BE ALERT - ஆசிரிர்களுக்கான வேண்டுகோள்!

------------------------------

*ஆசிரியப் பெருமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்*

உங்கள் மாணவர்கள் தேர்வில் தோல்வி என்றால் உங்களுக்கு எந்தப் பலனும் குறையப் போவதில்லை.

மாறாக, அவர்களைத் திருத்தவேண்டும், தேர்வில் தேர்ச்சி பெற வைக்கவேண்டும், சமுதாயத்தில் நல்ல குடிமகனாக்கவேண்டும் என்று நினைத்து கண்டித்தீர்கள் அல்லது தண்டித்தீர்கள் என்றால்...

1. மாணவர்கள் நேரடியாக உங்களைத் தாக்குவார்கள்

2. உங்களைப் பழிவாங்குவதாக நினைத்து எலிப்பசையை அவர்களது நாக்கில் தடவிக்கொள்வார்கள். நீங்கள் விசாரணைக்குட்படுத்தப்படுவீர்கள்... ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக்கப்படுவீர்கள்... அதுவரையிலும் நீங்கள் அறிந்திராத பல துறைகளுக்கு விசாரணைகளுக்கு அலைக்கழிக்கப்படுவீர்கள். உங்கள் இணையரும் குழந்தைகளும் இச்சமூகத்தில் செய்யக்கூடாத பெரிய பஞ்சமா பாகத்தைப் செய்தவருடைய உறவென்று இகழப்படுவார்கள்.

3. இப்படிப்பட்ட மாணவர்களுக்கு இப்படிப்பட்ட செயலைச் செய்வதற்கு அசிங்கமோ அவமானமோ காரணமில்லை. தான் ஒரு டான்... ஆசிரியரை அசிங்கப்படுத்தி விட்டேன் என்று கூவுவதற்குத்தான்.

சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அவர்களின் கல்வித் தகுதிக்கு மீறி வாங்குகின்ற சம்பளத்தையும் ‌பென்ஷனையும் பார்க்க வக்கற்ற சமுதாயம்... ஆசிரியர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் என்று பொறாமைப்படும் சமுதாயம்... உங்களைக் காயப்படுத்த எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

நீங்கள் கண்ணியில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

கற்பித்தலே நமது பணி. ஒழுக்கத்தினை ஏன் கற்றுக் கொடுக்கவில்லை என்று யாரும் நம்மிடம் கேட்பதில்லை. கற்பித்தலில் மட்டுமே அக்கறை காட்டுங்கள்.

விசாரணை செய்யும் நியாயவான்கள்கூட ஒழுக்கமாக இருக்கத் தானே கண்டித்தார் என்ற நிலையில்கூட பேசமாட்டார்கள்.

*நீங்கள் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தாலுங்கூட பிரம்பைத் தொடாதீர்கள்.*

*BE ALERT* - WhatsApp பகிர்வு
Post a Comment (0)
Previous Post Next Post