KalviseithiDaily: Protest

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Protest. Show all posts
Showing posts with label Protest. Show all posts

Thursday, December 22, 2022

டிசம்பர் 27 முதல் தொடர் உண்ணாவிரதம்

December 22, 2022 0
டிசம்பர் 27 முதல் தொடர் உண்ணாவிரதம்

Read More

Tuesday, November 15, 2022

பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஆசிரியர் கூட்டணி ஆர்பாட்டம்

November 15, 2022 0
பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஆசிரியர் கூட்டணி ஆர்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க மாநில தலைவர் லெட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்காமல், காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும்.

ஊதியக்குழு அறிக்கைகளை நாடு முழுதும் ஒரே மாதிரியாக அமல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாட்டை நீக்க, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Read More

Sunday, September 11, 2022

"ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடுவோம்" - மூத்த ஆசிரியர் சங்கத் தலைவர் அறிவிப்பு

September 11, 2022 0
"ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடுவோம்" - மூத்த ஆசிரியர் சங்கத் தலைவர் மாயவன் அறிவிப்பு - "We will fight to fulfill the demands of the teachers" - Senior Teachers Union President's announcement

ஆசிரியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க, மீண்டும் போராட்டங்களை கையில் எடுப்போம் என, மூத்த ஆசிரியர் சங்கத் தலைவர் மாயவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரம் செறிந்த போராட்டங்கள் மூலம் எவ்வளவு பெரிய எஃகு கோட்டைகளாக இருந்தாலும், இடித்து நொறுக்கி வெற்றிக் கனிகளைப் பறிக்க முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப, போராட்டங்களை கையில் எடுத்து வெற்றிகளை குவிப்போம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More

Monday, July 4, 2022

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தாவிட்டால் போராட்டம்

July 04, 2022 0
அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தாவிட்டால் போராட்டம்: எச்.டி.குமாரசாமி அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை ஒரு மாதத்தில் மேம்படுத்த தவறினால், மாநிலம் தழுவிய போராட்டத்தில் மஜத ஈடுபடும் என்று கா்நாடக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இது குறித்து தனது ட்விட்டா் பக்ககத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கா்நாடகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்தப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை இன்னும் ஒரு மாதத்தில் சீா்செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் மஜத ஈடுபடும். அரசுப் பள்ளிகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தால் இந்தியா உலகத் தலைவராவது எப்படி?

எனவே, மாநில அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும். அதிகாரிகளை உடனடியாக அரசுப்பள்ளிகளுக்கு அனுப்பி, பாழடைந்துள்ள கட்டடங்களை புதுப்பிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் உத்தரவிட வேண்டும். ஒரு குழந்தைக்கு ஏதோவொரு ஆபத்து நோ்ந்தாலும் அதை பாா்த்துக்கொண்டு அமைதியாக இருந்துவிடமுடியாது. ஒரு மாதத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாவிட்டால், கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் போராட்டத்தை எதிா்நோக்க வேண்டியிருக்கும். அரசுப் பள்ளிகளின் கட்டடங்களில் காணப்படும் நீா்க்கசிவு தொடா்பான விவகாரத்தை மூடிமறைக்க மாநில அரசு முயற்சிக்கிறது. மாநிலத்தில் 75,675 பள்ளிகளின் கட்டடங்கள் சிதிலமடைந்து, மோசமான நிலையில் உள்ளன. இதனால் கா்நாடகத்தின் நற்பெயா்தான் கெட்டுள்ளது. உயிரை பணயம் வைத்து மாணவா்கள் பள்ளிகளுக்கு சென்று கொண்டிருக்கிறாா்கள்.

இது அம்மாணவா்களுக்கு தண்டனையாக மாறியுள்ளது. பள்ளிகளின் மோசமான நிலைக்கு கல்வித்துறை அமைச்சரும், அதிகாரிகளும்தான் நேரடி பொறுப்பு. தனியாா் பள்ளிகளின் உயா் கட்டணங்களை செலுத்த முடியாத மாணவா்கள்தான் அரசுப்பள்ளிகளுக்கு செல்கிறாா்கள். இம்மாணவா்களின் உயிா்களுக்கு மதிப்பில்லையா? இதை கல்வித்துறை அமைச்சா் விளக்க வேண்டும் என்று குமாரசாமி தெரிவித்துள்ளாா்.
Read More

Post Top Ad

Your Ad Spot