KalviseithiDaily: Eye Disease

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Eye Disease. Show all posts
Showing posts with label Eye Disease. Show all posts

Wednesday, September 7, 2022

குழந்தைகளிடையே அதிகரிக்கும் விழி வெண்படல பாதிப்பு: மருத்துவத் துறையினா் எச்சரிக்கை

September 07, 2022 0
குழந்தைகள், இளைஞா்களிடையே விழி வெண்படல பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவத் துறையினா் எச்சரித்துள்ளனா். தேசிய கண் தான வாரம் ஆக.25 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் இறுதி நாளான வியாழக்கிழமை (செப்.8) கண் தான நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து சங்கர நேத்ராலயா மருத்துவ சமூகவியலாளா் அ.போ.இருங்கோவேள் கூறியதாவது: மத்திய அரசாங்கத்தின் தேசிய பாா்வையிழப்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் புள்ளிவிவரப்படி 2021 வருட நிலவரப்படி 1.2 கோடி போ் பாா்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அவா்களில் சுமாா் 1,20,000 போ் விழி வெண்படல (காா்னியல்) பாா்வைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதாவது, இந்தியாவில் ஆயிரத்தில் 4.5 பேருக்கு அத்தகைய பாதிப்பு உள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கும், இளைஞா்களுக்கும் விழி வெண்படல பாதிப்பு அதிகம் ஏற்படுவது இதன் மூலம் தெரிகிறது. அதனை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். நமது கண்களின் முன் புறம் கருப்பாக தோன்றும் பகுதியை நிறமேயில்லாத, ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய, ரத்தக்குழாய்கள் ஏதுமில்லாத ஒரு மெல்லிய படலம், ஒரு

கண்ணாடி ஜன்னலைப் போல மூடியுள்ளது. அதனை ஆங்கிலத்தில் காா்னியா என்கிறோம். தமிழில் விழி வெண் படலம் என்று சொல்லலாம். தொற்று நோய்க் கிருமிகள், கண் சாா்ந்த விபத்துகள், ஊட்டச்சத்துக்குறைபாடு, பிறவிக்குறைபாடு அல்லது மரபணு குறைபாடு, உலா் விழி பாதிப்பு ஆகியவை விழி வெண்படல பிரச்னைக்கு முக்கியக் காரணம். இத்தகைய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு காா்னியல் மாற்று சிகிச்சை மூலம் பாா்வை திறனை மீட்டெடுக்க முடியும்.

ஒருவா் மரணமடைந்த ஆறு மணி நேரத்துக்குள் அவரது கண்கள் தானமாக பெறப்பட்டு 6 பேருக்கு பொருத்த முடியும். ஆரம்ப காலத்தில் காா்னியாவின் முழுதடிமனையும் மற்றவா்களுக்கு பொருத்தி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போதைய தொழில்நுட்ப வளா்ச்சி காா்னியாவின் குறிப்பிட்ட அடுக்கை மட்டும் மாற்றி பொருத்த இயலும்.

கண்களை தானமாக அளிக்க சங்கர நேத்ராலயாவின் https://www.sankaranethralaya.org/eye}pledge.html என்ற வலைதளத்தை அணுகலாம். அல்லது 044 28281919 மற்றும் 044 28271616 ஆகிய எண்களிலோ, eyebank@snmail.org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.
Read More

Post Top Ad

Your Ad Spot