ஆப்கானில் பள்ளியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 53 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 38 பேர் பலியாயினர்.
பின் தலைநகர் காபூலில் கடந்த செப்டம்பரில் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர். இந்நிலையில் இன்று தலைநகர் காபூலில் உள்ள பள்ளி மீது தற்கொலை படை தாக்குதல் சம்பவம் நடந்தது. இச்சம்பவத்தில் 46 சிறுமிகள், பெண்கள் உள்பட 53 பேர் உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவத்தால் பள்ளி மேற்கூரை சேதமடைந்தது.

No comments:
Post a Comment