தமிழகத்தில் இன்று 11-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இன்று 11-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம்

சென்னை தமிழகம் முழுவதும் இன்று 11 வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

தமிழகத்தில் ஞாயிறுதோறும் நடந்துவந்த மெகா கரோனா தடுப் பூசி முகாம், கடந்த வாரம் முதல் கூடுதலாக வியாழக்கிழமையும் நடத்தப்படுகிறது. இதுவரை 10 மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் இதுவரை 76 சத வீதத்தினர் முதல் தவணை தடுப் பூசியும், 40 சதவீதத்தினர் 2 தவணைதடுப்பூசியையும் செலுத் திக் கொண்டுள்ளனர். இந்நிலை யில், 11-ம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் இன்று (நவ.25) நடக்கவுள்ளது. 2-ம் தவணை செலுத்தாமல் உள்ள 70 லட்சம் பேர் இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment (0)
Previous Post Next Post