இதன்படி கம்பம் நகராட்சி சார்பில் ஒவ்வொரு பள்ளிகளாகச்சென்று மாணவர்களுக்கு ‘எனது குப்பை; எனது பொறுப்பு’ விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று கம்பம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கான இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் அச்சுதநாக சுந்தர் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், சுகாதார அலுவலர்கள் திருப்பதி, சுருளியப்பன் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் பாலமுருகன் மாணவர்களிடையே பேசுகையில், ‘‘ எனது குப்பை;எனது பொறுப்பு என்றால் என்ன என்பதை மாணவர்கள் தெரிந்து கொண்டு, அவர்களது பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். வீடுகளில் சேகரமாகும் குப்பையை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். என் குப்பைக்கு நானே பொறுப்பு என்று உறுதி யேற்க வேண்டும்.
நகரை குப்பை இல்லாத நகரமாக மாற்றினால் தான் சுகாதார வசதி கிடைக்கும். அரசின் இந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது நம் கடமை ஆகும்.’’ என்றார்.இதையடுத்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்
