KalviseithiDaily: IAS_IPS

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label IAS_IPS. Show all posts
Showing posts with label IAS_IPS. Show all posts

Friday, August 5, 2022

IAS,IPS உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு செப்டம்பர் 16ல் தொடக்கம்

August 05, 2022 0
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு செப்டம்பர் 16ல் தொடங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு செப்டம்பர் 16ம் தேதி தொடங்கும் என்று யுபிஎஸ்சி நேற்று அறிவித்துள்ளது. இத்தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடக்கிறது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடக்கிறது. 2022ம் ஆண்டில் சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1,011 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 5 ம் தேதி நடந்தது. இத்தேர்வை சுமார் 5.5 லட்சம் பேர் எழுதினர். ஜூன் 22ம் தேதி முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் 13,090 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 610 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு செப்டம்பர் 16ம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஸ்ணவி கூறியதாவது: சிவிஸ் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான தேதியை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தனது இணையதளமான www.upsc.gov.inல் வெளியிட்டுள்ளது.

மெயின் தேர்வு செப்டம்பர் 16ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. 16ம் தேதி காலை முதல் தாள் தேர்வு (கட்டுரை வடிவிலானது) நடக்கிறது. 17ம் தேதி காலை இரண்டாம் தாள்(பொது அறிவு 1), மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாள்(பொது அறிவு 2) தேர்வும்,18ம் தேதி காலையில் 4ம் தாள்(பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு(பொது அறிவு 4) தேர்வும் நடக்கிறது. தொடர்ந்து செப்டம்பர் 24ம் தேதி காலையில் இந்திய ெமாழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வும், 25ம் தேதி காலையில் விருப்பப்பாடம் முதல் தாள், மாலை விருப்பப்பாடம் 2ம் தாள் தேர்வும் நடக்கிறது. நாடு முழுவதும் 24 நகரங்களில் மெயின் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடைபெறும்.

மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முக தேர்வு நடத்தப்படும். மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். இதில் தேர்வர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், பட்டியலில் உள்ள தகுதி நிலை அடிப்படையிலும் பணி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Saturday, December 11, 2021

அரசு மையங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி - இன்று முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

December 11, 2021 0
2022ம் ஆண்டுக்கான தமிழக அரசின் ஐஏஎஸ்,ஐபிஎஸ் பயிற்சிமையங்களில்சேர இன்று முதல் வரும் 28ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறி விப்பு:

சென்னையில் உள்ள தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம், கோயம்புத்தூர், மதுரை யில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையங்களில், தமிழ்நாட் டைச்சேர்ந்த இளம்பட்ட தாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோ ருக்கு. 5.6.2022 அன்று நடைபெற இருக்கும் மத் தியதேர்வாணையம் நடத் தும் குடிமைப்பணி தேர் விற்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்க உள்ளது.

சென்னையில் உள்ள மையத்தில் 225 முழுநேர தேர்வர்களையும், 100 பகு திநேர தேர்வர்களையும் முதல்நிலை பயிற்சிக்காக அனுமதிக்கிறது. அதே போன்று அண்ணா நூற் றாண்டு குடிமைப் பணித் தேர்வு பயிற்சி நிலையங் கள், கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தலா 100 முழுநேர தேர்வர்களை முதல்நிலை தேர்வுக்காக அனுமதிக்கின்றன. 2022ல் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு எழு துவதற்கு, பயிற்சி பெற விரும்புபவர்கள் www. civilservicecoaching.com என்ற இணையதளம் வாயிலாக இன்று முதல் வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப் பயிற்சிமையங்களில் ஏற்க னவே முதல்நிலைத் தேர் வுக்கு முழுநேரப்பயிற்சி பெற்றவர்கள் விண்ணப் பிக்கவேண்டாம்மேலும், பயிற்சியில் சேர விரும்புப வர்கள் தங்கள் கல்வி மற் றும்வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத் தியதேர்வாணையக்குழு வின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள் ளலாம். தகுதியுடைய நபர்கள் 23.1.2022 அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப் படுவர். முதல் நிலைத் தேர்வுக்கான நுழைவு தேர்வு முடிவுகள் விரை வில் வெளியிடப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இன வாரி யாகஉள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாக பயிற் சிக்கு அழைக்கப்படுவர். பிப்ரவரி முதல் வாரத் தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இவ் வாறு கூறப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot