KalviseithiDaily: News

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Wednesday, January 18, 2023

அரசு பள்ளியில் மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் தலைமையாசிரியர் - பொதுமக்கள் பாராட்டு

January 18, 2023 0
அரசு பள்ளியில் மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் தலைமையாசிரியர் - பொதுமக்கள் பாராட்டு

திருவண் ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஆதனூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 221 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு:படிக்கும் மாணவ, மாணவிகளின் கலைத் திறனை ஊக்குவிக்க. பள்ளி தலைமை ஆசிரியர திருலோகசந்திரன் முடிவு செய்து ஒளியத்தில் ஆரவ முள்ள மாணவர்களை தேர்வு செய்து. பள்ளி வளாகத்தில் உள்ள கற் றுச்சுவர்களில் பல்வேறு விழிப்புணர்வு குறித்தஓவி யங்களை வரைய வைத் துள்ளார்.

இதற்காக தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் ஓவியம் வரை வதற்கான பெயிண்ட் மற்றும் ஓவிய உபகரண பொருட்களை வாங்கி மாணவர்களிடம் வழங் கினார்.

தொடர்ந்து ஒலிய ஆசிரியர் புவனேஸ்வரி வழிகாட்டுதல்படி கலைத் திறன் மற்றும் ஓவியத்தில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள சுவர் களில் தேசத்தலைவர்க ளின் படங்கள், மக்கும் மற்றும் மக்கா குப்பை) வது வழக்கம். விழிப்புணர்வு, சூரிய மின்சாரம், தேசப்பற்று. இயற்கை வளங்கனை காக்கும் வகையில் மரம் வளர்ப்போம். திருக்குறள தேசிய வாக்காளர் தினம் முன்னிட்டு அனைவரும் வாக்களிப்போம் ஆகிய விழிப்புணர்வு வாசகங் கள் அடங்கிய பல்வேறு ஓவியங்களை வரைத்து தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினர். மேலும் வரும் குடிய ரசுதினத்தன்று சிறப்பான முறையில் ஓலியங்களை வரைந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு மற்றும் சான்றுகள் வழங்க தலைமை ஆசிரி யர திருவோகசந்தர் முடிவு செய்துள்ளார் வழக்கமாக பள்ளி மற்றும் கல்லூரி வளாக சுற்றுச்சுவர்களி லும், பொது இடங்களி லும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் ஒளியங்களை ஒளி யர்களை வைத்து வரை ஆனால், இப்பள்ளி யில் மாணவர்களின் கலைத்திறன் மற்றும் ஓலி யத்திறனை ஊக்குவிக்க வும், மற்ற பள்ளிகளில் படிக்கும்மாணவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், தலைமை ஆசிரியர் தனது சொத்த செலவில் பெயிண்ட் உபகரணங்களை வாங்கி கொடுத்தது கண்டு பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் பாராட்டு தெரி வித்து வருகின்றனர்.
Read More

ஞாயிறன்று பருவத்தேர்வு: மாணவர்கள் அதிருப்தி

January 18, 2023 0
ஞாயிறன்று பருவத்தேர்வு: மாணவர்கள் அதிருப்தி

விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் பருவத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி வாயிலாக எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்.எஸ்சி(கணினி அறிவியல்) பட்டப் படிப்புகளை பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையில் நடப்புகல்வியாண்டுக்கான பருவத்தேர்வு (ஆகஸ்ட் - செப்டம்பர்) அட்டவணையை பல்கலைக் கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.

பிப்.12-ல் தேர்வு: அதன்படி பருவத்தேர்வுகள் ஜன.30-ம் தேதி தொடங்கி பிப்.23-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான கால அட்டவணையில் பிப்ரவரி 12-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையன்று தரவுதள மேலாண்மை அமைப்பு, மின் வணிகம், மருத்துவச் சுற்றுலா உள்ளிட்ட சில பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைமுறைக்கு மாறாக... வழக்கமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும். ஆனால், புதிய நடைமுறையாக தற்போது, பட்டப் படிப்புகளுக்கான பருவத் தேர்வையும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் நடத்த அண்ணா பல்கலை. முடிவு செய் துள்ளது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் இது விவாதப் பொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More

Tuesday, November 1, 2022

மாணவர்கள்& பெற்றோர்கள் கவனத்திற்கு - மழை& குளிர்காலத்தில் தங்களை பாதுகாத்துக்கொள்ள சில பயனுள்ள குறிப்புகள்

November 01, 2022 0
🙏அன்பிற்கினிய மாணவர்கள் & பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் மழைக்காலம் முன்னிட்டு கீழ் காணும் வழிமுறைகளை பின்பற்றி மழை & குளிர்காலத்தில் தங்களை பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

🌸 கனமழை நேரத்தில் குழந்தைகள் & மாணவச்செல்வங்கள் வயதானவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்புடன் இருங்கள். 

🌸அவசியம் கருதி வெளியில் செல்லும் பொதுமக்கள் தகுந்த பாதுகாப்புடன் (குடை & மழை கோட் மைக்கா பை) புது மழையில் நனையாமல் சென்று வாருங்கள்.

🌸மின்சாதனப் பொருட்களை ஈரக்கையால் தொடாதிர்கள்

🌸 தெருக்களில் பிளாஸ்டிக் குப்பைகள் பாட்டில் போன்ற பொருட்களை மழைநிரில் தேங்கவிடாமல் அப்புறப்படுத்தி வெள்ளம் போக வழி செய்யுங்கள்.

🌸வீட்டைச்சுற்றி நீர் தேங்காமல் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

🌸குடிக்கும் குடிநீரை கொதிக்க வைத்து அதில் சீரகம் ஓமம் துளசி இட்டு குடியுங்கள்.

🌸 வீட்டில் செய்யும் உணவுகளை மட்டுமே வெதுவெதுப்புடன் உண்ணுங்கள்.

🌸மூக்கடைப்பு தலைவலி ஏற்பட்டால் ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீரில் மஞ்சள் துளசி வேம்பு நொச்சி தைலதழை கல் உப்பு போட்டு கொதிக்க வைத்து வேது பிடியுங்கள்.

🌸 செக்கு தேங்காய் 
எண்ணெய் ஒரு கரண்டியளவு காய்ச்சி அதில் பத்து ரூபாய் கட்டி கற்பூரம் போட்டு ஆற வைத்துக்கொண்டு சளி தலைவலி இருந்தால் தேய்த்து கொள்ளுங்கள்.

🌸 1 கிலோ கேழ்வரகு அரை கிலோ சோளம் அரை கிலோ கம்பு சேர்த்து அரைத்த மாவு & 2கிலோ கோதுமை அரை கிலோ பார்லி சேர்த்து அரைத்த மாவு கொண்டு தோசை அடை ரொட்டி புட்டு கஞ்சி போன்ற உணவினை செய்து உண்ணுங்கள்.

🌸 சாமை வரகு குதிரைவாலி திணை போன்ற பொருட்களை கொண்டு செய்யும் உணவினை காலை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்

🌸 4 துளசி, 1வெற்றிலை , 2கற்பூரவள்ளி, ஒரு இணுக்கு முருங்கைகீரை, 4குப்பைமேனி 4முசுமுசுக்கை, உடன் 5 மிளகு, ஒரு சிட்டிகை சீரகம், இஞ்சி சிறிது, பூண்டுபல் 2 சேர்த்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வாரம் இருமுறை காலையில் ஒரு நபருக்கு கால் டம்ளர் குடிக்கவும்.

 50 கிராம் சுக்கு , ஒரு ஸ்பூன் மிளகு & சீரகம், 50 கிராம் தனியா சேர்த்து அரைத்து மாலையில் கொதிக்க வைத்து வெல்லம் சிறிது சேர்த்து குடிக்கவும்.

🌸மூக்கடைப்பு தலைபாரம் ஏற்பட்டால் விரல் மஞ்சள் நல்லெண்ணெயில் முக்கி விளக்கில் சுட்டு முகரவும்.

🌸கை கால் முதுகு இடுப்பு வலி ஏற்பட்டால் நல்லெண்ணெயில் சுக்கு மிளகு சீரகம் பூண்டு பல் இடித்து போட்டு காய்ச்சி தேய்த்துக்கொள்ளுங்கள்.
Read More

Wednesday, October 19, 2022

கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை உயர்த்த பொதுத்துறை வங்கிகள் முடிவு

October 19, 2022 0
கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை உயர்த்த பொதுத்துறை வங்கிகள் திட்டம்!

கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

-கல்விக் கடன்களுக்கான உத்திரவாத வரம்பை 33 சதவீதம் உயர்த்துவது குறித்து கல்வி அமைச்சகத்துடன் நிதி அமைச்சகத்தில் உள்ள நிதிச் சேவைகள் துறை ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளதாகவும், அத்தகைய நடவடிக்கையானது, தில்லி மற்றும் மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்களில், மொத்த உத்தரவாதத்தை ரூ. 10 லட்சமாக அதிகரிக்க கூடுதல் காப்பீட்டை வழங்கும் மாநில அரசின் திட்டங்களின் வரம்பை ஒட்டுமொத்த காப்பீட்டிற்கு இணையாகக் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

"நிதிச் சேவைகள் துறையானது, கல்விக் கடனுக்கான பிணையமில்லா வரம்பை அதிகரிப்பதற்கு ஆதரவாக உள்ளது, மேலும், கல்விக் கடனுக்கான கட்டணத்தை உயர்த்துவதற்கு கல்வி அமைச்சகத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, இது ரூ. 10 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம்" என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த மதிப்புள்ள கல்விக் கடன்களை வழங்குவதில் பொதுத்துறை வங்கிககள் எச்சரிக்கையாக இருப்பதால், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதை காரணம் காட்டி, கல்விக் கடன்களுக்கு தடைகள் மற்றும் கடன்களை தர மறுப்பது போன்ற பல புகார்களை சுட்டிக்காட்டி, கல்விக் கடன்கள் வழங்குவதை விரைவுபடுத்துமாறு பொதுத்துறை வங்கிகளை அரசாங்கம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து குறைந்த மதிப்புள்ள கல்விக் கடன்கள் செயல்படாத சொத்துக்களாக மாறி வருவதால், வங்கிகள் கடன் வழங்குவதில் எந்தத் தயக்கத்தையும் சமாளிக்க உத்தரவாத வரம்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போதைய நடைமுறைப்படி, பிணையமில்லாக் கடன் பெறுபவர்கள் தற்போது ரூ. 7.5 லட்சம் வரை கடனுக்கான காப்பீட்டிற்கு பெயரளவிலான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கடன் வரம்பை அதிகரிப்பதற்கு இந்த கட்டணம் சிறிதளவு அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Read More

Monday, October 3, 2022

பள்ளியில் குண்டு வெடிப்பு: 46 சிறுமிகள் மற்றும் பெண்கள் உள்பட 53 பேர் பலி - School blast: 53 killed including 46 girls and women

October 03, 2022 0
பள்ளியில் குண்டு வெடிப்பு: 46 சிறுமிகள் மற்றும் பெண்கள் உள்பட 53 பேர் பலி - School blast: 53 killed including 46 girls and women

ஆப்கானில் பள்ளியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 53 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 38 பேர் பலியாயினர்.

பின் தலைநகர் காபூலில் கடந்த செப்டம்பரில் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர். இந்நிலையில் இன்று தலைநகர் காபூலில் உள்ள பள்ளி மீது தற்கொலை படை தாக்குதல் சம்பவம் நடந்தது. இச்சம்பவத்தில் 46 சிறுமிகள், பெண்கள் உள்பட 53 பேர் உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவத்தால் பள்ளி மேற்கூரை சேதமடைந்தது.
Read More

Sunday, October 2, 2022

4ஜி-யை விட 100 மடங்கு அதிவேகத்தில் இயங்கும் 5ஜி இணைய சேவை

October 02, 2022 0
5ஜி இணைய சேவை அறிமுகம்; 4ஜி-யை விட 100 மடங்கு அதிவேகத்தில் இயங்கும்

இந்தியாவில் முதன்முறையாக சென்னை உட்பட 13 நகரங்களில் அதிவேக 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது, 4ஜி சேவையை விட 100 மடங்கு அதிவேகமாக இயங்கும். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இணைய சேவைகளின் பயன்பாடு பலமடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா தாக்கத்துக்கு பிறகு பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் வீடியோ கால் மூலம் மீட்டிங் மற்றும் வகுப்புகளை எடுத்து வருகின்றன. அரசு துறை உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களின் நிர்வாக ரீதியாக பணிகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால், இன்றைய உலகமே இணைய சேவையை நம்பிதான் உள்ளது. இதனால், தற்போது 4ஜி சேவையை விட 100 மடங்கு அதிவிரைவாகவும், தடையின்றி சேவையை பெறவும் 5ஜி அலைவரிசை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டது.

அதன்படி, ஐந்தாம் தலைமுறை எனப்படும் 5ஜி அலைவரிசைக்காக ஏலத்துக்கு கடந்த ஜூன் மாதம் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கடந்த ஜூலை 26ம் தேதி 5ஜி சேவை ஏலம் தொடங்கியது. ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ (அம்பானி குழுமம்), வோடபோன் - ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன. மொத்தம்5 ஜி அலைக்கற்றை ரூ.1.50 லட்சம் கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 6வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, நாட்டில் 5ஜி சேவையை முறைப்படி தொடங்கி வைத்தார். அப்போது, 5ஜி தொழில்நுட்பத்தின் திறனை காட்ட, நாட்டின் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தலா ஒரு பயன்பாட்டை பிரதமர் மோடி முன் செய்து காட்டினர். 5ஜி சேவை நாட்டின் சென்னை உட்பட 13 முக்கிய நகரங்களில் மட்டும் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் படிப்படியாக 5ஜி சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி தொலைத்தொடர்பு சேவைகளுக்கான தொழில்நுட்பத்திற்காக வெளிநாடுகளைச் சார்ந்திருந்த நிலையில், 5ஜி மூலம் இந்தியா சரித்திரம் படைத்துள்ளது. தனது அரசாங்கத்தின் ‘டிஜிட்டல் இந்தியா’ கனவு, தொலைநோக்கு சாதனங்களின் விலை, டிஜிட்டல் இணைப்பு, தரவு செலவு மற்றும் டிஜிட்டல்-முதல் அணுகுமுறை ஆகிய 4 தூண்களில் நிறுவப்பட்டது. இந்த அணுகுமுறை இந்தியாவில் மொபைல் உற்பத்தி அலகுகள் 2014ல் இரண்டில் இருந்து இப்போது 200 ஆக அதிகரித்து, கைபேசிகளின் விலையைக் குறைத்துள்ளது.

இந்தியா இப்போது உலகின் மிகக் குறைந்த டேட்டா கட்டணங்களைக் கொண்டுள்ளது. 2014ல் 1 ஜிபி டேட்டாவுக்கு ரூ.300 ஆக இருந்த கட்டணங்கள், ஒரு ஜிபிக்கு ரூ.10 ஆக குறைந்துள்ளன. மாதத்திற்கு சராசரியாக 14 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தினால், டேட்டா செலவு ரூ.4,200ல் இருந்து ரூ.125-150 ஆக குறைந்துள்ளது. பூஜ்ஜிய ஏற்றுமதியில் இருந்து, நாடு இப்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள போன்களை அனுப்புகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையும் அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம் உண்மையில் இப்போது ஜனநாயகமயமாகிவிட்டது. 5ஜி தொழில்நுட்பம் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார். இருந்து இப்போது 200 ஆக அதிகரித்து, கைபேசிகளின் விலையைக் குறைத்துள்ளது.

இந்தியா இப்போது உலகின் மிகக் குறைந்த டேட்டா கட்டணங்களைக் கொண்டுள்ளது. 2014ல் 1 ஜிபி டேட்டாவுக்கு ரூ.300 ஆக இருந்த கட்டணங்கள், ஒரு ஜிபிக்கு ரூ.10 ஆக குறைந்துள்ளன. மாதத்திற்கு சராசரியாக 14 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தினால், டேட்டா செலவு ரூ.4,200ல் இருந்து ரூ.125-150 ஆக குறைந்துள்ளது. பூஜ்ஜிய ஏற்றுமதியில் இருந்து, நாடு இப்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள போன்களை அனுப்புகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையும் அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம் உண்மையில் இப்போது ஜனநாயகமயமாகிவிட்டது. 5ஜி தொழில்நுட்பம் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.
Read More

Saturday, October 1, 2022

தமிழ்நாடு வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல்: 7 மாணவர்கள் 200க்கு 200 பெற்று முதலிடம் - Tamil Nadu Agricultural University Rank List: 7 students topped with 200 out of 200

October 01, 2022 0
தமிழ்நாடு வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல்: 7 மாணவர்கள் 200க்கு 200 பெற்று முதலிடம் - Tamil Nadu Agricultural University Rank List: 7 students topped with 200 out of 200

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலை அதன் துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று வெளியிட்டார். 7 மாணவர்கள் 200 க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 12 இளம் அறிவியல் பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த கல்வியாண்டில் இளம் அறிவியல் பாடப்பிரிவுகளில் மொத்தம் 8 ஆயிரத்து 980 மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ம் வரை பெறப்பட்டது.

இதில், அரசு கல்லூரிகளில் ஒற்றை சாளர கலந்தாய்வின் மூலம் 2 ஆயிரத்து 567 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இணைப்புக் கல்லூரிகளில், அரசு இட ஒதுக்கீட்டில் ஒற்றைச் சாளர கலந்தாய்வின் மூலம் 2 ஆயிரத்து 858 இடங்களும், நிர்வாக இட ஒதுக்கீட்டின் மூலம் 1,545 இடங்கள் என மொத்தம் 4,413 இடங்கள் நிரப்பபடவுள்ளன.

தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 247 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 120 இடங்களும், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 408 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 20 இடங்களும் மற்றும் 20 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர மொத்தம் 39 ஆயிரத்து 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 15 ஆயிரத்து 111 பேர் மாணவர்கள், 24 ஆயிரத்து 378 பேர் மாணவிகள் ஆவர்.

சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 301 மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் 7,773 மாணவர்களும், மாற்றுத்திறனாளிகள் 144 மாணவர்கள், தொழிற்கல்வி பிரிவில் 1,849 மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பிரிவில் 808 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். பழங்குடியினர் பிரிவில் மட்டும் 596 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவரிசை பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று (செப்டம்பர் 30) வெளியிட்டார். 7 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண் பெற்ற முதலிடம் பிடித்துள்ளனர். அதில், ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தலா 2 மாணவர்கள், சேலம், ராமநாதபுரம், தர்மபுரி சேர்ந்த தலா மாணவர்கள் என மொத்தம் 7 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். 199.5 மதிப்பெண் 14 பேர், 199 மதிப்பெண் 3 பேர் பெற்றுள்ளனர்.

மேலும், 513 பேர் 195 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம். கடந்த ஆண்டு 195 மதிப்பெண்ணுக்கு மேல் 161 பேர் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளில் வேளாண் கட்ஆப் மதிப்பெண் 200 முதல் 185.5 மதிப்பெண் வரை இருந்தது. தனியார் கல்லூரியில் 179 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டது. தொழிற்கல்வியில் 181 மதிப்பெண் கட்ஆப் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த பிறகு வேளாண் பல்கலைக்கழக கலந்தாய்வு நடைமுறை தொடங்கப்படும். கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பு நேரடியாக நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக கலந்தாய்வு தொடர்பாக யூடியூப்பில் தவறான தகவல் பரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டும் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.
Read More

Saturday, September 24, 2022

BE ALERT - ஆசிரிர்களுக்கான வேண்டுகோள்!

September 24, 2022 0
------------------------------

*ஆசிரியப் பெருமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்*

உங்கள் மாணவர்கள் தேர்வில் தோல்வி என்றால் உங்களுக்கு எந்தப் பலனும் குறையப் போவதில்லை.

மாறாக, அவர்களைத் திருத்தவேண்டும், தேர்வில் தேர்ச்சி பெற வைக்கவேண்டும், சமுதாயத்தில் நல்ல குடிமகனாக்கவேண்டும் என்று நினைத்து கண்டித்தீர்கள் அல்லது தண்டித்தீர்கள் என்றால்...

1. மாணவர்கள் நேரடியாக உங்களைத் தாக்குவார்கள்

2. உங்களைப் பழிவாங்குவதாக நினைத்து எலிப்பசையை அவர்களது நாக்கில் தடவிக்கொள்வார்கள். நீங்கள் விசாரணைக்குட்படுத்தப்படுவீர்கள்... ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக்கப்படுவீர்கள்... அதுவரையிலும் நீங்கள் அறிந்திராத பல துறைகளுக்கு விசாரணைகளுக்கு அலைக்கழிக்கப்படுவீர்கள். உங்கள் இணையரும் குழந்தைகளும் இச்சமூகத்தில் செய்யக்கூடாத பெரிய பஞ்சமா பாகத்தைப் செய்தவருடைய உறவென்று இகழப்படுவார்கள்.

3. இப்படிப்பட்ட மாணவர்களுக்கு இப்படிப்பட்ட செயலைச் செய்வதற்கு அசிங்கமோ அவமானமோ காரணமில்லை. தான் ஒரு டான்... ஆசிரியரை அசிங்கப்படுத்தி விட்டேன் என்று கூவுவதற்குத்தான்.

சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அவர்களின் கல்வித் தகுதிக்கு மீறி வாங்குகின்ற சம்பளத்தையும் ‌பென்ஷனையும் பார்க்க வக்கற்ற சமுதாயம்... ஆசிரியர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் என்று பொறாமைப்படும் சமுதாயம்... உங்களைக் காயப்படுத்த எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

நீங்கள் கண்ணியில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

கற்பித்தலே நமது பணி. ஒழுக்கத்தினை ஏன் கற்றுக் கொடுக்கவில்லை என்று யாரும் நம்மிடம் கேட்பதில்லை. கற்பித்தலில் மட்டுமே அக்கறை காட்டுங்கள்.

விசாரணை செய்யும் நியாயவான்கள்கூட ஒழுக்கமாக இருக்கத் தானே கண்டித்தார் என்ற நிலையில்கூட பேசமாட்டார்கள்.

*நீங்கள் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தாலுங்கூட பிரம்பைத் தொடாதீர்கள்.*

*BE ALERT* - WhatsApp பகிர்வு
Read More

Monday, July 25, 2022

ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை!: பெரியார் பல்கலை. பதிவாளர் மீது வழக்குப்பதிவு

July 25, 2022 0
சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பொறுப்பு வகிக்கும் கோபி மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவாளர் பொறுப்பு வகிக்கும் கோபி ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வி.. போலீஸ் அதிகாரிக்கு பாராட்டு..!

மாணவி புகாரின் பேரில் கோபி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விடுமுறை தினத்தில் வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக வேதியியல் ஆராய்ச்சி மாணவி குற்றம்சாட்டியிருந்தார்.
Read More

Thursday, June 30, 2022

டூல் டிசைன் படிப்பு

June 30, 2022 0
டூல் டிசைன் படிப்பு

ஹைதராபாத்தில் உள்ள சென்டரல் இன்ஸ்டிடியூட் ஆப் டூல் டிசைன் - சி.ஐ.டி.டி,, கல்வி நிறுவனத்தில் முதுநிலை டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

கல்வி நிறுவன அறிமுகம்:

1968ம் ஆண்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட இக்கல்வி நிறுவனம், தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கும் நாட்டின் முன்னணி நிறுவனமாகும்.

சர்வதேச தரச்சான்றும் பெற்றுள்ள இந்நிறுவனம், டூல் டிசைன் அண்டு மானுபாக்ச்சரிங், கேட், கேம், சி.ஏ.இ., வி.எல்.எஸ்.ஐ., எம்பெட்டடு சிஸ்டம்ஸ், எலக்ட்ரானிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ் அண்டு ரோபாட்டிக்ஸ் ஆகிய பிரிவுகளில் சான்றிதழ், டிப்ளமா, முதுநிலை டிப்ளமா மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளையும் வழங்குகிறது. படிப்பு: போஸ்டு டிப்ளமா இன் டூல் டிசைன் - பி.டி.டி.டி.,

மொத்த இடங்கள்: 60

தகுதிகள்: ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரத்துடன் வழங்கப்படும் இப்படிப்பில் சேர மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமா படித்தவர்கள் அல்லது அதற்கு இணையான படிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 27 வயதிற்குள் இருத்தல் வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.

தேர்வு முறை: நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் இப்படிப்பில் சேர்க்கப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30

விபரங்களுக்கு: https://citdindia.org/
Read More

மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள பன்முகத்திறன் அவசியம்

June 30, 2022 0
பன்முகத்திறன் அவசியம்

புதிய புதிய தொழில்நுட்பங்களால் கல்வித் துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அளவிட முடியாத மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அத்தகைய மாற்றங்களால் உருவாகும் புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனா தாக்கத்துக்கு பிறகு உலகம் முழுவதும் பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்பட அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகள் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லாமல் கற்றலும், பணிகளும் நடைபெற்றன என்றால் அதற்கு பேருதவியாக இருந்தது டிஜிட்டல் தொழில்நுட்பம். மேலை நாடுகளில் வீட்டில் சுவிட்ச் ஆப் செய்வதிலிருந்து விண்ணில் பறந்து கொண்டிருக்கும் செயற்கை கோள்களை இயக்குவது வரை அனைத்திலும் சாப்ட்வேர் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளன.

கொரோனா சில துறைகளில் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும் டிஜிட்டல் துறையில் மிகப்பெரிய மற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் தற்போது புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடங்களையும் தேர்வு செய்து படிக்கலாம். ரோபோடிக்ஸ், மின்வாகனங்கள், இணையம், தொலையுணர்வு தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி, பசுமை தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் கருவிகள் வழி கற்றல், தரவு அறிவியல் ஆகிய சிறப்பு பாடப்பிரிவுகள் கல்லூரிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்தல்

நம்மிடம் என்ன திறமை இருக்கிறதோ அதற்கேற்ப பாடங்களை மாணவர்கள் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். &'இந்த துறையில் சென்றால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவேன்’ என்ற உறுதி மாணவர்களிடையே வர வேண்டும். தினம் தினம் ஒரு மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கும் இந்த நவீன காலத்தில் மாணவர்கள் தங்களை தினம் தினம் மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் அந்த துறையில் மாணவர்கள் நிலைத்து நிற்கமுடியும்.

நற்பண்புகள், பெரியவர்களை மதிக்கும் குணம், மற்றவர்கள் சொல்வதை செவி கொடுத்து கேட்கும் நடத்தை, மற்றவர்களுக்கு உதவும் பண்புகள் ஆகியவை இருந்தால் தான் கற்றலில் மாணவர்கள் முழுமை அடைகிறார்கள். நன்றாக படித்தோம். பெரிய கம்பெனியில் வேலை கிடைத்தது என்பதோடு மாணவர்கள் நிற்க கூடாது. இந்த சமூகத்துக்கு என்ன செய்ய முடியுமோ, அதை செய்ய முன்வருவது தான் மனித பண்பு. ஆராய்ச்சி

உலக அளவில் இதுவரை புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களின் பங்கு தான் அதிகம் இருக்கும். இதற்கு காரணம் அங்குள்ள பள்ளி மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடும் வகையில் ஊக்குவித்து வருகின்றன. அதுபோன்ற முன்னேற்பாடுகள் தற்போது தான் நமது நாட்டில் தொடங்கி உள்ளன.

சிறந்த கல்வியில் மட்டுமல்லாமல் ஆராய்ச்சியிலும் மாணவர்கள் நாட்டம் கொள்ள வேண்டும். இத்தகை ஆராய்ச்சி திறன்கள் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து வர வேண்டும். இதற்கு பள்ளிக்கல்வித் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் பன்முகத்திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை கற்றுக் கொள்ளுதல், புதிய சிந்தனை, கற்பனை திறன், தலைமை பண்பு போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இன்றைய மாணவர்கள் உள்ளனர்.
Read More

Saturday, May 14, 2022

கழுத்தில் தாலி..கையில் பேனா.. திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய மணப்பெண்..!

May 14, 2022 0
Read More

Monday, May 9, 2022

மாவட்டக் கலைஞா்கள் விருது: விண்ணப்பிக்க மே 20 கடைசி

May 09, 2022 0
மாவட்டக் கலைஞா்கள் விருது

சென்னை மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப் படைத்தவா்களுக்கான விருதுகள் பெற விரும்புவோா் மே 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி அறிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தின் கலைப் புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞா்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாவட்ட ஆட்சியா் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத்துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயதும் அதற்குட்பட்டவா்களுக்கு கலை இளமணி விருது , 19 முதல் 35 வயது வரை கலை வளா்மணி விருது, 36 முதல் 50 வயது வரை கலைச் சுடா்மணி விருது, 51 முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கலை முதுமணி விருது என அகவைக்கு தக்க விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. விண்ணப்பிக்க மே 20 கடைசி

சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாகஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞா்கள், ஓவியம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞா்கள் மற்றும் கரகம், காவடி, பறை, புரவியாட்டம் மற்றும் கானா பாட்டு உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருதுகள் பெற கலைஞா்கள் தங்கள் சுய விவர குறிப்பு, நிழற் படம் இணைத்து, வயதுச் சான்று, முகவரிச்சான்று (ஆதாா் அட்டை நகல்) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடா்புடைய ஆவணங்களுடன் உதவி இயக்குநா், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் - 631502 என்ற முகவரிக்கு மே 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரம் வேண்டுவோா் இவ்வலுவலக தொலைபேசி எண்ணைத் (044 2726 9148) தொடா்பு கொண்டு பெறலாம் என ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்தாா்.
Read More

Friday, April 29, 2022

மலை சுழற்சி வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

April 29, 2022 0
மலை சுழற்சி ஆசிரியர்களது வழக்கு இன்று மதியம் 3.30 மணிக்கு 3வது வழக்காக இடம் பெற்றுள்ளது.
Read More

Thursday, April 28, 2022

கேம்பிரிட்ஜில் அக்டோபர் 2022 முதல் புதிய படிப்பு

April 28, 2022 0
கேம்பிரிட்ஜின் புதிய படிப்பு

இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், மாணவர்களிடம் பன்முகத்தன்மையை அதிகரிக்கும் முயற்சியில் புதிய ப்ரீ-டிகிரி பவுண்டேஷன் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ள இந்த படிப்பு அக்டோபர் 2022 முதல் துவங்குகிறது. ஓர் ஆண்டு கால அளவு இப்படிப்பு, முதல்கட்டமாக 52 மாணவர்களை கொண்டு ஆரம்பிக்கப்படுகிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறையாக பட்டப்படிப்புக்கு முந்தைய படிப்பை வழங்குவது இதுவே முதல் முறையாகும். திறமையான மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலையின் சான்றிதழை பெறுவதோடு, கலை, மனிதவியல், சமூக அறிவியல் போன்ற பிரிவுகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் தகுதியை பெறுகின்றனர்.
Read More

பணிநிரவல் ஆணை பெற்றவர்கள் - IFHRMS மூலம் ஊதியம் வழங்க அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் விவரம் கேட்டு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

Wednesday, April 27, 2022

பெண் புள்ளிங்கோ..... மாணவிகள் 10 பேர், 10 நாள் சஸ்பெண்ட்: முதல்வர் நடவடிக்கை

April 27, 2022 0
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வடசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரி அமைந்துள்ளது. அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள், கல்லூரி முடித்துவிட்டு பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளனர்.

அப்போது இரு தரப்பு மாணவிகளுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டு குடுமிச்சண்டையாக மாறியது. சண்டையில் ஈடுபட்ட மாணவிகளை சுற்றி இருந்த சக கல்லூரி மாணவ, மாணவிகள் விலக்கி விட்டுள்ளனர். இந்த சண்டை கல்லூரி வளாகத்தினுள் ஏற்பட்ட வாய்தகராறு என விசாரணையில் தெரிவிவந்துள்ளது. மேலும் வாய்தகராறு பேருந்து நிறுத்தத்தில் குடுமி சண்டையாக மாறியதும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்த்துறையினர், மாணவிகளின் எதிர்காலம் குறித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனால் புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிது.

இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய பி.ஏ. முதலாமாண்டு மாணவிகள் 10 பேரை, 10 நாள் சஸ்பெண்ட் செய்து அரசு கல்லூரி முதல்வர் சுடர்கொடி உத்தரவிட்டார்.
Read More

Sunday, April 24, 2022

EMIS - Scheduled Down time from 25th April 9am To 30th April 9pm - 30.04.2022 வரை EMIS வலை தளம் செயல்படாது!

April 24, 2022 0
பராமரிப்பு பணிகள் காரணமாக, அனைத்து EMIS இணைய பயன்பாடுகள் & மொபைல் செயலி சேவைகள் 25-04-2022 காலை 9 மணி முதல் முதல் 30-04-2022 இரவு 9 மணி வரை இயங்காது - பள்ளிக் கல்வித் துறை

(Due to scheduled maintenance activity, All EMIS web applications & Mobile Application Services will not be available from 25-04-2022 9AM to 30-04-2022 9PM - TN School Education Department)...
Read More

Sunday, April 10, 2022

அரசு மேல்நிலைப்பள்ளியில் மெகா அறிவியல் கண்காட்சி!

April 10, 2022 0
இராணிப்பேட்டை மாவட்டம் மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 09/04/22 (சனிக்கிழமை) மெகா அறிவியல் கண்காட்சி -2022 மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.இதில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பங்கேற்று சுமார் 50 க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை செய்து கண்காட்சியில் வைத்து விளக்கப்பட்டனர்.இக்கண்காட்சியில் அனைத்து படைப்புகளுமே நன்றாக இருந்தது.
குறிப்பாக ரோபோ வடிவமைப்பு,உள்ளுறுப்புகளின் இயக்கம்,இயற்கை நிகழ்வுகள்,இயற்கை வளங்கள்,பொருட்களின் நகர்வுகள்.உள்ளூர் இனத்தின் தாவரங்கள் ஆகியவை மிக நேர்த்தியாக கண்காட்சியில் வெளிப்படுத்தியிருந்தனர்.இக்கண்காட்சி இப்பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர் தி.பரமேசுவரி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இக்கண்காட்சியை இளம் அறிவியல் விஞ்ஞானிகள் குழு அமைப்பு தலைவர் திரு.அ.கமலக்கண்ணன் மற்றும் செயலாளர் திருமதி.பவானி,முதுகலை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,இடைநிலை ஆசிரியர்,PTA ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்,அலுவலக ஊழியர்கள் (ம) துப்புறவாளர் ஆகியோர் கலந்துக்கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தி பாராட்டுக்களை தெரிவித்தனர்.
Read More

Post Top Ad

Your Ad Spot