KalviseithiDaily: Job news

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Job news. Show all posts
Showing posts with label Job news. Show all posts

Wednesday, October 26, 2022

அக்.28ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

October 26, 2022 0
அக்.28ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

இது குறித்து வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்கம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,

தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர், வேலை அளிக்கும் நிறுவங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 28.10.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை - 32 கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் 2.00 மதியம் மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் 8- ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.

வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
Read More

Tuesday, September 13, 2022

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.62,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!

September 13, 2022 1
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.62,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!
 
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை திண்டுக்கல் ஆனது Jeep Driver, Office Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் Tamilnadu Rural Development and Panchayat Raj Department Dindigul
பணியின் பெயர் Jeep Driver, Office Assistant
பணியிடங்கள் 9
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNRD காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Jeep Driver, Office Assistant பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeep Driver – 5 பணியிடங்கள்
Office Assistant – 4 பணியிடங்கள்

TNRD Dindigul கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் LMV Licence வைத்திருப்பது கட்டாயமானதாகும்.

TNRD வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNRD Dindigul ஊதிய விவரம்:
பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeep Driver – ரூ. 19,500/- முதல் ரூ.62,000/- வரை
Office Assistant – ரூ. 15,700/- முதல் ரூ.50,000/- வரை

TNRD தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read More

Sunday, September 11, 2022

SSC CGL: எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

September 11, 2022 0
SSC CGL: 2022-23 ஆண்டிற்கான எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்குகிறது.

ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளில் காலியாக உள்ள குரூப் 'பி'&'சி' பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கையை பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.

பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in என்ற முகவரியில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 10.10.2022 (இரவு 23:00 மணி).

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணமம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பொதுப் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மட்டும் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.

தெரிவு செய்யப்படும் முறை:இப்பதவிக்கான தேர்வு முறையானது, முதல் நிலை(Tier- I), இரண்டாம் நிலை (Tier- II), மூன்றாம் நிலை(Teir - II) என 2 முறைகளில் நடைபெற உள்ளது.

முதல்நிலை ,இரண்டாம் நிலை தேர்வு கொள்குறி வகை வினாக்களைக் கொண்டது. கணினி வழியில் தேர்வு நடைபெறும். பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய கூறுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

மூன்றாம் நிலை தேர்வு பேனா/பேப்பர் முறையில் நடைபெறும். தேர்வர்கள் வினாக்களுக்கு விரிவான பதில்கள் அளிக்க வேண்டும்.

மேலும், பதவியின் பெயர்கள், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் இன்று வெளியாகும் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்படும்.
Read More

Wednesday, September 7, 2022

ரூ.25,000 சம்பளத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.09.2022

September 07, 2022 0
கொச்சியில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Grdauate Apprentices

காலியிடங்கள்: 102

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.25,000

பயிற்சிக் காலம்: ஒரு ஆண்டு

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 1.9.2022 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பிஇ, பி.டெக் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் பிபிசிஎல் இனையதளம் மற்றும் தேர்வு செய்யப்பட்டோரின் மின்னஞசல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.mhrcdnats.gov.in என்ற இணையதளத்தில் தங்களைப் பற்றிய முழு விவரங்களையும் 8.9.2022 தேதிக்கு முன்பு பதிவு செய்து கொள்ள வேண்டும். 

பின்னர் www.bharatpetroleum.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.09.2022
Read More

Tuesday, September 6, 2022

கருணை அடிப்படையில் 14 பேருக்கு அரசு பணி

September 06, 2022 0
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் பணிபுரிந்த அலுவலர்களின் வாரிசுதாரர்கள் 14 பேருக்கு, கருணை அடிப்படையில், பணி நியமன ஆணைகளை, அமைச்சர் கணேசன் வழங்கினார்.

கடந்த, 2007 - 2008 முதல் 2011 - 12ம் ஆண்டு வரை, தமிழகத்தில் 32 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை, பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு திட்டத்தின் கீழ், திறன்மிகு மையங்களாக மேம்படுத்தும் பணி துவங்கியது.

இத்திட்டத்தின் கீழ், 52 புதிய தொழிற்பிரிவு கள் உருவாக்கப்பட்டு, 2,682 இருக்கைகள் ஏற் படுத்தப் பட்டுள்ளன. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உதவியோருக்கு, ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.

அதன்படி, 2019 - 20ம் ஆண்டுக்கான சிறந்த மேலாண்மைக் குழு தலைவராக, சேலத்தை சேர்ந்த, 'ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்ஸ் லிமிடெட்' நிறுவனத்தின் மறைந்த ரமேஷ்ராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த அரசு தொழிற்பயிற்சி நிலையமாக, மேட்டூர் அணை அரசு தொழிற்பயிற்சி நிலை யம்; தொழிற்பயிற்சி நிலைய நிறுவன பங்குதா ரராக, 'ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்ஸ் லிமிடெட்' நிறுவனம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டன.

தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் நேற்று, விருதுகளை வழங்கினார். மேலும், கருணை அடிப்படையில், 14 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை செயலர் முகமது நசிமுதின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
Read More

Monday, September 5, 2022

கெயில் இந்தியா எரிவாயு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்! - விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் : 15.9.2022

September 05, 2022 0
இயற்கை எரிவாயு துறையை சேர்ந்த 'கெயில் இந்தியா' நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள நிர்வாகம்சாராத 289 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Jr. Engineer (Chemical) - 02
பணி: Jr. Engineer (Mechanical) - 01
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

பணி: Foreman (Electrical) - 01
பணி: Foreman (Instrumentation) - 14
பணி: Foreman (Mechanical) - 01
பணி: Foreman (Civil) - 01
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும். 

பணி: Junior Superintendent (Official Language) - 05
பணி: Junior Superintendent (HT) - 20
பணி: Junior Chemist - 08
பணி: Technical Assistant (Laboratory) - 03
பணி: Operator (Chemical) - 29
பணி: Technician (Electrical) - 35
பணி: Technician (Instrumentation) - 16
பணி: Technician (mechanical) - 38
பணி: Technician (Telecom and Telemetry) - 14
பணி: Operator (Fire) - 23
பணி: Assistant (Store and Purchase) - 28
பணி: Accounts Assistant - 24
பணி: Marketing Assistant – 19
வயதுவரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ முடித்து 8 ஆண்டுகள் மற்றும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://gailonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 50. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் : 15.9.2022

மேலும் விவரங்கள் அறிய https://gailonline.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்
Read More

ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள்! - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.9.2022

September 05, 2022 0
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக 36 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண். 05/2022(R-I)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Nurse/A -13
பணி: Scientific Assistant/B (Pathology) - 02
பணி: Scientific Assistant/B (Nuclear Medicine Technologist) - 08
பணி: Scientific Assistant/C (Medical Social Worker) - 01
பணி: Sub Officer/B - 04
பணி: Scientific Assistant/B (Civil) - 08

தகுதி : சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது : 12.9.2022 அடிப்படையில் 18 முதல் 40, மற்றும் 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://recruit.barc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.9.2022

மேலும் விவரங்கள் அறிய https://recruit.barc.gov.in/barcrecruit/appmanager/UserApps/getDocument?action=docfile&pid=664 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Read More

Saturday, July 30, 2022

கடந்த 8 ஆண்டுகளில் 7.22 லட்சம் அரசுப் பணிக்கு 22 கோடிபேர் விண்ணப்பம்: மத்திய அரசு தகவல்

July 30, 2022 0
கடந்த 2014ம் ஆண்டிலிருந்து 2022ம் ஆண்டுவரை 7.22 மத்திய அரசுப் பணிக்கு 22.05 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்தனர் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டிலிருந்து 2022ம் ஆண்டுவரை 7.22 மத்திய அரசுப் பணிக்கு 22.05 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்தனர் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பணியாளர் துறை இணைஅமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

கடந்த 2014ம் ஆண்டு முதல் 202ம் ஆண்டு வரை மத்திய அரசின் பல்வேறு துறைகளில், அமைச்சகங்களில் புதிதாக 7 லட்சத்து 22 ஆயிரத்து 311 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த பதவிக்கு மொத்தம் 22 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்திருந்தார்கள்.

2021-22ம் ஆண்டில் 38ஆயிரத்து 850 பேர் நியமிக்கப்பட்டனர். 2020-21ம் ஆண்டில் 78,555 பேர், 2019-20ம் ஆண்டில் ஒரு லட்சத்து 47ஆயிரத்து 96 பேர், 2018-19ம் ஆண்டில் 19,76,147 பேர் நியமிக்கப்பட்டனர்.2016-17ம் ஆண்டில் 1,01,333 பேரும், 2014-15ம் ஆண்டில் 1,30,423 பேரும் நியமிக்கப்பட்டனர். ஒட்டுமொத்தமாக இந்தப்பணியிடங்களுக்கு 22 கோடியே 5 லட்சத்து 99ஆயிரத்து 238 விண்ணப்பங்கள் வந்தன.

2021-22ம் ஆண்டில் 1,86,71,121 விண்ணப்பங்களும், 2020-21ல் 1,80,01,469 கோடி விண்ணப்பங்களும், 2019-20ம் ஆண்டில் 1,78,39752 விண்ணப்பங்களும், 2018-19ல் 5,0936,479 விண்ணப்பங்களும் வந்தன. 2017-18ல், 3,94,76,878 விண்ணப்பங்களும், 2016-17ல் 2,28,99,612 விண்ணப்பங்களும், 2016-17ல் 2,95,51,844 விண்ணப்பங்களும், 2014-15ல் 2,32,22,083 விண்ணப்பங்களும் வந்தன.

2021-22ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் திட்டம் மூலம் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்
Read More

10-வது படித்திருந்தால் போதும்... ரூ.30,000 சம்பளத்துடன் இந்திய கடற்படையில் பணியாற்றலாம்!

July 30, 2022 0
அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய கடற்படையில் 400 காலிபணியிடங்களுக்கான (40 பெண்கள்) வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அக்னிவீர் என்ற பெயரில், இதுதொடர்பான அறிவிப்புகள் வெளிவரத்தொடங்கியுள்ளன.

இப்பணியில் சேர ஆர்வமுள்ள திருமணமாகாத ஆண், பெண் joinindiannavy.gov.in என்ற இணையதளம் வழியாக இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஜூலை 25ம் தேதி தொடங்கிய இதற்கான விண்ணப்ப படிவங்கள், ஜூலை 30ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்பட உள்ளன.

இதற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் டிசம்பர் 1, 1999 முதல் மே 31, 2005 - காலகட்டத்துக்குள் பிறந்தவர்களாக இருக்கவேண்டும்.

கல்வித்தகுதியாக, மெட்ரிக்குலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது (10-ம் வகுப்பு தேர்ச்சி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Matric Recruit என்ற பதவிக்காக எடுக்கப்படும் இந்தப் பணிக்கு, சுமார் 30,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2-ம் ஆண்டில் சம்பளம் ரூ.33,000 என்றும்,

3-ம் ஆண்டில் ரூ.36,500 என்றும்,

4-ம் ஆண்டில் ரூ.40,000 என்றும் உயர்த்தப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், தேர்வு வழிமுறை மேற்கொள்ளப்படப்பட்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, பின் எழுத்துத்தேர்வும் உடற்தகுதித்தேர்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இவையன்றி, விண்ணப்பிக்கும் நபர் திருமணமாகாத நபராக இருக்க வேண்டும் என்பது விதி.

இந்திய கடற்படை அக்னிவீர் MR பதவிகளுக்கு விண்ணப்பிக்க கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்:

இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.joinindiannavy.gov.in பக்கத்துக்கு செல்லவும்

Register என்பதை க்ளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

அடுத்தபடியாக ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவேற்றவும். அனைத்தையும் பதிவேற்றிய பின், விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் கடைசி தேதிக்கு முன்னரே திருத்தம் செய்து கொள்ள வேண்டியிருக்கும்.

தகவலில் ஏதேனும் தவறு இருந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் என்பதால் கவனத்தோடு இருக்கவும். தேவைப்பட்டால் விண்ணப்பப்படிவத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

நவம்பர் 2022-ல் எழுத்துத் தேர்வுக்குப் பிறகு தகுதிப் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாவோருக்கு டிசம்பர் 2022-ல், பயிற்சி தொடங்கும் என தெரிகிறது.
Read More

MRB - Important Notice - Assistant Medical Officer (Siddha) - PDF

July 30, 2022 0


MRB - Important Notice - Assistant Medical Officer (Siddha) - PDF

CLICK HERE TO DOWNLOAD
Read More

Friday, July 29, 2022

10 th படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை : மாதம் ரூ.69,000 வரை சம்பளம்.

July 29, 2022 0
10 th படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை : மாதம் ரூ.69,000 வரை சம்பளம்.

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கடற்படையில் பயர் என்ஜின் டிரைவர், பயர்மேன், ( Fire Engine Driver, Fireman)

பணியிடங்களுக்கு காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட்18 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் https://www.joinindiannavy.gov.in/ என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் மட்டும் பதிவு செய்ய வேண்டும்.

இப்பணிகளுக்கான முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த பணியிடங்கள் :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி பயர் என்ஜின் டிரைவர், பயர்மேன்,பணிக்கென மொத்தம் 220 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

• பயர் என்ஜின் டிரைவர் - 36 பணியிடங்கள்

• பயர்மேன் - 184 பணியிடங்கள்

ஊதியம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

• பயர் என்ஜின் டிரைவர் - ரூ. 21,700 - 69,100/-

• பயர்மேன் - ரூ. 19,900 - 63,200/- விண்ணப்பிக்கும் முறை :

• அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.joinindiannavy.gov.in/-க்கு செல்லவும் . வேலை குறித்த முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.

• மேற்கூறிய இணைப்பிலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.

• அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.

• இந்திய கடற்படை அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.

• அனைத்து தகவல்களையும் எழுதி முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும்.

உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

• இறுதியாக விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Read More

Monday, July 25, 2022

கோவை அரசு மருத்துவமனையில் உங்களுக்கு வேலை வேண்டுமா?

July 25, 2022 0
கோவை அரசு மருத்துவமனையில் என்.எச்.எம்., மூலம் ஒதுக்கப்பட்ட, 18 பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இது குறித்து, கலெக்டர் சமீரன் கூறியுள்ளதாவது:

கோவை அரசு மருத்துவமனையில் என்.எச்.எம்., மூலம் ஒதுக்கப்பட்டுள்ள, காலி பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. பன்முக பணியாளர்- 2, மருத்துவ உதவியாளர்- 4, பன்முக சுகாதார பணியாளர்கள்- 8, அறுவை சிகிச்சை அரங்கு உதவியாளர்- 2, கதிரியக்கவியல் துறை நிபுணர்- 2 என, 18 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

இதையும் படிக்க | G.O (D) No. 144 Dt: July 13, 2022 - பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் –தாட்கோ மூலம் செயல்படுத்துதல் – ரூ. 20.00 கோடி – நிதி ஒப்பளிப்பு – ஆணை

விருப்பமுள்ள நபர்கள், புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றிதழ்களுடன், 'முதல்வர், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை--18' என்ற முகவரிக்கு, வரும் ஆக., 1ம் தேதி மாலை, 5:45 மணிக்குள் நேரில் அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Read More

Monday, July 18, 2022

சட்ட உதவி ஆலோசனை அமைப்பில் வேலைவாய்ப்பு - வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்

July 18, 2022 0
சட்ட உதவி ஆலோசனை அமைப்பில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு வருகிற 25-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான சஞ்சய் பாபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில் தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள சட்ட உதவி ஆலோசனை அமைப்பு அலுவலகத்தில் உள்ள 12 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதையும் படிக்க | TRB இன்று( 18.07.22) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்

இந்த காலிப்பணியிடங்கள் குறித்த அனைத்து விரிவான விவரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்கள் https://districts.ecourts.gov.in/dlsa-theni என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 'தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட கோர்ட்டு வளாகம், லட்சுமிபுரம், தேனி மாவட்டம்' என்ற முகவரிக்கு வருகிற 25-ந்தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More

Friday, July 15, 2022

TNPSC - ACCOUNTS OFFICER, CLASS III (TAMIL NADU STATE TREASURIES AND ACCOUNTS SERVICE ) (Notification) DATED: 15.07.2022 - PDF

July 15, 2022 0
Applications are invited from eligible candidates only through online mode upto 13.08.2022 for direct recruitment to the post of Accounts Officer, Class III included in the Tamil Nadu State Treasuries and Accounts Service.

Examination for this post shall be conducted in Computer Based Test (CBT) Method.

WARNING

 All recruitments by the Tamil Nadu Public Service Commission are purely merit based.  The Tamil Nadu Public Service Commission hereby cautions the applicants against touts and agents who may cheat, by making false promises of securing jobs through unfair means.  The Tamil Nadu Public Service Commission shall not be responsible or liable for any loss that may be caused to any applicant on account of indulging in any sort of dealings with such unscrupulous elements.

 Applicants are solely responsible for their claims in the online application. They cannot blame service providers like internet cafes/browsing centres/Common Service centres for the mistakes made while applying online for recruitment. Applicants are advised to check the filled in online application along with required documents (see Annexure II) before finally submitting the same.

 The applicants shall mandatorily upload the certificates / documents (in support of all the claims made / details furnished in the online application) at the time of submission of online application itself. It shall be ensured by the applicants that the online application shall not be submitted without uploading the required certificates.

 Applicants are directed to read all the information / instructions / guidelines given in this notification and the Commission‟s “Instructions to applicants” before applying for this recruitment. Clarification if any required, may be obtained over phone and email well ahead of the last date for submission of online application. Candidates should follow the instructions given in the online application also.

1. ONE TIME REGISTRATION:

It is mandatory for applicants to register their basic particulars through one - time online registration system on payment of Rs. 150/- (Rupees One hundred and fifty only) towards registration fee and then they should apply online for this recruitment.

[The one-time registration will be valid for five years from the date of registration. Thereafter, the registration should be renewed by paying the prescribed fee.] One Time Registration will not be considered as an application for any post

CLICK HERE TO DOWNLOAD
Read More

Sunday, July 10, 2022

பிளஸ் 2 படித்தோருக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை 'ரெடி'

July 10, 2022 0
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 39 ஜூனியர் ஆபரேட்டர் பணியிடங்களுக்கு, தகுதியான நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விமானப்போக்குவரத்து பிரிவில், 39 ஜூனியர் ஆபரேட்டர் இடங்கள் காலியாக உள்ளன. மாநிலங்கள் முறையே தமிழகம், புதுச்சேரியில் 28 இடங்களும், கர்நாடகாவில் 6 இடங்களும், தெலுங்கானாவில் 5 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஆர்வமுள்ள, தகுதியான விண்ணப்பதாரர்கள், ஜூலை 29, இரவு 10 மணிக்கு முன்னதாக விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

பொது, பொருளாதார ரீதியான பின்தங்கியோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனில், பிளஸ் 2 வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர், குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதனுடன் கனரக வாகனங்களை இயக்குவதற்கு உரிய செல்லுபடியாகும், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் ஓட்டுநர் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 100 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும். திறனறிவு, அடிப்படை ஆங்கிலம் உள்ளிட்டவை தொடர்பாக கேள்விகள் இடம்பெறும்.

விண்ணப்பிப்பது எப்படி :

விண்ணப்பதாரர்கள் iocl.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில், ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை, இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம்.
Read More

Thursday, July 7, 2022

WANTED LAB. TECHNICIANS

July 07, 2022 0
Read More

முருங்கை ஏற்றுமதி மைய பணி விண்ணப்பம் வரவேற்பு

July 07, 2022 0
முருங்கை ஏற்றுமதி மைய பணி விண்ணப்பம் வரவேற்பு

மதுரையில் உள்ள முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையத்தில் புணிபுரிய விண்ணப்பிக்க லாம். வேளாண் விற்பனை வாரியம் வெளியிட் டுள்ள அறிக்கை:

மதுரையில் முருங்கைக்காய்க்கான சிறப்பு ஏற் றுமதி சேவை மையம் இயங்கி வருகிறது. இங்கு ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மற்றும் தரவு பதிவு அலுவலர் ஆகிய பதவிக ளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொழிற்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர், இளங்கலை அறிவியல் வேளாண்மை அல்லது தோட்டக்கலை முடித்து, வெளிநாட்டு வர்த்தகம், உலகளாவிய வர்த்தகம் போன்றவற்றில் முதுநிலை வணிக நிர்வாகம் அல் லது வேளாண் வணிக மேலாண்மையில் முது கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

வேளாண்மை ஏற்றுமதி அல்லது வேளாண் வணிக மேம்பாட்டு திட்டங்களை நிர்வகிப்பதில், ஐந்து முதல் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவ ராக இருக்க வேண்டும்.

தரவு பதிவு அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக் கும் நபர், கணினி அறிவியல் இளங்கலை பட்டம் அல்லது கணிணி பயன்பாடுகளில் இளங்கலை பட்டம் பெற்று, இரண்டு ஆண்டுகள் பணி அனு பவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த இரண்டு பதவிகளுக்கான விண்ணப்பங் கள், வரும் 11ம் தேதி மாலை 3:00 மணிக்குள், 'தமிழக மாநில வேளாண்மை விற்பனை வாரியம், சிப்பெட் சாலை, திரு.வி.க., தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600032' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் அல்லது ceotansamb@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வி மற்றும் அனுபவத்திற்கான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
Read More

Tuesday, July 5, 2022

வரும் 8ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

July 05, 2022 0
மதுரை மாவட்டம் கோ.புதூர் வேலைவாய்ப்பு மைய அலுவலகத்தில் ஜூலை 8ம் தேதி காலை 10 மணிக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும்; வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முக சுந்தர் தெரிவித்துள்ளார்.
Read More

Monday, July 4, 2022

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் வேலை - 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

July 04, 2022 0
சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள 876 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு ஆள் தேர்வு நடைபெறுகிறது. சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள 876 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு ஆள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு பணிகளை ஐசிஎஃப் தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள பணியிடங்களில் 276 பணியிடங்கள் புதுமுக விண்ணப்பதாரர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பணிகள் முன்னாள் ஐடிஐ நபர்களுக்கு வழங்கப்படும். ஐசிஎஃப் தொழிற்சாலையில் கார்பண்டர், பிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட், எல்க்ட்ரீசியன் மற்றும் பெயிண்டர் ஆகிய பிரிவுகளின் கீழ் அப்ரண்டீஸ் தொழிலாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://pb.icf.gov.in/என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 16ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பில் பெற்றுள்ள மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் அப்ரண்டீஸ்களுக்கு மாதாந்திர உதவித் தொகை கிடைக்கும்.

எவ்வளவு உதவித்தொகை பெறலாம் :

அப்ரண்டீஸ் பணிகளில் சேரும், 10ஆம் வகுப்பு முடித்த புதுமுக விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோரும் ரூ.6,000 உதவித் தொகையாக வழங்கப்படும். அவர்கள் 12ஆம் வகுப்பு முடித்திருப்பின் மாதந்தோறும் ரூ.7,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

மத்திய அரசு நிறுவனம் அல்லது மாநில அரசு நிறுவனம் மூலமாக சான்றளிக்கப்பட்ட எக்ஸ் ஐடிஐ தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

கல்வித் தகுதி :

புதுமுக விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எக்ஸ் ஐடிஐ விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து தேசிய வர்த்தகச் சான்று பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு :

ஜூலை 26ஆம் தேதி நிலவரப்படி 15 முதல் 24 வயது கொண்டவராக இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி

முதலில் ஐசிஎஃப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

அப்ரண்டீஸ் பணிகளுக்கு விண்ணப்பம் செய்க என்ற லிங்க் மீது கிளிக் செய்யவும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும். இறுதியாக சப்மிட் பட்டன் அழுத்தவும்.

இதைச் செய்த பிறகு, விண்ணப்ப படிவத்தை எதிர்கால பயன்பாடு கருதி பிரிண்ட் அவுட் எடுத்து சேமித்து வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு

இடஒதுக்கீட்டு பிரிவுகளில் அல்லாதவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 மற்றும் சேவைக் கட்டணம் சேர்த்து கட்ட வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Read More

ஜூலை 7-இல்தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

July 04, 2022 0
ஜூலை 7-இல்தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூரில் மாற்றுத் திறனாளிகளுக்காக ஜூலை 7- ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில், வேலைதேடும் இளைஞா்களுக்காக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

சிறப்பு நோ்வாக மாற்றுத்திறனாளி மனுதாரா்களுக்கான சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 7-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் தஞ்சாவூா் மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சாா்ந்த முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரையிலும், டா்னா், பிட்டா் மற்றும் டிப்ளமா மெக்கானிக்கல் படித்த தஞ்சாவூா் மற்றும் அதனை சுற்றியுள்ள மாற்றுத்திறனாளி மனுதாரா்கள் கலந்து கொள்ளலாம். மேலும் மாற்றுத்திறனாளி மனுதாரா்களுக்கு வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆள்களை முகாமில் நேரடியாகத் தோ்வு செய்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களுடைய சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 237037 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்
Read More

Post Top Ad

Your Ad Spot