KalviseithiDaily: Awareness

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Awareness. Show all posts
Showing posts with label Awareness. Show all posts

Thursday, January 5, 2023

அவசரமாக யாராவது மொபைல் போன் கேட்டால் தர வேண்டாம் - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!!!

January 05, 2023 0
அவசரமாக மொபைல் போன் கேட்டால் தர வேண்டாம் என பொதுமக்களை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை...

அவசரமாக மொபைல் போன் கேட்டால் தர வேண்டாம் என பொதுமக்களை சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்...

இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வெளிப்பகுதியில் இருந்து யாராவது அவசரத்திற்கு உங்கள் மொபைல் ஃபோனை கேட்டால் கொடுக்க வேண்டாம்.

அவர்கள் உங்கள் மொபைல் போனில் இருந்து பத்து வினாடிகளில் மொபைல் போனில் உள்ள பதிவை பார்வேர்ட் செய்து அனைத்து வங்கி பரிவர்த்தனையும் தெரிந்து கொள்ள முடியும்.
Read More

Wednesday, November 30, 2022

இணைய வழி மோசடிக்காரர்கள் இப்பொழுது கையாளும் புதிய வகை மோசடி, பொதுமக்களை எச்சரிக்கை செய்ய இந்த பதிவு

November 30, 2022 0


இணைய வழி மோசடிக்காரர்கள் இப்பொழுது கையாளும் புதிய வகை மோசடி, பொதுமக்களை எச்சரிக்கை செய்ய இந்த பதிவு.

நீங்கள் ஆர்டர் செய்யாத ஒரு பொருள் வந்துள்ளது என்று உங்கள் வீட்டிற்கு வந்து ஒருவர் கூறுவார். நீங்கள் நான் எந்த பொருளையும் ஆர்டர் செய்யவில்லை என்று மறுப்பீர்கள். அந்த மோசடிக்காரர் நீங்கள் ஆர்டர் செயவில்லை என்றால் நான் அதை கேன்சல் செய்தவுடன் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும் அதை சொல்லுங்கள் என்பார். நீங்கள் அவர் சொல்வதை நம்பி OTP எண்ணை கொடுத்தால் உங்கள் வங்கி கணக்கில் இருக்கின்ற பணம் மோசடியாக உடனடியாக எடுக்கப்பட்டுவிடும்.

புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையம்.9489205246(cyber crime police station Pondicherry)
Read More

Monday, November 21, 2022

30 - 40 வயது காலகட்டத்தில் இருக்கிறீர்களா? இந்த 10 விஷயங்களில் கவனம்!

November 21, 2022 0
30 - 40 வயது காலகட்டத்தில் இருக்கிறீர்களா? இந்த 10 விஷயங்களில் கவனம்!


30 - 40 வயது காலகட்டத்தில் இருக்கிறீர்களா? குடும்பம், வேலை என்று ஓரளவு செட்டில் ஆன/ஆகும் காலகட்டம் இது. ஆனால், உடல் சார்ந்த பிரச்னைகள் தொடங்கும் நேரம் என்பதால் சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 


30 வயது என்பது கிட்டத்தட்ட பாதி வாழ்க்கையைக் கடப்பது. மீதியுள்ள பாதி வாழ்க்கையில் சில விஷயங்களை கவனத்தில் கொண்டாலே வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 



அந்தவகையில் 30 வயதைக் கடந்தவர்கள் உடல்நலம் சார்ந்து கடைப்பிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்...



உணவு



வேலைப்பளு காரணமாக உணவைத் தவிர்க்கக்கூடாது. அதுபோல, கொழுப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துவிட வேண்டும் அல்லது முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவதுகூட நல்லதுதான். பதிலாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம். ஹோட்டலில் இல்லாமல் வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். துரித, பொருந்தா உணவுகள் வேண்டாம்! 



தூக்கம் 



நாள் ஒன்றுக்கு 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம். அதுவும் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுந்திருக்க பழக வேண்டும். இது உடல்நிலையை சீராக வைத்திருக்க உதவும். 



உடற்பயிற்சி 



குறைந்தது நாள் ஒன்றுக்கு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வெளியில் செல்ல முடியாத சமயத்தில் வீட்டிலேயே அல்லது மொட்டை மாடியில் நடக்கலாம், லேசான ஒர்க்-அவுட் பயிற்சிகளை செய்யலாம். குறைந்தது வெளியில் செல்லும்போது முடிந்தவரை நடந்து செல்லலாம். 



மது அருந்துதல்



இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோர் 'பீர்' குடிப்பதை ஒரு ட்ரெண்டிங் ஆக பின்பற்றுகின்றனர். 30 வயதுக்குப் பிறகு உடலில் மாற்றங்கள் நிகழ்வதால் கண்டிப்பாக மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை குறைத்துக்கொள்ளுங்கள். புகைப்பிடிப்பதற்கும் இது பொருந்தும். குளிர்பானங்களையும் குடிப்பதைத் தவிர்த்து இயற்கை பானங்களை அருந்த வேண்டும். 



அறிவு வளர்த்தல் 



வயது அதிகரிக்க அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். முதிர்ச்சித் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். சிறுசிறு விஷயங்களுக்கு சண்டையிடுவதைக் கைவிடுங்கள். 



பொறுப்பு 



30 வயது அடைந்துவிட்டால் வீட்டில் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கண்டிப்பாக உங்களுக்கென சில பொறுப்புகள், சவால்கள் வரும். அதனை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.   



சேமிப்பு 



30 வயதுக்கு மேற்பட்ட வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிகவும் அவசியம். சேமிப்பு இருந்தால் வாழ்க்கையை கடினமாக்கிக்கொள்ள தேவையில்லை. 



செல்போன் பயன்பாடு 



சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழிக்காதீர்கள். உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ளும் நேரம் இது. எனவே, நேரத்தை வீணாக்காமல் குடும்பம், வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். 



பயணம் செய்யுங்கள் 



நீங்கள் தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ உங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் சென்று வாருங்கள். உங்களுக்கென சிறிது நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள். இது மன அமைதியைத் தரும். 


நம்பிக்கை வையுங்கள் 


வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள நம்பிக்கை வேண்டும். இந்த வாழ்க்கையின் மீது நம்பிக்கை வையுங்கள். இந்த ஒரு வாழ்க்கை உங்களுக்கானது என்று மகிழ்ச்சியாக வாழுங்கள்.
Read More

Saturday, September 24, 2022

BE ALERT - ஆசிரிர்களுக்கான வேண்டுகோள்!

September 24, 2022 0
------------------------------

*ஆசிரியப் பெருமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்*

உங்கள் மாணவர்கள் தேர்வில் தோல்வி என்றால் உங்களுக்கு எந்தப் பலனும் குறையப் போவதில்லை.

மாறாக, அவர்களைத் திருத்தவேண்டும், தேர்வில் தேர்ச்சி பெற வைக்கவேண்டும், சமுதாயத்தில் நல்ல குடிமகனாக்கவேண்டும் என்று நினைத்து கண்டித்தீர்கள் அல்லது தண்டித்தீர்கள் என்றால்...

1. மாணவர்கள் நேரடியாக உங்களைத் தாக்குவார்கள்

2. உங்களைப் பழிவாங்குவதாக நினைத்து எலிப்பசையை அவர்களது நாக்கில் தடவிக்கொள்வார்கள். நீங்கள் விசாரணைக்குட்படுத்தப்படுவீர்கள்... ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக்கப்படுவீர்கள்... அதுவரையிலும் நீங்கள் அறிந்திராத பல துறைகளுக்கு விசாரணைகளுக்கு அலைக்கழிக்கப்படுவீர்கள். உங்கள் இணையரும் குழந்தைகளும் இச்சமூகத்தில் செய்யக்கூடாத பெரிய பஞ்சமா பாகத்தைப் செய்தவருடைய உறவென்று இகழப்படுவார்கள்.

3. இப்படிப்பட்ட மாணவர்களுக்கு இப்படிப்பட்ட செயலைச் செய்வதற்கு அசிங்கமோ அவமானமோ காரணமில்லை. தான் ஒரு டான்... ஆசிரியரை அசிங்கப்படுத்தி விட்டேன் என்று கூவுவதற்குத்தான்.

சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அவர்களின் கல்வித் தகுதிக்கு மீறி வாங்குகின்ற சம்பளத்தையும் ‌பென்ஷனையும் பார்க்க வக்கற்ற சமுதாயம்... ஆசிரியர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் என்று பொறாமைப்படும் சமுதாயம்... உங்களைக் காயப்படுத்த எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

நீங்கள் கண்ணியில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

கற்பித்தலே நமது பணி. ஒழுக்கத்தினை ஏன் கற்றுக் கொடுக்கவில்லை என்று யாரும் நம்மிடம் கேட்பதில்லை. கற்பித்தலில் மட்டுமே அக்கறை காட்டுங்கள்.

விசாரணை செய்யும் நியாயவான்கள்கூட ஒழுக்கமாக இருக்கத் தானே கண்டித்தார் என்ற நிலையில்கூட பேசமாட்டார்கள்.

*நீங்கள் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தாலுங்கூட பிரம்பைத் தொடாதீர்கள்.*

*BE ALERT* - WhatsApp பகிர்வு
Read More

Wednesday, September 7, 2022

குழந்தைகளிடையே அதிகரிக்கும் விழி வெண்படல பாதிப்பு: மருத்துவத் துறையினா் எச்சரிக்கை

September 07, 2022 0
குழந்தைகள், இளைஞா்களிடையே விழி வெண்படல பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவத் துறையினா் எச்சரித்துள்ளனா். தேசிய கண் தான வாரம் ஆக.25 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் இறுதி நாளான வியாழக்கிழமை (செப்.8) கண் தான நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து சங்கர நேத்ராலயா மருத்துவ சமூகவியலாளா் அ.போ.இருங்கோவேள் கூறியதாவது: மத்திய அரசாங்கத்தின் தேசிய பாா்வையிழப்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் புள்ளிவிவரப்படி 2021 வருட நிலவரப்படி 1.2 கோடி போ் பாா்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அவா்களில் சுமாா் 1,20,000 போ் விழி வெண்படல (காா்னியல்) பாா்வைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதாவது, இந்தியாவில் ஆயிரத்தில் 4.5 பேருக்கு அத்தகைய பாதிப்பு உள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கும், இளைஞா்களுக்கும் விழி வெண்படல பாதிப்பு அதிகம் ஏற்படுவது இதன் மூலம் தெரிகிறது. அதனை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். நமது கண்களின் முன் புறம் கருப்பாக தோன்றும் பகுதியை நிறமேயில்லாத, ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய, ரத்தக்குழாய்கள் ஏதுமில்லாத ஒரு மெல்லிய படலம், ஒரு

கண்ணாடி ஜன்னலைப் போல மூடியுள்ளது. அதனை ஆங்கிலத்தில் காா்னியா என்கிறோம். தமிழில் விழி வெண் படலம் என்று சொல்லலாம். தொற்று நோய்க் கிருமிகள், கண் சாா்ந்த விபத்துகள், ஊட்டச்சத்துக்குறைபாடு, பிறவிக்குறைபாடு அல்லது மரபணு குறைபாடு, உலா் விழி பாதிப்பு ஆகியவை விழி வெண்படல பிரச்னைக்கு முக்கியக் காரணம். இத்தகைய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு காா்னியல் மாற்று சிகிச்சை மூலம் பாா்வை திறனை மீட்டெடுக்க முடியும்.

ஒருவா் மரணமடைந்த ஆறு மணி நேரத்துக்குள் அவரது கண்கள் தானமாக பெறப்பட்டு 6 பேருக்கு பொருத்த முடியும். ஆரம்ப காலத்தில் காா்னியாவின் முழுதடிமனையும் மற்றவா்களுக்கு பொருத்தி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போதைய தொழில்நுட்ப வளா்ச்சி காா்னியாவின் குறிப்பிட்ட அடுக்கை மட்டும் மாற்றி பொருத்த இயலும்.

கண்களை தானமாக அளிக்க சங்கர நேத்ராலயாவின் https://www.sankaranethralaya.org/eye}pledge.html என்ற வலைதளத்தை அணுகலாம். அல்லது 044 28281919 மற்றும் 044 28271616 ஆகிய எண்களிலோ, eyebank@snmail.org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.
Read More

Monday, July 4, 2022

உங்கள் மொபைல் டேட்டாவை காலி செய்யும் ஆப்ஸ்கள்! மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

July 04, 2022 0
மால்வேர்கள் நீங்கள் உங்கள் மொபைல் டேட்டாவை பயன்படுத்தும் போதும், உங்கள் வைஃபையை ஆன் செய்து வைத்திருக்கும் நேரத்திலும் உங்களுடைய தினசரி டேட்டாவை திருடும்.

செல்போனில் ஏகப்பட்ட ஆப்ஸ்கள் இருக்கின்றன. அதுவும் குறிப்பாக நாம் தினந்தோறும் நமக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ என்ற பாகுபாடு இன்றி பல ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து வருகிறோம். இதுபோன்ற ஆப்ஸ்களால் நம் செல்போன் பாதிக்கப்படுமா என்பது குறித்த எந்த அச்சமும் இன்றி இது போன்ற ஆப்ஸ்களை நாம் டவுன்லோடு செய்து வருகிறோம். ஆனால் இப்படிப்பட்ட ஆப்ஸ்கள் தான் நம் மொபைல் போனுக்கு மிகப்பெரும் ஆபத்தாக அமைகிறது என்பதை நாம் ஒருபோதும் அறிவதில்லை. உங்கள் மொபைல் போனுக்கு ஆப்பு வைக்கும் இத்தகைய ஆப்ஸ்கள் குறித்து தான் விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் TOLL FRAUD எனும் செல்போனுக்கு தீங்கிழைக்கும் ஒரு MAll WARE உங்கள் வைஃபை டேட்டாவை காலி செய்து விடும் என்று தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது TOLL FRAUD என்று அழைக்கப்படும் இந்த MAll WARE எஸ்எம்எஸ் மூலமாகவும், அழைப்பு மூலமாகவும் உங்கள் டேட்டாவை திருடும்.

மைக்ரோசாப்ட் 365 அளித்த ஆராய்ச்சி தரவுகளின் படி, குறுஞ்செய்திகள் மூலமாக அனுப்பப்படும் இது MALL WARE அல்லது செல்போன் அழைப்பு மூலமாக கொடுக்கப்படும். MAll WARE இது இரண்டையும் விட இந்த TOLL FRAUD செல்போனுக்கு மிகவும் தீங்கிழைக்கும் என தெரிவித்துள்ளது. உதாரணமாக குறிப்பிட்ட ஒரு நெட்வொர்க்கை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களே இதுபோன்ற தீங்கிழைக்கும் மொபைல் ஆப்-களின் முதல் தேர்வு. உங்களுடைய சப்ஸ்கிரிப்ஷன் டேட்டாவை பொறுத்தே இவை உங்கள் மொபைல் போனுக்குள் ஊடுருவுகின்றன.

இதுபோன்ற மால்வேர்கள் நீங்கள் உங்கள் மொபைல் டேட்டாவை பயன்படுத்தும் போதும், உங்கள் வைஃபையை ஆன் செய்து வைத்திருக்கும் நேரத்திலும் உங்களுடைய தினசரி டேட்டாவை திருடும். இதுபோன்ற மால்வேர்கள் உங்கள் போனுக்குள் ஊடுருவி விட்டால் உங்களை அறியாமலேயே அதாவது ஒன் டைம் பாஸ்வேர்ட் என்று சொல்லப்படும் பாஸ்வேர்டை கூட அதுவே தானாக போட்டுக் கொண்டு நீங்கள் சப்ஸ்கிரைப் செய்ய விரும்பாத சேனல்களையோ அல்லது சில இணையதள பக்கங்களையோ சப்ஸ்கிரைப் செய்துவிடும். மேலும் இந்த டால் ஃப்ராட் உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய செக்யூரிட்டி ஆப்ஷனையே காலி செய்யக்கூடும். இதுகுறித்து ஆண்ட்ராய்ட் ஏ பி ஐ என்ற பாதுகாப்பு ஆப்ஸ்கள் மூலமாக இதுபோன்ற மால்வேர் ஆப்ஸ்களை முடக்குவது குறித்து நாங்கள் கூகுள் பிளே ஸ்டோருடன் பேசி வருகிறோம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்ட் பார்ட்டி என்று சொல்லப்படக்கூடிய ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக உங்கள் மொபைல் போனில் சில ஆப்ஸ்களை டவுன்லோடு செய்வதற்கு முன்பாக அவை சில அனுமதிகளை கேட்கும், அப்படிப்பட்ட நேரத்தில் அந்த ஆப்ஸ்கள் குறித்து முழுவதுமாக அறியாமல் உங்கள் மொபைல் ஃபோனை அல்லது உங்கள் மைக்ரோஃபோனை பயன்படுத்த அனுமதி தர வேண்டாம் என்றும் மைக்ரோசாப்ட் அறிவுறுத்தியுள்ளது.
Read More

Monday, June 27, 2022

ஆண்ட்ராய்ட், ஐ-போன் பயனர்கள் ஜாக்கிரதை - எச்சரிக்கும் கூகுள்..!

June 27, 2022 0
கூகுள் நிறுவனத்தின் அச்சுறுத்தல் பகுப்பாய்வு குழு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. அதில் இஸ்ரேலில் உள்ள NSO குழுமத்தின் பின்னணியில் இயங்கும் ஹெர்மிட் என்ற ஸ்பைவேர் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த ஹெர்மிட் ஸ்பைவேர் டொமைனில் இருக்கும் ஐபோன் மற்றும் ஆண்டிராய்ட் பயனர்களை குறிவைத்து தகவல்களை திருட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி மற்றும் கஜகஸ்தானில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த தகவல் திருட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஹெர்மிட் ஸ்பைவேரை RCS லேப்சுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்பு ஆராய்ச்சி குழுவின் அறிக்கை இதனை உறுதிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

ஹெர்மிட் ஸ்பைவேர் என்றால் என்ன?

மாடுலர் கண்காணிப்பு திறன் கொண்ட இந்த ஹெர்மிட் ஸ்பைவேர், பதிவிறக்கம் செய்யப்பட்டதும் தீங்கிழைக்கும் தொகுப்புகளை மறைத்து வைத்துக் கொள்கிறது. இந்த ஸ்பைவேர் ஆடியோவைப் பதிவு செய்வது மட்டுமல்லாமல், தொலைபேசி அழைப்புகளை தானாக செய்யவும் திருப்பிவிடவும் முடியும்.

ஆபத்தான இந்த ஸ்பைவேர், ஸ்மார்ட்போனில் அழைப்பு பதிவுகள், தொடர்புகள், புகைப்படங்கள், இருப்பிடம் மற்றும் SMS ஆகிய தகவல்களையும் சேகரிக்கிறது. எப்படி வேலை செய்கிறது?

ஸ்பைவேர் எஸ்எம்எஸ் செய்திகள் வழியாக அனுப்பப்படுகிறது. மேலும் உங்கள் மொபைலில் இருந்து சில வலைத்தளங்களை பின்னணியில் இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னணியில் உங்கள் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஸ்பைவேர் முதலில் உங்கள் மொபைலில் உள்ள தகவல்கள் தேவையானதா என்றும், அதனை திருட முடியுமா என்றும் சோதிக்கிறது. உங்கள் மொபைலில் இதனை பதிவிறக்கம் செய்தவுடன் அந்த வலைத்தள பக்கமே உங்கள் தகவல்களை திருடுவதற்கான செயல்பாடுகளை தொடங்கிவிடும்.

பாதுகாத்துக் கொள்வது எப்படி?

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் மொபைல் ஓஎஸ்ஸின் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்குவதன் மூலம் இதனை தடுக்க முடியும். மேலும், தேவையில்லாத ஆப்களை பதிவிறக்குவதோ மற்றும் வலைத்தளங்களை பார்ப்பதையோ தவிர்த்தால் போதும்.
Read More

Wednesday, June 15, 2022

இந்த APP உங்கள் போனில் இருந்தால் உடனே Delete செய்து விடுங்கள் - டிஜிபி எச்சரிக்கை.!

June 15, 2022 0
இந்த APP உங்கள் போனில் இருந்தால் உடனே Delete செய்து விடுங்கள்... மானம் போயிடும், நிம்மதி போயிடும், ஜாக்கிரதை - டிஜிபி எச்சரிக்கை.!
Read More

Tuesday, June 14, 2022

அதிகரிக்கும் 'ஆன்லைன்' வேலைவாய்ப்பு மோசடிகள்

June 14, 2022 0
கொரோனாவால் வேலை இழந்தவர்களையும், படித்த இளைஞர்களையும் குறிவைத்து, 'ஆன்லைன்' வேலைவாய்ப்பு மோசடி அதிகளவில் நடக்கிறது.ஒரு இணையதளம் அல்லது செயலியை பயன்படுத்த, ஒவ்வொருவரும் தங்களை பற்றிய முழுமையான தகவல்களை அளிக்கின்றனர்.

அவர்கள் இணையதளத்தில் ஒன்றை தேடும்போது, அவர்களுக்கான தேவையறிந்து, போலி விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.குறிப்பாக, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்'களில் பரவும் போலி விளம்பரங்களில் கொடுக்கப்படும் மொபைல் போன் எண்களை நம்பி, வேலை தேடும் இளைஞர்கள் பணத்தை இழந்து வருகின்றனர். குறிப்பாக, 'வீட்டில் இருந்தபடியே, ஆன்லைனில் வேலை பார்க்கலாம்' என்ற விளம்பரங்களை நம்பி, வேலையில் சேருவோரிடம், 6,000 ரூபாய் முன்பணமும், உழைப்பையும் பெற்று ஏமாற்றுகின்றனர். ஆசைவார்த்தை

இதுகுறித்து, ஏமாற்றப்பட்ட சிலர் கூறியதாவது:அமெரிக்கா டாலர் மதிப்பை, இந்திய ரூபாய் மதிப்பு அடிப்படையில் கணக்கீடு செய்து, அவற்றை மாற்றி எழுதி தர வேண்டும் என்றனர். அதன்படி மாதத்திற்கு, 1,500 'பைல்'கள் முடித்தால், மாதம், 20 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்றும், மேலும், நீங்கள் செலுத்திய முன்பணம், சிறிது சிறிதாக உங்களது சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் ஆசைவார்த்தை காட்டி சேர்த்தனர். ஆனால், பணியை முடித்த பின், அவர்களின் இணையதளம், 'லாக்' செய்யப்பட்டு விட்டது. அவர்களின் மொபைல் எண்கள், 'ஆப்' செய்யப்பட்டன. கொரோனா

அதேபோல மற்றொரு இணையதளத்தில், ஆங்கில புத்தகத்தின் பிழை திருத்துதல் பணி வழங்கப்பட்டது. அவர்கள் முன்பணம் வாங்காத நிலையில், ஆயிரம் பக்கத்திற்கு மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். பணியை முடித்த பின், 6,000 ரூபாய் வைப்பு தொகை செலுத்தும்படியும், சம்பளத்துடன் வழங்கப்படும் என்றும் கூறினர். சம்பளத்தில் பிடித்து விட்டு கொடுங்கள் என கோரிய போது, அவர்கள் போனை, 'கட்' செய்து விட்டனர்.

அதன்பின், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.சென்னை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:'ஆன்லைன்' மோசடிகள் குறித்து, பல செய்திகள் வந்தாலும், அவற்றை நம்பி ஏமாறுவோர் உள்ளனர். வீட்டில் இருந்தபடி வேலை பார்க்கலாம்; சம்பளம் வரும் என்ற ஆசையில் ஏமாறுபவர்கள் அதிகமாக உள்ளனர். விளம்பரங்களை நம்பி, வேலைக்காக பணம் செலுத்துவோர், அந்நிறுவனங்கள் எங்கு உள்ளது போன்ற அடிப்படை விபரங்களை கூட அறிய தயாராக இருப்பதில்லை.

இதனால், கொரோனாவுக்கு பின், தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர், ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கியுள்ளனர். இதில், 10 சதவீதம் பேர் மட்டுமே, போலீசில் புகார் அளிக்கின்றனர்.மேலும், மோசடி கும்பலிடம், தங்களது ஆதார், வங்கி கணக்கு போன்றவற்றை வழங்கும் போது, அதன் வாயிலாக, மோசடிக்கு புதிய கணக்கையும் துவங்க முடியும். அந்த கணக்கின் வாயிலாகவும் பலரிடம் மோசடியில் அக்கும்பல் ஈடுபடும். இதுபோன்ற மோசடியில் சிக்கியவர்கள், தயக்கமின்றி, சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Read More

Thursday, May 26, 2022

உஷார்! MBBS சீட் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

May 26, 2022 0
MBBS சீட்

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகாரை சேர்ந்த ஒரு கும்பல் நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு போன் செய்து எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருகிறேன் என்று கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறி உள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அந்த மாணவிக்கு போன் செய்த பீகாரை சேர்ந்த அசோக் என்பவர் உங்களுக்கு எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித்தருகிறேன். ரூ.10 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளார்.

மாணவியின் குடும்பத்தினரும், அவரது பேச்சை நம்பி ஆன்லைன் மூலம் அசோக் கணக்கிற்கு ரூ.10 லட்சம் அனுப்பி வைத்தனர். பெங்களூரில் உள்ள கெம்பெகவுடா மெடிக்கல் சயின்சஸ் கல்லூரியில் சீட் நிச்சயம் கிடைத்துவிடும் என்று அசோக் அவர்களிடத்தில் உறுதி அளித்துள்ளார். ரூ.10 லட்சம் மோசடி

அதனை நம்பி சிறிது நாட்கள் மாணவியின் குடும்பத்தினர் காத்திருந்தனர். பின்னர் அசோக்கை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையிலே இருந்துள்ளது.

தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த மாணவியின் குடும்பத்தினர், ஐதராபாத் போலீசில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர். புகாரைப் பெற்று கொண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் அசோக்கை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அவருடன் சேர்ந்து இந்த மோசடி கும்பலில் மேலும் 6 பேர் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்கள் அனைவரிடமும் இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளின் அடையாள அட்டைகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இங்கு மோசடி செய்த பின் நேபாள அடையாள அட்டையை பயன்படுத்தி அங்கு சென்று பதுங்கி கொள்வது வழக்கம். கும்பலைச் சேர்ந்த மேலும் 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்
Read More

Tuesday, April 26, 2022

Whatsapp பயனாளர்களுக்கு எச்சரிக்கை!

April 26, 2022 0
Read More

Friday, December 10, 2021

வங்கிக்கணக்கில் பணம் திருடுபோனா? - சைபர் கிரைம் அட்வைஸ்

December 10, 2021 1
நம்பரை மறந்துடாதீங்க

பொதுமக்கள் தங்கள் வங்கிக்க ணக்கில் இருந்து தொகை எடுக்கப் பட்டது தெரிந்தால், உடனடியாக '155260' என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும்.

அப்படிசெய்தால், வாடிக்கையா ளரின் வங்கி அதிகாரியை தொடர்பு கொண்டு, முதலில் வங்கிக்கணக்கை முடக்க நடவடிக்கை எடுப்போம். அடுத்ததாக, யாருடைய வங்கிக்க ணக்கில் அந்த பணம் வரவு வைக் கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அந்த நபரின் வங்கி கணக்கையும் முடக்க நடவடிக்கை மேற்கொள் வோம். பாதிக்கப்பட்ட 72 மணி நேரத்துக்குள் புகார் தெரிவிக்கலாம். ஆனாலும், எவ்வளவு விரைவாக வாடிக்கையாளர் புகார் கொடுக்கி றாரோ, அவ்வளவு விரைவாக பணத்தை காப்பாற்ற வாய்ப்பு உள் ளது. பொதுமக்கள் புகார் கொடுக்க வசதியாகrime.gov.in என்ற தேசிய அளவிலான இணையதள சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Read More

Wednesday, November 24, 2021

அனைத்து பெண் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மாவட்ட ஆட்சியரின் அன்பான வேண்டுகோள்!!

November 24, 2021 0
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர்,இ.ஆ.ப., அவர்களின் அன்பான வேண்டுகோள்:

பெண் குழந்தைகளே, உங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் / தொல்லை இருத்தல்,

1098 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது 8903331098 என்ற எண்ணிற்கு Whatsapp மூலம் 'Hi' என்று செய்தி அனுப்பவும்.

உங்கள் விவரங்கள் காக்கப்படும்.

- கரூர் மாவட்ட ஆட்சியர்
Read More

Thursday, November 18, 2021

பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு

November 18, 2021 0
பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு

செ.வெ.எண்.322; நாள். 17.11.2021

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

நவம்பர் 18.11.2021 அன்று சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் மழைநீரை உடனடியாக வெளியேற்ற 600க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சியின் அனைத்து அலுவலர்களும் அதிக கனமழை பெய்தால் எதிர்கொள்ள மேற்கொள்ளவும், தேவையான அனைத்து கனமழையை முன்னெச்சரிக்கை எதிர்கொள்ள தயார் நடவடிக்கைகளை நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிக கனமழையின் காரணமாக மழைநீர் தேக்கம் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவு மற்றும் தேவையான காய்கறிகள் ஆகியவற்றை இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மழைப்பொழிவு உள்ள நேரங்களில் பொதுமக்கள் நீர்நிலைகள், நீர்வழிக் கால்வாய்கள் மற்றும் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களின் அருகில் செல்பி புகைப்படம் எடுக்கக் கூடாது. தெருவிளக்கு மின்கம்பங்கள் மற்றும் மின்சார இணைப்புப் பெட்டிகளை தொடுதல் அல்லது மரங்களின் கீழ் நிற்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

மழை தொடர்பான புகார்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்கின்ற உதவி எண்ணிலும், 044-25619204, 044. 25619206, 044-25619207, 044-25619208, 044-25303870 என்ற தொலைபேசி எண்களிலும் மற்றும் 9445477205, 9445025819, 9445025820 மற்றும் 9445025821 என்ற வாட்ஸ் ஆப் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
Read More

Monday, November 15, 2021

குறைந்த காலத்தில் இரண்டு மடங்கு தருவதாக ஏமாற்றும் பவர் பேங்க் செயலி - பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க தனி எண், இமெயில் முகவரி - சிபிசிஐடி போலீசார் அறிவிப்பு

November 15, 2021 0
குறைந்த காலத்தில் இரண்டு மடங்கு தருவதாக ஏமாற்றும் பவர் பேங்க் செயலி - பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க தனி எண், இமெயில் முகவரி அறிவித்த சிபிசிஐடி போலீசார்!

பத்திரிக்கை செய்தி குறிப்பு

தமிழ்நாடு, சென்னை, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, கணினி வழி குற்றப்பிரிவில் வலைதளம் மூலம் பவர் பேங்க் என்ற செயலியில் பண முதலீடு செய்து பாதிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பவர் பேங்க் என்ற செயலி கூகுல் பிளே ஸ்டோரில் உள்ளது. இது நேரடியாக பொதுமக்களை குறைந்த காலத்திற்குள் இரண்டு மடங்கு பணம் தருவதாக ஏமாற்றும் வகையில் செயல்படுகிறது. இதன் மூலம் அதிக மக்கள் ஏமாற்றப்பட்டு மாநிலங்களில் இந்த பவர் பேங்க் செயலி சம்மந்தமாக பல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது,

இந்த பவர் பேங்க் சம்மந்தமாக பாதிக்கப்பட்ட மக்கள் யாராவது இருந்தால் விசாரணை அதிகாரி திருமதி.A.வசந்தி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்ற புலனாய்வு துறை, கணினி வழி குற்றப்பிரிவு, சென்னை என்பவரை தொலைபேசி 676001.9444128512 அணுகவும். மற்றும் மின் அஞ்சல் முகவரி cbcyber@nic.in மூலம் மேலும் மின் அஞ்சல் மற்றும் விசாரணை அதிகாரியின் அலுவலக முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மின் அஞ்சல் அஞ்சல் முகவரி cbcyber@nic.in
Read More

Saturday, November 13, 2021

மழைக்காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - மாநகராட்சி சுகாதாரத்துறை வெளியீடு

November 13, 2021 0
மழைக்காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாநகராட்சி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது!

கிரேட்டர் சென்னை மாநகராட்சி

பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் துறை

மழைக்காலத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள்

1. மழைக்காலம் மற்றும் வெள்ளத்தின் போது தொற்று நோய்கள் பரவாமல் இருக்க, கைகளை கழுவ வேண்டும்

20 விநாடிகளுக்கு அடிக்கடி சோப்புடன். 2. குடிநீரை 10-20 நிமிடங்கள் கொதிக்கவைத்து (ரோல் கொதிநிலை) ஆறிய பிறகு குடிக்கவும்.

3. மேல்நிலைத் தொட்டி, கிணறுகள் மற்றும் கிணறுகளில் முறையான குளோரினேஷன் செய்ய பின்வரும் படிகளைப் பின்பற்ற வேண்டும்

வீடுகளில் சம்ப்கள்:

அ. கிணறுகள் / சம்ப்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் (ஒவ்வொரு 1000 லிட்டர் தண்ணீருக்கும் 4 கிராம்) குடிநீர் குளோரினேஷன் செய்ய தேவையான அளவு 4 கிராம் பிளீச்சிங் பவுடர் சேர்க்கவும்.

பி. ஒரு வாளியில் கணக்கிடப்பட்ட பிளீச்சிங் பவுடரை எடுத்து பேஸ்டாக மாற்றவும்.

c. வாளியில் 3/4 பங்கு நிரம்பும் வரை தண்ணீரை ஊற்றி நன்கு கலக்கவும்.

ஈ. சுண்ணாம்பு மற்றும் பிற படிவுகள் கீழே குடியேற 10-15 நிமிடங்கள் காத்திருக்கவும்.

இ. தெளிவான குளோரின் தண்ணீரை மற்றொரு வாளியில் ஊற்றி மேல்நிலைத் தொட்டியில் நன்கு கலக்கவும் மற்றும் சம்ப்.

f. பின்னர், குளோரினேட்டட் தண்ணீரை அனுமதித்த பிறகு குடிநீருக்கு பயன்படுத்தலாம் ஒரு மணிநேர தொடர்பு நேரம்.

4. குறிப்பிட்ட விநியோக நேரத்திற்குள் CMWSSB இன் கடைகளில் இருந்து குடிநீரை சேகரிக்கவும்.

5. சுகாதாரமற்ற உணவகங்களில் இருந்து உணவு உண்பதை தவிர்க்கவும்.

6. உணவை சூடாக இருக்கும் போதே சமைத்து சாப்பிடுங்கள் மற்றும் பழைய உணவை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

7. பொது கழிப்பறைகளை பயன்படுத்தவும். திறந்த வெளியில் மலம் கழிப்பதையும் சிறுநீர் கழிப்பதையும் தவிர்க்கவும்.

8. வெள்ள நீரில் நனைந்த அசுத்தமான உணவைத் தவிர்க்கவும்.

9. பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் போன்ற மழைநீர் தேங்கி நிற்கும் சேதமடைந்த அனைத்து பொருட்களையும் அகற்றவும். தேங்காய் மட்டைகள், உடைந்த டின்கள் மற்றும் பாட்டில்கள் போன்றவை வீடு மற்றும் திறந்த மாடியில் கொசு உற்பத்தியை தடுக்கிறது மற்றும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கிறது.

10. ஈக்களால் மாசுபட்ட அனைத்து பாத்திரங்களையும் பயன்படுத்துவதற்கு முன்பு பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

11. யாருக்காவது காய்ச்சல், வயிற்றுப்போக்கு அல்லது வயிற்றுப்போக்கு இருந்தால், ORS கரைசலை குடித்துவிட்டு, திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள். பின்னர், உடனடியாக அருகிலுள்ள மருத்துவ முகாம் அல்லது யுபிஎச்சியில் சிகிச்சை பெற்று சிகிச்சை பெறவும். சுய மருந்து வேண்டாம்.

12. வெள்ளநீரால் மாசுபட்ட OHTS, சம்ப்கள்/கிணறுகளை ப்ளீச்சிங் பவுடரைக் கொண்டு நன்கு சுத்தம் செய்து தேய்க்கவும்.

13. குப்பை மற்றும் அழுகிய உணவுகளில் ஈக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே, உங்கள் வீட்டில் உள்ள கழிவுகளை உலர்ந்த மற்றும் ஈரமானவை எனப் பிரித்து தினமும் குப்பை சேகரிப்பான் மூலம் அப்புறப்படுத்துங்கள்.

14. ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, தூய்மையான சூழலைப் பராமரிக்க வேண்டும்.

Greater Chennai Corporation

Public Health and Medical Services Department

Guidelines to be followed by the public during rainy season

1. To prevent spread of communicable diseases during rainy season and flood, wash your hands with soap frequently for 20 seconds.

2. Boil the drinking water for 10-20 minutes (Roll boiling) and then drink after it cools down.

3. The following steps to be followed for proper chlorination of overhead tank, wells and sumps at homes:

a. Add 4gms of bleaching powder in required quantity for drinking water chlorination in wells/sumps and water tanks (4gms per every 1000 litres of water).

b. Take the calculated quantity of bleaching powder in a bucket and make it into a paste.

c. Pour water until it fills 3/4th of the bucket and mix it well.

d. Wait 10-15 minutes for lime and other sediments to settle down at the bottom.

e. Pour the clear chlorine water into another bucket and mix it well in the overhead tank and sump.

f. Then, the chlorinated water can be used for drinking purpose after allowing it for an one hour contact time.

4. Collect the drinking water from the outlets of the CMWSSB within the specified supply time.

5. Avoid eating food from unhygienic eateries.

6. Have cooked food while it's hot and avoid having stale food.

7. Use public toilets. Avoid open-air defecation and urination.

8. Avoid contaminated food soaked by the flood water.

9. Remove all the damaged articles which stagnant rainwater such as plastic items, tyres. coconut shells, broken tins and bottles, etc in and around the house and open terrace which prevents mosquito breeding and in turn prevents spread of dengue fever.

10. All vessels contaminated by the flies to be cleaned with dish wash before using it.

11. If anyone suffers from fever, diarrhoea or dysentery, drink ORS solution and intake plenty of liquid food. Then, immediately seek care in the nearby medical camp or UPHC and get the treatment. Don't self-medicate.

12. Clean and scrub OHTS, sumps/wells contaminated by the flood water thoroughly with the bleaching powder.

13. Flies breed in garbage and rotten food. Hence, make sure to segregate the waste as dry and wet at your home and dispose it through the garbage collector daily.

14. To protect health, we must maintain a clean environment.
Read More

Saturday, September 11, 2021

கிரெடிட் கார்டை லாபகரமாக பயன்படுத்துவது எப்படி?

September 11, 2021 0
கிரெடிட் கார்டை லாபகரமாக பயன்படுத்த வழி கூறும், நிதி ஆலோசகர் த.ராஜன்: கிரெடிட் கார்டுக்கான கட்டணத்தை முழுமையாக கட்டுவதால், வட்டி எதுவும் செலுத்த வேண்டியதில்லை. அப்படியே சற்று தாமதம் ஏற்பட்டாலும், குறைவான வட்டியே செலுத்த வேண்டி இருக்கும். நுகர்வோர் கடன், கார் கடன், வீட்டை அழகு செய்ய என, பெரியளவில் கடன் வாங்குவதாக இருந்தால், வங்கி மூலம் குறைந்த வட்டியில் வாங்கலாம்.சின்ன சின்ன செலவுகளுக்கு கிரெடிட் கார்டை பயப்படுத்தினாலும், அதற்கான பணம் செலுத்துவதை தாமதப்படுத்தாதீர். தாமதக் கட்டணம், கூடவே வட்டியும் சேர்ந்து அதிக தொகை செலுத்த வேண்டி வரும். அடுத்து, ஆண்டு கட்டணம் இல்லாத கார்டுகளாக பார்த்து தேர்வு செய்யலாம். பல முன்னணி வங்கிகள், இலவச கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன.அவற்றை பயன்படுத்துவதால், ஆண்டு கட்டணம் என்ற வகையில் சில ஆயிரம் ரூபாயை தண்டமாக செலுத்துவதை தவிர்க்கலாம். கிரெடிட் கார்டை தொடர்ந்து சரியாகப் பயன்படுத்தி வந்தால், உங்களின், 'கிரெடிட் ஸ்கோர்' உயரும். அது, எதிர்காலத்தில் அதிக தொகையுடன், குறைந்த வட்டியில் கடன் பெற உதவும்.பிரபல கிரெடிட் கார்டு நிறுவனங்கள், நீங்கள் செலவு செய்யும் தொகையில் குறைந்தபட்சம் 1, 2 சதவீத தொகையை, 'ரிவார்டு பாயின்ட்' ஆக வழங்கும்.நீண்ட காலத்தில் இது பெரிய தொகையாக மாறும். இதைப் பயன்படுத்தும்போது, புதிதாக வாங்கும் பொருளின் விலை கணிசமாகக் குறையும். கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கும் போது, அதிகபட்சம், 52 நாட்களுக்கு வட்டி இல்லாத கடன் காலத்தைப் பெற முடியும். கடன் சுழற்சி ஆரம்பிக்கும்போது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், இப்படி அதிகபட்ச இலவச வட்டி காலத்தைப் பயன்படுத்தலாம்.உதாரணமாக, உங்களின் கட்டணம் செலுத்துவது, ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி என்றால், 16- முதல்25-ம் தேதிக்குள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்குவதை வழக்கமாக்கி கொள்ளலாம்.அதன்பின், அடுத்த கட்டண சுழற்சி வரும் வரை, வேறு பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்யும்பட்சத்தில், அதிக நாட்கள் வட்டி இல்லா காலத்தைப் பெற முடியும்.திட்டமிடல் மூலம் நிதி இலக்குகளை நிர்ணயித்து செயல்பட ஆரம்பித்தால், தேவையில்லாமல் பல பொருட்களை வாங்குவது தவிர்க்கப்படும். இது தவிர, கடனில் பொருட்களை வாங்குவதும் குறையும்.
Read More

Post Top Ad

Your Ad Spot