மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நோட்டு, புத்தகம் வழங்க கோரிக்கை

பள்ளிகளில் மாணவர் களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புத்தகங்கள், நோட் டுக்கள், ஸ்கூல்பேக் உள்ளிட்ட இலவச பொருட்களை வழங்க வேண்டுமென ஆசிரியர் கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.


பள்ளிக் கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர் களுக்கு ஆண்டுதோறும் 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப் படுகிறது. நோட்டுக்கள் புத்தகங்கள், லேப்டாப், சீருடை, ஸ்கூல்பேக், காலணி, கலர்பென்சில்,பஸ்பாஸ் உள்ளிட்டவை அடங்கும். இவ்வாறு வழங்கப்படும் இலவச பொருட்கள் பெரும் பாலும், நடப்பாண்டு மாணவர்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப வழங்கப்படா மல், முந்தைய ஆண்டு மாணவர்களின் எண்ணிக் கையை வைத்தே வழங்கப் படுகிறது.


இதனால், மாணவர் களின் எண்ணிக்கை வேறு படுவதால், அனைத்து மாணவர்களுக்கும் இலவச பொருட்களை வழங்க முடிவதில்லை. நடப்பாண்டு அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை வழக் கத்தை விட அதிகளவு உயர்ந்துள்ளது. இந்நிலையில், கலர் பென்சில், கிரையன், காலணி, ஸ்கூல்பேக், கணித உபகரணப்பெட்டி உள்ளிட்ட இலவச பொருட்கள் அனைவருக் கும் வழங்க முடியாமல் ஆசிரியர்கள் சிரமப்படு கின்றனர்.


எனவே, நடப்பாண்டு மாணவர்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப இலவச பொருட்களை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டு மென ஆசிரியர்கள் வலியு றுத்துகின்றனர்.
Post a Comment (0)
Previous Post Next Post