KalviseithiDaily: PET

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label PET. Show all posts
Showing posts with label PET. Show all posts

Saturday, December 17, 2022

1 முதல் 12 ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாய பாடம்

December 17, 2022 0
1 முதல் 12 ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாய பாடம்

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வியை கட்டாய பாடமாக்கவேண்டும் என வலியுறுத்தி மாநில கல்விக் கொள்கை உயர்மட்டக் குழு நீதியரசர் முருகேசனி டம் உடற்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்த னர்.

தமிழகத்தில் கல்வித்து றையை சீரமைக்க மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான உயர் மட்டக்குழுவை நீதியரசர் முருகேசன் தலைமையில் தமிழக அரசு அமைத்துள் ளது. இந்தக் குழுவினர் பல்வேறு கல்வியாளர்கள், கல்விச்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களிடம் கருத்து கேட்டு வருகின்ற னர். உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்கு நர் சங்க மாநில தலைவர் தேவி செல்வம், பொதுச் செயலாளர் பெரியதுரை மற்றும் நிர்வாகிகள் உயர் மட்டக் குழுவை சந்தித்து மனு அளித்து தங்கள் கருத் துக்களை தெரிவித்தனர்.

அவர்கள் அளித்தமனு வில் கூறியிருப்பதாவது:

தற்போதைய கல்விக் கொள்கையில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உடற்கல்வி பாடமும், உடற் கல்வி ஆசிரியர் நியமன மும்இல்லை. குழந்தை பரு வம்5வயது முதல் 10 வயது வரை உடற்கல்வி மூலமாக உடல் இயக்கங்களையும், அதன் செயல்பாடுகளை யும் கற்கவும், விளையாட்டு அடிப்படை விதிகளை தெரிந்து கொண்டு விளை யாடவும் வாய்ப்பு வழங்க வேண்டும். இளம் வளரும் குழந்தை பருவமாகிய 5 மதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உடற் கல்வி போதிக்கவும், விளையாட்டு பயிற்சி அளிக்கவும் உடற்கல்வி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். தற்போதைய கல்வி முறையில் உடற் கல்வி பாடமும், அதை கற் றுக்கொடுக்க உடற்கல்வி ஆசிரியரும் இல்லை. இந்த நிலை தொடராமல் இருக்க மாநில கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட வேண் டும்.

6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி பாடத்தை கட்டாயமாக்கி, 10ம் வகுப்பு பொதுத்தேர் வில் உடற்கல்வி பாடத் திற்கு 50:50 விகிதத்தில் எழுத்து தேர்வும், செய் வேண்டும். முறை தேர்வும் இடம் பெற செய்ய வேண்டும்.

அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும் உடற்கல்வி இயக்குனர் நிலை 2 பணி யிடம் வழங்க வேண்டும்.

தற்போதைய கல்வி முறையில் உடற்கல்வி பாடவேளை வாரத்திற்கு 2 மட்டுமே உள்ளது. இதை உயர்த்திதினமும் ஒரு உடற் கல்வி பாடவேளை ஒதுக்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு ஏக்கர் விளையாட்டு மைதானம் கட்டாயம் இருக்க வேண் டும். உயர்,மேல்நிலைப்பள் ளிகளில் 3 முதல் 5 ஏக்கர் அளவில் விளையாட்டு மைதானம் இருக்க வேண் டும். விளையாட்டு மைதா னம் பள்ளி வளாகத்தில் அல்லது அருகே அரசு ஏற் பாடு செய்ய வேண்டும்.

விளையாட்டு போட்டி களுக்கு செல்லும் மாண வர்களுக்கு பஸ் மற்றும் ரயில்களில் இலவசமாக செல்ல அனுமதி அளிக்க வேண்டும். அல்லது தனி யாக நிதி ஒதுக்கீடு செய்து உடற்கல்விக்கு மட்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். உடற்கல்வி பாடத்திட்டம், பாடக்கு றிப்புகளை அரசு வழங்க இவ்வாறு தெரிவித் துள்ளனர்.

Read More

Tuesday, July 26, 2022

விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஆர்வம் வேண்டும் – அமைச்சர்

July 26, 2022 0
படிப்பில் மட்டும் இல்லாமல் விளையாட்டிலும் மாணவர்கள் கலந்து கொண்டால் தான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சுறுசுறுப்பு அடைய முடியும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை சார்பாக உலகத் திறனாய்வு உடன் திறன் தெரிவுப் போட்டிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போன்ற துறைகளிலும், தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவரவே இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றார்.

விளையாட்டு என்று வரும் போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நாம் பலப்பட வேண்டும் என தெரிவித்த அவர், மாணவர்கள் அதை பெறும் போது சமூகமும் அதை பெறும் என கூறினார். விளையாட்டில் அதிகம் ஈடுபடும் போது, உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் சுறுசுறுப்பு அடைவதன் மூலம் படிப்பிலும் அதிக கவனம் செலுத்த முடியும்.

உலக திறனாய்வு உடற்திறன் தெரிவுபோட்டிக்கான செயலி இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த செயலி மூலம் மாணாக்கர்களின் திறன் கண்காணிக்கப்பட்டு அவர்களை தேர்வு செய்வதோடு, விளையாட்டு பயிற்சிக்கான செலவை பள்ளிக்கல்வி துறையே ஏற்கும் என்றும் அன்பில் மகேஷ் விளக்கமளித்தார்.
Read More

Friday, July 15, 2022

தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது

July 15, 2022 0
3½ வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு; உடற்கல்வி ஆசிரியர் கைது

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை டேவிட் நகரில் உள்ள தனியார் பள்ளியில் வஞ்சூவாஞ்சேரி பகுதியை சேர்ந்த தமிழரசு (வயது 28) உடற்கல்லி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படித்து வந்த 3½ வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த குழந்தையின் பெற்றோர் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தமிழரசுவை கைது செய்தனர்.
Read More

Sunday, July 10, 2022

2 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

July 10, 2022 0
2 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி மாணவா்களுக்கான குறுவட்ட, வருவாய் மாவட்ட, மாநில அளவிலான அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் வரும் ஜூலை 27 முதல் நடைபெறவுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், உடற்கல்வி ஆய்வாளா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசாணையின்படி கடந்த 2019-2020-ஆம் ஆண்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அதற்குப் பிறகு 2020-2021, 2021-2022 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளில் கரோனா காரணமாக விளையாட்டுப் போட்டிகளை நடத்த இயலவில்லை. தற்போது நிகழ் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் 14, 17, 19 வயது பிரிவில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தும் வகையில் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளையும் (குறுவட்டம் முதல் மாநில அளவில்), பல்வேறு நிலைகளில் (குடியரசு தின விளையாட்டு போட்டி, பாரதியாா் நாள் குழு, தடகள போட்டிகள் மற்றும் புதிய விளையாட்டுப் போட்டிகள்) நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிகள் அனைத்தையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், உடற்கல்வி ஆய்வாளா்கள் மூலம் உத்தேச செயல் திட்ட அட்டவணையின் அடிப்படையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காமலும், உரிய பாதுகாப்புடனும் நடத்த வேண்டும். 14, 17, 19 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு குறுவட்ட அளவிலான போட்டிகள் ஜூலை 27-இல் தொடங்கி ஆக.30-இல் நிறைவு பெறும். இதையடுத்து அதே வயதுக்கு உள்பட்டோருக்கான வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் செப்.2-இல் தொடங்கி அக்டோபா் 31-இல் முடிவடையும். இதையடுத்து அந்த மாணவா்களுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நவ.10-இல் தொடங்கி நவ.14-இல் நிறைவு பெறும்.

இதைத் தொடா்ந்து 19 வயதுக்கு உள்பட்ட மாநில அளவிலான குழுப் போட்டிகள் (பாரதியாா் நாள்) நவ.22-இல் தொடங்கி நவ.26-இல் முடிவடையும். இதையடுத்து 17 வயதுக்கு உள்பட்ட மாநில அளவிலான குடியரசு தின போட்டிகள் நவ.30 முதல் டிச.4 வரை நடைபெறும். இந்தப் போட்டிகளைத் தொடா்ந்து மாநில அளவிலான புதிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜன.3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடத்தப்படும். தொடா்ந்து பிப்.19-ஆம் தேதி வரை பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
Read More

Friday, April 29, 2022

Monday, April 25, 2022

9-ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாயப் பாடம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

April 25, 2022 0
தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்விப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

நாடு முழுவதும் உடற்கல்விப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்விப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, செய்முறை மற்றும் எழுத்து முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அனைத்து பள்ளிகளில் இரண்டு விளையாட்டுகள் கட்டாயமாக்கப்பட்டு, வாரத்தில் இரண்டு நாள்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்
Read More

Monday, September 6, 2021

நடுநிலைப்பள்ளிகளில் கணினி, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கிட வலியுறுத்தல்

September 06, 2021 0
நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்க ளின் எண்ணிக்கையை அதி கரிக்ககணினி, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கிட ஈரோட்டில் நடந்த தமிழ்நாடு பட்ட தாரி ஆசிரியர் கூட்டமைப் பினர் வலியுறுத்தி, தீர்மா னம் நிறைவேற்றியுள்ளனர்.

ஈரோட்டில் தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழுகூட்டம்நடந் தது.கூட்டத்திற்கு,கோவை மாவட்ட செயலாளர்மணி கண்டன் தலைமைதாங்கி னார். முன்னாள் மாநில தலைவர் ஆனந்த கணேஷ், மாநில பொருளாளர் தங்க வேலு, இணை செயலாளர் ஷசீனா பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தைரத்து செய்து, பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கி யதை போன்றே நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப் படிஉயர்வைமாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவர் களின் நலனை கருத்தில் கொண்டு அதிகளவில் கொரோனா குறித்த விழிப் புணர்வும், உளவியல் ரீதி யான பாதிப்புகளைகளைய நடவடிக்கை எடுக்க வேண் டும். அனைத்து நடுநிலை பள்ளிகளிலும் அலுவலக பணியாளர், கணினி ஆசி ரியர், உடற்கல்வி ஆசிரியர், அலுவலக உதவியாளர், தூய்மைபணியாளர் ஆகிய பணியிடங்களை உருவாக்கி நியமிக்கப்பட வேண்டும். காலிப் பணியிடங்கள் மற் றும்கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். ஒவ்வொரு நடுநிலை பள்ளியி லும் மாணவர்களின் எண் ணிக்கையை அதிகரிக்க கணிதஆசிரியர், அறிவியல் ஆசிரியர்,ஆங்கில ஆசிரியர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக் கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.இதில், மாவட்ட தலைவராகவீராகார்த்திக், மாவட்ட செயலாளராக நளினி, மாவட்ட பொரு ளாளராக சிவராமன், மாநில செயற்குழு உறுப் பினராக அருள் மற்றும் மாவட்டதுணை தலைவர்க ளாகதனகுமார், ஹாகிதா. இணை செயலாளர்களாக பாலகிருஷ்ணன், இந்துமதி, மாநில பொதுக்குழு உறுப் பினர்களாக பூபதி, சதீஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Read More

Post Top Ad

Your Ad Spot