KalviseithiDaily: Skill training

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Skill training. Show all posts
Showing posts with label Skill training. Show all posts

Monday, January 9, 2023

அரசு தொழில்பயிற்சி நிலையத்தில்மாணவா் சோ்க்கை கால நீட்டிப்பு

January 09, 2023 0
அரசு தொழில்பயிற்சி நிலையத்தில்மாணவா் சோ்க்கை கால நீட்டிப்பு

செய்யாறு அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான தேதி ஜனவரி 13-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை எதிரே புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழில்பயிற்சி நிலையத்துக்கு 100 சதவீத சோ்க்கையை நிறைவு செய்யும் வகையில் மாணவா் சோ்க்கைக்கான தேதி ஜனவரி 13-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் உரிய சான்றிதழ்களுடன் நேரில் வரலாம்.

மின்சாரப் பணியாளா், கம்மியா் மிண்ணணுவியல், மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் இயக்குபவா் ஆகிய தொழில்பிரிவுகளின் 2 ஆண்டு கால பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

பற்றவைப்பாளா் பிரிவின் ஓராண்டு பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

மாணவா்களுக்கு பயிற்சிக் காலத்தில் பயிற்சிக் கட்டணம் ஏதும் இல்லை.

பயிற்சி பெறும் மாணவா்களுக்கு அரசு உதவித் தொகையாக மாதம் ரூ.750, விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, 2 செட் சீருடைக்கான துணி, தையல்கூலி, இலவச பாடப் புத்தகம், இலவச சேப்டி ஷூ, இலவச பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு முதல்வா், அரசு தொழில்பயிற்சி நிலையம், செய்யாறு-604 401 என்ற முகவரியிலோ, 9444621245, 942219959 என்ற கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.
Read More

Sunday, September 4, 2022

12,000 ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி

September 04, 2022 0
12,000 ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி

சென்னை, செப்.4: தமிழகத்தில் அர சுப் பள்ளித் தலைமை ஆசிரியர் கள் 12,000 பேருக்கு தலைமைப் பண்பு குறித்த பயிற்சியளிக்க கல் வித் துறை திட்டமிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கையின்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல் குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந் தார்.

இதன்கீழ், பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறு வன விரிவுரையாளர்கள், மாவட் டக் கல்வி அலுவலர்கள், வட்டா ரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித் திறன் மேம்பாடு, தலைமைத்து வம், மேலாண்மை ஆகியவை குறித்து ஆண்டுதோறும் உறைவி டப் பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், நிகழ் கல்வியாண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நி லைப் பள்ளித் தலைமை ஆசிரியர் களுக்கு தலைமை பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

முதன்மை கருத்தாளர்களுக் கான பயிற்சி முடிவடைந்த நிலை யில், தலைமை ஆசிரியர்களுக்கு முதல்கட்டமாக தலைமை பண்பு பயிற்சி அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதன்கீழ், செப். 7 முதல் 28-ஆம் தேதி வரை 12,000 பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள் ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read More

Post Top Ad

Your Ad Spot