KalviseithiDaily: EMPLOYMENT News

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label EMPLOYMENT News. Show all posts
Showing posts with label EMPLOYMENT News. Show all posts

Wednesday, December 21, 2022

ரூ.80,803 சம்பளத்தில் உச்ச நீதிமன்றத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

December 21, 2022 0
ரூ. 80,803 சம்பளத்தில் உச்ச நீதிமன்றத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

நாட்டின் முதன்மை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Court Assistant (Technical Assistant cum Programmer)

காலியிடங்கள்: 11

சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.44,900 - 80,803 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எண்சிஏ, எம்.எஸ்சி கணினி அறிவியல், பி.எஸ்சி (கணினி அறிவியல்), பிசிஏ போன்ற ஏதாவதொரு கல்வித்தகுதியுடன் ஒரு ஆண்டு கணினித் துறை சார்ந்த பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர் விண்ணப்பத்தாரரின் தகுதி அடிப்படையில் பணிக்கு நியமனம் செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.main.sci.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Registrar(Recruitment), Supreme Court Of India, Tilak Marg,New Delhi, Pin-110001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 31.12.2022

மேலும் விவரங்கள் அறிய www.main.sci.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Read More

Thursday, October 27, 2022

பொறியியல் பட்டதாரிகளுக்கு HCLல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2022

October 27, 2022 0
பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... எச்சிஎல் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Graduate Engineer Trainee

காலியிடங்கள்: 84

1 Mining - 39 
2 Survey - 2 
3 Geology - 6
4 Concentrator - 6
5 Electrical - 11
6 Civil - 5
7 Mechanical - 12 
8 Instrumentation - 2 
9 System - 1 

சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000

வயதுவரம்பு: 1.9.2022 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மைனிங், சர்வேயர், ஜியாலஜி, எலக்ட்ரிக்கல். சிவில், மெக்கானிக்கல், சிஸ்டம், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். ஜியாலஜி பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் GATE-2022தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்து விபரம் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை அன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.hindustancopper.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 31.10.2022

Read More

Wednesday, October 26, 2022

அக்.28ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

October 26, 2022 0
அக்.28ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

இது குறித்து வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்கம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,

தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர், வேலை அளிக்கும் நிறுவங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 28.10.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை - 32 கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் 2.00 மதியம் மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் 8- ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.

வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
Read More

Saturday, September 17, 2022

TNPSC - COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES (EXAMINATION) - PDF

September 17, 2022 0


TNPSC - COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES (EXAMINATION) - PDF

Applications are invited from eligible candidates only through online mode upto 14.10.2022 for direct recruitment to the posts included in Combined Statistical Subordinate Services Examination.

CLICK HERE TO DOWNLOAD
Read More

Wednesday, September 14, 2022

பேரவையில் செய்தியாளா் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - அக்டோபா் 12-ஆம் தேதி கடைசி நாள்

September 14, 2022 0
பேரவையில் செய்தியாளா் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சட்டப் பேரவையில் செய்தியாளா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆங்கில மொழியில் புலமை பெற்ற செய்தியாளா்கள் ஆறு பேரும், தமிழில் புலமை பெற்ற செய்தியாளா்கள் மூன்று பேரும் என மொத்தம் ஒன்பது போ் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

சுருக்கெழுத்து ஆங்கிலம் அல்லது தமிழ் தெரிந்திருக்க வேண்டும். முதல் தாளில் இது தொடா்பான கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாம் தாளில் பத்தாம் வகுப்பினை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தகுதித் தோ்வும், பட்டப் படிப்பை அடிப்படையாகக் கொண்ட பொது அறிவு தொடா்பான கேள்விகளும் கேட்கப்படும். டிசம்பா் 21-ஆம் தேதியன்று காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேளைகளில் தோ்வு நடத்தப்படும். தோ்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபா் 12-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Tuesday, September 13, 2022

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.62,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!

September 13, 2022 1
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.62,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!
 
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை திண்டுக்கல் ஆனது Jeep Driver, Office Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் Tamilnadu Rural Development and Panchayat Raj Department Dindigul
பணியின் பெயர் Jeep Driver, Office Assistant
பணியிடங்கள் 9
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNRD காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Jeep Driver, Office Assistant பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeep Driver – 5 பணியிடங்கள்
Office Assistant – 4 பணியிடங்கள்

TNRD Dindigul கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் LMV Licence வைத்திருப்பது கட்டாயமானதாகும்.

TNRD வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNRD Dindigul ஊதிய விவரம்:
பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeep Driver – ரூ. 19,500/- முதல் ரூ.62,000/- வரை
Office Assistant – ரூ. 15,700/- முதல் ரூ.50,000/- வரை

TNRD தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read More

Sunday, September 11, 2022

SSC CGL: எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

September 11, 2022 0
SSC CGL: 2022-23 ஆண்டிற்கான எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்குகிறது.

ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளில் காலியாக உள்ள குரூப் 'பி'&'சி' பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கையை பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.

பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in என்ற முகவரியில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 10.10.2022 (இரவு 23:00 மணி).

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணமம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பொதுப் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மட்டும் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.

தெரிவு செய்யப்படும் முறை:இப்பதவிக்கான தேர்வு முறையானது, முதல் நிலை(Tier- I), இரண்டாம் நிலை (Tier- II), மூன்றாம் நிலை(Teir - II) என 2 முறைகளில் நடைபெற உள்ளது.

முதல்நிலை ,இரண்டாம் நிலை தேர்வு கொள்குறி வகை வினாக்களைக் கொண்டது. கணினி வழியில் தேர்வு நடைபெறும். பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய கூறுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

மூன்றாம் நிலை தேர்வு பேனா/பேப்பர் முறையில் நடைபெறும். தேர்வர்கள் வினாக்களுக்கு விரிவான பதில்கள் அளிக்க வேண்டும்.

மேலும், பதவியின் பெயர்கள், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் இன்று வெளியாகும் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்படும்.
Read More

Wednesday, September 7, 2022

ரூ.25,000 சம்பளத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.09.2022

September 07, 2022 0
கொச்சியில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Grdauate Apprentices

காலியிடங்கள்: 102

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.25,000

பயிற்சிக் காலம்: ஒரு ஆண்டு

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 1.9.2022 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பிஇ, பி.டெக் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் பிபிசிஎல் இனையதளம் மற்றும் தேர்வு செய்யப்பட்டோரின் மின்னஞசல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.mhrcdnats.gov.in என்ற இணையதளத்தில் தங்களைப் பற்றிய முழு விவரங்களையும் 8.9.2022 தேதிக்கு முன்பு பதிவு செய்து கொள்ள வேண்டும். 

பின்னர் www.bharatpetroleum.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.09.2022
Read More

Monday, September 5, 2022

கெயில் இந்தியா எரிவாயு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்! - விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் : 15.9.2022

September 05, 2022 0
இயற்கை எரிவாயு துறையை சேர்ந்த 'கெயில் இந்தியா' நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள நிர்வாகம்சாராத 289 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Jr. Engineer (Chemical) - 02
பணி: Jr. Engineer (Mechanical) - 01
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

பணி: Foreman (Electrical) - 01
பணி: Foreman (Instrumentation) - 14
பணி: Foreman (Mechanical) - 01
பணி: Foreman (Civil) - 01
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும். 

பணி: Junior Superintendent (Official Language) - 05
பணி: Junior Superintendent (HT) - 20
பணி: Junior Chemist - 08
பணி: Technical Assistant (Laboratory) - 03
பணி: Operator (Chemical) - 29
பணி: Technician (Electrical) - 35
பணி: Technician (Instrumentation) - 16
பணி: Technician (mechanical) - 38
பணி: Technician (Telecom and Telemetry) - 14
பணி: Operator (Fire) - 23
பணி: Assistant (Store and Purchase) - 28
பணி: Accounts Assistant - 24
பணி: Marketing Assistant – 19
வயதுவரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ முடித்து 8 ஆண்டுகள் மற்றும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://gailonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 50. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் : 15.9.2022

மேலும் விவரங்கள் அறிய https://gailonline.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்
Read More

ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள்! - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.9.2022

September 05, 2022 0
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக 36 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண். 05/2022(R-I)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Nurse/A -13
பணி: Scientific Assistant/B (Pathology) - 02
பணி: Scientific Assistant/B (Nuclear Medicine Technologist) - 08
பணி: Scientific Assistant/C (Medical Social Worker) - 01
பணி: Sub Officer/B - 04
பணி: Scientific Assistant/B (Civil) - 08

தகுதி : சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது : 12.9.2022 அடிப்படையில் 18 முதல் 40, மற்றும் 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://recruit.barc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.9.2022

மேலும் விவரங்கள் அறிய https://recruit.barc.gov.in/barcrecruit/appmanager/UserApps/getDocument?action=docfile&pid=664 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Read More

Monday, July 4, 2022

வயா்மேன் உதவியாளா் பணி: ஜூலை 26க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

July 04, 2022 0
தமிழகத்தில் வயா்மேன் உதவியாளா் (மின் கம்பியாள் உதவியாளா்) பணியிடத்துக்குத் தகுதியானவா்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள வயா்மேன் உதவியாளா் பணியிடத்துக்கு செப்டம்பா் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தகுதி தோ்வு நடைபெறவுள்ளது.

இதற்கு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் நடத்தப்பட்ட தொழிலாளா்களுக்கான மாலை நேர வகுப்பில் வயா்மேன் பிரிவில் பயிற்சிப் பெற்று தோ்ச்சிப் பெற்றவா்கள், தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா்கள் மற்றும் கம்பியாள் தொழில் பிரிவுகளில் பயிற்சிப் பெற்றவா்கள், வயா்மேன் வேலையில் அனுபவம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவும், விளக்க குறியேட்டினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முகவா்களுக்கு ஜூலை 26க்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2642041, 88385- 83094 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Sunday, February 6, 2022

மின் வாரியத்தில் ஆட்கள் தேர்வு - அரசின் புதிய அறிவிப்பால் விண்ணப்பதாரர்கள் குழப்பம்

February 06, 2022 0
மின் வாரியத்தில் ஆட்கள் தேர்வு: அரசின் புதிய அறிவிப்பால் விண்ணப்பதாரர்கள் குழப்பம்

சென்னை: தமிழக மின் வாரியத்தில் 56 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதையடுத்து, 600 உதவிப் பொறியாளர்கள், 500 இளநிலை உதவியாளர்கள் (கணக்கு), 1,300 கணக்கீட்டாளர் என மொத்தம் 2,400 பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய கடந்த 2020 ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பதவிகளுக்கு மொத்தம் 1.03 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

பொதுப் பிரிவினருக்கு ரூ.1,000, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.500 தேர்வுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. கரோனா ஊரடங்கால் தேர்வு நடத்தப்படவில்லை.

2021-ம் ஆண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, அந்த ஆண்டு மே மாதம் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. எனினும், சட்டப்பேரவை தேர்தல் காரணமாக தேர்வு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதனால், ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா அல்லது அந்த அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, புதிதாக அறிவிப்பு வெளியிடப்படுமா என்று தேர்வர்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "மின் வாரியத்தில் இனி டிஎன்பிஎஸ்சி மூலம்தான் ஆட்கள் தேர்வு நடைபெறும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களும் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்" என்றனர்.
Read More

Post Top Ad

Your Ad Spot