பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விமானப்போக்குவரத்து பிரிவில், 39 ஜூனியர் ஆபரேட்டர் இடங்கள் காலியாக உள்ளன. மாநிலங்கள் முறையே தமிழகம், புதுச்சேரியில் 28 இடங்களும், கர்நாடகாவில் 6 இடங்களும், தெலுங்கானாவில் 5 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஆர்வமுள்ள, தகுதியான விண்ணப்பதாரர்கள், ஜூலை 29, இரவு 10 மணிக்கு முன்னதாக விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
பொது, பொருளாதார ரீதியான பின்தங்கியோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனில், பிளஸ் 2 வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர், குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதனுடன் கனரக வாகனங்களை இயக்குவதற்கு உரிய செல்லுபடியாகும், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். தேர்வு முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் ஓட்டுநர் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 100 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும். திறனறிவு, அடிப்படை ஆங்கிலம் உள்ளிட்டவை தொடர்பாக கேள்விகள் இடம்பெறும்.
விண்ணப்பிப்பது எப்படி :
விண்ணப்பதாரர்கள் iocl.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில், ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை, இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment