டிப்ளமோ படித்தவர்களுக்கு மட்டுமே இளநிலை வரைதொழில் அலுவலர் பணி

தமிழக நெடுஞ்சாலைத்துறை பட் டய பொறியாளர் சங்க பொதுச்செயலாளர் மாரி முத்து முதல்வர் மு.க.ஸ்டா லினுக்கு எழுதியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக அர சின் நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடம் பொறியியல் பட்டய (டிப்ளமோ) கல்வி தகுதி அடிப்படையில் உள்ளது.

திமுக ஆட்சியில் இப்ப ணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பபட்டது. அதி முக ஆட்சியில் இப்பணியி டத்தை தமிழக அரசு பணி யாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப விதி திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்வாணையம் காலிப்ப ணியிடத்தை நிரப்ப கடந்த செப்டம்பர் 18ம் தேதியில் தேர்வு நடத்தியுள்ளது. இத்தேர்வில் 12ம் வகுப்பு முடித்து டிப்ளமோ படிக் காமல் நேரடியாக பட்டம் படித்தவர்கள் இத்தேர்வை எழுதியுள்ளது விதிக்கு முரணானது.

எனவே, நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடத்துக்கு கடந்த 18ம் தேதி நடந்த தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து முறையாக டிப் ளமோ பொறியியல் கல்வி தகுதியில் உள்ளவர்கள் மட் டுமே பங்கேற்கும் வகையில் தேர்வு நடத்த அரசு பணி யகாளர் தேர்வாணையத் திற்கு தெளிவுரை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள் கிறோம்.
Post a Comment (0)
Previous Post Next Post