KalviseithiDaily: TRB

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label TRB. Show all posts
Showing posts with label TRB. Show all posts

Wednesday, December 28, 2022

15,149 காலிப் பணியிடங்கள்: ஆசிரியா் தோ்வு வாரியத்தின் ஆண்டு அட்டவணை வெளியீடு

December 28, 2022 0
15,149 காலிப் பணியிடங்கள்: ஆசிரியா் தோ்வு வாரியத்தின் ஆண்டு அட்டவணை வெளியீடு

வரும் 2023-ஆம் ஆண்டில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளின் விவரம், அவற்றுக்கான அறிவிக்கை வெளியாகும் மாதம் போன்ற விவரங்களுடன் கூடிய ஆண்டு தோ்வுக்கால அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியா் தோ்வு வாரியம் 2023-ஆம் ஆண்டுக்கான தோ்வுக்கால அட்டவணையை இணையதளத்தில் (www.trb.tn.nic.in) புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் 9 தோ்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் 4 ஆயிரம் உதவி பேராசிரியா் பணியிடங்கள் உள்பட 15,149 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியா் தோ்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஏப்ரலில் போட்டித் தோ்வு நடத்தப்பட உள்ளது. வட்டாரக் கல்வி அலுவலா் பதவியில் 23 காலியிடங்களை நிரப்ப பிப்ரவரியில் அறிவிப்பு வெளியாகும். அதற்கான போட்டித் தோ்வு மே மாதம் நடைபெறும்.
இடைநிலை ஆசிரியா் பதவியில் 6,553 காலியிடங்களுக்கு மாா்ச்-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மே-இல் தோ்வு நடத்தப்பட உள்ளது. அதேபோல், பட்டதாரி ஆசிரியா் பதவியில் 3,587 காலியிடங்களை நிரப்புவதற்காக ஏப்ரலில் அறிவிப்பு வெளியாகும். தோ்வு ஜுனில் நடைபெறும்.

டெட் தோ்வுகள் எப்போது?: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் தோ்வு ஆகஸ்ட் மாதமும், அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியா் தோ்வு செப்டம்பரிலும், அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியா் தோ்வு அக்டோபரிலும், முதுகலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு நவம்பரிலும் நடைபெற உள்ளன.

ஆசிரியா் தகுதித்தோ்வுக்கு (தாள்-1 மற்றும் தாள்-2) டிசம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2024-ஆம் ஆண்டு மாா்ச்-இல் தோ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Monday, September 26, 2022

TRB - Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021 - Revised provisional selection list-Mathematics (Sl.No 212 to 269)

September 26, 2022 0
Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021 - Revised provisional selection list-Mathematics (Sl.No 212 to 269)


CLICK HERE TO DOWNLOAD
Read More

Monday, July 25, 2022

TET தேர்வுக்கான விண்ணப்பத்தில் 27ம் தேதி வரை திருத்தலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

July 25, 2022 0
ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள்- 1, மற்றும் 2 ஆகியவற்றுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள், தங்கள் விண்ணப்பங்களில் வரும் 27ம் தேதி வரை திருத்தம் செய்யலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டும் நடக்க உள்ளது. இதையடுத்து ஏப்ரல் 26ம் தேதி வரை இணைய தளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தாள் 1க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878பேரும், தாள் 2க்கு 4 லட்சத்து 1886 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இதையும் படிக்க | தலைக்கு மேல் ஆபத்து: பரிதாப நிலையில் அரசுப்பள்ளி கட்டடங்கள்

இந்நிலையில், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வந்தது. அதனால், விண்ணப்பதாரரின் கோரிக்கையை ஏற்று மேற்கண்ட இரண்டு தாள் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இதற்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, திருத்தங்கள் செய்ய விரும்புவோர் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தின் மூலம் திருத்தங்களை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பள்ளிகள் கைநழுவுகின்றதோ? - கமல் ஹாசன் கேள்வி

திருத்தங்கள் செய்த பிறகு சமர்ப்பிக்கும் பொத்தானை அழுத்தி உறுதி செய்யாவிட்டால் முந்தைய விவரங்களே ஏற்று பரிசீலிக்கப்படும். விண்ணப்பத்தை சமர்ப்பித்து பணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே மாற்றங்களை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். செல்போன் எண்கள், மின்னஞ்சல் முகவரி, கல்வித் தகுதி ஆகியவற்றில் மாற்றம் செய்ய முடியாது. தாள் 1, தாள் 2 ஆகியவற்றிலும் எந்த மாற்றமும் செய்ய இயலாது என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Read More

Tuesday, July 5, 2022

நிரந்தர ஆசிரியர் நியமன அறிவிப்பு - தமிழக அரசு வெளியிடுமா ?

July 05, 2022 0
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால், அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களே. அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போதுவரை பணி வாய்ப்பு கிடைக்காமல் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு அரசு கடந்த 23ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும். அதோடு ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி வாய்ப்பை பெற இயலாத நிலை உருவாகும்.

ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பாக கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்வதோடு, அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் தமிழக அரசுப் பள்ளிகளிலுள்ள காலி பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்ப இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக்கோரி நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு தமிழக அரசுத்தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதில் "தமிழகம் முழுவதும் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மதுரைக் கிளையின் இடைக்கால தடையால் அதன் கீழ் உள்ள மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாமல் உள்ளது. ஆகவே இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, "எந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்?" எனக் கேள்வி எழுப்பினார். அரசு தரப்பில், "ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தகுதியான ஆசிரியர்களே நியமிக்கப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "அப்படி என்றால் நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாமே? தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு என்ன அவசரம் உள்ளது?" எனக் கேள்வி எழுப்பி, வழக்கு பட்டியலிடப்பட்ட ஜூலை 8 ஆம் தேதியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இதனால் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி நிரந்தர ஆசிரியர் நியமன அறிவிப்பை தமிழக அரசு வெளியிடுமா ? என்று தேர்வர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
Read More

Monday, July 4, 2022

2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வு முடிவுகள் வெளியீடு

July 04, 2022 0
அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் http://trb.tn.nic.in இணையதளத்தில் வெளியீடு

முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை 2 லட்சத்து 13 ஆயிரத்து 893 பேர் எழுதியுள்ளனர். முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை trb.tn.nic.in இணையதளத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளதுது.

2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரியில் தேர்வு நடந்தது.



இத்தேர்வினை தமிழகம் முழுவதும் 2,13,893 பேர் எழுதியிருந்தனர். இந்த நிலையில் இத்தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.



trb.tn.nic.in என்கிற இணையதள முகவரில் இதனை அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

PG TRB Status of Objections ( All Subjects) - Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021

Monday, May 16, 2022

ஜூலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள்

May 16, 2022 0
ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1, ஆகிய பணிகளின் நேரடி நியமனத்துக்காக நடந்த போட்டித் தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியிடப்பட்டது. அதுகுறித்து ஆட்சேபனைகளை ஏப்ரல் 13ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள்

அதன்படி, 29 ஆயிரத்து 141 பேர் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்முறை தேர்வு மற்றும் பருவத் தேர்வுகள் நடப்பதால் பகுதியாக, பாடவாரியாக மட்டுமே பாட வல்லுநர்கள் அழைக்கப்பட்டு விடைக்குறிப்பை மறு ஆய்வு செய்து வருகிறோம். இந்த பணி முடிய இன்னும் ஒரு மாதம் ஆகும். இந்தப் பணி முடிந்ததும் இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படும். அதன்பின் விடைத்தாள்கள் கணினி வழி திருத்தம் செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதற்கு குறைந்த பட்சம் 45 நாட்கள் தேவைப்படும். அதற்கு பிறகு சான்று சரிபார்ப்புக்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகும். இதனால் மேற்கண்ட பணியிடங்களுக்கான தெரிவுப் பட்டியல் ஜூலை இறுதியில் வெளியிடப்படும்.
Read More

Saturday, May 14, 2022

UG TRB Chemistry Study Material - PDF

Monday, December 20, 2021

10th English Unit Test Question Paper ( December)

PG TRB English - 150 Marks Model Test Question Paper

Wednesday, December 1, 2021

TRB - Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-18 - Press News - PDF

Saturday, November 20, 2021

வட்டாரக் கல்வி அலுவலர் பணிநியமனம் எப்போது? 42,000 தேர்வர்கள் காத்திருப்பு

November 20, 2021 0
தமிழ்நாட்டில் 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வானது கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில் இணைய வழியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டது. இத்தேர்வினை சுமார் 42 ஆயிரத்து 686 தேர்வர்கள் எழுதினார்கள்.

தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தொலைதூரங்களுக்குப் பயணித்து தேர்வர்கள் இத்தேர்வை எழுதினார்கள். பெரும்பாலும் தேர்வர்களுக்கான தேர்வு மையமானது அவர்களின் சொந்த மாவட்டத்தில் ஒதுக்கப்படாமல் பிற மாவட்டங்களிலேயே ஒதுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு இணைய வழியில் நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் வழக்கமாக ஓரிரண்டு மாதங்களில் வெளியிடப்படும். ஆனால் வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வின் முடிவுகள் சுமார் 11 மாதங்களுக்குப் பின்னர் நிகழாண்டு ஜனவரி 27 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியாகி 6 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்படாதது தேர்வர்களிடையே மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கொரோனா பெருந்தொற்றுப் பரவலால் இப்பணிகள் தொய்வு அடைந்திருக்கலாம் எனக் கருதினாலும் இவற்றைக் கடந்து மற்ற அனைத்துப் பணியாளர் தேர்வு வாரியங்களும் செயல்படத் தொடங்கிவிட்டன.

மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வினை நடத்திய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பணிநியமன ஆணையை கடந்த மாதமே வழங்கிவிட்டது. ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 5 மாதங்களாக எவ்விதச் செயல்பாடும் இன்றி அமைதி காத்து வருகிறது. தேர்வு நடந்து சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பணிநியமனம் தொடர்பான பணிகளைத் தொடங்காமல் காலந் தாழ்த்துவதற்கான காரணம் என்னவென்று புரியவில்லை. இணையவழியில் தேர்வு நடத்தப்படுவதன் நோக்கமே தேர்வுப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதே. ஆனால் இத்தேர்விற்குப் பிறகு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடானது அந்நோக்கத்திற்கு எதிரான வகையில் அமைந்துள்ளது.

சுமார் 42 ஆயிரம் தேர்வர்கள் பணிநியமனத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் 130 க்கும் மேற்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அவற்றை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தேர்வின் வெற்றியாளர்களுக்கு உடனடியாக சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை முடித்து அவர்களுக்குப் பணிநியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேர்வர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

கி.ராமராஜ், காட்பாடி,

வேலூர் மாவட்டம்
Read More

Wednesday, September 8, 2021

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசுக் கல்லூரிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனம்

September 08, 2021 0
பேரவையில் பாமக தலைவர்ஜி.கே.மணி பேசும்போது,"தமிழகத்தில் 2006-ம் ஆண்டுக்கு முன் அரசுக் கல்லூரி இல்லை. நான்சட்டப்பேரவையில் கேட்டுக்கொண்டதன் பேரில், முதலில் மேட்டூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அன்று முதல் ஆசிரியரல்லாத பணியாளர்கள், 15 ஆண்டுகளாக மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். தற்போது பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், வயது மூப்பு அடைந்துள்ளனர். எனவே, அவர்களை பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும்" என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் க.பொன்முடி பேசும்போது, "கடந்த 2006-ல் கருணாநிதி ஆட்சியில் உறுப்புக் கல்லூரியாக தொடங்கப்பட்ட அக்கல்லூரி 2018-ல் அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டது. அப்போது பல்கலைக்கழக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தற்போதுசம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத் துக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்காலிக பணியாளர்கள் அங்கேயே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்தஆட்சியில் குழு அமைத்து நியமிக் கப்பட்ட ஆசிரியர், ஆசிரியரல்லா பணியிடங்களில் தவறுகள் நடந்துள்ளதால், தற்போது வெளிப்படைத்தன்மையுடன் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், ஆசிரியரல்லாதவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமும் நியமிக்கப்படுவார்கள். மேட்டூர் அரசுக் கல்லூரி மட்டுமின்றி, மற்ற கல்லூரிகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த காலத்தில் அதிகம் உள்ளதால், அரசின் நிதி நிலைக்கு ஏற்ப, வெளிப்படையாக பணி வழங்கப்படும். தற்போதுள்ளவர்களுக்கு இதுவரை பணியாற்றியதற்கான தகுதிகளும், மதிப்பெண்களும் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Read More

Post Top Ad

Your Ad Spot