KalviseithiDaily: DMK

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label DMK. Show all posts
Showing posts with label DMK. Show all posts

Thursday, July 14, 2022

வாக்குறுதிகள் ஒன்று கூட நிறைவேறவில்லை: அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர்

July 14, 2022 0
'மாவட்ட தலைநகரங்களில் ஜூலை 26ல் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக' தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு வழங்கும்போது மாநில அரசும் உயர்த்தி தருவதாக முதல்வர் அறிவித்தார். ஆனால் ஜன.1 முதல் 7 மாதங்களாக அகவிலைப்படி 3 சதவீதம் தரவில்லை. இம்மாதம் மீண்டும் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. எனவே அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டம் ரத்து, 4.5 லட்சம் காலியிடங்களை நிரப்புதல், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

முதல்வர் கொரோனா பாதிப்பில் இருந்து விரைந்து குணமடைய வேண்டும். கொரோனா காலத்தில் அவர் சிறந்த முதல்வர் என பெயரெடுக்க காரணம் சுகாதாரத்துறையே. அத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் அவுட்சோர்ஸிங் முறையில் பணி நியமனம் கூடாது. கோரிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் ஒன்றுகூட நிறைவேறவில்லை. இவற்றை வலியுறுத்தி ஜூலை 26ல் மாவட்ட தலைநகரங்களில் மாலைநேர தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். ஆக.23ல் கோட்டை நோக்கி ஊர்வலமாக செல்ல உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Friday, June 3, 2022

ஆசிரியர்களை பழிவாங்கும் தி.மு.க., அரசு! - டீ கடை பெஞ்ச்

June 03, 2022 0
டீ கடை பெஞ்ச்

ஆசிரியர்களை பழிவாங்கும் தி.மு.க., அரசு! ''முதல்வர் தனிப்பிரிவுல குடுக்கற மனுவுக்கு கூட மரியாதை இல்லை ஓய்...'' என, துண்டால் வியர்வையை துடைத்தபடியே அமர்ந்தார், குப்பண்ணா.

''யார் கொடுத்த புகார் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''சேலம் மாவட்டம், தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கிராமங்கள்ல நில அபகரிப்பு, சட்டவிரோத செயல்கள்ல சிலர் தலைவிரிச்சு ஆடறா... போலீஸ்ல சொல்லியும் தீர்வு கிடைக்காததால, நொந்து போன கிராம மக்கள், முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினா ஓய்...

''உடனே, 'இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுங்கோ'ன்னு உயரதிகாரிகள் உத்தரவு போடறா... ஆனா, ஆளுங்கட்சி ஆட்கள், தொழிலதிபர்கள், போலீசாருக்கு வேண்டப்பட்டவா மேல புகார் வந்தா, புகார் குடுத்தவாளை ஸ்டேஷனுக்கு வரவழைச்சு, 'என் பிரச்னை, 'சால்வ்' ஆகிடுத்து... மேற்கொண்டு விசாரணையோ, நடவடிக்கையோ தேவைஇல்லை'ன்னு எழுதி வாங்கிண்டு அனுப்பிடறா ஓய்...

''முதல்வர் தனிப்பிரிவு மனுவுக்கே இதான் கதின்னா, வேற யார்கிட்ட போய் முறையிடறதுன்னு புகார் குடுத்தவா புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''சென்னை, தாம்பரம் போலீஸ் கமிஷனர் ஆபீஸ் நுண்ணறிவு பிரிவு உயர் அதிகாரியா இருக்கிறவர், ஸ்டேஷன்கள்ல இருக்கிற நுண்ணறிவுப் பிரிவு போலீசாரை அதிரடியா இடமாற்றம் செய்தாரு வே...'' என, அடுத்த தகவலுக்கு வந்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சம்பந்தப்பட்ட போலீசாரின் ஒப்புதலோ, விருப்ப மனுவோ எதுவுமே இல்லாம இந்த இடமாற்றத்தை செய்துடுதாரு... கூடுதல் துணை கமிஷனர் பொற்செழியனுக்கு கூட இந்த விஷயம் தெரியாதாம் வே...

''இணை மற்றும் துணை கமிஷனர்கள் உத்தரவு இல்லாம, அந்த அதிகாரி தன் இஷ்டத்துக்கு ஆடுறது சட்டம் - ஒழுங்கை பாதிக்கிறது மட்டுமில்லாம, அதிகாரிகளுக்குள்ள இருக்கிற மோதலை அதிகமாக்கிடுதுன்னு ஓய்வு பெற்ற ஆபீசர்ஸ் சொல்லுதாவ வே...'' என்ற அண்ணாச்சி, எதிரில் வந்தவரைப் பார்த்து, ''வாரும் வெற்றிச்செழியன்... எப்படி இருக்கீரு...'' என, நலம் விசாரித்தார். உடனே, ''தி.மு.க.,வும் பழிவாங்கும் படலத்தை ஆரம்பிச்சிடுச்சுங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.

''என்ன செஞ்சா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''மாணவர்கள் சுயதொழில் செஞ்சு முன்னுக்கு வர நம்பிக்கை ஊட்டும் விதமா, 9வது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மத்திய அரசின் நிதி உதவியுடன், தொழிற்கல்வி பாட திட்டத்தை போன அ.தி.மு.க., ஆட்சியில கொண்டு வந்தாங்க... ''அவங்க கொண்டு வந்ததை நாம ஏன் நிறைவேத்தணும்னு, திராவிட மாடல்னு சொல்லிக்கிற தி.மு.க., அரசு நினைக்குதுங்க... அதனால, வர்ற கல்வியாண்டு முதல் தொழிற்கல்வி பாட திட்டம் கிடையாதுன்னு அறிவிச்சிட்டாங்க...

''ஆடை வடிவமைப்பு, அழகுக்கலை, சமையல் உள்ளிட்ட பாடங்களை சொல்லித் தர, 200க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களை நியமிச்சிருந்தாங்க... இப்ப, இவங்களுக்கு வேலை போகப் போகுதுங்க...

''பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளை சந்திச்சு, 'மத்திய அரசு நிதி தரலையா... தொழிற்கல்வி பாடத்தை திடீர்னு ஏன் நிறுத்துறீங்க'ன்னு கேட்டிருக்காங்க... 'அதெல்லாம், 2026 வரைக்கும் வேண்டிய நிதி இருக்கு... இது, மாநில அரசின் கொள்கை முடிவு'ன்னு சொல்லிட்டாங்களாம்...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, அனைவரும் நடையை கட்டினர்.
Read More

Tuesday, May 17, 2022

உயர்கல்வியில் திமுக அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

May 17, 2022 0
Chief Minister MK Stalin participated in the inauguration of the Sai University building at Payyanur next to Chennai. Minister of Higher Education Ponmudi was the guest of honor at the function. Chief Minister MK Stalin addressing the opening ceremony; The DMK government is paying close attention to higher education. The entrance examination was canceled under the artist regime on that day due to its focus on higher education. The artist who canceled the entrance exam and got Supreme Court approval for it.

Kamaraj for school education means artist for higher education. I have mentioned that the current DMK regime will be a golden age for higher education. Poonthukkolam is committed to creating a position where the most talented students in the world are available only in Tamil Nadu. The number of people getting higher education in Tamil Nadu is higher than the national percentage. There are 13 universities under the control of the Department of Higher Education. He said that the first project was created to develop the youth of Tamil Nadu as achievement students.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை அடுத்த பையனூரில் சாய் பல்கலைக்கழக கட்டிட திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் கவுரவ விருந்தினராக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றுள்ளார். திறப்பு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; உயர்கல்வியில் திமுக அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது. உயர்க்கல்வியில் கவனம் செலுத்துவதன் காரணமாகத்தான் அன்று கலைஞர் ஆட்சியில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நுழைவுத் தேர்வை ரத்து செய்ததுடன் அதற்கு உச்சநீதிமன்ற அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் கலைஞர்.

பள்ளிக்கல்விக்கு காமராஜர் என்றால் உயர்க்கல்விக்கு கலைஞர். உயர்க்கல்விக்கு தற்போதையை திமுக ஆட்சி பொற்காலமாக இருக்கும் என்று நான் குறிப்பிட்டுள்ளேன். உலகிலேயே திறமையான மாணவர்கள் தமிழ்நாட்டில் தான் கிடைக்கிறார்கள் என்ற நிலையை உருவாக்க உறுதி பூண்டுக்கோலம். தேசிய விழுக்காட்டை விட தமிழ்நாட்டில் உயர்க்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அதிகம். உயர்க்கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன. சாதனை மாணவர்களாக தமிழக இளைஞர்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் நான் முதல்வன் திட்டம் எனவும் கூறினார்.
Read More

Post Top Ad

Your Ad Spot