KalviseithiDaily: Pay Order

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Pay Order. Show all posts
Showing posts with label Pay Order. Show all posts

Wednesday, October 26, 2022

தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

October 26, 2022 0
தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் 1990-91ம் ஆண்டு மற்றும் 2002-2003ம் ஆண்டு முதல் 2006-2007ம் கல்வி ஆண்டு வரை 45 பள்ளிகளுக்கு 45 முதுநிலை வணிகவியல் ஆசிரியர்களும், 45 முதுநிலை பொருளாதார ஆசிரியர்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். மேலும் 2011-2012ம் கல்வி ஆண்டில் 100 நகராட்சி, மாநகராட்சி, அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் என 9 பாடங்களுக்கு 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து 2014-2015ம் கல்வி ஆண்டிலும் இதேபோல் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

மேலும் 2018-2019ம் கல்வி ஆண்டில் 5 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால் அதன் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் நிலை உயர்த்தப்பட்டு அதற்கான பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அத்துடன் 5 பள்ளிகளிலும் தலா 6 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என 30 பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டன.

இப்பணியிடங்களை பணி நிரவல் மூலம் நிரப்பவும் அரசு உத்தரவிட்டது. இதுதவிர 2018-2019ம் கல்வி ஆண்டில் 95 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் 5 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து 5 அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளும் உருவாக்கப்பட்டது. இவ்வாறு 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு 100 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டது.

அதேபோல் 2018-2019ம் கல்வி ஆண்டில் 95 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு 95 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளில் தலா 6 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 570 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

இவ்வாறு 200 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 100 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 2,460 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 2,760 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.12.2021 வரை ஏற்கனவே வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை, பணி நீட்டிப்பு முடிவடைந்த நிலையில், அவர்களுக்கு 1.01.2022 முதல் 31.12.2022 வரை ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் செப்டம்பர் மாதத்துக்கான ஊதியத்தை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
Read More

Wednesday, June 29, 2022

Thursday, May 26, 2022

8462 தற்காலிகப் பணியிடங்களுக்கு மே 2022 - ஆம் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை!

May 26, 2022 0
8462 தற்காலிகப் பணியிடங்களுக்கு மே 2022 - ஆம் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை!

BC head order month of may

பள்ளிக் கல்வி - தற்காலிக பணியிடங்கள் 2011-12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 8462 தற்காலிகப் பணியிடங்களுக்கு மே 2022 - ஆம் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வழங்குதல் - குறித்து அரசாணை
Read More

Monday, May 2, 2022

2,760 தற்காலிக ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க ஆணை

May 02, 2022 0
2,760 தற்காலிக ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க ஆணை

தரம் உயா்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியா்கள் 2,760 பேருக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்குவதற்கு அனுமதி வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா் காகா்லா உஷா, அனைத்து மாவட்டக் கருவூலக அலுவலகங்களுக்கும் அனுப்பிய கடித விவரம்:

தமிழகத்தில் 1990 முதல் 2019-ஆம் கல்வியாண்டு வரையான பல்வேறு காலகட்டங்களில் தரம் உயா்த்தப்பட்ட அரசுப்பள்ளிகளுக்கு 300 தலைமை ஆசிரியா்கள், 2,460 முதுநிலை ஆசிரியா்கள் என மொத்தம் 2,760 தற்காலிக பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டன.

இவா்களுக்கான பணிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்துடன் முடிந்துவிட்டது. இந்தப் பணியிடங்களுக்கு தொடா் நீட்டிப்பு வழங்குவது குறித்த கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. இதனால் இந்த ஆசிரியா்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்குவதற்கான அனுமதி கோரி பள்ளிக்கல்வி ஆணையா் கடிதம் அனுப்பியுள்ளாா். அதையேற்று 2,760 ஆசிரியா்களுக்கும் ஏப்ரல் மாத ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை அளிக்கப்படுகிறது. எனவே, சாா்ந்த அலுவலா்கள் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும் போது, அதை ஏற்று ஊதியம் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Sunday, September 5, 2021

பள்ளிக் கல்வியில் 6,156 பணியிடங்களுக்கு தொடா் நீட்டிப்பு: அரசாணை வெளியீடு

September 05, 2021 0
பள்ளிக் கல்வியில் 6,156 பணியிடங்களுக்கு மூன்றாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கி முதன்மைச் செயலா் காகா்லா உஷா உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அரசாணை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6,156 ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான பணிக்காலம் கடந்த டிசம்பா் மாதத்துடன் முடிந்துவிட்டது. இந்த 6,156 பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் வரை (2021-23) தொடா் நீட்டிப்பு வழங்கக் கோரி பள்ளிக்கல்வி ஆணையா் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தாா். அதை பரிசீலனை செய்து 6,156 ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு 2023 டிசம்பா் 31-ஆம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறுஆய்வில் முடிவெடுக்கும் வரை தொடா் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.
Read More

Post Top Ad

Your Ad Spot