KalviseithiDaily: NEET EXAM

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label NEET EXAM. Show all posts
Showing posts with label NEET EXAM. Show all posts

Sunday, January 22, 2023

நீட் விலக்கு மசோதா: மத்திய அரசுக்கு ஓரிரு வாரங்களில் பதில்: அமைச்சா் தகவல்

January 22, 2023 0
NEET Exemption Bill: Reply to Central Govt in a couple of weeks: Ministry Information நீட் விலக்கு மசோதா: மத்திய அரசுக்கு ஓரிரு வாரங்களில் பதில்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கங்களுக்கு ஓரிரு வாரங்களில் பதில் அனுப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.230 கோடியில், சுமாா் 4.9 ஏக்கா் நிலப்பரப்பில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. பணிகளை ஜூன் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 209 கி.மீ. நீளத்துக்கு ரூ.699 கோடி மதிப்பிலான மழைநீா் வடிகால்வாய்கள் கட்டுவதற்கு பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. அதில், 161 கிலோ மீட்டா் நீளத்துக்கான மழை நீா் வடிகால்வாய்கள் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. அதனால் சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீரால் பாதிப்பு என்பது எங்கேயும் இல்லாத நிலை ஏற்பட்டது.

இப்போது 48 கி.மீ. நீளத்துக்கு சென்னை மாநகராட்சி சாா்பில், மழைநீா் வடிகால்வாய்கள் கட்டமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வடகிழக்கு பருவமழையைத் தொடா்ந்து, சென்னையில் சாலைகள் சீரமைக்கும் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. சாலைகளை சீரமைக்கும் பணிகள் இன்னும் 4 மாதங்களுக்குள் முடிவடையும்.

நீட் தோ்வு விலக்கு மசோதா தொடா்பாக ஆயுஷ் அமைச்சகத்திலிருந்து ஒரு சில விளக்கங்கள் கேட்டு கடிதம் வந்திருக்கிறது. அந்த கடிதத்துக்கு பதில் அனுப்பும் முயற்சியை சட்டத் துறை மேற்கொண்டிருக்கிறது. சட்ட வல்லுநா்களுடன் கலந்து பேசி இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு பதில் அனுப்பப்படவுள்ளது. தமிழகத்தில் தற்போது டெங்கு பாதிப்பு இல்லை என்றாா் அவா்.
Read More

Saturday, September 17, 2022

NEET answer sheet - நீட் தேர்வு விடைத்தாளை பார்க்க மாணவிக்கு அனுமதி

September 17, 2022 0

நீட் தேர்வு எழுதி குறைவான மதிப்பெண் கிடைத்த மாணவி விடைத்தாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உயர் நீதிமன்றக் கிளை அனுமதி அளித்துள்ளது.



மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெயசித்ரா நீட் தேர்வின் ஓஎம்ஆர் சீட்டை நேரில் ஆய்வு செய்ய அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நீட் தேர்வில் 200 கேள்விகளுக்கு 141 கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதி இருப்பதாக மாணவி ஜெயசித்ரா தெரிவித்தார்.



தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த ஓஎம்ஆர் சீட்டில் எனக்கு 720-க்கு 564 மதிப்பெண் என இருந்தது. ஆனால் நீட் தேர்வு முடிவுகளில் எனக்கு 114 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாகக் கூறி மாணவி ஜெயசித்ரா வழக்கு தொடர்ந்தார்.



மனுவை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன் நீட் விடைத்தாளை நேரில் பார்க்க மாணவிக்கு அனுமதியளித்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Read More

Sunday, September 11, 2022

நீட் தேர்வில் 7.5% இடஒதுக்கீட்டில் மாநிலத்தில் முதல் மாணவியாக வந்த பிருந்தா

September 11, 2022 0
கடந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால்,வளவனூர் அரசு மாதிரி பள்ளி மாணவர்களில்12 பேர் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது - விசிக எம்பி

விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் அமைந்திருக்கும் அரசு மாதிரி பள்ளி மாணவர்களில் 12 பேருக்கு நீட் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டது. நடப்பாண்டில் தமிழ்நாட்டிலிருந்து 1,32,167 மாணவர்கள் நீட் தேர்வு தேர்வெழுதிய நிலையில், 51.20% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இதில், குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருப்பதாகவும், மருத்துவ சேர்க்கைக்கு போதிய மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை வெறும் 3 என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், நீட் தேர்வில் 7.5 சதவீத முன்னுரிமை இடங்களில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற பிருந்தா என்ற மாணவியை விசிக எம்பி ரவிக்குமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் குறிப்பில், "விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் அமைந்திருக்கும் அரசு மாதிரி பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 78 மாணவர்களில் 54 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், கடந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால் அதில் 12 பேர் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் கூறிய அவர், இந்தப் பள்ளியில்’ பயின்ற பிருந்தா என்ற மாணவி நீட் தேர்வில் 467 மதிப்பெண்கள் பெற்று 7.5 சதவீத முன்னுரிமை இடங்களில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த பள்ளியில் இருந்து மட்டும் 9 மாணவர்கள் 7.5 முன்னுரிமை இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

7.5% ஒதுக்கீட்டில் மாநிலத்தின் முதல் மாணவியாக வந்த பிருந்தா மற்றும் சக மாணவர்களை நேரில் சந்தித்து பாராட்டுகளைத் தெரிவித்த அவர், மாணவர்கள் அமர்வதற்கு பெஞ்ச் மற்றும் மேசைகள் வழங்குவதாக அறிவித்தார்
Read More

Saturday, September 10, 2022

நீட் தேர்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் மாஸ் காட்டிய அரசு பள்ளி மாணவர்கள்..

September 10, 2022 0
Ramanathapuram NEET Result 2022 : ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளே பெரும்பாலும் நீட் தேர்வில் தகுதியில் வெற்றி பெற்று மாஸ் காட்டியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளே பெரும்பாலும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மாஸ் காட்டியுள்ளனர். தற்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் மீது தனியார் பள்ளிகளின் படித்த பெற்றோர்களின் பார்வை திரும்பியுள்ளது.

மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (NEET exam) கடந்த ஜூலை 17-ந்தேதி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 75 மாணவர்கள், 203 மாணவிகள், அரசு உதவி பெறும் பள்ளிளைச் சேர்ந்த 13 மாணவர்கள், 50 மாணவிகள், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவர்கள், 13 மாணவிகள் என 357 பேர் தேர்வு எழுதினர்.

இதன் முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி இரவு 11.30 மணியளவில் வெளியிடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்த அளவில் நீட் தேர்வில் 93 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து 108 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த 24 மாணவர்களும், 51 மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 4 மாணவர்களும், 20 மாணவிகளும், மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 3 மாணவர்களும், 6 மாணவிகளும் என 108 பேர் தகுதி பெற்றுள்ளனர்

முதல் 15 இடங்கள்:

பரமக்குடி அரசு பள்ளி மாணவர் சீனிவாசன் 371, மாணவி பிரபாவதி 334, ஆர்.எஸ். மங்கலம் மாணவி அபி செல்வம் 298, ஆர்.காவனூர் மாணவி பவானி 286, வண்ணாங்குண்டு மாணவி திரிஷா 228, ஆர்.காவனூர் மாணவிகள் ஷர்மிளி 230, லத்திகா 213, ஏர்வாடி பள்ளி மாணவர் செந்தாமரை கண்ணன் 192, ஆர்.காவனூர் மாணவி பாரதி 189, சிக்கல் பள்ளி மாணவி காவ்யா 185, எமனேசுவரம் மாணவர் அச்சுதராமன் 176, ஆர்.காவனூர் மாணவி கார்த்திகை செல்வி 173, மாணவர் யுவராஜ் 166, மாணவி சோபிகா 164, உச்சிநத்தம் மாணவி சத்யபாமா 162 மதிப்பெண் எடுத்து மாவட்டத்தில் முதல் 15 இடங்களை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளே நீட் தேர்விலும் வெற்றி பெற்றிருப்பது தனியார் பள்ளிகளில் படிக்க வைத்த பெற்றோர்களை ஒரு நிமிடம் திரும்பி பார்க்க வைத்துள்ளது எனலாம்.
Read More

Friday, September 9, 2022

நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதித்த விழுப்புரம் மாணவி

September 09, 2022 0
Brinda, a student of Villupuram, has secured 467 marks in Tamil Nadu level in NEET examination with 7.5 percent quota. He studied twelfth standard at Valavanur Undu Boarding School near Villupuram and scored 593 out of 600 with 200 out of 200 in four subjects. In this case, Brenda has scored 467 marks in NEET as well. It ranks first in the 7.5% reservation category studying in government schools.

When the student's father died in a road accident 9 years ago, her mother worked in a milk shop and educated her children. Currently studying in a government school and scoring 467 in the NEET exam, the student who has secured the first place in Tamil Nadu with 7.5% seats is being praised by the teachers and the people of the area.

Similarly, a student named Sundarajan who scored 576 marks in twelfth standard at Chrompet Government School in Chennai has scored 503 marks in his first attempt in the NEET exam.

As his father was an employee of a private company, he mostly studied in the thatched hut on the upper floor of the house. Sundarajan says that even when he went to the NEET class, he was not taught properly, so he stopped and studied by himself because he was told to memorize.
தமிழக அளவில் நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 467 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார் விழுப்புரம் மாணவி பிருந்தா. விழுப்புரம் அடுத்த வளவனூர் உண்டு உறைவிடப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து நான்கு பாடத்தில் 200 க்கு 200 எடுத்து 600 க்கு 593 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். இந்நிலையில் தற்போது நீட் தேர்விலும் 467 மதிப்பெண் பெற்றுள்ளார் பிருந்தா. இது அரசு பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீடு பிரிவில் முதலிடம் ஆகும்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் மாணவியின் தந்தை இறந்த நிலையில், இவரின் தாயார் பால் கடையில் வேலை செய்து பிள்ளைகளை படிக்க வைத்துள்ளார். தற்போது அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் 467 மதிப்பெண் பெற்று 7. 5 சதவீத இட ஒதுக்கீட்டில் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ள மாணவியை ஆசிரியர்களும் அப்பகுதி மக்களும் பாராட்டிவருகின்றனர்.

இதேபோல் சென்னை அடுத்த குரோம்பேட்டை அரசுப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து 576 மதிப்பெண்கள் எடுத்த சுந்தராஜன் எனும் மாணவர் நீட் தேர்வு எழுதி முதல் முயற்சியிலேயே 503 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

இவரின் தந்தை தனியார் நிறுவன ஊழியராக உள்ள நிலையில் வீட்டின் மாடியில் உள்ள ஓலை குடிசையில் தான் பெரும்பாலும் படித்துள்ளார். நீட் வகுப்பிற்கு சென்ற நிலையில் அங்கும் சரியாக சொல்லி தரவில்லை என கூறும் சுந்தராஜன், மனப்பாடம் செய்ய கூறியதால் நின்று விட்டு தானே தனியாக படித்துள்ளார்.
Read More

Friday, July 15, 2022

நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

July 15, 2022 0
நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மாணவி, தோல்வி பயத்தில் தற்கொலை, காவல்துறையினர் விசாரணை

அரியலூரில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை

*கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், போலீசார் விசாரணை.
Read More

Tuesday, July 12, 2022

NEET தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் கவனத்திற்கு!

Thursday, July 7, 2022

நீட் தேர்வில் கவனம் – தாய் மொழியில் தோல்வி - டி.ஜி.பி சைலேந்திரபாப

July 07, 2022 0


நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு வேதனை தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகள் பத்து மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனை வழங்கும் கருத்தரங்கம் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு, தனக்கு மருத்துவம் படிப்பதில் ஆர்வம் இருந்ததாகவும், தற்போதைய நீட்தேர்வு போன்று அப்போது நடைபெற்ற நேர்முகத் தேர்வில் தோல்வியடைந்ததால் தனக்கு மருத்துவம் கற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் உயர் படிப்புகளுக்கு செல்ல நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்துவதால், தாய் மொழியான தமிழ் மொழியில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து இருப்பதாக வேதனை தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ் கற்றுதருவதற்கான கல்வி மைய்யங்கள் அதிகரிக்கும் என்றார். மாணவர்கள் கற்றலில் ஆர்வம் செலுத்தி படித்து வந்தால் எந்த படிப்பை படித்தாலும் திறமையான ஆற்றலை வளர்த்துக் கொண்டு மிக மிக உயர்ந்த ஊதியத்தில், பெரிய நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை பெற முடியும் என சைலேந்திரபாபு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர். – இரா.நம்பிராஜன்
Read More

Friday, July 1, 2022

நீட் எதிர்ப்பு பேச்சால் மாணவர்களை திசை திருப்ப கூடாது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

July 01, 2022 0
நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் ரீதியான கருத்துகளை பேசி மாணவர்களை திசை திருப்ப வேண்டாம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

தமாகா இளைஞர் அணி சார்பில் ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச கையேடு வழங்கும் நிகழ்ச்சி,சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நேற்று நடந்தது.

மாணவர்களுக்கு இலவச கையேடுகளை கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், வழங்கினார். நிகழ்ச்சியில் தமாகா மாநிலஇளைஞர் அணி தலைவர் யுவராஜா, மாநிலபொதுச் செயலாளர்கள் விடியல் சேகர்,சக்தி வடிவேல் மற்றும் மாவட்ட இளைஞர் அணி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் ஜி.கே.வாசன் பேசியதாவது: நீட் தேர்வு மூலம் மாணவர்களின் கல்வித்தரம், வெளிப்படைத் தன்மை உயர வாய்ப்பு உருவாகிறது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளை கடந்து, நீட் தேர்வு மூலம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். அரசும், தனியாரும் மருத்துவக் கல்வியை வியாபார நோக்கத்துடன் பார்க்கும் தவறான கண்ணோட்டம், நீட் தேர்வால் பலிக்காமல் போகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துகொண்டு இருக்கிறது. எனவே, அரசியல்ரீதியாக நீட் தேர்வுக்கு எதிரான கருத்துகளை பேசி மாணவர்களை திசை திருப்பி முடக்கிவிடவேண்டாம். மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி லாபத்துக்காக மாணவர்களை ஏமாற்றாமல், அவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாநில அரசின் பாடத் திட்டங்களை தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இளைஞர் அணி தலைவர் யுவராஜா பேசும்போது, ‘‘தமிழகம் முழுவதும் டாக்டராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் மாணவர்களிடம் இந்த கையேட்டை கொண்டு சேர்ப்போம். நீட் தேர்வு நல்லதா,கெட்டதா என்று மாணவர்கள் சிந்திக்க வேண்டாம். ஏனென்றால், அது தேர்வு நேரத்தில் உங்களை பாதிக்கும். அடுத்தகட்டமாக தருமபுரியில் இதேபோன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

இதையடுத்து, இளைஞர் அணி மாநிலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பெண்கள் பாதுகாப்புக்கான சட்டம், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம், பூரண மதுவிலக்கு, அக்னி பாதை திட்டத்துக்கு வரவேற்பு, விவசாயிகள் தொலைநோக்குதிட்டம் ஆகியவற்றை நிறைவேற்றவேண்டும் என்பது உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Read More

Saturday, June 18, 2022

'நீட்' தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்

June 18, 2022 0
கடலுார் மாவட்டத்தில், நடப்பாண்டு 'நீட்' தேர்விற்கு, அரசு சார்பில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யாததால், தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழகத்தில், 2017ம் ஆண்டு முதல் 'நீட்' தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த தேர்வுக்கு தயாராவதற்காக, 2017ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அதற்கென அமைக்கப்பட்ட மையங்களில், விடுமுறை தினங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி கடலுார் மாவட்டத்தில் 14 மையங்களில் பயிற்சி நடத்தப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு ஆன்லைன் மூலம் விண்ணபித்து, ஆன்லைன் மூலமாகவே பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அப்போது, கடலுார் மாவட்டத்தில் 500 மாணவ, மாணவியர் விண்ணப்பித்து, பயிற்சியில் பங்கேற்றனர்.

அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடாக 7.5 சதவீதம் வழங்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.அந்த வகையில், கடலுார் மாவட்டத்தில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் அரசுப்பள்ளியில் படித்தோருக்கு, கடந்த ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்காக 26 பேருக்கு கல்வித்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இவர்களில் 24 பேர் அரசின் இலவச நீட் பயிற்சி பெற்றவர்கள்.

இதன் காரணமாக, மாணவ மாணவியரிடையே நீட் பயிற்சி மீதான ஆர்வம் அதிகரித்து, கடலுார் மாவட்டத்தில் நீட் பயிற்சியில் சேர, தற்போது கூடுதலானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுகள் முடிந்துவிட்டன. ஆனால் பயிற்சி வகுப்பு குறித்த எந்த அறிவிப்பையும் கல்வித்துறை அறிவிக்கவில்லை. வரும் ஜூலை 17ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில், அதற்கு தயாராக முடியாமல் கடலுார் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.தமிழகத்தில் ஆளும் தி.மு.க., அரசு 'நீட்' தேர்வுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் மாணவ மாணவியர்களின் பயிற்சி வகுப்பு பற்றி வாய்திறக்காமல் உள்ளது. ஒரு மாத காலம் தீவிர பயிற்சிகள் வழங்கினால், அதிக மாணவர்கள், 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும். ஆனால், மாவட்டம் முழுவதும் பயிற்சி மையங்கள் அமைத்து, சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வழங்கினால், கடந்த ஆண்டுகளை போல் அதிக அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவர். அத்துடன், அவர்களுக்காக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைக்கும்.ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், அரசு சார்பில் நீட் தேர்வுக்கான பயி்ற்சி குறித்து இதுவரையில் எந்த அறிவிப்பும் வரவில்லை.

தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி, தனியார் பயிற்சி மையங்களில் படிக்கின்றனர். வசதியில்லாத அரசு பள்ளியில் படித்த மணவர்கள் பயிற்சி பெற முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தும், மருத்துவ படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
Read More

Saturday, May 28, 2022

'நீட்' எழுத விண்ணப்பித்தவர்கள் 1.42 லட்சம் பேர்; ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு

May 28, 2022 0
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, தமிழகத்தில் 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது; கடந்த ஆண்டை விட, 32 ஆயிரம் பேர் அதிகம். ஆண்டுக்கு ஆண்டு, 'நீட்' தேர்வு எழுத விரும்பும் மாணவ - மாணவியர் அதிகரித்து வருகின்றனர்.

மருத்துவ படிப்புகளில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான 'நீட்' தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இந்த ஆண்டுக்கான இளநிலை படிப்புக்கான நீட் தேர்வு, ஜூலை 17ல் நாடு முழுதும் நடக்கிறது. இதற்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்., 6ல் துவங்கி, மே 20ல் முடிந்தது. இட ஒதுக்கீடு

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டு தேர்வு எழுத, நாடு முழுதும் இருந்து, 18.72 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில், 10.64 லட்சம் பேர் மாணவியர். மேலும், 12 மூன்றாம் பாலினத்தவரும், 8.07 லட்சம் மாணவர்களும் தேர்வு எழுத முன்வந்துள்ளனர். அதோடு, 771 வெளிநாட்டினர், 910 வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் 647 இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டினரும் விண்ணப்பித்துள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டு பிரிவில், 1.29 லட்சம்; இட ஒதுக்கீடு அல்லாத பொது பிரிவில், 5.68 லட்சம்; மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 7.86 லட்சம்; பட்டியலினத்தவர்,2.67 லட்சம்; பழங்குடியினர், 1.13 லட்சம் மற்றும் மாற்றுத் திறனாளிகள், 6,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். 6 மாநிலங்களில் அதிகம்

நாட்டில் அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில்,2.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உ.பி.,யில், 2.10 லட்சம்; கர்நாடகா, 1.30; கேரளா, 1.20; ராஜஸ்தான், 1.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.மொத்த விண்ணப்பங்களில், தமிழகம் உட்பட மேற்கண்ட ஆறு மாநிலங்களின் பங்கு, 55 சதவீதம்.கடந்த ஆண்டு தமிழகத்தில், 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; அவர்களில், 1.08 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு, 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது, கடந்த ஆண்டை விட, 32 ஆயிரம் அதிகம்.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து மட்டும், 13 ஆயிரத்து, 500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.கடந்த ஆண்டில், 12 ஆயிரம் பேர் என்றிருந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக, 1,500 பேர் தேர்வு எழுத தயாராகி வருகின்றனர். ஆண்டுதோறும் அதிகரிப்பு

ஐந்து ஆண்டுகளாக, நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது, 2017ல், 11.4 லட்சமாக இருந்த எண்ணிக்கை, ஐந்து ஆண்டு களில் படிப்படியாக உயர்ந்து, இந்த ஆண்டு, 18.72 லட்சமாக உயர்ந்துள்ளது.கடந்த 2018ம் ஆண்டு, 13.23 லட்சம்; 2019ல், 15.19 லட்சம்; 2020ல், 16 லட்சம் மற்றும் 2021ல், 16.14 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 2.58 லட்சம் பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களில், 15.44 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில், 8.70 லட்சம் பேர் தேர்ச்சி மதிப்பெண் பெற்றனர்.இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஓமியோபதி ஆகிய படிப்புகளுடன், பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் சேரவும், நீட் தேர்வு கட்டாயம். நாடு முழுதும் மொத்தம், 91 ஆயிரம்எம்.பி.பி.எஸ்., இடங்கள், 27 ஆயிரம் பி.டி.எஸ்., எனும் பல் மருத்துவம் படிப்பு இடங்கள் மற்றும் 51 ஆயிரம் 'ஆயுஷ்' படிப்பு இடங்களுக்கு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
தமிழ் வழியில் ஆர்வம்!

மொத்தம், 13 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. பெரும்பாலானோர், ஆங்கில வழியில் தேர்வு எழுத உள்ளனர். இரண்டாவதாக, ஹிந்தி மொழியில் தேர்வு எழுத, 2.5 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழ் மொழியில் தேர்வு எழுத, 32 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு, 20 ஆயிரம் பேர் தமிழ் வழியில் தேர்வு எழுத முன்வந்த நிலையில், இந்த ஆண்டு, 12 ஆயிரம் பேர் கூடுதலாக விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில், அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, தனியார் பள்ளி மாணவர்களும் அடங்குவர்.
Read More

Thursday, May 26, 2022

அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு படிக்க உண்டு உறைவிட பயிற்சி முகாம் துவக்கம்

May 26, 2022 0
பூந்தமல்லி வட்டம், நசரத்பேட்டை எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மருத்துவம் சார்ந்த நுழைவுத் தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட இலவச உண்டு, உறைவிட பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது. முகாமிற்கு எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி தலைவர் கே.ராமதாஸ், பொருளாளர் எஸ்.சுரேஷ்பாபு, வட்டாட்சியர் ஆர்.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம், ஆவடி மாவட்ட கல்வி அலுவலர் ஆ.ராதாகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ந.பூபால முருகன் ஆகியோர் வரவேற்றனர். முகாமை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, மாணவ, மாணவியர்களோடு கலந்துரையாடி, ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது : திருவள்ளுர் மாவட்டத்தில் 200 அரசு பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களை தேர்வு செய்து, 50 நாட்கள் நீட் தேர்வுக்கான உண்டு, உறைவிட பயிற்சி முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருடம் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்கள் மட்டுமல்லாமல், கடந்த வருடம் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் தேர்வில் வெற்றி பெற கடினமாக உழைக்கும் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக ஒரு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 50 நாட்கள் பயிற்சியில் உங்களது முழு கவனமும் இருக்க வேண்டும். உங்களுக்கு கூடுதல் நன்மைகள் உள்ளது. அதாவது, மாநிலத்திலேயே புகழ்பெற்ற ஆசிரியர்கள் உங்களுக்கு இந்த 50 நாட்கள் பயிற்சி எடுக்கின்றனர். நாள்தோறும் குறிப்பிட்ட தலைப்புகளில் கொண்ட பாடங்களை எடுப்பார்கள். அதற்கான தேர்வுகளையும் நடத்துவார்கள். அன்றன்றைக்கு சொல்லிக்கொடுக்கும் பாடத்திட்டங்களை முழு கவனத்துடன் ஈடுபட்டு படித்து, அடுத்த நாள் முழு அர்ப்பணிப்புடன் தேர்வு எழுத வேண்டும். கடந்த வருடத்தில் எளிய முறையில் அரசு மருத்துவமனைகளில் சிட் கிடைத்துள்ளது. இந்த வருடமும் நல்ல முறையில் சீட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நாமும் அதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த இனிய வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Read More

Tuesday, May 10, 2022

Extending the Last Date for Registration for NEET UG 2022 – Reg

May 10, 2022 1
Extending the Last Date for Registration for National Eligibility-cum-Entrance Test [(NEET (UG)] 2022 – Reg.

In continuation of Public Notice dated: 01 May 2022 and with reference to the letter no. File No. 3-5/2022/NCH/HEE/UG-PG, dated: 29 April 2022 received from National Commission for Homoepathy, Minstry of Ayush, Government of India and as per the NCH Act, 2020 (Section 14 (2)) there shall be a uniform NEET (UG) Examination for admission to Undergraduate courses in all medical institutions including Ayush Medical College.

Registration for the NEET (UG) – 2022 is in progress.

In view of the above, the last date for receiving Online Applications for the National Eligibilitycum Entrance Test (UG) – 2022 for all the candidates has been extended. The details of the same are given below



CLICK HERE TO DOWNLOAD
Read More

Monday, May 2, 2022

நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

May 02, 2022 0
நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் மே 15ஆம் தேதி வரை நீட்டிப்பு

-தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வுக்கு மே 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மேலும் நீட்டிப்பு.
Read More

Sunday, April 24, 2022

'நீட்' விதிவிலக்கு கேட்பது அவமானம் : முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேச்சு

April 24, 2022 0
'' Don't choose Neat; It is a shame to ask for an exception, '' said Anna University former vice chancellor Balakurusamy.

Speaking at a private school function in Tiruppur yesterday, former Anna University Vice Chancellor Balakurusamy said:

Parents have the first duty to raise the student to be disciplined. Parents are responsible for being at home half the time and at home the rest of the time. The events that are happening in the school today, are disgusting. We need to make the younger generation more disciplined.

Don’t ‘Need’ to give good quality education and stop preparing the student; It is a shame to ask for an exception. No other state in India has said no to ‘Need’; There is no point in memorizing and buying marks. Only with a little understanding can knowledge grow. Only education can create change.

Thus he spoke. ''நீட் தேர்வு வேண்டாம்; விதிவிலக்கு வேண்டும் என கேட்பது அவமானம்,'' என்று அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறினார்.

திருப்பூரில் நேற்று நடந்த தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசியதாவது:

மாணவரை ஒழுக்கமானவராக வளர்க்கும் முதல் கடமை பெற்றோருக்கு உண்டு. பள்ளியில் பாதிநேரம், மீதி நேரம் வீட்டிலும் இருப்பதால், பெற்றோருக்கும் பொறுப்பு உண்டு. இன்றைய காலகட்டத்தில் பள்ளியில் நடப்பதாக வரும் நிகழ்வுகள், வெறுக்கத்தக்கவையாக இருக்கின்றன. இளைய சமுதாயத்தினரை ஒழுக்கம் நிறைந்தவர்களாக மாற்ற வேண்டும்.

நல்ல தரமான கல்வியை கொடுத்து, மாணவரை தயார்படுத்துவதை விட்டுவிட்டு 'நீட்' வேண்டாம்; விதிவிலக்கு வேண்டும் என கேட்பது அவமானம். இந்தியாவின் வேறு எந்த மாநிலமும் 'நீட்' வேண்டாம் என சொல்லவில்லை; மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கி பயனில்லை. கொஞ்சமாவது புரிந்து படித்தால் தான், அறிவு வளரும். கல்வியால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Read More

Friday, April 22, 2022

நீட் யு.ஜி., -2022 - விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 6

April 22, 2022 0
நீட் யு.ஜி., -2022

நாடு முழுவதிலும் உள்ள எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் இளநிலை மருத்துவ பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற அவசியம் எழுத வேண்டிய தேர்வு, நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் டெஸ்ட் - அண்டர் கிராஜுவேட்!

படிப்புகள்: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்., மற்றும் பி.எச்.எம்.எஸ்., 


கல்வி நிறுவனங்கள் மற்றும் இடங்கள்:

மாநில கல்வி நிறுவனங்கள், தேசிய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை &'நீட்’ அடிப்படையில் நடைபெறுகிறது. 


தேசிய இடஒதுக்கீட்டு இடங்கள், மாநில அரசு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர் இடங்கள் என இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களும்  &'நீட்’ தேர்வை அவசியம் எழுத வேண்டும்.


தேர்வு முறைகள்:

மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை நடத்தும் இத்தேர்விற்கு https://neet.nta.nic.in எனும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 


இயற்பியல் மற்றும் வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களில் தலா 45 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு பாடங்களிலும் இரண்டு ‘ஏ’, ‘பி’ என இரண்டு பிரிவுகள் இடம்பெறும். ‘ஏ’ பிரிவில் 35 கேள்விகளும் ‘பி’ பிரிவில் 15 கேள்விகளும் கேட்கப்படும். மாணவர்கள், 15 கேள்விகளில் ஏதேனும் 10 கேள்விகளுக்கு விடை அளித்தால் போதும்.


ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் கேட்கப்படும் 180 கேள்விகளுக்கு அதிகபட்சம் 720 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடைபெறுகிறது. அனைத்து கேள்விகளும் ‘மல்டிபிள் சாய்ஸ்’ வகையில் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் 


தேர்வு காலம்: 3.20 மணி நேரம்.


கேள்விகள் இடம் பெறும் மொழிகள்: ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமீஸ், பெங்காளி, குஜராத்தி, மலையாளம், கன்னடா, மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது, பஞ்சாபி ஆகிய 13 மொழிகளில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியை தேர்வு செய்துகொள்ளலாம்.


முக்கிய குறிப்பு: தேர்வு அறைக்குள் மொபைல் போன், கால்குலேட்டர், பேனா, பெல்ட், உணவு உட்பட பல்வேறு பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடை கட்டுப்பாடும் உண்டு. ஆகவே, மாணவர்கள் தேர்வு எழுத செல்வதற்கு முன் விதிமுறைகளை நன்கு அறிந்துகொள்வது அவசியம்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 6 


தேர்வு நடைபெறும் நாள்: ஜூலை 17


விபரங்களுக்கு: https://neet.nta.nic.in/

Read More

Monday, April 18, 2022

முதுகலை நீட் தேர்வை ஒத்திவைக்காவிட்டால், மருத்துவ பட்டங்களை திருப்பி அளிப்போம் : குடியரசு தலைவருக்கு 2,000 மருத்துவர்கள் கடிதம்!

April 18, 2022 0
Thousands of physicians have written to the President of the Republic, urging them to return their medical degrees if the postgraduate NEET exam is not postponed. NEED's examination for postgraduate medical studies was postponed last year due to cases related to corona and reservation. The examination was held in September last year and is currently under discussion. The consultation for the All India quota is scheduled to end on May 3 and will be held in the states thereafter. But doctors say they are at risk as the 2022 postgraduate NEED exam is set to take place on May 21st.

Doctors, who say it takes at least 2 months to prepare for the exam, have insisted that the exam be postponed. In a letter to the president, more than 2,000 doctors said they would return their medical degrees if the exam was not postponed. Doctors preparing for the postgraduate NEED exam have said that the U.S. government does not see their demand to serve as frontline staff during the Corona era.

முதுகலை நீட் தேர்வு

முதுகலை நீட் தேர்வை ஒத்திவைக்காவிட்டால் தங்கள் மருத்துவ பட்டங்களை திருப்பி அனுப்ப உள்ளதாக ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் கூட்டாக குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். கொரோனா மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் காரணமாக கடந்த ஆண்டு முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தள்ளி போனது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் தேர்வு நடைபெற்று தற்போது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் மே 3ம் தேதி முடிந்து அதன் பின்பே மாநிலங்களில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆனால் மே 21ம் தேதியே 2022ம் ஆண்டிற்கான முதுகலை நீட் தேர்வு நடைபெற உள்ளதால் தாங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவ பட்டங்களை திருப்ப அளிக்க முடிவு

தேர்விற்கு தயாராக குறைந்தது 2 மாதங்களாக வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள், தேர்வை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக 2000த்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் குடியரசு தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேர்வு ஒத்திவைக்கப்படாவிட்டால், தங்களது மருத்துவ பட்டங்களை திருப்ப அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றிய தங்களின் கோரிக்கையை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் முதுகலை நீட் தேர்விற்கு தயாராகும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Read More

Sunday, April 3, 2022

ஜூலை 17 ல் நீட் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி

April 03, 2022 1
Read More

Thursday, March 31, 2022

'நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓய மாட்டோம்': பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி..

March 31, 2022 0
நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மதுரை புதுநத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜனுடன் அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மருத்துவ கல்விக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு உள்பட எந்த நுழைவுத் தேர்வும் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. தி.மு.க தேர்தல் அறிக்கையிலும், இது குறிப்பிட்டிருந்தது. நீட் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஹைடெக் லேப் மூலமாக நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓய மாட்டோம் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், பள்ளிக்கூடங்களில் பாலியல் தொல்லை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Read More

Sunday, February 6, 2022

நீட் தேர்வை உணர்வு ரீதியில் அணுக வேண்டாம்: புள்ளி விபரங்களை பார்க்க

February 06, 2022 1
''தமிழகத்தில் நீட் தேர்வை ஆதரிப்போரை, தமிழின துரோகிகள் என்றும், நீட் தேர்வை எதிர்ப்போரை, தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்துகின்றனர்,'' என, காங்கிரஸ் -எம்.பி., கார்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டினார்.

நமது நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி: 'நீட்' தேர்வில், தமிழகத்திற்கு மட்டும் விலக்கு கேட்டு போராடி வருகின்றனர். நான், நீட் தேர்வை ஆதரிக்கிறேன்.நீட் தேர்வு பற்றி பேசுவதற்கு முன், அந்த தேர்வு இல்லாமல், மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் தேர்வான முறை பற்றிப் பார்க்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தான், மாணவர் சேர்க்கை நடந்தது.

அப்போது மருத்துவக் கல்லுாரியில் சேர, 1 சதவீதம் அளவுக்கு தான், கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதே நேரம், நீட் தேர்வுக்கு பின், அரசு பள்ளி களில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதனால், கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைத்து வருகிறது.

அதை 10 சதவீதமாக்கினால், கிராம மாணவர்களுக்கு, குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். அதை, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். குற்றச்சாட்டு

நீட் தேர்வே வேண்டாம் என்று சொல்வதில் அர்த்தமில்லை. ஆனால், தமிழகத்தில் இது ஒரு பெரும் விவாதமாக்கப்பட்டு விட்டதால், எல்லாவற்றையும் புள்ளி விபரங்களுடன் ஆராய்ந்து, ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

கல்வியாளர்களும், புள்ளியியல் நிபுணர்களும் அமர்ந்து, நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பின், தமிழகத்தில் எத்தனை கிராமப்புற மாணவர்கள், மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர்; நீட் தேர்வு வருவதற்கு முன், எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்பதை ஆராய வேண்டும்.அதன் பின், தெளிவான தீர்வை கண்டறிய வேண்டும்.

நீட் தேர்வால், மருத்துவக் கல்லுாரியில் சேரும் மாணவர்கள், தகுதி மிக்கவர்களாக உள்ளனர் என்ற வாதம் முன்வைக்கப்பட்டாலும், அந்த மாணவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பின், நீட் தேர்வுக்காக தனியாக 'கோச்சிங்' செல்ல வேண்டியுள்ளது. அதற்கு நிறைய செலவாகிறது என்பதையும் ஏற்கத் தான் வேண்டும். தனியார் கோச்சிங் சென்டர்களில் சேரும் வாய்ப்பு, கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கவில்லை; அதற்கான வசதி அவர்களுக்கு இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதுவும் ஏற்கத்தக்கது தான். அதே நேரம், நீட் தேர்வுக்கு முந்தைய நிலையிலேயே, மருத்துவக் கல்விக்கான சேர்க்கை நடத்துவதாக வைத்துக் கொண்டால் என்னாகும்?

பிளஸ் 2 மதிப்பெண் தான், மருத்துவக் கல்லுாரியில் சேரும் மாணவனின் தகுதியைதீர்மானிக்கும் என்ற நிலையில், ராசிபுரம், நாமக்கல் பள்ளிகளில் நடந்தது தான் நடக்கும்.காலை 4:00 மணிக்கு மாணவர்களை எழுப்பி விடுவர்; இரவு 12:00 மணி வரை தொடர்ச்சியாகபாடங்களை படிக்கச் சொல்வர்; மனப்பாடம் செய்யச் சொல்வர்.

மனப்பாடம் செய்ததை எல்லாம், திரும்ப திரும்ப எழுதச் சொல்வர். அதன் மேல் தேர்வும் வைப்பர். மாணவர்கள் மனப்பாடம் செய்து, அதை திருப்பி எழுதுவரே தவிர, எந்த பாடத்தையும் புரிந்து படிக்க மாட்டார்கள்.

இந்தக் குறைபாட்டை எப்படி நீக்குவது? அதற்காக தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது என்றதும், தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன், பாடத்திட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தனர்.

குழப்பங்கள்

அதன்பின், நீட் தேர்வில், தமிழக பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளும் அதிகம் இருந்தன. இதனாலும், தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகம் ஆனது. அதனால் தான், புள்ளி விபரங்களோடு எல்லா விஷயங்களையும் ஆய்வு செய்து, விவாதித்து, நல்ல முடிவுக்கு வர வேண்டும் என்கிறேன்.

ஒரு வேளை, தமிழக அரசு கேட்பது போல, தமிழகத்துக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம்.தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்று, மருத்துவம் பயில விரும்புவோர் நிலை என்னாகும்?

அப்போதும் கூட, நம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதித் தானே ஆக வேண்டும்? இப்படி பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. எனவே, நீட் தேர்வை புள்ளி விபரங்கள் அடிப்படையில் தான் அணுக வேண்டுமே தவிர, உணர்வு ரீதியில் அணுகக் கூடாது.இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.

- நமது நிருபர் --
Read More

Post Top Ad

Your Ad Spot