KalviseithiDaily: TNPSC EXAMS

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label TNPSC EXAMS. Show all posts
Showing posts with label TNPSC EXAMS. Show all posts

Saturday, September 17, 2022

TNPSC - COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES (EXAMINATION) - PDF

September 17, 2022 0


TNPSC - COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES (EXAMINATION) - PDF

Applications are invited from eligible candidates only through online mode upto 14.10.2022 for direct recruitment to the posts included in Combined Statistical Subordinate Services Examination.

CLICK HERE TO DOWNLOAD
Read More

Friday, July 29, 2022

1089 காலிப்பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

July 29, 2022 0
தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றன. குரூப் 1, குரூப் 2 , 2A, குரூப் 4 , விஏஓ என குரூப் 8 வரை தமிழகத்தில் பல்வேறு படிநிலைகளில் உள்ள அரசுப் பணிகள், தேர்வுகள் நடத்தி அதன் மூலம் நிரப்பப்படுகின்றன.

அதன்படி தற்போது நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் உள்ளிட்ட 1089 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விருப்பதும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பதவியின் பெயர் : நில அளவர், வரைவாளர் , அளவர்/ உதவி வரைவாளர்.

மொத்த காலியிடங்கள்: 1089

நில அளவர் - 794 +4

வரைவாளர் - 236

அளவர்/ உதவி வரைவாளர். - 55

சம்பளம் - மாதம் ரூ.19500-71900/

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் - 29.07.2022

விண்ணப்பிக்க கடைசி நாள் - 24.08.2022

தேர்வு நடைபெறும் நாள் - 06.11.2022

தேர்வு முறை - கணினி வழித் தேர்வு ( Online Exam)

கல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங் பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள் (அல்லது) சம்மந்தப்பட்ட தொழிற் துறைகளில் (Surveyor, Draftsman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சிலால் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:

நில அளவர்/வரைவாளர் - 01.07.2022 அன்று 32 வயதுக்கும் கீழ் இருக்க வேண்டும் .

அளவர்/ உதவி வரைவாளர் - 01.07.2022 அன்று 37 வயதுக்கும் கீழ் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்அருந்ததியர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர், சீர்மரபினர், ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை .

தேர்வுக் கட்டணம்: ரூ. 100 ; நிரந்தர பதிவுக் கட்டணம் : ரூ.150

மேலும், ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணம் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மாற்றுத்திறனாளிகளுக்கான4% இட ஒதுக்கீடு உள்பட பிற இடஒதுக்கீட்டு விதிகளும் பின்பற்றப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைனில் http://www.tnpsc.gov.in / http://www.tnpscexams.in ஆகிய இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
Read More

Monday, July 25, 2022

Friday, July 15, 2022

TNPSC - GROUP IV - தொடர்பான செய்தி வெளியீடு - PDF

Wednesday, June 29, 2022

TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்காணல்

June 29, 2022 0


சென்னை: குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.



கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு பதிவெண்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx வெளியாகியிருக்கிறது.



கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை, குரூப் 1 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.



இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.



எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையிலுள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்.

இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தேர்வர்களுக்கு தொலைபேசி வாயிலாக தகவல்கள் தெரிவிக்கப்படமாட்டாது. அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்திலேயே பகிரப்படும்.

அதுபோல, குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Read More

Monday, June 6, 2022

TNPSC : குரூப் - 1 தேர்வு விடைகள் மறு ஆய்வு கோரி வழக்கு

June 06, 2022 0
'குரூப் - 1' முதல் நிலை தேர்வு விடைகளை மறு ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக் கோரிய வழக்கில், அரசு பணியாளர்கள் தேர்வாணையம் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு ஜனவரியில், குரூப் - 1 பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது.

இதில், பல கேள்விகளக்கான விடைகள் தவறாக அளிக்கப்பட்டு இருப்பதாக ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, மூவர் குழுவை தேர்வாணையம் நியமித்தது. சில கேள்விகள், விடைகள் தான் தவறாக இருந்ததாகவும், அதற்கு மதிப்பெண் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.மொத்தம், 60க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப் பட்டதாக கூறி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், புதிய குழு ஆய்வு செய்து, ஒரே ஒரு கேள்வி தான் தவறாக இருந்ததாக அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களில், 'குழு அளித்த அறிக்கை சரியல்ல; அந்த அறிக்கையை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான நிபுணர் குழு மறு ஆய்வு செய்ய வேண்டும். 'மேலும், அனைத்து கேள்வி, பதில்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

மனுக்கள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், முகமது சபீக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் எம்.ராமமூர்த்தி ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.
Read More

Friday, June 3, 2022

TNPSC குரூப் 1, 2, 4 தேர்வுகளுக்கு ஜூன் 5-இல் இலவச வழிகாட்டும் முகாம்

June 03, 2022 0
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 தேர்வுகளுக்கு ஜூன் 5-இல் இலவச வழிகாட்டும் முகாம்


சென்னை, ஜூன் 2: சென்னை அண்ணாநகர் திருமலங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 தேர்வுகளுக்கான வழிகாட்டும் முகாம் வரும் ஞாயிற்றுக்கி ழமை நடைபெறவுள்ளது.


குரூப் 1, 4 மற்றும் குரூப் 2 முதன்மைத் தேர்வினை எழுதவுள்ள தேர்வர்களுக்கு படிக்க வேண்டிய பாடநூல்கள், நேர மேலாண்மை மற்றும் திட்டமிடுதல் தொடர்பாக பயிற்சி முகாமில் விளக்கப்படும். தேர்வர்களுக்கு பாடக் குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரித் தேர்வுக ளும் நடத்தப்படும். இதில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. தகுதியுள்ள தேர்வர்கள் தங்களது சுய விவரங்களுடன் அண் ணாநகர், திருமங்கலத்தில் உள்ள ஜெ.ஜெ.வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 93605 33992, 7010136605 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஃபோக்கஸ் அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read More

Saturday, May 21, 2022

TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

May 21, 2022 0
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் குரூப் 4 தேர்வு ‌ஜூலை 24- 2022 அன்று நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளிவந்து விண்ணப்பிக்கும் காலமும் முடிவடைந்துள்ளது.

அரசின் அறிவிப்பில் 7301 பணியிடங்களை அறிவித்துள்ளது. இதனை அடுத்து மாணவர்களுக்கு உடனடியாக குரூப் 4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சியளிக்க Dr. அம்பேத்கர் கல்வி மையம் தயாராகி உள்ளது. ஏற்கெனவே நடந்து வந்த குரூப் 2 வகுப்பிற்கான தேர்வு 21.5.2022 அன்று நடைபெற உள்ளதால் 22.5.2022 அன்றே குரூப் 4 வகுப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது‌.

மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள குறுகிய கால இடைவெளியே உள்ளதால் மாதிரி தேர்வை தொடர்ந்து விரிவான கலந்துரையாடலையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது. இதர விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள தமிழ்நாடு அரசின் தேர்வாணைய இணையதளத்தை சென்று ( www.tnpsc.gov.in ) பார்க்கவும்.

குரூப் 4 தேர்வில் பங்குபெறும் மாணவர்களுக்கு எட்டு வாரகாலமே பயிற்சிக்கு உள்ளதால் பயிற்சி வகுப்புகள், தொழில் நுட்பரீதியாகவும் மாணவர்களுடைய திறமையை வெளிக்கொணரும் வகையிலும் இருக்கும். அதிகபட்சமாக வகுப்புகள், மாதிரி தேர்வும் அதையொட்டிய மாணவர்களின் சந்தேகங்களை பூர்த்தி செய்யும் வகையில் கலந்துரையாடல் வடிவத்திலேயே இருக்கும். தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களும் திறமையான ஆசிரியர்களும் ஆலோசனைகளை வழங்குவார்கள். அரசுத் துறைகளில் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். இவ்வகுப்புகளை, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து நடத்தும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் நடத்திவருகிறது.

பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட ஏனைய பொருளாதாரத்தில் பின்தங்கிய, அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தி வருகிறது. வழிகாட்டுதல் தேவைப்படும் கிராமப்பற மாணவர்கள், வீட்டிலிருந்தே பயிற்சி எடுத்தவர்கள், பயத்தினால் வாய்பை தவறவிட்டவர்கள் இந்த வகுப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடந்த பத்து ஆண்டுகளாக பயிற்சி களத்தில் கிடைத்த முன் அனுபவங்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகின்றோம். இங்கு பயின்ற 1200-கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசுத்துறைகளின் பல்வேறு நிலைகளில் சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர். சென்னையில் ஏற்கெனவே பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மாணவர்கள் தேர்விற்காக படித்திருந்து கூடுதலாக வழிகாட்டுதல் தேவைபடும் மாணவர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வகுப்புகள் வாரந்தோறும் நடக்கும். ஒவ்வொரு வாரமும் நடக்கும் இந்த மாதிரி தேர்வுடன் கூடிய சிறப்பம்சமே எல்லா மாணவர்களும் கலந்துரையாடலில் பங்கேற்று தனது திறமையை மேம்படுத்துவதுடன் தேர்வில் அதிகபட்ச பலத்தோடு வெற்றி பெறுவதுதான்.

Dr. அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மாணவர்களுக்காக கோயம்புத்தூரிலும், பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.

சமூக அக்கறையுடன் பின்தங்கிய மாணவர்களுக்கு தன்னார்வத்துடன் வகுப்பெடுக்க விருப்பம் உள்ளவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் தங்களது தற்போதைய புகைப்படம் மற்றும் குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்ததின் நகலை உடன் (Xerox copy) கொண்டு வர வேண்டும். தவறும் மாணவர்கள் வகுப்பினுள் நுழைய அனுமதியில்லை.

மாணவர்கள் TNPSC குரூப் 4 தேர்வில் முழுமையாக பங்கேற்று தேர்வெழுதும் முழுத் தகுதியை பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் கட்டாயம் முன் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு கட்டணம் உண்டு. பயிற்சி நடைபெறும் இடம். சிஐடியு அலுவலகம். நெ. 6/9, கச்சாலீஷ்வரர் கோயில் அக்ராஹரம்., ஆர்மேனியன் தெரு, சென்னை- 600001. பயிற்சி பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:

சென்னை மையம்:

திரு. கங்காதரன் - 94442 14696 திரு. வாசுதேவன். 94446 41712

கோயம்புத்தூர் மையம்: திரு. சுரேஷ் - 94881 55191

மாணவர்கள் நம்பிக்கையுடன் கூடிய முயற்சியில் சரியான திட்டமிடலுடன் உறுதியாக தேர்வை எதிர்கொண்டால் எளிதாக வெற்றியை பெறமுடியும்.

மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்.

ந. வாசுதேவன்.

Dr. அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம்.

சென்னை - 600001.

தொலைபேசி:

94446 41712

18.05.2022.
Read More

Friday, May 20, 2022

Tuesday, May 17, 2022

TNPSC குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு 5,529 பணியிடத்துக்கு 11.78 லட்சம் பேர் போட்டி

May 17, 2022 0
குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு திட்டமிட்டப்படி வருகிற 21ம் தேதி நடைபெறும். 5,529 பணியிடத்துக்கு நடத்தப்படும் தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவி(நேர்முக தேர்வு பதவி) 116 பணியிடம். குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கான முதல்நிலை தேர்வு வரும் 21ம் தேதி நடைபெறும். சென்ற ஆண்டுகளை விட இந்த தேர்வுக்கு கூடுதலாக 1.5 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். 21ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை என 3 மணி நேரம் முதல்நிலை தேர்வு நடைபெறும். தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் காலை 8.30 மணிக்கே தேர்வு நடைபெறும் இடங்களுக்கு வர வேண்டும். காலை 8.59 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். 9 மணிக்கு பிறகு வரக்கூடிய தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே போல காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணிக்கு முடிந்தாலும் கூட, பிற்பகல் 12.45 மணி வரை தேர்வர்கள் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் இத்தேர்வை 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் எழுத உள்ளனர். இன்று(நேற்று) பிற்பகல் 3.15 வரை 9 லட்சத்து 10,327 பேர் வரை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து இருக்கிறார்கள். இன்னும் இரண்டு, மூன்று தினங்கள் இருக்கின்ற காரணத்தால், தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 11 லட்சத்து 78,175 தேர்வர்களுமே ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து விடுவார்கள். குரூப் 2, குரூப் 2ஏ தேர்வை எழுதுபவர்களில் 4 லட்சத்து 96 ,247 பேர் ஆண்கள், 6 லட்சத்து 81,880 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 48 பேர், மாற்று திறனாளிகள் 14,531 பேரும் தேர்வு எழுத உள்ளனர். இரண்டு கைகள் இல்லாதவர்கள், கண்பார்வையில்லாமல் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவி செய்வதற்காக பல்வேறு மையங்களில் 1800 பேர் ஈடுபடுத்தபடுகிறார்கள். குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கு தமிழ் வழியில் படித்த 79,942 பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வை பொறுத்தவரை ஜெனரல் இங்கிலிஷ் சப்ஜெக்டில் 2 லட்சத்து 31,586 தேர்வு எழுத உள்ளனர். ஜெனரல் தமிழ் பிரிவில் 9 லட்சத்து 46,589 பேர் தேர்வு எழுகிறார்கள். 38 மாவட்டங்களில் 117 இடங்களில் 4012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுக்காக 4012 தலைமை கண்காணிப்பாளர்கள், 58,900 கண்காணிப்பாளர்கள், 323 பறக்கும் படையினரும், 6,400 பரிசோதனை குழுவும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குரூப் 2, குரூப் 2ஏ தேர்வை அதிகப்பட்சமாக சென்னையில் 7 மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுதுகின்றனர். மிக குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் 5,624 பேர் தேர்வு எழுதுகிறார்கள். 6 லட்சத்து 93 ஆயிரத்து 361 பேர் முதல்நிலை தேர்வுக்கு எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக்கான வினாக்கள் கொள்குறி வகையில் இருக்கும். மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஜெனரல் தமிழ் அல்லது ஜெனரல் இங்கிலிஸில் 100 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவில் 75 கேள்விகள், திறனறிவு தேர்வில் 25 கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கான ரிசல்ட் ஜூன் மாதம் இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் மெயின் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. மெயின் தேர்வுக்கு ஒரு பணிக்கு 10 பேர் என்ற அடிப்படையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்கள். தற்போதைய பணியிடங்கள் அடிப்படையில் 55 ஆயிரம் பேர் வரை மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஒரே மார்க்கில் 100 பேர் வருகிறார்கள் என்றால் 100 பேரையும் மெயின் தேர்வு எழுத அனுமதிப்போம். இதனால் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 1 பணியிடத்துக்கு 12 பேர் என்ற அடிப்படையில் மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் ஒரிஜினல் வாட்டர் கலரில் வழங்கப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டை கலர் மற்றும் பிளாக் அன்ட் ஒய்ட்டில் ஏதுவென்றாலும் பிரிண்ட் எடுத்து கொண்டு வரலாம். ஹால் டிக்கெட் 4 பக்கம் உள்ளது. அந்த 4 பக்கத்தையும் தேர்வர்கள் கொண்டு வர வேண்டும். தேர்வர்களின் அடையாளத்தை கண்காணிக்கும் வகையில் அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று கொண்டுவர வேண்டும். அதே நேரத்தில் தேர்வர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையில் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி தேர்வர்கள் மாஸ்க் அணிந்து வந்தால் நல்லது. குரூப் 1 தேர்வுக்கான ரிசல்ட்டை இந்த மாதம் இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளோம். விடைத்தாள் திருத்தும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது 100 இடங்கள் கூடுதலாக நிரப்ப வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Saturday, May 14, 2022

TNPSC - JUNIOR SCIENTIFIC OFFICER (THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE (2015-2019)) (Oral Test)

Wednesday, May 11, 2022

TNPSC Group தேர்வு முறைகேடு தடுக்க தீவிர நடவடிக்கை

May 11, 2022 0
* அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும் என்றும் விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் விவரங்கள், இனி தேர்வு முடிந்தபின் தனியாகப் பிரிக்கப்படும்.

* தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

* அதிகத் தேர்வர்களைக் கொண்ட தேர்வுகளையும் கணினி வழித் தேர்வாக நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே அடுத்தகட்ட தேர்விற்கு எடுத்துக்கொள்ளப்படுவர்.
Read More

Friday, April 29, 2022

TNPSC இன்று (29.04.22) வெளியிட்டுள்ள அறிவிப்பு - நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் - தொடர்பான செய்தி வெளியீடு

April 29, 2022 0
தமிழ்நாடு பொதுப் பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான முதன்மை தேர்வு (விரிந்துரைக்கும் வகை) தேர்வின் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் - தொடர்பான செய்தி வெளியீடு
Read More

TNPSC தேர்வு மாதிரி வினா விடை - 29.04.22

April 29, 2022 0
Read More

TNPSC - COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES ( EXAMINATION) (Counselling) - PDF

Thursday, April 28, 2022

TNPSC - ASSISTANT DIRECTOR OF FISHERIES (TAMIL NADU FISHERIES SERVICE) (Certificate Verification)

Monday, April 25, 2022

வரும் 28ம் தேதியுடன் காலக்கெடு முடிகிறது குரூப் 4 தேர்வுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பம்

April 25, 2022 0
TNPSC குரூப் 4 தேர்வு

குரூப் 4 தேர்வுக்கு நேற்று மாலை வரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 இடம், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2,108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024 என 7,138 இடங்கள். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் குரூப் 4 பதவியில் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

13 லட்சம் பேர் விண்ணப்பம்

மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களும் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வுக்கு கடந்த 30ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்று முதல் தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. 10ம் வகுப்பு தேர்ச்சி தான் கல்வி தகுதி என்பதால் தேர்வுக்கு விண்ணப்பித்தல் தொடங்கியதில் இருந்து இளைஞர்கள், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என்று போட்டு போட்டு கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 28ம் நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 13 லட்சத்து 2 ஆயிரத்து 688 பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 28ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. இதனால், விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதால் அதற்கேற்றார் போல் நடவடிக்கைகளை டிஎன்பிஎஸ்சி துரிதப்படுத்தி உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்தில் கேட்டுள்ள விவரங்களை ஒழுங்காக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். குரூப் 4 தேர்வுக்கான எழுத்து தேர்வு ஜூலை 24ம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

Post Top Ad

Your Ad Spot