KalviseithiDaily: TNPSC GROUP 1

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label TNPSC GROUP 1. Show all posts
Showing posts with label TNPSC GROUP 1. Show all posts

Friday, September 9, 2022

TNPSC குரூப்-1 தேர்வு நவ.,19க்கு ஒத்திவைப்பு

September 09, 2022 0
Group 1 exam conducted by TNPSC, which was announced to be held on October 30, has been postponed to November 19. It has been announced that the exam has been postponed due to administrative reasons

Dated 21.07.2022 by Tamil Nadu Government Staff Selection Commission Notification no. 16/2022 on 30.10.2022 B.C. will be held on 2022, Integrated Civil Works announced Exam – 1 (Volume-I) is a preliminary examination, for administrative reasons 19.11.2022 BC It is reported that it will be held on

அக்.,30க்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வு நவ.,19க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்கு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 21.07.2022 நாளிட்ட அறிவிக்கை எண். 16/2022 ல், 30.10.2022 மு.ப. அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 2022, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 (தொகுதி- I) முதனிலைத் தேர்வானது, நிர்வாகக் காரணங்களுக்காக 19.11.2022 மு.ப. அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Read More

Wednesday, June 29, 2022

TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்காணல்

June 29, 2022 0


சென்னை: குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.



கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு பதிவெண்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx வெளியாகியிருக்கிறது.



கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை, குரூப் 1 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.



இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.



எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையிலுள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்.

இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தேர்வர்களுக்கு தொலைபேசி வாயிலாக தகவல்கள் தெரிவிக்கப்படமாட்டாது. அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்திலேயே பகிரப்படும்.

அதுபோல, குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Read More

Post Top Ad

Your Ad Spot