KalviseithiDaily: Court

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Court. Show all posts
Showing posts with label Court. Show all posts

Friday, November 4, 2022

அம்பேத்கா் படிப்புகள் துறை: நீதிமன்றத்தில் அரசு தகவல்

November 04, 2022 0
அம்பேத்கா்படிப்புகள் துறையைத் தொடங்க இயலவில்லை:நீதிமன்றத்தில் அரசு தகவல்

திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் நிதிநிலை நெருக்கடி காரணமாக டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் படிப்புகள் துறையை தற்போதைக்கு தொடங்க இயலாது என்று சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கா் படிப்புகள் என்ற பெயரில் தனி துறையை அமைக்க 2006-ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை அத்துறையை தொடங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு முன்னாள் உறுப்பினரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான இளங்கோவன் சென்னை உயா் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமாா் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழகத்தின் தரப்பில், ‘பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி உள்ளதால் தற்போதைக்கு இந்த புதிய துறையை தொடங்க இயலாது. நிதி நிலை சீரானதும் இத்துறையை தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘நிதிநிலை சீராகும் பட்சத்தில் அடுத்த கல்வியாண்டில் அம்பேத்கா் படிப்புகள் துறையை தொடங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கும், பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.
Read More

Friday, September 30, 2022

பல்கலை. பேராசிரியை நியமனத்துக்கு தடை நீட்டிப்பு - ஐகோர்ட்டு - University. Extension of ban on appointment of Professor - ICourt

September 30, 2022 0
கண்ணூர் பல்கலை. பேராசிரியையாக பிரியா வர்கீசின் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு - கேரள ஐகோர்ட்டு- University. Extension of ban on appointment of Professor - ICourt

பெரும்பாவூர்,

கண்ணூர் பல்கலைக்கழகத்தின் மலையாளத்துறையில் அசோசியேட் பேராசிரியையாக பிரியா வர்கீஸ் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் கூடுதல் செயலர் கே.கே.ராகேஷ் என்பவரின் மனைவி ஆவார்.

கண்ணூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பதவிக்கு பிரியா வர்கீஸ் உட்பட 6 பேர் பரிசீலிக்கப்பட்டுள்ளது. இதில் பரிசீலிக்கப்பட்ட 6 பேரில் ஆய்வு தேர்வில் மிகவும் குறைந்த மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்த பிரியா வர்கீஸ் நேர்முகத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பெற்றார். முதலில் ஆய்வு தேர்வில் 651 மதிப்பெண் பெற்ற ஜோசப் ஸ்கரியா நேர்முகத் தேர்வில் 30 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தைப் பிடித்தார்.

இந்த நிலையில் நேர்முகத் தேர்வில் பிரியா வர்கிசுக்கு கூடுதல் மதிப்பெண் தரப்பட்டதாகக்கூறி, வேண்டுமென்றே தன்னை புறக்கணித்ததாக கூறி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ந் தேதி விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த கேரள ஐகோர்ட்டு தனி அமர்வு நீதிபதி சியாஉல் ரஹ்மான், பிரியா வர்கீசின் நியமன உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக நியமிக்கப்பட்ட பிரியா வர்கீசுக்கு, பதவிக்கு தேவையான கற்பித்தல் அனுபவம் இல்லை எனவும் அவரது ஆராய்ச்சி காலத்தை கற்பித்தல் காலமாக கருத முடியாது என யு.ஜி.சி சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, பிரியா வர்கீசின் நியமன உத்தரவிற்கு விதித்த தடையை அக்டோபர் 20-ம் தேதி வரை நீட்டித்து கேரள ஐகோர்ட்டு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.
Read More

Saturday, September 17, 2022

NEET answer sheet - நீட் தேர்வு விடைத்தாளை பார்க்க மாணவிக்கு அனுமதி

September 17, 2022 0

நீட் தேர்வு எழுதி குறைவான மதிப்பெண் கிடைத்த மாணவி விடைத்தாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உயர் நீதிமன்றக் கிளை அனுமதி அளித்துள்ளது.



மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெயசித்ரா நீட் தேர்வின் ஓஎம்ஆர் சீட்டை நேரில் ஆய்வு செய்ய அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நீட் தேர்வில் 200 கேள்விகளுக்கு 141 கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதி இருப்பதாக மாணவி ஜெயசித்ரா தெரிவித்தார்.



தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த ஓஎம்ஆர் சீட்டில் எனக்கு 720-க்கு 564 மதிப்பெண் என இருந்தது. ஆனால் நீட் தேர்வு முடிவுகளில் எனக்கு 114 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாகக் கூறி மாணவி ஜெயசித்ரா வழக்கு தொடர்ந்தார்.



மனுவை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன் நீட் விடைத்தாளை நேரில் பார்க்க மாணவிக்கு அனுமதியளித்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Read More

Wednesday, June 29, 2022

மூன்றாம் பாலினத்தவர் எம்பிசி வகுப்பில் வருவதால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறப்பு ஒதுக்கீடு கோர முடியாது: ஐகோர்ட் உத்தரவு

June 29, 2022 0
மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சிறப்பு ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் 3ம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மூன்றாம் பாலினத்தவர் அமைப்பைச் சேர்ந்த பி.சுதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், 3ம் பாலினத்தவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கிய போதும், அவர்களுக்கு இதுவரை எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன்கார்டு மற்றும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டது போல் 3ம் பாலினத்தவர்களுக்கும் சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட 3ம் பாலினத்தவர் பட்டியலின மற்றும் பழங்குடியினராக இருந்தால் அந்த பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்படும். பெண்ணாக கூறி சான்றிதழ் அளித்தால் பெண்களுக்கான 30% இட ஒதுக்கீட்டில் இடம் வழங்கப்படும் என்று தெரிவித்து அது தொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை தாக்கல் செய்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Read More

Saturday, May 28, 2022

முன்னாள் ராணுவத்தினர் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

May 28, 2022 0
மருத்துவ படிப்பு:

தமிழக மருத்துவக் கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களில் ஒரு இடத்தை முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு அல்லது பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் அனுமதிக்க தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை ஆத்திகுளம் பிரகாசம் தாக்கல் செய்த மனு:

என் தந்தை இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார். என் மகள் பாரதி. நீட் தேர்வில் 720 க்கு 324 மதிப்பெண் பெற்றார். நாங்கள் பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்கள். அதற்குரிய ஜாதிச்சான்றை இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கவில்லை. விசாரணை நிலுவையில் உள்ளது.

மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்க வாய்ப்பிருந்தும் ஜாதிச் சான்று வழங்குவதில் தாமதத்தால் என் மகளின் கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கும் சூழல் உள்ளது. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான சலுகையை எங்கள் குடும்பத்தில் யாரும் அனுபவிக்கவில்லை. அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

என் மகளை விட நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சிலருக்கு பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப்படிப்பில் கல்லுாரிகளில் இடம் கிடைத்துள்ளது. தமிழக மருத்துவக் கல்லுாரிகளில் 24 இடங்கள் காலியாக உள்ளன. அதில் ஒரு இடத்தை என் மகளுக்கு (எம்.பி.பி.எஸ்.,/பி.டி.எஸ்.,) முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு அல்லது பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.

நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி 4 வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.
Read More

Wednesday, April 6, 2022

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு - இன்று தீர்ப்பு!

April 06, 2022 0
Judgment today in the case filed against the law which provides for 7.5% reservation in medical studies for government school students

A case has been filed in the Chennai High Court seeking reservation for government aided school students.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
Read More

Wednesday, March 30, 2022

வன்னியர்களுக்கான 10.5 % உள் இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

March 30, 2022 0
வன்னியர்களுக்கான 10.5 % உள் இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கல்வி , வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கான 10.5 % உள் இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் , சரியான காரணங்களை தெரிவிக்கவேண்டியது அவசியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை உறுதி செய்து தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
Read More

Post Top Ad

Your Ad Spot