Post Top Ad
Your Ad Spot
Showing posts with label Condolences. Show all posts
Showing posts with label Condolences. Show all posts
Saturday, April 2, 2022
Thursday, November 25, 2021
கரூர் பள்ளி ஆசிரியர் தற்கொலை: பிளஸ் 2 மாணவி சாவில் ெதாடர்பா? டைரியில் உருக்கமான தகவல்கள்
: கரூர் தனியார் பள்ளி ஆசிரியர் மாமனார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து ஆசிரியர் 2 பக்கம் எழுதி வைத்துள்ள டைரி சிக்கியுள்ளது. கரூர் மாவட்டம், குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் சரவணன்(44). கரூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் கூறுகையில், தற்கொலை செய்த ஆசிரியர் சரவணனின் டைரி ஒன்று அறையில் கைப்பற்றப்பட்டது. அதில், ஜெயந்தி (மனைவி) ஐ லவ் யூ. பிரணவ்குமார், ரக்சிதன் (மகன்கள்) ஐ மிஸ் யூ. அம்மா, அக்கா அனைவரையும் மிஸ் பன்னுறேன். ஜெயந்தி என்னை மன்னித்து விடு, என்னை மாணவர்கள் அனைவரும் தவறாக நினைக்கிறார்கள். மாணவர்களின் முன் அவமானமாக இருக்கிறது. எனக்கு வாழ ஆசை இல்லை.
நான் பள்ளிக்கு வந்தவுடன் மாணவன் என்னை தவறாக கூறுகிறான். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஏன் இப்படி கூறுகின்றனர் என்று தெரியவில்லை. மாணவர்களை கோபத்தில் திட்டி இருக்கிறேன். அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். நன்றாக படியுங்கள். ஐ மிஸ் யூ ஆல் என உருக்கமாக எழுதி வைத்துள்ளார் என்று தெரிவித்தனர். ஆசிரியர் சரவணன் பணியாற்றிய அதே பள்ளி பிளஸ் 2 மாணவிதான் கடந்த 19ம் தேதி ஆசிரியர் பாலியல் துன்புறுத்தலால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்போது ஆசிரியர் சரவணன் தற்கொலை செய்திருப்பதால் இவர்தான், அந்த மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட மற்றொரு நபரா? என விசாரணை நடக்கிறது.
கைதான ஆசிரியருக்கு 2 நாள் போலீஸ் காவல்
கோவை தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி, ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்த வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியிடம் மேலும் பல தகவல்களை சேகரிப்பதற்கு கோவை அனைத்து மகளிர் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அவரிடம் 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு கோவை நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தனர். அவரை 2 நாள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி நேற்று அளித்தார். அதன்படி அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். இதனிடையே ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கோர்ட்டில் இருந்து போலீசார் வெளியே அழைத்து வந்தபோது வாலிபர் ஒருவர், அவரை நோக்கி, ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பியபடி பாய்ந்து வந்தார்.
Saturday, November 13, 2021
மாணவி தற்கொலையில் நீடிக்கும் மர்மம்: மாணவர்கள் போராட்டம்
'பள்ளி மாணவி தற்கொலையில் பல்வேறு மர்மங்கள் நீடிப்பதால், போலீசார் உரிய விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும்' என, பெற்றோர் சக மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுபிளஸ் 2 மாணவி நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டுதற்கொலை செய்துக் கொண்டார். மாணவி தற்போது மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவர் இதற்கு முன் ஆர். எஸ். புரத்தில் உள்ள தனியார்
பள்ளியில் பிளஸ் 1 படித்தார்.
தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக இருந்த மிதுன் சக்கரவர்த்தி, 35, தற்கொலைக்கு காரணம் என புகார் எழுந்த நிலையில், அவரை போலீசார் போக்சோ பிரிவில் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 26ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, மிதுன் சக்கரவர்த்தி உடுமலை சிறையில் அடைக்கப்பட்டார்.
மாணவி புகார் அளித்தும் சம்பந்தபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத, பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன், 52, மீதும் நேற்று போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலைக்கு முன், மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் வேறு இருவர் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். மற்ற இருவர் மீதும் போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை; அவர்களுக்கும்மாணவிக்கும் என்ன தொடர்பு, பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. கோஷமிட்டனர்
பள்ளி மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு, கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன் உறவினர்களும், மாணவர்களும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். மாணவியின் வீட்டின் முன்பும், மாணவர்கள், பொதுமக்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் அறிக்கை
கோவை மாணவியின் மரணம், மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும், வன்மமும், ஒரு உயிரை பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல், பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். ஆசிரியர்கள் தெய்வத்தை விட மேலானவர்கள் என்று நம் முன்னோர் கூறியுள்ளனர். தாய், தந்தைக்கு பின், மாணவர்களை காக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே, இத்தகைய கீழ்தரமான செயலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஆசிரியர் சமூகத்திற்கே அவப்பெயர். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளா
தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக இருந்த மிதுன் சக்கரவர்த்தி, 35, தற்கொலைக்கு காரணம் என புகார் எழுந்த நிலையில், அவரை போலீசார் போக்சோ பிரிவில் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 26ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, மிதுன் சக்கரவர்த்தி உடுமலை சிறையில் அடைக்கப்பட்டார்.
மாணவி புகார் அளித்தும் சம்பந்தபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத, பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன், 52, மீதும் நேற்று போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலைக்கு முன், மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் வேறு இருவர் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். மற்ற இருவர் மீதும் போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை; அவர்களுக்கும்மாணவிக்கும் என்ன தொடர்பு, பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. கோஷமிட்டனர்
பள்ளி மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு, கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன் உறவினர்களும், மாணவர்களும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். மாணவியின் வீட்டின் முன்பும், மாணவர்கள், பொதுமக்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் அறிக்கை
கோவை மாணவியின் மரணம், மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும், வன்மமும், ஒரு உயிரை பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல், பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். ஆசிரியர்கள் தெய்வத்தை விட மேலானவர்கள் என்று நம் முன்னோர் கூறியுள்ளனர். தாய், தந்தைக்கு பின், மாணவர்களை காக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே, இத்தகைய கீழ்தரமான செயலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஆசிரியர் சமூகத்திற்கே அவப்பெயர். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளா
Post Top Ad
Your Ad Spot
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
