KalviseithiDaily: government jobs

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label government jobs. Show all posts
Showing posts with label government jobs. Show all posts

Saturday, January 7, 2023

விமான நிறுவனத்தில் 596 பொறியாளர் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.1.2023

January 07, 2023 0
விமான நிறுவனத்தில் 596 பொறியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில்(ஏ.ஏ.ஐ) 596 பொறியாளர், இளநிலை எக்ஸிகியூட்டிவ், ஆர்க்கிடெக்சர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Executive (Engineering- Civil)  
காலியிடங்கள்: 62

பணி: Junior Executive (Engineering- Electrical)  
காலியிடங்கள்: 84

பணி: Junior Executive (Electronics) 
காலியிடங்கள்: 440

பணி: Junior Executive (Architecture) 
காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2020,2021,2022 ஆண்டு நடத்தப்பட்ட கேட் தேர்வுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21.1.2023 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.1.2023

Read More

Monday, December 26, 2022

அரசு காலிப்பணியிடங்கள் குறித்து ஓ.பன்னீா்செல்வம் வெளியிட்ட அறிக்கை

December 26, 2022 0
அரசு காலிப்பணியிடங்கள் குறித்து விரிவான அறிக்கை தேவை: ஓபிஎஸ்

அரசு காலிப் பணியிடங்கள் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் 2023-ம் ஆண்டுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டதைத் தொடா்ந்து, காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப தோ்வு அட்டவணை அமையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி 2023-ஆம் ஆண்டுக்கான அரசுப் பணித் தோ்வுகள் அட்டவணையை தற்போதுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டுமென்று நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அரசு வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கு விலை பத்து பைசா என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதி குறித்து கேள்வி கேட்டால், தனியாா் நிறுவனங்களில் 1,063 முகாம்கள் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. அரசைப் பொருத்தவரையில் அரசுத் துறைகளிலும், கல்வி நிலையங்களிலும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதுதான் அதன் முதல் கடமை. தனியாா் நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறுவது அரசின் திறமையின்மையை எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளது.

எனவே, முதல்வா் மு.க.ஸ்டாலின் எத்தனை அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்தும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எத்தனை காலிப் பணியிடங்கள் பல்வேறு அரசு முகமைகள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன என்பது விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.
Read More

Saturday, November 26, 2022

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் எண்ணிக்கை - தமிழக அரசு வெளியிட்ட தகவல்

November 26, 2022 0
அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 67.23 லட்சம்!

கடந்த அக்டோபா் மாத நிலவரப்படி, அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 67 லட்சத்து 23 ஆயிரத்து 682 -ஆக உள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட தகவல்:

அரசு வேலைக்காக பதிவு செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்போரின் எண்ணிக்கையை அவ்வப்போது தமிழக அரசு வெளியிடும். அதன்படி, கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 67 லட்சத்து 23 ஆயிரத்து 682. அதில், ஆண்கள் 31 லட்சத்து 40 ஆயிரத்து 532. பெண்கள் 35 லட்சத்து 82 ஆயிரத்து 882. மூன்றாம் பாலினத்தனவா் 268 என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot