KalviseithiDaily: salary

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label salary. Show all posts
Showing posts with label salary. Show all posts

Thursday, May 19, 2022

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சம்பளம் பெறும் வகையில் புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!!

May 19, 2022 0
அரசு பள்ளிகளில் 2 மாதமாக சம்பளமின்றி தவிக்கும், 3,000 ஆசிரியர்கள் சம்பளம் பெறும் வகையில், புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!!

The government has announced a one year extension for 3,000 teachers in Tamil Nadu. Internet counseling for teachers working in government schools in Tamil Nadu, on behalf of the Department of School Education, optional relocation, work schedule, was conducted three months ago. For some district schools, more teachers were relocated than permitted, as per the order of School Education Commissioner Nandakumar. Accordingly, 3,000 teachers were recruited in additional places.

But their salaries were suspended for two months last March and May. The finance ministry said it would not be able to pay salaries for new posts without the government. The order was issued by the Principal Secretary, School Education, Gokarla Usha yesterday. In addition, the Department of Education has ordered the payment of salaries and other allowances to teachers.
சம்பளமின்றி தவிக்கும், 3,000 ஆசிரியர்கள்

தமிழகத்தில் 3,000 ஆசிரியர்களுக்கு மேலும் ஓர் ஆண்டு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில், விருப்ப இடமாறுதல், பணி நிரவலுக்கான இணைய கவுன்சிலிங், மூன்று மாதங்களுக்கு முன் நடத்தப்பட்டது. சில மாவட்ட பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை கமிஷனர் நந்தகுமார் உத்தரவுப்படி, அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, கூடுதல் ஆசிரியர்கள் இடம் மாற்றப்பட்டனர். இதன்படி, 3,000 ஆசிரியர்கள் கூடுதல் இடங்களில் பதவியேற்றனர்.

புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!

ஆனால் இவர்களுக்கு கடந்த மார்ச், மே என இரண்டு மாதங்களாக சம்பளம் நிறுத்தப்பட்டது. அரசாணை இல்லாமல், புதிய இடங்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்று நிதித்துறை தெரிவித்திருந்தது.இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் 3000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பிற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா நேற்று பிறப்பித்துள்ளார். மேலும், ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் இதர படிகளை வழங்கிடவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Read More

Tuesday, May 10, 2022

கவுரவ விரிவுரையாளர்கள் சம்பளம் வாங்கி 2 மாதங்களாச்சு!

May 10, 2022 0
மதுரை காமராஜ் பல்கலை கவுரவ விரிவுரையாளர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் தவிப்பில் உள்ளனர்.இப்பல்கலையில் 40க்கும் மேற்பட்ட முதுகலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

யு.ஜி.சி., விதிப்படி ஒரு துறைக்கு ஒரு பேராசிரியர், இரண்டு இணை, 3 உதவிப் பேராசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு துறைகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் 70 க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுஉள்ளனர். இவர்களுக்கு மார்ச், ஏப்., மாத சம்பளம் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:

யு.ஜி.சி., தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம், மற்றவர்களுக்கு ரூ.15 ஆயிரம் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. நிரந்தர பேராசிரியர்கள் செய்யும் அதே வேலையை நாங்கள் செய்கிறோம். எங்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டால் 'சம்பளம் வழங்கும் பிரிவில் தற்காலிகமாக பணியாற்றிய பலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் வேலையை செய்ய இங்கு யாரும் இல்லை' என சொல்கின்றனர். இப்பிரச்னையை துணைவேந்தர் குமார் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றும் அவரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. சம்பளம் வழங்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Read More

Monday, December 13, 2021

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய பணியாளர்க்ளுக்கு மத்திய அரசு நிர்ணயித்த சம்பளத்தை மாநில அரசு வழங்க எதிர்பார்ப்பு.

December 13, 2021 0
ஒருங்கிணைந்த கல்வி திட்ட தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, மத்திய அரசு நிர்ணயித்த ஊதியத்தை விட, மாநில அரசு குறைவாக வழங்குவதாக, புகார் எழுந்துள்ளது.

மத்திய அரசு, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தி, கல்வித்தரத்தை உயர்த்த, பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கி வருகிறது. 2002 முதல், மாவட்ட வாரியாக அலுவலக பணிகள் மேற்கொள்ள, சிறப்பாசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்களாகவும், தொகுப்பூதிய அடிப்படையில், கணக்காளர்கள், கணினி விவர பதிவாளர்கள்,தகவல் நிர்வாக மேலாண்மையாளர்கள், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர்கள் கட்டிட பொறியாளர்கள் அலுவலக உதவியாளர்கள் பலர் பணிபுரிகின்றனர்.இவர்களுக்கு, மத்திய அரசின் திட்ட செயலாக்க ஒப்புதல் வாரியம் சார்பில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் நிர்ணயிக்கப்படும். இந்த ஊதியத்தை விட, மாநில அரசு குறைவாக வழங்குவதாக, புகார் எழுந்துள்ளது.

ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலசங்க செயலாளர் ராஜ்குமார் கூறுகையில்,''கடந்த 2010 முதல் 2017 வரை பணியில் சேர்ந்த கணக்காளர்களுக்கு, 16 ஆயிரத்து 167 ரூபாய் ஊதியம் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு, இத்தொகையில் அதிகபட்சமாக மாதம், 2,900 ரூபாய் பிடித்தம் செய்தே வழங்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க, கல்வித்துறை முன்வர வேண்டும்,'' என்றார்.
Read More

Friday, December 10, 2021

தினக்கூலி அடிப்படையில் அல்லது தொகுப்பூதியத்தில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல் - ஆணை - வெளியீடு

December 10, 2021 0
துப்புரவுப் பணியாளர்கள் - அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் - தினக்கூலி அடிப்படையில் அல்லது தொகுப்பூதியத்தில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல் - ஆணை - வெளியீடு
Read More

Thursday, December 9, 2021

தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது

December 09, 2021 0
தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது - மின்சார வாரிய உத்தரவால் ஊழியர்கள் அதிர்ச்சி!

மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வரும் 7 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உத்தரவு.
Read More

Post Top Ad

Your Ad Spot