KalviseithiDaily: Kerala Government

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Kerala Government. Show all posts
Showing posts with label Kerala Government. Show all posts

Tuesday, November 1, 2022

கர்நாடக பள்ளி பாடத்திட்டத்தில் புனித் ராஜ்குமாரின் சாதனைகள்: பசவராஜ் பொம்பை

November 01, 2022 0
கர்நாடக பள்ளி பாடத்திட்டத்தில் புனித் ராஜ்குமாரின் சாதனைகள்: பொம்மை

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்பை செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக முதல்வர் பொம்பை கூறியதாவது,

நடிகர் புனித் ராஜ்குமார் மறைந்து ஓராண்டு ஆகிவிட்டது. கர்நாடகம் மற்றும் கன்னட மொரிககு அவர் ஆற்றிய தொண்டு மற்றும் மக்கள் மனதில் அவருக்கு இருக்கும் கௌரவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கர்நாடக ரத்னா விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இது கன்னட ராஜ்யோத்சவத்தின் சிறப்பம்சமாகும். அவர் பலவித மனிதாபிமானப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.

புனித் ராஜ்குமாரின் சாதனைகள் குறித்துப் பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், எங்களால் முடிந்ததை நாங்கள் செய்வோம் என்றார்.

மேலும், அவர் தனது உறுப்புகளை தானம் செய்தவர். இது அவரது சேவையைப் பற்றிப் பேசுகிறது. அவரது மறைவுக்குப் பின், பலர் தங்கள் கண்களை தானம் செய்ய முன்வந்துள்ளனர். புனித் ராஜ்குமார் குறுகிய காலத்தில் உத்வேகம் தரும் பணியையும் சேவையையும் செய்துள்ளார். எங்களால் முடிந்தவரை அவருடைய செய்தியை முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.

மாநிலத்தில் கன்னடத்தைக் கட்டாயமாக்க, தனது அரசு சட்டம் கொண்டு வரும் என்றும் அவர் கூறினார்.
Read More

Friday, September 16, 2022

Children go to school with gun protection in Kerala - கேரளாவில் துப்பாக்கி பாதுகாப்புடன் பள்ளி செல்லும் குழந்தைகள்

September 16, 2022 0
கேரளாவில் துப்பாக்கி பாதுகாப்புடன் பள்ளி செல்லும் குழந்தைகள் - Children go to school with gun protection in Kerala

கேரளாவில் தெருநாய்களின் தொந்தரவு குறித்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், அங்கு ஒருவர், பள்ளி மாணவியரை துப்பாக்கி ஏந்தியபடி அழைத்துச் செல்லும் 'வீடியோ' சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில், சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி வாகனங்களில் செல்வோரையும் விரட்டி கடிகின்றன.இதுதொடர்பாக, வழக்கறிஞர் வி.கே.பிஜூ என்பவர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெருநாய்களை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவும், 'ரேபிஸ் வைரஸ்' தொற்றுள்ள நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் உத்தரவிட்டனர்.

மேலும், தெருநாய்களுக்கு உணவு கொடுப்பவரே, அதனால் கடிபடும் நபருக்கான மருத்துவச் செலவை ஏற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.இந்நிலையில், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பேக்கல் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் பள்ளி குழந்தைகளை துப்பாக்கி ஏந்தியபடி அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, ''குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் பள்ளிக்கு செல்லவே குழந்தைகள் பயப்படுகின்றனர். ''அதனால்தான், இந்த 'ஏர் கன்' துப்பாக்கியை ஏந்தியபடி மாணவியரை அழைத்துச் செல்கிறேன். இதைவைத்து சுட்டால் நாய்களின் உயிருக்கு பாதிப்பு இல்லை. அதனால் என் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாது,''என்றார்.
Read More

Wednesday, June 1, 2022

10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்படும்; கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தகவல்

June 01, 2022 0
The results of Class 10, Plus 2 general examinations in Kerala will be released in advance, '' said Sivankutty, the state education minister. It has been decided to publish their results in advance.

Education Minister Sivankutty said the Class 10 results would be released on June 10 and the Plus 2 results on June 12. Entrance ceremonies are held in 12,986 schools. More than four lakh students are expected to attend the first class. Masks are mandatory in schools. Corona prevention measures should be adhered to by all. Police are on security duty in front of schools. He said he had also been ordered to inspect nearby shops.

கேரளாவில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்படவுள்ளது,'' என, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.

கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 15, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 20 ல் வெளியிடப்படும் என முன் அறிவிக்கப்பட்டிருந்தது. அவற்றின் முடிவுகளை முன் கூட்டியே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 12 ல் வெளியிடப்பட உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

மாநிலத்தில் நுழைவு விழாவுடன் பள்ளிகள் நாளை (இன்று) திறக்கப்படுகிறது. 12,986 பள்ளிகளில் நுழைவு விழா நடக்கிறது. ஒன்றாம் வகுப்பில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் வருகை தர வாய்ப்புள்ளது.

பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். பள்ளிகளின் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அருகில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
Read More

Monday, January 10, 2022

தடுப்பூசி: சுகாதாரம், பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் பினராயி உத்தரவு

January 10, 2022 0
கேரளத்தில் 15 - 18 வயதுக்குட்பட்டோருக்கு இந்த வார இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா தொற்று திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். கடந்த வாரம் திருமணம், இறப்பு, அரசியல், கலாசார நிகழ்வுகளில் 75 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது 50 நபர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசியல், கலாசார, பொது மற்றும் தனியார் அமைப்பு சார்ந்த நிகழ்வுகளை இணையம் வாயிலாக நடத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வார இறுதி நாள் ஊரடங்கு அல்லது மாலை நேர ஊரடங்கு விதிக்கப்படவில்லை. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து கரோனாவைக் கட்டுப்படுத்திவதில் அரசுக்கு உதவ வேண்டும்.

தற்போதைய சூழலில் பள்ளிகள் வழக்கம்போன்று செயல்படும். பள்ளிகளை மூடுவது குறித்து அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித் துறை அதிகாரிகளுடன் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

பள்ளிகளில் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Read More

Sunday, November 14, 2021

கல்லூரி, பல்கலை பேராசிரியைகள் சேலை அணிவது கட்டாயமில்லை: உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு

November 14, 2021 0
கேரளாவில் கல்லூரி மற்றும் பல்கலை கழக பேராசிரியைகள் சேலை அணிவது கட்டாயம் இல்லை என்று உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. திருச்சூர் அருகே கொடுங்கல்லூரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு பணிபுரியும் பேராசிரியைகள் அனைவரும் கண்டிப்பாக சேலை அணிய வேண்டும் என்று அந்நிறுவனம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கல்லூரி பேராசிரியை ஒருவர் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்துக்கு புகார் கொடுத்தார்.

அதில், கல்லூரிக்கு தினமும் சேலை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். வேலை வேண்டும் என்றால் சேலை அணிய வேண்டும் என்றும் நிர்வாகம் கட்டாயப் படுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கேரளாவில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்பட உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியைகள் சேலை அணிவது கட்டாயம் இல்லை என்று உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், கல்லூரிகளில் சேலை அணிவதை கட்டாயப்படுத்த கூடாது. நாகரீகமான எந்த உடையையும் அணியலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் பிந்து கூறியதாவது; நானும் ஒரு கல்லூரி ஆசிரியையாக புணிபுரிந்து உள்ளேன். திருச்சூர் கேரள வர்மா கல்லூரியில் பணிபுரிந்த போது, சுடிதார் அணிந்து தான் கல்லூரிக்கு சென்று வந்தேன். உடை அணிவது என்பது ஒருவரது தனிப்பட்ட விசயமாகும்.

அதில் தேவையில்லாமல் தலையிட வேறு யாருக்கும் உரிமை இல்லை. உயர்கல்வி நிறுவனங்களில் சேலை அணிய கட்டாயப்படுத்த கூடாது என்று 2014ம் ஆண்டு அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இப்போதும் சில கல்வி நிறுவனங்கள் சேலை அணிவதை கட்டாயப் படுத்துவதால் தான் மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Post Top Ad

Your Ad Spot