நீட் தேர்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் மாஸ் காட்டிய அரசு பள்ளி மாணவர்கள்..

Ramanathapuram NEET Result 2022 : ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளே பெரும்பாலும் நீட் தேர்வில் தகுதியில் வெற்றி பெற்று மாஸ் காட்டியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளே பெரும்பாலும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மாஸ் காட்டியுள்ளனர். தற்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் மீது தனியார் பள்ளிகளின் படித்த பெற்றோர்களின் பார்வை திரும்பியுள்ளது.

மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (NEET exam) கடந்த ஜூலை 17-ந்தேதி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 75 மாணவர்கள், 203 மாணவிகள், அரசு உதவி பெறும் பள்ளிளைச் சேர்ந்த 13 மாணவர்கள், 50 மாணவிகள், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவர்கள், 13 மாணவிகள் என 357 பேர் தேர்வு எழுதினர்.

இதன் முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி இரவு 11.30 மணியளவில் வெளியிடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்த அளவில் நீட் தேர்வில் 93 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து 108 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த 24 மாணவர்களும், 51 மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 4 மாணவர்களும், 20 மாணவிகளும், மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 3 மாணவர்களும், 6 மாணவிகளும் என 108 பேர் தகுதி பெற்றுள்ளனர்

முதல் 15 இடங்கள்:

பரமக்குடி அரசு பள்ளி மாணவர் சீனிவாசன் 371, மாணவி பிரபாவதி 334, ஆர்.எஸ். மங்கலம் மாணவி அபி செல்வம் 298, ஆர்.காவனூர் மாணவி பவானி 286, வண்ணாங்குண்டு மாணவி திரிஷா 228, ஆர்.காவனூர் மாணவிகள் ஷர்மிளி 230, லத்திகா 213, ஏர்வாடி பள்ளி மாணவர் செந்தாமரை கண்ணன் 192, ஆர்.காவனூர் மாணவி பாரதி 189, சிக்கல் பள்ளி மாணவி காவ்யா 185, எமனேசுவரம் மாணவர் அச்சுதராமன் 176, ஆர்.காவனூர் மாணவி கார்த்திகை செல்வி 173, மாணவர் யுவராஜ் 166, மாணவி சோபிகா 164, உச்சிநத்தம் மாணவி சத்யபாமா 162 மதிப்பெண் எடுத்து மாவட்டத்தில் முதல் 15 இடங்களை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளே நீட் தேர்விலும் வெற்றி பெற்றிருப்பது தனியார் பள்ளிகளில் படிக்க வைத்த பெற்றோர்களை ஒரு நிமிடம் திரும்பி பார்க்க வைத்துள்ளது எனலாம்.
Post a Comment (0)
Previous Post Next Post