ஆய்வகம் திறப்பு
இதையடுத்து உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் உள்ள அரசினர் மாதிரி மேல்நிலை பள்ளியில் குழந்தை விஞ்ஞானிகள் ஆய்வகத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார். அப்போது மாணவ-மாணவிகள் தங்களது கண்டுபிடிப்புகளின் சிறப்பம்சங்கள் குறித்து அமைச்சரிடம் விளக்கி கூறினர்.
சுழற்சி முறை வகுப்புகள் தொடரும்
சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறுகையில், ‘பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே தினமும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சுழற்சி முறை வகுப்புகள் அடிப்படையில் தான் வரவழைக்கப்படுகின்றனர். அதனை இப்போது நிறுத்த முடியாது. கொரோனா தொற்று முழுவதும் குறைந்தவுடன் சுழற்சி முறை வகுப்புகள் கைவிடப்படும்' என்றார்.

No comments:
Post a Comment