KalviseithiDaily: Jewelry loan

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Jewelry loan. Show all posts
Showing posts with label Jewelry loan. Show all posts

Wednesday, June 22, 2022

வீட்டுக்கடனுக்கான EMI சுமையை குறைக்கும் வழிகள்

June 22, 2022 0
சராசரி இந்தியர்களின் கனவு, குறைந்தபட்சம் சொந்த வீடு வாங்க அல்லது கட்ட வேண்டும் என்பது தான். இன்றைய காலத்தில், அதனை அடைய ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. தகுதியுடைய நபர்களுக்கு வங்கிகள், நிதிநிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு கடன் தர தயாராக இருக்கின்றன. அதேநேரம், வீட்டுக்கடனுக்கான வட்டி உயர்வு என்பது நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. இருந்தாலும், சில வழிகள் மூலம் வீட்டுக்கடனை கட்டுக்குள் வைக்க இயலும். அவை என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
1. ப்ளோட்டிங் வட்டி விகிதத்துக்கு மாறுங்கள் :

நீங்கள் புதிதாக வீட்டுக்கடன் பெற்றவர் எனில், சில காலம் எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் வங்கி அல்லது நிதிநிறுவனங்கள், குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு நிரந்தர வட்டி விகிதத்தில் இருக்கும். அதற்கு பிறகு ப்ளோட்டிங் ( Floating) வட்டி விகிதத்திற்கு மாறும். இதனை மதிப்பீடு செய்யுங்கள். இது போன்ற வீட்டு கடன்களில், சில நேரங்களில் நிரந்தர வட்டி விகிதத்தை விட, ப்ளோட்டிங் வட்டி விகிதம் குறைவாக இருக்க கூடுமென்பதை மறக்க வேண்டாம்.

2. ஈ.பி.ஆரை தேர்ந்தெடுங்கள் :

அனைத்து புதிய கடன்களும் அக்டோபர் 2019க்கு பிறகு வெளிப்புற அளவுகோல் விகிதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பழைய கடன்கள், புதிய விகிதத்திற்கு மாற்றும்படி விண்ணப்பிக்கும் வரை, பழைய அளவிலேயே தொடரும். எனவே வீட்டுக்கடன் பழைய கடன் எனில் பழைய விகிதத்தையும், வங்கிக்கு செலுத்தும் வட்டி விகிதத்தையும் சரிபார்க்க வேண்டும். குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி, ஈபிஆர் (EBR) வெளிப்புற அளவுகோல் அடிப்படையில் புதிய விகிதத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும் 3. குறைந்த வட்டி விகிதத்துக்கு மாறுதல் :

உங்கள் வீட்டுக்கடன் வங்கி வட்டி விகிதத்தோடு, பிற வங்கி அளிக்கும் வட்டி விகிதத்தை ஒப்பீடு செய்து பாருங்கள். நீங்கள் செலுத்தும் வட்டியை விட, வேறு வங்கியில் குறைந்த வட்டி எனில், வங்கி கடனை அங்கு மாற்றி கொள்ளுங்கள். வங்கி வட்டி விகிதம் 0.5 சதவீதம் அல்லது அதற்கு மேல் வித்தியாசம் இருப்பின், மாற்றி கொள்வது உங்களுக்கு நலம் பயக்கும்.

4. கடன் ஸ்கோர் மூலம் பேரம் :

வருமானம் அல்லது தொழிலில் முன்னேற்றம், நல்ல கிரெடிட் ஸ்கோர் இருக்கும்பட்சத்தில், ஏற்கனவே வீட்டுக்கடன் அளித்த வங்கி அல்லது நிதிநிறுவனத்திடம் பேரம் பேசி வட்டி விகிதத்தை குறைக்கலாம். இதன் மூலம் குறிப்பிட்ட வட்டி விகிதத்தை சேமிக்க முடியும்.

5. தவணை காலத்தை நீட்டித்தல் :

மாதாந்திர தவணை காலத்தை அதிகரித்து கொள்ளுங்கள். ஓய்வு பெறும் வயதான 60 முதல் 65 வயது வரை நீட்டித்து கொள்ளலாம். உதாரணமாக, நீங்கள் 35 வயது நபர் எனில், 20 ஆண்டுகள் செலுத்தும் வகையில் கடன் வாங்கலாம். அதாவது ஓய்வு பெறும் வயது, 60 என கணக்கிட்டால், கடனை திருப்பி செலுத்தும் காலத்தை, 25 ஆண்டுகள் வரை நீட்டித்து கொள்ளலாம். 6. ஹோம் சேவர் கணக்கை தேர்ந்தெடுத்தல் :

ஹோம் சேவர் கடனை தேர்ந்தெடுப்பதால், வங்கி கடன் கணக்கில் நீங்கள் உங்களது தனிப்பட்ட கூடுதல் சேமிப்புகளை செலுத்தலாம். இதனால் மாதம் கட்டாயம், குறைந்தபட்ச தொகை செலுத்துவதில் இருந்து விடுபடலாம். ஆனால் பொதுவாக இந்த கடனுக்கான வட்டி, வழக்கமான வட்டி விகிதத்தை விட 1 முதல் 1.5 சதவீதம் அதிகமாக இருக்கும்.

7. குறிப்பிட்ட தொகை முன்பணமாக செலுத்துதல்:

வீட்டுக்கடன் திருப்பி செலுத்தும் காலம், ஏற்கனவே ஓய்வு வயது வரை உள்ள நிலையில், தவணை காலத்தை நீட்டிப்பது கடினமான ஒன்று. எனவே இ.எம்.ஐ சுமையை குறைக்க உங்களுக்கு முன் இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு. வீட்டுக்கடன் கணக்கில், பகுதியாக குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே செலுத்துவது தான். சில்லறை வீட்டுக்கடன்கள் பெரும்பாலும் ப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் தான் இருக்கும். எனவே முன்கூட்டி பணம் செலுத்துவதற்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது.
Read More

Wednesday, April 6, 2022

நகைக்கடன் தள்ளுபடி பெறாதவர்கள்முறையீடு செய்ய ஏப்.20 வரை அவகாசம்

April 06, 2022 0
In Theni district, 52,784 jewelery borrowers were declared ineligible and the government did not grant them loan waivers. Jewelry loans were waived for 27,977 people.

If those who do not receive a loan waiver qualify ap. The Co-operative Department has announced that up to 20 people can apply for the loan.

Of these, a list of 30,283 eligible persons was sent to the Government by the District Co-operative Society after auditing as per the regulations announced by the Government. Of these, 2306 were found to be ineligible for more than 40 grams of jewelery mortgages, loan savings and fixed deposits. 27,305 of them have been issued loan waiver certificates and jewelery. 672 persons were certified as outsiders, without proof of inheritance and returned the jewelery, but the jewelery was not returned. At the district level there is a committee headed by the Joint Registrar, Deputy Registrar and the General Manager of the Central Bank. Those who do not receive a jewelry loan waiver can appeal to the Deputy Registrar's Office until April 20, if eligible. The appeal will be resolved within 30 days.

தேனி,-மாவட்டத்தில் நகைக்கடன் பெற்றவர்களில் 52,784 பேருக்கு தகுதியில்லை என கூறி அரசு கடன் தள்ளுபடி அளிக்கவில்லை. 27,977 பேருக்கு நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்டது. கடன் தள்ளுபடி பெறாதவர்கள் தகுதி இருப்பின் ஏப். 20 வரை மேல்முறையீடு செய்யலாம் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.தேனி மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், வேளாண் ஊரக வளர்ச்சி வங்கிகள், கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் 80,089 பேர் நகைக்கடன் பெற்றுள்ளனர்.

இவர்களில் அரசு அறிவித்த கட்டுப்பாடு, விதிமுறைகளின் படி தணிக்கை செய்து தகுதிவாய்ந்த 30,283 பேர் கொண்ட பட்டியலை மாவட்ட கூட்டுறவுத்துறையால் அரசுக்கு அனுப்பபட்டது. இதில் 40 கிராமுக்கு அதிகமாக நகை அடகு வைத்தவர்கள், கடன் தொகைசேமிப்பு, நிரந்தர வைப்புத் தொகையில் செலுத்தியவர்கள் என 2306 பேருக்கு தகுதியில்லை என அரசு நிராகரித்தது.இறுதியாக தேனி மாவட்டத்தில் 27,977 பேருக்கு ரூ.107.41 கோடி மதிப்பில் கடன் தள்ளுபடி செய்து அரசு அறிவித்தது. அவர்களில் 27,305 பேருக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ், நகை வழங்கப்பட்டுவிட்டது. வெளியூரில் இருப்பவர்கள், வாரிசு சான்று இல்லாதவர்கள், நகையை திருப்பியவர்கள் என 672 பேர் சான்றிதழ், நகையை திரும்ப பெறவில்லை.* மேல்முறையீட்டு குழு:நகைகடன் தள்ளுபடி குறித்து மேல்முறையீடு செய்ய பெரியகுளம், உத்தமபாளையம் சரகத்தில் துணைபதிவாளர் தலைமையிலான மேல்முறையீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் இணைப்பதிவாளர், துணைப்பதிவாளர், மத்திய வங்கி பொதுமேலாளர் தலைமையிலான குழு உள்ளது. நகைகடன் தள்ளுபடி பெறாதவர்கள் தகுதி இருப்பின் ஏப்.20 வரை துணைப்பதிவாளர் அலுவலகத்தில் முறையீடு செய்யலாம். மேல்முறையீடு மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
Read More

Post Top Ad

Your Ad Spot