிகளின் படித்த பெற்றோர்களின் பார்வை திரும்பியுள்ளது.

மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (NEET exam) கடந்த ஜூலை 17-ந்தேதி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 75 மாணவர்கள், 203 மாணவிகள், அரசு உதவி பெறும் பள்ளிளைச் சேர்ந்த 13 மாணவர்கள், 50 மாணவிகள், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவர்கள், 13 மாணவிகள் என 357 பேர் தேர்வு எழுதினர்.

இதன் முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி இரவு 11.30 மணியளவில் வெளியிடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்த அளவில் நீட் தேர்வில் 93 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து 108 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த 24 மாணவர்களும், 51 மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 4 மாணவர்களும், 20 மாணவிகளும், மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 3 மாணவர்களும், 6 மாணவிகளும் என 108 பேர் தகுதி பெற்றுள்ளனர்

முதல் 15 இடங்கள்:

பரமக்குடி அரசு பள்ளி மாணவர் சீனிவாசன் 371, மாணவி பிரபாவதி 334, ஆர்.எஸ். மங்கலம் மாணவி அபி செல்வம் 298, ஆர்.காவனூர் மாணவி பவானி 286, வண்ணாங்குண்டு மாணவி திரிஷா 228, ஆர்.காவனூர் மாணவிகள் ஷர்மிளி 230, லத்திகா 213, ஏர்வாடி பள்ளி மாணவர் செந்தாமரை கண்ணன் 192, ஆர்.காவனூர் மாணவி பாரதி 189, சிக்கல் பள்ளி மாணவி காவ்யா 185, எமனேசுவரம் மாணவர் அச்சுதராமன் 176, ஆர்.காவனூர் மாணவி கார்த்திகை செல்வி 173, மாணவர் யுவராஜ் 166, மாணவி சோபிகா 164, உச்சிநத்தம் மாணவி சத்யபாமா 162 மதிப்பெண் எடுத்து மாவட்டத்தில் முதல் 15 இடங்களை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளே நீட் தேர்விலும் வெற்றி பெற்றிருப்பது தனியார் பள்ளிகளில் படிக்க வைத்த பெற்றோர்களை ஒரு நிமிடம் திரும்பி பார்க்க வைத்துள்ளது எனலாம்.
Read More

Friday, September 9, 2022

நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதித்த விழுப்புரம் மாணவி

September 09, 2022 0
Brinda, a student of Villupuram, has secured 467 marks in Tamil Nadu level in NEET examination with 7.5 percent quota. He studied twelfth standard at Valavanur Undu Boarding School near Villupuram and scored 593 out of 600 with 200 out of 200 in four subjects. In this case, Brenda has scored 467 marks in NEET as well. It ranks first in the 7.5% reservation category studying in government schools.

When the student's father died in a road accident 9 years ago, her mother worked in a milk shop and educated her children. Currently studying in a government school and scoring 467 in the NEET exam, the student who has secured the first place in Tamil Nadu with 7.5% seats is being praised by the teachers and the people of the area.

Similarly, a student named Sundarajan who scored 576 marks in twelfth standard at Chrompet Government School in Chennai has scored 503 marks in his first attempt in the NEET exam.

As his father was an employee of a private company, he mostly studied in the thatched hut on the upper floor of the house. Sundarajan says that even when he went to the NEET class, he was not taught properly, so he stopped and studied by himself because he was told to memorize.
தமிழக அளவில் நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 467 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார் விழுப்புரம் மாணவி பிருந்தா. விழுப்புரம் அடுத்த வளவனூர் உண்டு உறைவிடப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து நான்கு பாடத்தில் 200 க்கு 200 எடுத்து 600 க்கு 593 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். இந்நிலையில் தற்போது நீட் தேர்விலும் 467 மதிப்பெண் பெற்றுள்ளார் பிருந்தா. இது அரசு பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீடு பிரிவில் முதலிடம் ஆகும்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் மாணவியின் தந்தை இறந்த நிலையில், இவரின் தாயார் பால் கடையில் வேலை செய்து பிள்ளைகளை படிக்க வைத்துள்ளார். தற்போது அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் 467 மதிப்பெண் பெற்று 7. 5 சதவீத இட ஒதுக்கீட்டில் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ள மாணவியை ஆசிரியர்களும் அப்பகுதி மக்களும் பாராட்டிவருகின்றனர்.

இதேபோல் சென்னை அடுத்த குரோம்பேட்டை அரசுப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து 576 மதிப்பெண்கள் எடுத்த சுந்தராஜன் எனும் மாணவர் நீட் தேர்வு எழுதி முதல் முயற்சியிலேயே 503 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

இவரின் தந்தை தனியார் நிறுவன ஊழியராக உள்ள நிலையில் வீட்டின் மாடியில் உள்ள ஓலை குடிசையில் தான் பெரும்பாலும் படித்துள்ளார். நீட் வகுப்பிற்கு சென்ற நிலையில் அங்கும் சரியாக சொல்லி தரவில்லை என கூறும் சுந்தராஜன், மனப்பாடம் செய்ய கூறியதால் நின்று விட்டு தானே தனியாக படித்துள்ளார்.
Read More

Monday, July 18, 2022

நீட் தேர்வில் உள்ளாடையைக் களையச்சொன்ன விவகாரம்: மறுப்பு தெரிவித்து என்டிஏ விளக்கம்

July 18, 2022 0
கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளைக் களைய கட்டாயப்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தை தேசியத் தேர்வுகள் முகமை மறுத்துள்ளது.

கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளைக் களைய கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் நீட் தேர்வு மையக் கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தை தேசியத் தேர்வுகள் முகமை மறுத்துள்ளது.

மருத்துவ படிப்புக்கான தகுதி தேர்வான நீட் எக்ஸாம் நேற்று முன்தினம் (ஜூலை 17) நாடு முழுவதும் நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம் ஆயூர் மார்தோமா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சென்டரில் நடந்த நீட் தேர்வில் தேர்வு எழுத வந்த மாணவிகளின் 'பிரா'-க்களை அவிழ்த்துவிட்டு எக்ஸாம் ஹாலுக்கு அனுமதித்தனர். இதனால் மனதளவில் பாதிப்படைந்த மாணவிகள் அழுதுகொண்டே நீட் தேர்வு எழுதினர். இதுகுறித்து மாணவி ஒருவரின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொல்லம் சூரநாடு பகுதியைச் சேர்ந்த மாணவியின் பெற்றோர் கொல்லம் ரூரல் எஸ்.பி-க்கு இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து மாணவி ஒருவரின் பெற்றோர் கூறுகையில், "தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையத்தின் கேட்டை கடந்தபோது ஒரு பெண் அதிகாரி மாணவியை அழைத்து ஸ்கேனர் உபயோகித்து பரிசோதனை நடத்தினார். பிராவில் மெட்டல் ஹூக் இருந்ததால் பீப் சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து உள்ளாடையை கழட்டி வெளியே வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மாணவி கதறி அழுதுள்ளார். இதனால் அந்த அதிகாரி, தேர்வு முக்கியமா உன்னுடைய உள்ளாடை முக்கியமா என கேட்டுள்ளார். தேர்வு எழுதிய பிறகு உள்ளாடை இல்லாமல் வெளியே போக முடியாமல் மாணவி ஒரு ஓரமாக நின்று அழுவதைக் கண்ட மற்றொரு அதிகாரி அருகில் சென்று விஷயங்களைக் கேட்டுள்ளார். நிலைமையைப் புரிந்துகொண்ட அவர் அந்த மாணவியின் அம்மாவின் போன் நம்பரை வாங்கி செல்போனில் அழைத்து அம்மாவிடம் துப்பட்டாவைக் கொண்டுவரும்படி சொன்னார்.

பின்னர் காரில் போகும்போது தேர்வு எப்படி எழுதினாய் என அவரின் தாய் கேட்டபோது வெடித்து அழுத மாணவி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகள் உலோகம் போன்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைக் காரணம் காட்டி மாணவியின் உள்ளாடையை அவிழ்க்க வைத்துளனர். இதனால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்றும், தெரிந்த கேள்விகளுக்குக்கூட விடை எழுத முடியாமல் திரும்பி வந்ததாகவும் மாணவி கூறினார். வேறு மாணவிகளுக்கும் இதுபோன்று நடந்ததாக மாணவி கூறினார்" என பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது.

இதையும் படிக்க | சட்ட உதவி ஆலோசனை அமைப்பில் வேலைவாய்ப்பு - வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்



இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு தேசியத் தேர்வுகள் முகமை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து என்டிஏ தெரிவித்துள்ளதாவது:

''கேரள கல்லூரியில் நீட் தேர்வு அன்று ஆடையளைக் களையச் சொன்னதாக எழுந்த புகாரில் பின்வரும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின்படி, மைய கண்காணிப்பாளர், சுயாதீன பார்வையாளர் மற்றும் கொல்லம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அத்தகைய சம்பவம் நடந்தது எதையும் கண்டுபிடிக்கவில்லை. சம்பந்தப்பட்ட மாணவி தேர்வை எழுதி உள்ளார். தேர்வின்போது, அதற்குப் பிறகும் யாரும் இதுதொடர்பாக எந்தப் புகாரையும் அளிக்கவில்லை. தேசியத் தேர்வுகள் முகமைக்கு எந்த விதமான இ-மெயிலோ, புகார்க் கடிதமோ வரவில்லை.

தேசியத் தேர்வுகள் முகமையின் ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளின்படி, மாணவியின் பெற்றோரின் குற்றச்சாட்டு தொடர்பாக செயல்பாடை என்டிஏ அனுமதிக்கவில்லை.

ஆடைக் கட்டுப்பாட்டு விதிகள், தேர்வு முறையாகவும் நேர்மையாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்யவே கடைப்பிடிக்கப்படுகின்றன. எனினும் தேர்வர்களை சோதனை செய்து, பாலின/ மத/ கலாச்சார / பிராந்திய உணர்வுகளை புண்படுத்துவது நோக்கமல்ல''.

இவ்வாறு தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது
Read More

Sunday, July 17, 2022

நீட் தேர்வு எப்படி இருந்தது? மாணவர்கள் கருத்து…

July 17, 2022 0
NEET தேர்வு

ஒரு சில மாணவர்களுக்கு மட்டும் இயற்பியல் பாட வினாக்கள் கடினமாக இருந்தன

வேதியியல், உயிரியல் பாட வினாக்கள் எளிமை

NCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன

தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து
Read More

Friday, July 15, 2022

நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

July 15, 2022 0
நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மாணவி, தோல்வி பயத்தில் தற்கொலை, காவல்துறையினர் விசாரணை

அரியலூரில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை

*கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், போலீசார் விசாரணை.
Read More

Thursday, July 14, 2022

சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வு தேதி அறிவிப்பு

July 14, 2022 0
சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வு செப்டம்பர் 1, 2 தேதிகளில் நடைபெறும்!

தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை natboard.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Read More

Tuesday, July 12, 2022

NEET தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் கவனத்திற்கு!

Thursday, July 7, 2022

நீட் தேர்வில் கவனம் – தாய் மொழியில் தோல்வி - டி.ஜி.பி சைலேந்திரபாப

July 07, 2022 0


நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு வேதனை தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகள் பத்து மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனை வழங்கும் கருத்தரங்கம் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு, தனக்கு மருத்துவம் படிப்பதில் ஆர்வம் இருந்ததாகவும், தற்போதைய நீட்தேர்வு போன்று அப்போது நடைபெற்ற நேர்முகத் தேர்வில் தோல்வியடைந்ததால் தனக்கு மருத்துவம் கற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் உயர் படிப்புகளுக்கு செல்ல நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்துவதால், தாய் மொழியான தமிழ் மொழியில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து இருப்பதாக வேதனை தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ் கற்றுதருவதற்கான கல்வி மைய்யங்கள் அதிகரிக்கும் என்றார். மாணவர்கள் கற்றலில் ஆர்வம் செலுத்தி படித்து வந்தால் எந்த படிப்பை படித்தாலும் திறமையான ஆற்றலை வளர்த்துக் கொண்டு மிக மிக உயர்ந்த ஊதியத்தில், பெரிய நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை பெற முடியும் என சைலேந்திரபாபு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர். – இரா.நம்பிராஜன்
Read More

Friday, July 1, 2022

நீட் எதிர்ப்பு பேச்சால் மாணவர்களை திசை திருப்ப கூடாது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

July 01, 2022 0
நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் ரீதியான கருத்துகளை பேசி மாணவர்களை திசை திருப்ப வேண்டாம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

தமாகா இளைஞர் அணி சார்பில் ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச கையேடு வழங்கும் நிகழ்ச்சி,சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நேற்று நடந்தது.

மாணவர்களுக்கு இலவச கையேடுகளை கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், வழங்கினார். நிகழ்ச்சியில் தமாகா மாநிலஇளைஞர் அணி தலைவர் யுவராஜா, மாநிலபொதுச் செயலாளர்கள் விடியல் சேகர்,சக்தி வடிவேல் மற்றும் மாவட்ட இளைஞர் அணி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் ஜி.கே.வாசன் பேசியதாவது: நீட் தேர்வு மூலம் மாணவர்களின் கல்வித்தரம், வெளிப்படைத் தன்மை உயர வாய்ப்பு உருவாகிறது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளை கடந்து, நீட் தேர்வு மூலம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். அரசும், தனியாரும் மருத்துவக் கல்வியை வியாபார நோக்கத்துடன் பார்க்கும் தவறான கண்ணோட்டம், நீட் தேர்வால் பலிக்காமல் போகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துகொண்டு இருக்கிறது. எனவே, அரசியல்ரீதியாக நீட் தேர்வுக்கு எதிரான கருத்துகளை பேசி மாணவர்களை திசை திருப்பி முடக்கிவிடவேண்டாம். மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி லாபத்துக்காக மாணவர்களை ஏமாற்றாமல், அவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாநில அரசின் பாடத் திட்டங்களை தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இளைஞர் அணி தலைவர் யுவராஜா பேசும்போது, ‘‘தமிழகம் முழுவதும் டாக்டராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் மாணவர்களிடம் இந்த கையேட்டை கொண்டு சேர்ப்போம். நீட் தேர்வு நல்லதா,கெட்டதா என்று மாணவர்கள் சிந்திக்க வேண்டாம். ஏனென்றால், அது தேர்வு நேரத்தில் உங்களை பாதிக்கும். அடுத்தகட்டமாக தருமபுரியில் இதேபோன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

இதையடுத்து, இளைஞர் அணி மாநிலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பெண்கள் பாதுகாப்புக்கான சட்டம், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம், பூரண மதுவிலக்கு, அக்னி பாதை திட்டத்துக்கு வரவேற்பு, விவசாயிகள் தொலைநோக்குதிட்டம் ஆகியவற்றை நிறைவேற்றவேண்டும் என்பது உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Read More

Thursday, June 30, 2022

நீட்' முதுநிலை தேர்வு; 'டாப்' 25 பேருக்கு பாராட்டு

June 30, 2022 0
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான 'நீட்' நுழைவுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற 25 பேரை, மத்திய அரசு இன்று கவுரவிக்கிறது.

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள், கடந்த மாதம் வெளியிடப்பட்டன. இத்தேர்வில் வெற்றி பெற்ற மருத்துவம் மற்றும் பல் மருத்துவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற 25 பேருக்கு, இன்று டில்லியில் பாராட்டு விழா நடக்கிறது.

டாக்டர்கள் தினத்தையொட்டி, லேடி ஹர்டிங்கி மருத்துவ கல்லுாரியில் நடக்கும் இந்த விழாவில், மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று, அதிக மதிப்பெண் பெற்ற 25 பேருக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்க உள்ளார்.

'மத்திய அரசு, முதன் முறையாக நடத்தும் இந்த பாராட்டு விழா, நாட்டிற்கு சேவையாற்றும் நோக்கில், மேலும் அதிகமானோர் சிறப்பு மருத்துவ சேவைக்கு வருவதை ஊக்குவிக்கும்' என, டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Saturday, June 18, 2022

Top Medical Courses without NEET

June 18, 2022 0
Top Medical Courses without NEET:
1. Bachelor’s in Anesthesiology and Intensive Care Technology
2. Bachelor’s in TV Audiometric Technology
3. Bachelor’s in Optometry and Ophthalmic Technologies
4. Bachelor’s in Public Health
5. Bachelors in Audiology Speech-Language Therapy
6. Bachelors in Physician Assistantship Training
7. Bachelors in Prosthetics and Orthotics
8. Bachelors in Rehabilitation Therapy
9. BSc Anatomy
10. BSc Blood Banking Technology
11. BSc Blood Transfusion Technology
12. BSc Cardiac Technology
13. BSc Cardiovascular Technologies
14. BSc Dialysis Technologies
15. BSc Emergency and Critical Care Technologies
16. BSc Endoscopy and Gastrointestinal Imaging Technologies
17. BSc in Genetics
18. BSc in Medical Imaging Technology
19. BSc in Orthopedic Technology
20. BSc Medical Laboratory Technology
21. BSc Medical Microbiology
22. BSc Medical Records Science and Health Information Management
23. BSc Nuclear Medicine and Radiotherapy Technologies
24. BSc Operation Theatre and Anaesthesia Technologies
25. BSc Paramedical Technology
26. BSc Perfusion Technology
27. BSc Physiology
28. BSc Radiology and Imaging Technology
29. BSc Radiotherapy Technology
30. BSc Respiratory Care Technology
Read More

'நீட்' தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்

June 18, 2022 0
கடலுார் மாவட்டத்தில், நடப்பாண்டு 'நீட்' தேர்விற்கு, அரசு சார்பில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யாததால், தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழகத்தில், 2017ம் ஆண்டு முதல் 'நீட்' தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த தேர்வுக்கு தயாராவதற்காக, 2017ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அதற்கென அமைக்கப்பட்ட மையங்களில், விடுமுறை தினங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி கடலுார் மாவட்டத்தில் 14 மையங்களில் பயிற்சி நடத்தப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு ஆன்லைன் மூலம் விண்ணபித்து, ஆன்லைன் மூலமாகவே பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அப்போது, கடலுார் மாவட்டத்தில் 500 மாணவ, மாணவியர் விண்ணப்பித்து, பயிற்சியில் பங்கேற்றனர்.

அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடாக 7.5 சதவீதம் வழங்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.அந்த வகையில், கடலுார் மாவட்டத்தில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் அரசுப்பள்ளியில் படித்தோருக்கு, கடந்த ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்காக 26 பேருக்கு கல்வித்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இவர்களில் 24 பேர் அரசின் இலவச நீட் பயிற்சி பெற்றவர்கள்.

இதன் காரணமாக, மாணவ மாணவியரிடையே நீட் பயிற்சி மீதான ஆர்வம் அதிகரித்து, கடலுார் மாவட்டத்தில் நீட் பயிற்சியில் சேர, தற்போது கூடுதலானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுகள் முடிந்துவிட்டன. ஆனால் பயிற்சி வகுப்பு குறித்த எந்த அறிவிப்பையும் கல்வித்துறை அறிவிக்கவில்லை. வரும் ஜூலை 17ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில், அதற்கு தயாராக முடியாமல் கடலுார் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.தமிழகத்தில் ஆளும் தி.மு.க., அரசு 'நீட்' தேர்வுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் மாணவ மாணவியர்களின் பயிற்சி வகுப்பு பற்றி வாய்திறக்காமல் உள்ளது. ஒரு மாத காலம் தீவிர பயிற்சிகள் வழங்கினால், அதிக மாணவர்கள், 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும். ஆனால், மாவட்டம் முழுவதும் பயிற்சி மையங்கள் அமைத்து, சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வழங்கினால், கடந்த ஆண்டுகளை போல் அதிக அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவர். அத்துடன், அவர்களுக்காக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைக்கும்.ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், அரசு சார்பில் நீட் தேர்வுக்கான பயி்ற்சி குறித்து இதுவரையில் எந்த அறிவிப்பும் வரவில்லை.

தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி, தனியார் பயிற்சி மையங்களில் படிக்கின்றனர். வசதியில்லாத அரசு பள்ளியில் படித்த மணவர்கள் பயிற்சி பெற முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தும், மருத்துவ படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
Read More

Saturday, May 28, 2022

'நீட்' எழுத விண்ணப்பித்தவர்கள் 1.42 லட்சம் பேர்; ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு

May 28, 2022 0
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, தமிழகத்தில் 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது; கடந்த ஆண்டை விட, 32 ஆயிரம் பேர் அதிகம். ஆண்டுக்கு ஆண்டு, 'நீட்' தேர்வு எழுத விரும்பும் மாணவ - மாணவியர் அதிகரித்து வருகின்றனர்.

மருத்துவ படிப்புகளில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான 'நீட்' தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இந்த ஆண்டுக்கான இளநிலை படிப்புக்கான நீட் தேர்வு, ஜூலை 17ல் நாடு முழுதும் நடக்கிறது. இதற்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்., 6ல் துவங்கி, மே 20ல் முடிந்தது. இட ஒதுக்கீடு

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டு தேர்வு எழுத, நாடு முழுதும் இருந்து, 18.72 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில், 10.64 லட்சம் பேர் மாணவியர். மேலும், 12 மூன்றாம் பாலினத்தவரும், 8.07 லட்சம் மாணவர்களும் தேர்வு எழுத முன்வந்துள்ளனர். அதோடு, 771 வெளிநாட்டினர், 910 வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் 647 இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டினரும் விண்ணப்பித்துள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டு பிரிவில், 1.29 லட்சம்; இட ஒதுக்கீடு அல்லாத பொது பிரிவில், 5.68 லட்சம்; மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 7.86 லட்சம்; பட்டியலினத்தவர்,2.67 லட்சம்; பழங்குடியினர், 1.13 லட்சம் மற்றும் மாற்றுத் திறனாளிகள், 6,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். 6 மாநிலங்களில் அதிகம்

நாட்டில் அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில்,2.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உ.பி.,யில், 2.10 லட்சம்; கர்நாடகா, 1.30; கேரளா, 1.20; ராஜஸ்தான், 1.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.மொத்த விண்ணப்பங்களில், தமிழகம் உட்பட மேற்கண்ட ஆறு மாநிலங்களின் பங்கு, 55 சதவீதம்.கடந்த ஆண்டு தமிழகத்தில், 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; அவர்களில், 1.08 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு, 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது, கடந்த ஆண்டை விட, 32 ஆயிரம் அதிகம்.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து மட்டும், 13 ஆயிரத்து, 500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.கடந்த ஆண்டில், 12 ஆயிரம் பேர் என்றிருந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக, 1,500 பேர் தேர்வு எழுத தயாராகி வருகின்றனர். ஆண்டுதோறும் அதிகரிப்பு

ஐந்து ஆண்டுகளாக, நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது, 2017ல், 11.4 லட்சமாக இருந்த எண்ணிக்கை, ஐந்து ஆண்டு களில் படிப்படியாக உயர்ந்து, இந்த ஆண்டு, 18.72 லட்சமாக உயர்ந்துள்ளது.கடந்த 2018ம் ஆண்டு, 13.23 லட்சம்; 2019ல், 15.19 லட்சம்; 2020ல், 16 லட்சம் மற்றும் 2021ல், 16.14 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 2.58 லட்சம் பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களில், 15.44 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில், 8.70 லட்சம் பேர் தேர்ச்சி மதிப்பெண் பெற்றனர்.இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஓமியோபதி ஆகிய படிப்புகளுடன், பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் சேரவும், நீட் தேர்வு கட்டாயம். நாடு முழுதும் மொத்தம், 91 ஆயிரம்எம்.பி.பி.எஸ்., இடங்கள், 27 ஆயிரம் பி.டி.எஸ்., எனும் பல் மருத்துவம் படிப்பு இடங்கள் மற்றும் 51 ஆயிரம் 'ஆயுஷ்' படிப்பு இடங்களுக்கு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
தமிழ் வழியில் ஆர்வம்!

மொத்தம், 13 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. பெரும்பாலானோர், ஆங்கில வழியில் தேர்வு எழுத உள்ளனர். இரண்டாவதாக, ஹிந்தி மொழியில் தேர்வு எழுத, 2.5 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழ் மொழியில் தேர்வு எழுத, 32 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு, 20 ஆயிரம் பேர் தமிழ் வழியில் தேர்வு எழுத முன்வந்த நிலையில், இந்த ஆண்டு, 12 ஆயிரம் பேர் கூடுதலாக விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில், அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, தனியார் பள்ளி மாணவர்களும் அடங்குவர்.
Read More

Thursday, May 26, 2022

அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு படிக்க உண்டு உறைவிட பயிற்சி முகாம் துவக்கம்

May 26, 2022 0
பூந்தமல்லி வட்டம், நசரத்பேட்டை எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மருத்துவம் சார்ந்த நுழைவுத் தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட இலவச உண்டு, உறைவிட பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது. முகாமிற்கு எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி தலைவர் கே.ராமதாஸ், பொருளாளர் எஸ்.சுரேஷ்பாபு, வட்டாட்சியர் ஆர்.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம், ஆவடி மாவட்ட கல்வி அலுவலர் ஆ.ராதாகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ந.பூபால முருகன் ஆகியோர் வரவேற்றனர். முகாமை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, மாணவ, மாணவியர்களோடு கலந்துரையாடி, ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது : திருவள்ளுர் மாவட்டத்தில் 200 அரசு பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களை தேர்வு செய்து, 50 நாட்கள் நீட் தேர்வுக்கான உண்டு, உறைவிட பயிற்சி முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருடம் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்கள் மட்டுமல்லாமல், கடந்த வருடம் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் தேர்வில் வெற்றி பெற கடினமாக உழைக்கும் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக ஒரு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 50 நாட்கள் பயிற்சியில் உங்களது முழு கவனமும் இருக்க வேண்டும். உங்களுக்கு கூடுதல் நன்மைகள் உள்ளது. அதாவது, மாநிலத்திலேயே புகழ்பெற்ற ஆசிரியர்கள் உங்களுக்கு இந்த 50 நாட்கள் பயிற்சி எடுக்கின்றனர். நாள்தோறும் குறிப்பிட்ட தலைப்புகளில் கொண்ட பாடங்களை எடுப்பார்கள். அதற்கான தேர்வுகளையும் நடத்துவார்கள். அன்றன்றைக்கு சொல்லிக்கொடுக்கும் பாடத்திட்டங்களை முழு கவனத்துடன் ஈடுபட்டு படித்து, அடுத்த நாள் முழு அர்ப்பணிப்புடன் தேர்வு எழுத வேண்டும். கடந்த வருடத்தில் எளிய முறையில் அரசு மருத்துவமனைகளில் சிட் கிடைத்துள்ளது. இந்த வருடமும் நல்ல முறையில் சீட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நாமும் அதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த இனிய வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Read More

Wednesday, May 11, 2022

தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகே என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைனில் கலந்தாய்வு.

May 11, 2022 0
தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகே என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைனில் கலந்தாய்வு.

அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களிடம் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வந்தன. சான்றிதழை தொலைத்துவிட்டு அதை கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மிக குறைவாகத்தான் இருக்கின்றனர். அந்த கட்டணத்தைத்தான் உயர்த்தி இருக்கின்றனர்.

அதை வேண்டாம் என்று துணை வேந்தரிடம் கூறியிருக்கிறோம். அதை அவர் ஏற்றுக்கொண்டார். அதுபற்றி இன்றே ஆணை பிறப்பிப்பதாக அவரும் கூறியிருக்கிறார். எனவே அந்த கட்டண உயர்வு இருக்காது. பழைய கட்டணமே வசூலிக்கப்படும். காலியிடங்களுக்கான காரணம்

கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்பில் காலியிடம் வருவதற்கு காரணம், நீட் தேர்வுக்கு முன்பே என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்தியதுதான். என்ஜினீயரிங் கல்விக்கு தேர்வானவர்கள் பலர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்விக்கு சென்றுவிட்டனர். எனவே நீட் தேர்வு முடிந்து முடிவுகள் வந்த பிறகே என்ஜினீயரிங் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த இருக்கிறோம். அதுதான் சரியாக இருக்கும்.

17-ந்தேதி ஆலோசனை

அதுபற்றி 17-ந்தேதி மாலையில் ஆலோசனை கூட்டத்தை கூட்ட உள்ளோம். அந்த கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர், தொழில் கல்வி இயக்குனர், ஆணையர், தனியார் பல்கலைக்கழகங்கள், மாணவர் பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறோம். அதுபற்றி அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பு நேரடியாக கலந்தாய்வு நடைபெற்றது. தூரத்தில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வர பலர் கஷ்டப்படுகின்றனர் என்பதை அறிந்து ஆன்லைனில் கொண்டு வந்தோம். ஆனால் ஆன்லைனில் கடந்த காலங்களில் சில முறைகேடுகள் நடைபெற்றன.

அதை கடந்த ஆண்டு கூடுமான வரை தடுப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனாலும் சில மாணவர்களுக்கு ஆன்லைன் வசதி கிடைக்கவில்லை என்ற நிலை இருந்தது. இதுபற்றியும் கலந்தாலோசனை செய்வார்கள்.

ஆன்லைனில் நடைபெற்றால் மாணவர்களுக்கு அலைச்சல் இருக்காது. அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் அவர்களின் தேர்வு முறைகளை எப்படி அணுகுவது? என்பது பற்றி 17-ந்தேதி மாலை முடிவு செய்து அன்றே அறிவிக்கப்படும். விண்ணப்பிப்பது எப்போது?

நீட் தேர்வு முடிந்த உடனேயே என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். நீட் தேர்வு முடிவு வந்த பிறகு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்க கூடாது என்ற வகையில் 17-ந்தேதி நடக்கும் ஆலோசனையில் முடிவெடுக்கப்படும்.

என்ஜினீயரிங் கல்லூரிகளை தேர்வு செய்யும்போது மாணவர்கள் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்? என்ற வசதிகளை தெரிந்துகொண்டு சேர்வதற்கான நடைமுறையை எளிதாக்கப்படும்.

ஆன்லைன் கலந்தாய்வை மாணவர்கள் விரும்புகின்றனர். அவர்களின் சொந்த போன் மூலம் அல்லது அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் இருந்து கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்திருக்கிறார். மேலும் கூடுதல் வசதியாக மையங்களையும் உருவாக்கி வைக்க இருக்கிறோம். அங்கு சென்றும் அவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாதம் ஆயிரம் ரூபாய்

பெண்களுக்கான உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Tuesday, May 10, 2022

Extending the Last Date for Registration for NEET UG 2022 – Reg

May 10, 2022 1
Extending the Last Date for Registration for National Eligibility-cum-Entrance Test [(NEET (UG)] 2022 – Reg.

In continuation of Public Notice dated: 01 May 2022 and with reference to the letter no. File No. 3-5/2022/NCH/HEE/UG-PG, dated: 29 April 2022 received from National Commission for Homoepathy, Minstry of Ayush, Government of India and as per the NCH Act, 2020 (Section 14 (2)) there shall be a uniform NEET (UG) Examination for admission to Undergraduate courses in all medical institutions including Ayush Medical College.

Registration for the NEET (UG) – 2022 is in progress.

In view of the above, the last date for receiving Online Applications for the National Eligibilitycum Entrance Test (UG) – 2022 for all the candidates has been extended. The details of the same are given below



CLICK HERE TO DOWNLOAD
Read More

Post Top Ad

Your Ad Spot