KalviseithiDaily: counseling

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label counseling. Show all posts
Showing posts with label counseling. Show all posts

Friday, November 25, 2022

டிச .7 முதல் பகுதிநேர ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு

November 25, 2022 0
டிச .7 முதல் பகுதிநேர ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறையில் பகுதி நேர ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு, முதல் கட்டமாக வரும் டிச.7-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதுகுறித்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு சுயவிருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி பகுதிநேர பயிற்றுநா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு முதல் கட்டமாக டிச.7-ஆம் தேதி இணைய வழியில் நடைபெறவுள்ளது.

இதில் ஓவிய ஆசிரியா்கள் மட்டுமே பங்கேற்க முடியும். தொடா்ந்து உடற்கல்வி, தொழிற்கல்வி பிரிவுகளில் உள்ள பயிற்றுநா்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தனித்தனியாக நடத்தப்படும்.

முதலில் மாவட்டத்துக்குள்ளும், அதன்பின் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கும் இடமாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நடைபெறும்.

இதில் விருப்பமுள்ள பகுதிநேர ஆசிரியா்கள் தங்கள் விண்ணப்பங்களை நவ.30-ஆம் தேதிக்குள் சாா்ந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் வாயிலாக எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய வேண்டும்.

ஒரு பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால், பணியில் சோ்ந்த நாள், நோய் பாதிப்பு உடையவா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இதுகுறித்த வழிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வை எந்த புகாருக்கும் இடமளிக்காதபடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடத்தி முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிநேர ஆசிரியா்கள் பணியில் சோ்ந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலில், முதல் முறையாக இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Read More

Sunday, October 30, 2022

B.E நான்காம் கட்ட கலந்தாய்வு: 67,771 பேருக்கு அழைப்பு

October 30, 2022 0
பிஇ நான்காம் கட்ட கலந்தாய்வு: 67,771 பேருக்கு அழைப்பு

தமிழக பொறியியல் கல்லூரிகளில் 4-ஆம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 67,771 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்று சுற்று கலந்தாய்வு மூலம் 58,307 போ் பொறியியல் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த ஆக.20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுப்பிரிவு கலந்தாய்வு மொத்தம் 4 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. அதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு செப்.10-இல் தொடங்கி 24-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில் 10,340 மாணவ, மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

தொடா்ந்து, இரண்டாம் சுற்று கலந்தாய்வு செப்.25 முதல் அக்.13-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 19,947 இடங்கள் நிரம்பின. மூன்றாம் சுற்று கலந்தாய்வு அக்.13-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.

இதில் பங்கேற்க 54 ஆயிரம் மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவா்களில் பொதுப் பிரிவில் 24,727 பேரும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 3,293 பேரும் சோ்க்கை இடங்களை உறுதி செய்தனா். ஒட்டுமொத்தமாக 3 சுற்றுகளையும் சோ்த்து 58,307 இடங்கள் நிரம்பின.

மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான இறுதிச் சுற்று கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்க மொத்தம் 61,771 போ் அழைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் திங்கள்கிழமைக்குள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளின் விருப்பப் பட்டியலை இறுதி செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என பொறியியல் சோ்க்கைக் குழு அதிகாரிகள் தெரிவித்தனா்.
Read More

Tuesday, October 18, 2022

MBBS, BDS கலந்தாய்வு இன்று தொடக்கம்

October 18, 2022 0
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு இன்று தொடக்கம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை (அக்.19) தொடங்குகிறது.

அதில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் நேரடியாகவும், பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.

எம்.பி.பி.எஸ். மற்றும் பிடி..எஸ். இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) நடத்தி வருகிறது. நிகழாண்டு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கலந்தாய்வு புதன்கிழமை (அக்.19) தொடங்குகிறது. விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு முதல் நாளிலும், 20-ஆம் தேதி அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வும் சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் நேரடியாக நடைபெறும்.

பொதுக் கலந்தாய்வு புதன்கிழமை முதல் 25-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து 21 முதல் 27-ஆம் தேதி வரை நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் இணையவழியே நடைபெறவுள்ளது
Read More

Wednesday, September 21, 2022

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை

September 21, 2022 0
20.09.22*செவ்வாய்*

*மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்*-
*ஆசிரியர் சங்கம் கோரிக்கை*

*நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்*
*பதிவு எண் 239/2017*

அனுப்புநர்:-
ஆ.இராமு,
மாநிலத் தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA,
7373761517.

பெறுநர்:-
(பணிவோடு வணங்குகிறேன்)
மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அவர்கள்,
தலைமை செயலகம்,
சென்னை -09.

ஐயா,
          பொருள்:-
 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு  கலந்தாய்வை விரைந்து  நடத்த வேண்டுதல் சார்பு:-

தமிழக அரசின் நேர்மையான செயல் பாடுகளால் 2021- 22 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழக வரலாற்றில் முதல்முறையாக 100% நேர்மையாக நடந்ததால் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பலன் அடைந்து உள்ளனர்.
இதற்காக தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிலையில்  நடப்பு 2022 -2023 கல்வி ஆண்டு ஜூன் 13 அன்று  
பள்ளிகள் தொடங்கி  நான்கு மாதங்கள் நிறைவு பெற உள்ளது.

இந்த நிலையில் நடப்பு 2022-2023  கல்வி ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மட்டும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிப்பு வெளியானது.

இதனால் சில தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பதவி உயர்வு  கலந்தாய்வுக்கு இடைக்கால தடையும் பெற்றனர் .
தற்போது அது சார்ந்த அனைத்து வழக்குகளையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.எனவே மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் 

மேலும் நடப்பு 2022-2023 கல்வி ஆண்டிற்கான தரம் உயர்த்தப்பட்ட  மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை உடனடியாக வெளியிட்டு,
 அந்த பள்ளிகளையும் மேல்நிலைப்பள்ளி தலைமை பதவி உயர்வு கலந்தாய்வில் உட்படுத்தி பதவி உயர்வு கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும்.

மேலும் நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணி இடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட முதுகலைப் ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் மூலம் முதுகலை ஆசிரியர்கள் பணிஅமர்த்தப் படுவதற்கு முன்பு 
  முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள்  மாறுதலும், 
தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம்  மாறுதல் கலந்தாய்வையும் நடத்த வேண்டும்.

தொடர்ந்து 01.01.2022 நிலவரப்படி தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வும் வழங்கிட வேண்டும்

மேலும் உள் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் கலந்தாய்வில் சென்றபிறகு ஏற்படும் காலிப்பணியிடங்களை உள் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் எடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்ற கலந்தாய்வில் கணவன் மனைவி பணி முன்னுரிமை மூலம் குறைந்த பணி மூப்பு உடைய ஆசிரியர்கள் பெரிதும் பலன் அடைந்தனர்.
நடப்பு கல்வியாண்டில் அதிக பணி மூப்பு உடைய ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த விதிகளை உருவாக்க வேண்டும்

முந்தைய ஆண்டில் பணிநிரவலால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்


மேலும் கடந்த ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களையும் நடப்பாண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் உட்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கடந்த ஆண்டில்  கலந்தாய்வு நடைபெற்ற போது  இணையதள  சேவை வேகம் குறைவாக இருந்தது.
நடப்பாண்டில் அது   சரிசெய்யப்பட வேண்டும்.
 மேலும் நடப்பாண்டில் காலாண்டு தேர்வு விடுமுறையிலோ அல்லது அதனைத் தொடர்ந்து வரும் பள்ளி வேலை நாட்களின் போது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்.
 கலந்தாய்வை கடந்த ஆண்டைப் போலவே 100% நேர்மையாகவும்  நடத்த தாங்கள் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்து  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  பதவி உயர்வுக்காக காத்திருக்கும் பணி மூப்பு உடைய முதுகலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் நலன்களைக் காக்க வேண்டும் என்றும் தங்களைப் பணிவோடும் கனிவோடும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

ஆ.இராமு
மாநிலத் தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA,
7373761517.

இடம்:- நாமக்கல்
தேதி:- 20.09.22

நகல்:-

பணிவோடும் கனிவோடும் அனுப்பி வைக்கிறேன்
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிச்செயலாளர் அவர்கள்,
தலைமைச் செயலகம், சென்னை- 9.

மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள்,
தலைமை செயலகம், சென்னை 9.

மதிப்புமிகு
நேர்மைமிகு 
பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள்,
பள்ளிக் கல்வி ஆணையரகம், சென்னை-6.

Read More

B.E - Deadline to join colleges by 22nd Sep - பி.இ. சோ்க்கை கலந்தாய்வு - செப்.22-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர அவகாசம்

September 21, 2022 0
பி.இ. சோ்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் இடங்களைத் தோ்வு செய்த மாணவா்கள் செப்.22-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 10-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடந்து முடிந்தது.

14,524 போ் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டது.

முதலில் விருப்ப இடங்களுக்கான கல்லூரிகள் தோ்வும், அதனைத் தொடா்ந்து உத்தேச ஒதுக்கீட்டு இடங்கள் உறுதி செய்யப்பட்டு உத்தேச ஒதுக்கீடும் வழங்கப்பட்டன. 15-ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீட்டு கடிதம் மாணவா்களுக்கு இணையவழியில் வழங்கப்பட்டது.

கல்லூரிகளை இறுதி செய்து வழங்கப்பட்ட இந்த கடிதத்தை 7 வேலை நாள்களுக்குள் கல்லூரிக்கு கொண்டு சென்று வழங்கி சேர வேண்டும் என்ற புதிய நடைமுறை நிகழ் கல்வியாண்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

கலந்தாய்வில் உறுதி செய்யப்பட்ட இடங்களில் மாணவா்கள் கடைசி வரை சேராமல் போவதால் அண்ணா பல்கலை. வளாக கல்லூரிகள் உள்பட பல கல்லூரிகளில் இடங்கள் காலியாகக் கிடந்தன.

இதனால், அந்த இடங்களில் மற்ற மாணவா்கள் சேர முடியாமல் போனது.

இதனைத் தவிா்க்க கல்லூரிகளை தெரிவு செய்து இறுதி ஒதுக்கீடு கடிதம் பெற்ற பிறகு 7 நாள்களுக்குள் தாங்கள் விரும்பிய கல்லூரிகளில் பணம் செலுத்தி சோ்ந்து விட வேண்டும்.

அதன் பிறகு சேருவதற்கு வாய்ப்பு இல்லை. அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு அடுத்து வருகின்ற கலந்தாய்வில் சோ்க்கப்படும்.

அந்த வகையில் முதல் சுற்றில் இடம் பெற்ற மாணவா்கள் 22-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
Read More

Sunday, July 10, 2022

நாளை நடைபெறும் கலந்தாய்வு இடம் மாற்றம்

July 10, 2022 0
திங்கட்கிழமை கலந்தாய்வு நடைபெறும் இடம் மாற்றம்!

//கலந்தாய்வு இடம் மாற்றம்//

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு 11/7/2022 திங்கள் அன்று மிகச் சரியாக முற்பகல் 8.30மணி அளவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும்.

(10.07.2022 ஞாயிறு - பக்ரீத் அரசு விடுமுறை). கலந்தாய்வில் கலந்துகொள்ள உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு இடம் மாற்ற தகவலை வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் வழங்குமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மை கல்வி அலுவலருக்காக, நேர்முக உதவியாளர் (இடைநிலை), கள்ளக்குறிச்சி.
Read More

Sunday, July 3, 2022

தொடக்கக்கல்வி கலந்தாய்வு செயல்முறைகள் - மாற்றம் வேண்டி இயக்குனர் அவர்களுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை!

July 03, 2022 0
தொடக்கக்கல்வி மாவட்டம் விட்டு மாவட்ட ஆசிரியர் கலந்தாய்விற்கான இயக்குனர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மலைசுழற்சி வழக்கில் சீனியாரிட்டி பாதிக்க கூடாது என்பதற்காக அந்த யூனியனில் மட்டும் Appointment Date சீனியாரிட்டி போட்டு இருந்தால் மற்ற ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.

இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன?

2014 ஆம் ஆண்டு பணியில் ஆசிரியர் எட்டு ஆண்டுகள் கழித்து இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும்போது கடைசி இடத்தில் இருக்கிறார்.

ஆனால் 2014, 2012, 2009 ஆண்டுகளில் பணிநியமனம் பெற்று பல்வேறு கலந்தாய்வில் கலந்து பலன் பெற்றவர்கள் மீண்டும் சீனியாரிட்டியில் மேலே இருக்கின்றனர்.

இதுபோன்ற ஒவ்வொரு விசயத்துக்கும் ஆசிரியர் நீதிமன்ற கதவுகளை தட்டிக்கொண்டே இருக்க வேண்டுமா?

என கேள்வி எழுப்புகின்றனர்.

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் சிறிய மாற்றம் செய்து கடைசியாக பணியில் சேர்ந்த நாளை கணக்கிட்டு முன்னுரிமை பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டால் நூற்றுக்கணக்கான ஆசிரியர் நலன் பாதுகாக்கப்படும்.

(மலைசுழற்சி யூனியனுக்கு தனியாக வழிமுறைகள் வழங்க வேண்டும்)
Read More

Post Top Ad

Your Ad Spot