KalviseithiDaily: Educational Minister

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Educational Minister. Show all posts
Showing posts with label Educational Minister. Show all posts

Tuesday, September 6, 2022

ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் உறுதி

September 06, 2022 1
ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் உறுதி

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை அமைச்சர்கள் சேகர்பாபு, மகேஷ் பொய்யாமொழி வழங்கினர். அருகில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி, பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர்.
ஆசிரி யர்களின் கோரிக்கைகளை படிப்படியாகதீர்த்து வைப் பது எங்கள் கடமை. ஆசி ரியர்கள் தங்கள் பணியை சிறப்பாக தொடர்ந்து செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல் வித்துறை அமைச்சர் மகேஷ் பொய் யாமொழி தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்து றையின் கீழ் உள்ள பள் ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர் கள் 393 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கள் வழங்கப்பட்டன.இதற் கான விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங் கில் நேற்று நடந்தது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய் யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன். இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் பங்கேற்று, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 342பேருக்கு டாக்டர்ராதா கிருஷ்ணன் விருதுகள், மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரியர்கள் 34, ஆங்கிலோ இந்தியப் பள்ளி ஆசிரியர் கள் 5. தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தத்துறை பள்ளிகள் 1, மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரி கள் 10 என மொத்தம் 393 பேருக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய் யாமொழி,சேகர்பாபு ஆகி யோர் வழங்கினர்.

அப்போது அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி. நல்லாசிரியர் விருது என்பதை டாக்டர் ராதா உறவு வேறுபட்டது. கிருஷ்ணன் விருது என்று மாற்றி அமைத்தவர் முன் னாள் முதல்வர் கலைஞர் தான். ஆசிரியர்கள் ஏங் கினால், வகுப்பறைகள் தூங்கும் என்று அண்ணா சொன்னார். ஆசிரியர் களை பொறுத்தவரை யில் அவர்களுக்கு தேவை

பள்ளிக் கல்வி துறைக்கு இயக்குநர் தேவை

தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, டிபிஐ வளாகத்துக்கு வரும் பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அதிக அளவில் என்னைத்தான் வந்து சந்திக்கின்றனர். அப்போது. ஆணையரை பார்க்க முடியவில்லை என்று கவலை தெரிவித்தனர்.

எனவே பள்ளிக் கல்வித்துறையில் முன்பு இருந் தது போல, பள்ளிக் கல்வி இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை தெரிவித்தனர். அடுத்தபடியாக, ஆசிரியர்களுக்கு அதிக அளவில் எழுத்து வேலை, புள்ளி விவரம் எடுக்கும் பணிதான் கொடுக்கப்படுகிறது. அதனால் அதைதவிர்த்து கற்றல் பணிக்கு நேரம் ஒதுக்கவும் கோரிக்கையாக வைத்து இந்த 2 கோரிக்கைகளையும் நீங்கள் தான் அமைச்சருக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதனால் பள்ளிக் கல்வி அமைச்சர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்,
Read More

Thursday, May 12, 2022

ஆசிரியர்களிடமும், வகுப்பிலும் எல்லை மீறினால் மாணவர்கள் பள்ளியில் இருந்து ‘டிஸ்மிஸ்’: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை

May 12, 2022 0
மாணவர்கள் பள்ளியில் இருந்து ‘டிஸ்மிஸ்’

பள்ளிகளில் ஏற்கெனவே தவறு செய்த மற்றும் சேட்டைகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி பள்ளிகளில் மாணவர்களின் தவறுகள் எல்லை மீறினால் அவர்கள், பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், ‘குழந்தைகள், வளரிளம் பெண்களுக்கான வளர்ந்து வரும் கல்வி’ குறித்த கருத்தரங்கு நேற்று நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

சமூக பொருளாதார பின்னடைவுகள் மாணவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தவறான தாக்கத்தை போக்க வேண்டும். கொரோனாவுக்கு பின் வகுப்பறைக்கு வரும் மாணவர்களை எப்படி கையாள்வது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொள்ளும் நிகழ்வுகளை தவிர்க்க பல்வேறு நிகழ்ச்சிகள், நன்னெறி வகுப்புகள் உளவியல் சார்ந்த ஆலோசனைகள் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை

பல மாவட்டங்களில் ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொண்ட போதும், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் மாற்றுச் சான்று வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இனி பள்ளி வளாகத்தில் மாணவர்களின் செயல்பாடுகள் எல்லைமீறிச் செல்லும் போதுதான் மாற்றுச் சான்று (டிசி) அளிக்கப்படும். அவர்கள் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இனி மாணவர்கள் எவ்வித தவறான செயல்களிலும் ஈடுபடக் கூடாது. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தேர்வு தேதி கல்வியாண்டு தொடக்கத்தில் அறிவிப்பு:

அமைச்சர் மேலும் கூறியதாவது, அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி, வகுப்புகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தொடங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். பொதுத் தேர்வுகள் முடிந்த பிறகு மாணவர் சேர்க்கை தொடங்கும். வரும் கல்வி ஆண்டில் தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
Read More

Saturday, April 23, 2022

மூர்க்கமான மாணவர்களை ஆசிரியர்கள் தான் திருத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

April 23, 2022 1
பள்ளிகளில் மூர்க்கமாக நடக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் தான் திருத்த வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த இளம் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க மாநாட்டில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சி முடிவில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், பள்ளியில் மாணவர்கள் மூர்க்கமாக நடப்பது குறித்து பத்திரிக்கையாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே என்ற பாடலை மேற்கோள் காட்டினார்.

' மூர்க்கமாக நடந்து கொள்ளும் மாணவர்களை ஆசிரியர்கள் தான் திருத்த வேண்டும்'. ஆசிரியர்களுக்கும் மாணவர்களை வழிநடத்த பயிற்சி தேவை' இவ்வாறு அமைச்சர் பேசினார்
Read More

Saturday, March 19, 2022

ஆசிரியர் பணியிடம் நிரப்ப கல்வி அமைச்சர் உறுதி

March 19, 2022 0
''கர்நாடகாவில் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும்,'' என தொடக்க மற்றும் உயர் கல்வி துறை அமைச்சர் நாகேஷ் கூறினார்.

இதையும் படிக்க | Budget Speech for the year 2022-2023 - Tamil - PDF

இது குறித்து அவர் கூறியதாவது:கர்நாடகாவில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி கொடுத்துள்ளது. மொத்தம் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அரசாணை வரும் 21ல் வெளியிடப்பட உள்ளது. வரும் 23 முதல் ஏப்ரல் 22 வரை விண்ணப்பம் அனுப்பலாம். பி.எட்., - டி.இ.டி., படித்த இன்ஜினியரிங் மாணவர்களுகளுக்கும் இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படும்.வயது வரம்பும் இரண்டு ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி எஸ்.சி., - -எஸ்.டி., பிரிவினருக்கு 47; பிற்படுத்தப்பட்டோருக்கு 45; பொதுப்பிரிவினருக்கு 42 எனவும் வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Monday, January 17, 2022

"ஜன.31 வரை விடுமுறை" - "விடுமுறையாக கருத வேண்டாம்" - அமைச்சர் அன்பில்மகேஷ்

January 17, 2022 0
Read More

Monday, December 20, 2021

விழுப்புரம் மண்டலத்திற்கு ஆய்வுக்கூட்டம் மாற்றம் - பள்ளிக்கல்வி அமைச்சர்

December 20, 2021 0
வரும் 22,23, ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த விழுப்புரம் மண்டல பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தேதியில் திருநெல்வேலி மண்டலத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்
Read More

Tuesday, December 14, 2021

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ்

December 14, 2021 0
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். மேலும் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Read More

மாணவர்களே அப்படி செய்யாதீங்க.! பார்த்தாலே பயமா இருக்கு.. அன்பில் மகேஷ் எச்சரிக்கை .!!

December 14, 2021 0
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி மாணவ மாணவிகள் படியில் பயணம் செய்தால் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் மீது நடவடிக்கை ஏற்கனவே எடுத்திருக்கிறார்கள்.

பள்ளிக்கு குழந்தைகள் வரும் போது பாதுகாப்பாக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம், வீட்டுக்கு செல்லும்போதும் அவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறோம். வெளியில் கேட்டில் நின்று மாணவர்களை உள்ளே வர வளைத்து கதவை மூடுகின்ற வரை நாங்கள் அவர்களை கட்டுபடுத்துகிறோம், ஆனால் உள்ளே வந்ததற்கு பிறகு நம்முடைய ஆசிரியர் மக்கள் மூலமாக அவர்களுக்கு அறிவுரை கண்டிப்பாக வழங்கப்படவேண்டும். ஏனென்றால் இளங்கன்று பயமறியாது என்பது போன்று பேருந்துகளில் அவர்கள் தொங்கிக் கொண்டு வருவதை பார்த்தால் அவ்வளவு பயமாக இருக்கிறது. ஆனால் அந்த குழந்தைகளுக்கு நாம் சொல்வது என்னவென்றால் முதலில் வகுப்பறையில் தனித்தனியாக அமர்வது முக்கியம் கிடையாது, அதை நீங்கள் பேருந்திலும் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால் இன்றைக்கு அந்த மாணவர்களிடம் கண்டிப்பாக இதுபோன்ற அபாயங்களை எடுக்க கூடாது என்பது தான் சொல்கிறோம். இனி வருங்காலத்தில் ஆசிரியர்கள் மூலமாக உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

ஆசிரியர்களை விகிதப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 1:21 லெவலுக்கு கொண்டு வந்துருக்கோம், ஆசிரியர்கள் இருக்கிறார்கள், எங்கெல்லாம் அதிகம் தேவைப்படுகிறது. நான் நினைக்கிறேன் சில பள்ளிகளில் 300 பேர் சேருகிறார்கள், சில பள்ளிகளில் 10 பேர் சேருகிறார்கள் இது போன்று ஒரு விகிதம் இருக்கிறது. கண்டிப்பாக இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு எவ்வளவு தேவையோ அவ்வளவு உறுதி செய்து அதற்கான இடங்களில் நிரப்பப்படும். பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்குவது குறித்து போக்குவரத்து துறையிடம் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
Read More

Thursday, December 2, 2021

உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு

December 02, 2021 0
உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உயர் கல்வி அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில் கடிதம் அனுப்பியுள்ளார்.
Read More

Tuesday, November 30, 2021

சேதமடைந்த பள்ளி கட்டிடம் இடிக்க நோட்டீஸ்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

November 30, 2021 0
தமிழகம் முழுவதும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் அனுப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் 469 குடும்பங்களுக்கு அரசு சார்பில் பாத்திரம், உடைகள், இலவச காஸ் சிலிண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: 2015க்கு பிறகு தமிழகத்தில் தற்போது பெரிய அளவு மழை பெய்துள்ளது. இந்த மழையினால் தண்ணீர் தேங்கியுள்ள பள்ளிகளை கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகவும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கும் பொதுப்பணித்துறை அமைச்சகத்திடமிருந்து விவரம் கேட்கப்பட்டுள்ளது. அவற்றை இடிக்க நோட்டீஸ் தரப்படும். மேலும் சேதமடைந்துள்ள நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களில் மாணவ, மாணவிகள் அமர்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Monday, November 29, 2021

பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு - பள்ளிக் கல்வி அமைச்சர் தகவல்

November 29, 2021 0
2015 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய மழை பாதிப்பை சந்தித்துள்ளோம். எனவே பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. சேதமான கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
Read More

Wednesday, November 24, 2021

மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உரையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

November 24, 2021 0
திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாடினார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காஞ்சீபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வகுப்பறைகள், காணொலி காட்சி வகுப்பறைகள், கணினி வகுப்பறை உள்ளிட்டவைகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களோடு மாணவர்களாய் தரையில் அமர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் படிப்பதை ரசித்து பார்த்து, அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் பள்ளியை மேலும் தரம் உயர்த்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆய்வகம் திறப்பு

இதையடுத்து உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் உள்ள அரசினர் மாதிரி மேல்நிலை பள்ளியில் குழந்தை விஞ்ஞானிகள் ஆய்வகத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார். அப்போது மாணவ-மாணவிகள் தங்களது கண்டுபிடிப்புகளின் சிறப்பம்சங்கள் குறித்து அமைச்சரிடம் விளக்கி கூறினர்.

சுழற்சி முறை வகுப்புகள் தொடரும்

சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறுகையில், ‘பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே தினமும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சுழற்சி முறை வகுப்புகள் அடிப்படையில் தான் வரவழைக்கப்படுகின்றனர். அதனை இப்போது நிறுத்த முடியாது. கொரோனா தொற்று முழுவதும் குறைந்தவுடன் சுழற்சி முறை வகுப்புகள் கைவிடப்படும்' என்றார்.
Read More

தமிழகத்தில் புதிதாக 5.80 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் – அன்பில் மகேஷ்

November 24, 2021 0
* பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் ஒட்டப்படும் என அன்பில் மகேஷ் தெரிவிித்தார்.

மேலும்,

* மாணவர்கள் புகார் தெரிவிக்க 1098, 14417 ஆகிய உதவி எண்கள் அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும்.

* தமிழகத்தில் புதிதாக 5.80 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

* அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

* பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடரும்.

* பொதுத் தேர்வு என்பதால் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வர கூறப்பட்டுள்ளது

* கொரோனா தொற்று குறைந்தவுடன் மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் சுழற்சி முறை வகுப்புகள் கைவிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
Read More

பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை - அமைச்சர் அன்பில் மகேஷ்

November 24, 2021 0
பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க மாவட்டம் தோறும் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சுழற்சி முறையில் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க முடிவு.
Read More

Tuesday, November 23, 2021

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்: அமைச்சர் விளக்கம்

November 23, 2021 0
10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

பொதுத்தேர்வுகள் கடந்த ஆண்டைப் போலவே மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் எனவும், வினாத்தாள்கள் வடிவமைப்பில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படாது என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை.

தற்போதய நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அமரவைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகிறது. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உள்ளதால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 5.80 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 8.75 லட்சத்துக்கு மேல் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.
Read More

Tuesday, November 16, 2021

விரைவில் நீரிழிவு நோய்க்கான பட்டப்படிப்பு

November 16, 2021 0
உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவக் கல்லூரிகள் இணைந்து நடத்திய நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நீரிழிவு குறித்த விழிப்புணர்வு கையேட்டினையும், ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் புதியதாக நீரிழிவுநோய் பாத பராமரிப்பு பிரிவு தொடங்கி வைத்தனர். தேர்வு செய்யப்பட்ட 10 நீரிழிவு நோயாளிகள் மற்றும் 5 கர்ப்பகால நீரிழிவு நோய் உடைய கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சர்க்கரை அளவை பரிசோதிக்கும் கருவி குளுக்கோமீட்டர், மற்றும் 6 பொருட்கள் அடங்கிய நீரிழிவு நோயாளிகளுக்கான பாத பராமரிப்பு பெட்டகத்தினை வழங்கினர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் மட்டும் 7.7 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 8 முதல் 10 சதவிகிதம் வரை மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவிலேயே முதன்முறையாக நீரிழிவு நோய்க்கென்று தனித்துறை சென்னையிலுள்ள ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் 1976ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலாம் வகை நீரிழிவு நோயாளிகள் டைப்-1 நீரிழிவு மெல்லிட்டஸ் விலையில்லா இன்சுலின் மருந்து வழங்கும் திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலாக நம் மாநிலத்தில்தான் தொடங்கப்பட்டது. உலக நீரிழிவுநோய் தினம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது.

சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு மக்களின் விழிப்புணர்வுக்காக ஒரு கருப்பொருள் வெளியிடுகிறது. இந்த ஆண்டு 2021க்கான தலைப்பு நீரிழிவு சிகிச்சைக்கான வசதி வாய்ப்புகள் ஆகும். இதுவரை நீரிழிவு நோய்க்கு பட்டயப்படிப்பு மட்டுமே இருந்து வருகிறது. நீரிழிவு நோய்க்கு பட்டப்படிப்பு பயில்வதற்கு முதல்வரின் ஆலோசனையின்படி, ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற்று விரைவிலேயே நீரிழிவு நோய்க்கு பட்டப்படிப்பு பயில்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Monday, November 15, 2021

அரசுப் பள்ளிகளில் உயர்ந்துவரும் மாணவர் சேர்க்கை: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

November 15, 2021 0
அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கோவை ஷாஜகான் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசு, இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, “பெற்றோருடன் நேரம் செலவிடுவதை காட்டிலும், ஒரு மாணவர் அதிகநேரம் பள்ளியில் செலவிடுகிறார். ஒவ்வோர் ஆசிரியரும் மாணவர்கள் மீது காண்பிக்கும் கண்டிப்பு அனைத்தும், அவர்களின் நலனுக்காகவே என்பதை மாணவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

மாணவர்களை மதிப்பெண்களைக் கொண்டு பிரிப்பது என்பது சரியானது அல்ல. ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு துறையில் சிறந்தவராகவும், நுணுக்கமான அறிவு கொண்டவராகவும் விளங்குவர். மாணவர்களுக்குள் ஒளிந்திருக்கும் திறனை அடையாளம்கண்டு வெளிக்கொணர்வது ஆசிரியரின் கடமையாகும். அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல.அவை பெருமையின் அடையாள மாக மாறியுள்ளது. தற்போது ஏழை, எளிய மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்குவதை உறுதியேற்று பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது” என்றார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது, “இந்த காலகட்டத்தில் பணிச்சுமையின் காரணமாக பெற்றோர் குழந்தைகளுடன் பேசும் நேரம் குறைந்து போகிறது. குழந்தைகளின் நலன் எதுவும் பாதிக்காத விதத்தில் பெற்றோர் அக்கறையுடன் செயல்பட வேண்டியது அவசியம்” என்றார். இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, தொடக்க கல்வி இயக்குநர் க.அறிவொளி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ந.கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Read More

Tuesday, September 21, 2021

தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்குஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் தகவல்

September 21, 2021 0
தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.


சென்னை மந்தைவெளியில் உள்ள தனியாா் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரக்கன்றுகளை செவ்வாய்க்கிழமை நடவு செய்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:


தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் நிலையை தொடா்ந்து கவனித்து வருகிறோம். நிச்சயம் இறுதியில் வெற்றி அடைவோம். கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தோ்வுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது. ஆனால் முறையாக அதைக் கவனிக்கவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளவற்றை முழுமையாக ஆய்வு செய்து நீட் தோ்வில் இருந்து விலக்கு பெற முதல்வா் உரிய நடவடிக்கை எடுப்பாா்.


தமிழகத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவா்களில் 35 சதவீதம் போ் அரசுப் பள்ளி மாணவா்கள். ஆனால் அவா்களில் 6 சதவீதம் போ் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் நுழையும் சூழ்நிலை தற்போது உள்ளது. எனவே இதனை அதிகப்படுத்தவே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதேபோன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கை தொடா்ந்து இருந்து வருகிறது. இது குறித்து முதல்வா் முடிவெடுப்பாா்.


பள்ளிக் கல்வியில் தமிழ் வழியில் பயிலும் மாணவா்கள் உயா்கல்விக்குச் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். காரணம் உயா்கல்வி பெரும்பாலும் ஆங்கில வழியில் இருக்கிறது. எனவே அந்த மாணவா்கள் பயனடையும் வகையில் பள்ளிப் பருவத்திலேயே அவா்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி (‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’) வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அவா்.
Read More

Saturday, September 18, 2021

நீட் தோ்வு எழுதியோரில் இதுவரை 10,000 பேருக்கு மன நல ஆலோசனை

September 18, 2021 0
நீட் தோ்வு எழுதிய மாணவா்களில் 10 ஆயிரம் பேருக்கு இதுவரை மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.


சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீட் தோ்வு மன அழுத்த ஆலோசனைக்கான 104 சேவை மையத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் ஆகியோா் அப்போது உடன் இருந்தனா். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:


நீட் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு மன நல ஆலோசனை வழங்கும் திட்டம் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதுவரை மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.


இதற்காக சென்னையில் மட்டும் 60 மனநல ஆலோசகா்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனா். ஒவ்வொருவரும் சாதுரியமாகவும், பொறுமையாகவும் நீட் தோ்வு எழுதிய மாணவா்களிடம் பேசுகின்றனா். அதை நாங்கள் நேரடியாக ஆய்வு செய்தோம்.


மேலும் மாணவா்களில் ஒரு சிலா் தங்களுடைய பெற்றோா்கள் தான் எங்களை மருத்துவா்களாக ஆக்க வேண்டும் என்று நிா்பந்திப்பதாகத் தெரிவிக்கின்றனா். இதையடுத்து மனநல ஆலோசகா்கள் பெற்றோா்களிடம் பேசி புரிய வைக்கின்றனா்.


குறிப்பாக மாணவா்களுக்கு தோ்வு குறித்த அழுத்தம் தராமல் மன தைரியத்தை தரவேண்டும் என்று அவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.


இத்தகைய மன நல ஆலோசனைத் திட்டத்தைக் கொண்டு வந்து மாணவா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தின் நலனைக் காப்பதற்காக நன்றி தெரிவிப்பதற்கும் பல்வேறு அழைப்புகள் சேவை மையத்துக்கு வருகின்றன.


தமிழகத்தில் நீட் தோ்வு எழுதிய 1 லட்சத்து 10, 971 பேரிடமும் தொலைபேசி வாயிலாக பேசி சில புரிதல்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதுமட்டுமல்லாது அவா்களது பெற்றோரிடத்திலும் பேசி அவா்களுக்கு உள்ள மன அழுத்தத்தைப் போக்க வேண்டியதும் அவசியமாகிறது.


அடுத்த 15 நாள்களுக்குள் அனைத்து மாணவா்களுக்கும் மன நல ஆலோசனை வழங்க முடியும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.
Read More

புதிய கல்லூரிகளுக்கான பணிகள் இந்த ஆண்டுக்குள் தொடக்கம்

September 18, 2021 0
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 10 இடங்களில் புதிய கல்லூரிகளுக்கான பணிகள் இந்த ஆண்டுக்குள் தொடங்கும் என்று துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.


இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 10 புதிய கல்லூரிகள், ஒரு சித்த மருத்துவமனை தொடங்குவதற்கான பணிகள் குறித்து கல்வியாளா்களுடன் ஆலோசனைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேசியது:


தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமாக 36 பள்ளிகள், 5 கல்லூரிகள் மற்றும் ஒரு தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகின்றன. சட்டப் பேரவை மானியக் கோரிக்கையின் போது, இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் சென்னை கொளத்தூா், கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, வேலூா் அணைக்கட்டு, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திருச்சி மாவட்டம் லால்குடி, தென்காசி மாவட்டம் கடையம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகிய 10 இடங்களில் புதிதாக கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பழனியில் சித்த மருத்துவமனை தொடங்கப்படும் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.


இதன் தொடா்ச்சியாக, அந்தப் பகுதியைச் சோ்ந்த நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்கள், கல்வியாளா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கான பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடக்க வேண்டும். இந்து சமய அறநிலையத் துறையில் முதன் முதலாக சிறந்த கல்வியாளா்களைக் கொண்டு கல்விக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவா்களுடைய ஆலோசனையின் பேரில் கல்வி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கல்லூரியில் மேற்படிப்பு படிக்க இயலாத மாணவ, மாணவிகள் நலனைக் கருத்தில் கொண்டு புதிய கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. கல்லூரி தொடங்குவதற்கான இடம் தோ்வு, உள்கட்டமைப்பு மேம்பாடு, அடிப்படை வசதிகள், ஆசிரியா் நியமனம், மாணவா் சோ்க்கை உள்ளிட்ட பணிகளை மக்கள் நல பிரதிநிதிகள் துரிதப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா்.


இந்தக் கூட்டத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
Read More

Post Top Ad

Your Ad Spot