KalviseithiDaily: education department's order

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label education department's order. Show all posts
Showing posts with label education department's order. Show all posts

Tuesday, December 27, 2022

“ பள்ளி இல்ல நூலகத் திட்டத்தின்” வாயிலாக மாணவர்களின் வாசிக்கும் திறன் மற்றும் கற்றல் திறன் மேம்பட்டுள்ளது

December 27, 2022 0
சென்னைப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட “ பள்ளி இல்ல நூலகத் திட்டத்தின்” வாயிலாக மாணவர்களின் வாசிக்கும் திறன் மற்றும் கற்றல் திறன் மேம்பட்டுள்ளது

சென்னைப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட “ பள்ளி இல்ல நூலகத் திட்டத்தின்” வாயிலாக மாணவர்களின் வாசிக்கும் திறன் மற்றும் கற்றல் திறன் மேம்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி, சென்னைப் பள்ளி மாணவ, மாணவிகள் பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு புத்தகங்களை படித்து வாசிக்கும் திறனை மேம்படுத்திடும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் அனைத்து சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் “பள்ளி இல்ல நூலகத் திட்டம்” செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மேயர் அவர்கள் சிறப்புத் திட்ட அறிவிப்பில் அறிவித்தார்கள். பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும், 92 நடுநிலைப்பள்ளிகளும், 119 தொடக்கப்பள்ளிகளும் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்வியாண்டில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 66,414 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னைப் பள்ளிகளில் பள்ளி நூலகங்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்காக உள்ளன. அனைத்து சென்னைப் பள்ளி நூலகங்களிலும் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இந்த பள்ளி நூலகங்களில் உள்ள புத்தகங்களை மாணவர்கள் பள்ளிகளிலேயே அமர்ந்து படித்து திரும்ப ஒப்படைக்கும் வகையில் இருந்தன.

மேயர் அறிவிப்பின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னைப் பள்ளிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வாசிக்கும் திறன், கற்றல் திறன், விமர்சனம் எழுதுதல், பேச்சுத்திறன், வரைதல் மற்றும் குறு நாடகம் ஆகிய திறன்களை வளர்த்திடும் வகையில் பள்ளி நூலகங்களிலிருந்து கதை, கவிதை, நாடகம், கட்டுரை, வரலாறு, இலக்கியம், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களைப் பெற்று வீட்டிலும் விரும்பி வாசித்துப் பயன்பெறும் வகையில் “பள்ளி இல்ல நூலகமானது” கடந்த ஆகஸ்டு மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. “பள்ளி இல்ல நூலகம்” திட்டத்தின் மூலம் சென்னைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும் புத்தகங்களை இல்லங்களுக்கு எடுத்துச் சென்று விரும்பி வாசிக்கும் திறனை அதிகரிக்க, அதாவது 100 சதவீதம் பூர்த்தியடையும் வகையில் மாணவர்களை ஊக்கப்படுத்தி, இந்தத் திட்டம் உருவாக்கப்பட்ட நோக்கத்தினை அடையும் பொருட்டு முனைப்புடன் செயல்பட ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு, அதன்படி இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி நூலகங்களில் புத்தகங்களை மிகவும் விரும்பிப் பெற்று பயனடையும் மாணவர்களின் விவரங்கள் பெறப்படுகின்றன. அதனடிப்படையில், இந்தப் பள்ளி இல்ல நூலகத் திட்டத்தின் மூலம் கடந்த ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதம் 12,256 மாணவ, மாணவியரும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 13,324 மாணவ, மாணவியரும் புத்தகங்களை மிகவும் விரும்பிப் பெற்று இல்லங்களுக்கு எடுத்துச் சென்று வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தி பயனடைந்துள்ளனர். இதன் மூலம் சென்னைப் பள்ளிகளின் மாணவ, மாணவிகளிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கம் மேம்படுத்தப்பட்டு, அதன் வாயிலாக அவர்களது வாசிக்கும் திறன், கவனிக்கும் திறன், கற்றல் திறன் மேம்பாடு அடைந்து வருகிறது.
Read More

Saturday, September 24, 2022

Arts and cultural activities compulsory in government schools - Education Department notification - அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

September 24, 2022 0
அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Arts and cultural activities compulsory in government schools from class 6 to 9: Education Department notification

அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளி கால அட்டவணைகளில் கலை, பண்பாட்டு செயல்பாடுகள் முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் வாரத்தில் இரு பாடவேளைகள் கலை, பண்பாட்டு செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இசை, நடனம், காட்சிக்கலை, நாடகம், நாட்டுப்புற கலை ஆகிய 5 கலைச்செயல்பாடுகளில் மாணவர்கள் ஒன்றை தேர்வு செய்யலாம்.

கலை, பண்பாட்டு செயல்பாடுகளை பயிற்றுவிக்க பள்ளிகளுக்கு அருகே உள்ள கலைஞர்களை ஈடுபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியும் கலை பண்பாட்டு செயல்பாடுகளுக்கு பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும். கலை, பண்பாட்டு செயல்பாடுகளில் சிறந்து விளக்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Friday, September 9, 2022

பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட அரசுப்பள்ளி

September 09, 2022 0
பள்ளிகளில் மாணவர்களை சுத்தம் செய்யும் பணியில் பள்ளி நிர்வாகம் ஈடுபடுத்த கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்தது. இந்நிலையில் பொறுப்பற்ற பள்ளிக்கல்வித்துறையின் எச்சரிக்கையை காற்றில் பறக்கவிட்ட பள்ளிநிர்வாகம் மாணவர்களை கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை கவனத்தில் எடுத்து மீண்டும் இதுபோன்று நடைபெறாமல் தடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்
Read More

Post Top Ad

Your Ad Spot