12,000 ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி

12,000 ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி

சென்னை, செப்.4: தமிழகத்தில் அர சுப் பள்ளித் தலைமை ஆசிரியர் கள் 12,000 பேருக்கு தலைமைப் பண்பு குறித்த பயிற்சியளிக்க கல் வித் துறை திட்டமிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கையின்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல் குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந் தார்.

இதன்கீழ், பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறு வன விரிவுரையாளர்கள், மாவட் டக் கல்வி அலுவலர்கள், வட்டா ரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித் திறன் மேம்பாடு, தலைமைத்து வம், மேலாண்மை ஆகியவை குறித்து ஆண்டுதோறும் உறைவி டப் பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், நிகழ் கல்வியாண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நி லைப் பள்ளித் தலைமை ஆசிரியர் களுக்கு தலைமை பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

முதன்மை கருத்தாளர்களுக் கான பயிற்சி முடிவடைந்த நிலை யில், தலைமை ஆசிரியர்களுக்கு முதல்கட்டமாக தலைமை பண்பு பயிற்சி அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதன்கீழ், செப். 7 முதல் 28-ஆம் தேதி வரை 12,000 பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள் ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a Comment (0)
Previous Post Next Post