KalviseithiDaily: Corruption

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Corruption. Show all posts
Showing posts with label Corruption. Show all posts

Tuesday, July 5, 2022

மருத்துவ மேற்படிப்பு நிர்வாக ஒதுக்கீட்டில் முறைகேடு - 6 மாதங்களுக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

July 05, 2022 0
மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தேர்வுக்குழுவின் முன்னாள் செயலாளர் மீதான துறை ரீதியான நடவடிக்கையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பில் கடந்த 2020-21ம் கல்வியாண்டுக்கு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் 113 காலியிடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறி மருத்துவர்கள் சந்தோஷ்குமார், கீதாஞ்சலி ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேர்வுக்குழுவின் அப்போதைய செயலாளர் செல்வராஜன் தான் இதற்கு காரணம் என சிபிசிஐடி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர் உள்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து செல்வராஜன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செல்வராஜன் மற்றும் அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் கல்லூரிகள்தான் அதிக கட்டணம் வசூலித்தன. ஆனால், தேர்வுக்குழு செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அதில், கலந்தாய்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரிதான். முன்னாள் செயலாளர் செல்வராஜன் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீதான துறைரீதியான நடவடிக்கையை அரசு 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அவருக்கு சேரவேண்டிய ஓய்வூதிய பலன்களை நிறுத்திவைக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
Read More

Sunday, July 3, 2022

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு - உயர்நீதிமன்ற உத்தரவு

July 03, 2022 0
The High Court has ordered that the CBCID inquiry into the medical student admissions malpractice case will go ahead. The former Secretary of the Selection Board appealed and the Madras High Court closed the case. In the ongoing case, it has been ordered that the students were admitted without proper consultation in 2020-21. The Chief Justice of the High Court has ordered the departmental inquiry to be completed within 6 months.

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வுக்குழு முன்னாள் செயலாளர் மேல்முறையிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்ததுள்ளது. 2020-21ல் முறையாக கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தியதாக தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. துறை ரீதியான விசாரணையை 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளார்.
Read More

Thursday, May 26, 2022

உஷார்! MBBS சீட் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

May 26, 2022 0
MBBS சீட்

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகாரை சேர்ந்த ஒரு கும்பல் நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு போன் செய்து எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருகிறேன் என்று கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறி உள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அந்த மாணவிக்கு போன் செய்த பீகாரை சேர்ந்த அசோக் என்பவர் உங்களுக்கு எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித்தருகிறேன். ரூ.10 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளார்.

மாணவியின் குடும்பத்தினரும், அவரது பேச்சை நம்பி ஆன்லைன் மூலம் அசோக் கணக்கிற்கு ரூ.10 லட்சம் அனுப்பி வைத்தனர். பெங்களூரில் உள்ள கெம்பெகவுடா மெடிக்கல் சயின்சஸ் கல்லூரியில் சீட் நிச்சயம் கிடைத்துவிடும் என்று அசோக் அவர்களிடத்தில் உறுதி அளித்துள்ளார். ரூ.10 லட்சம் மோசடி

அதனை நம்பி சிறிது நாட்கள் மாணவியின் குடும்பத்தினர் காத்திருந்தனர். பின்னர் அசோக்கை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையிலே இருந்துள்ளது.

தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த மாணவியின் குடும்பத்தினர், ஐதராபாத் போலீசில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர். புகாரைப் பெற்று கொண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் அசோக்கை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அவருடன் சேர்ந்து இந்த மோசடி கும்பலில் மேலும் 6 பேர் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்கள் அனைவரிடமும் இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளின் அடையாள அட்டைகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இங்கு மோசடி செய்த பின் நேபாள அடையாள அட்டையை பயன்படுத்தி அங்கு சென்று பதுங்கி கொள்வது வழக்கம். கும்பலைச் சேர்ந்த மேலும் 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்
Read More

Friday, April 22, 2022

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி; ரூ.10 லட்சம் வசூல் வேட்டை

April 22, 2022 0
18 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 150க்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ.10 லட்சம் வசூல் வேட்டை பெரம்பலுார்,ஏப்.22- பெரம்பலுார் மாவட்டத்தில் காலியாக உள்ள 18 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 150க்கும் மேற்பட்டோரிடம் தலா 10 லட்சம் ரூபாய் வீதம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலுார் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில், 18 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதை நிரப்ப 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 30 வயது உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கு, சுமார் 400 பேர் விண்ணப்பித்திருந்தனர்.இதற்கான இன்டர்வியூ கால்நடை பராமரிப்புத்துறை பெரம்பலுார் மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் இன்று ஏப்., 22 வரை நடக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தி.மு.க., எம்.எல்.ஏ., ஆளும் கட்சியின் மாவட்ட செயலர், ஒன்றிய செயலர், மற்றும் முன்னாள், இந்நாள் அமைச்சர், எம்.எல்.ஏ. எம்.பி., உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட தங்கள் பகுதியை சேர்ந்த தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை நேரில் அணுகி, தங்களுக்கு வேலை வாங்கித் தர கோரிக்கை விடுத்து விடுகின்றனர். இவர்களிடம், ஆளும் கட்சிகளை சேர்ந்த சில நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இப்பணிக்கு 10 லட்சம் ரூபாய் விலை நிர்ணயித்து வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொகை விண்ணப்பதாரர் மற்றும் நிர்வாகிகளுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. 18 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் ஆளும் கட்சியினர் சுமார் 150க்கும் மேற்பட்டோரிடம் தலா 10 லட்சம் ரூபாயை வேலை வாங்கித் தருவதாக அவர்களுக்குக் உத்தரவாதம் கொடுத்து வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் இப்பணிக்கு விண்ணப்பித்துள்ளவர்களும் வேலை கிடைத்தால் போதும் என 10 லட்சம் வரை லஞ்சமாக கொடுத்து வேலை வாங்குவதற்கான நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆளும் கட்சியினரும் தீவிர வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
Read More

Friday, January 21, 2022

சென்னைப் பல்கலை. தேர்வில் முறைகேடு: விசாரணை குழு தலைவர் நியமனம்

January 21, 2022 0
சென்னைப் பல்கலை. தேர்வில் முறைகேடு: விசாரணை குழு தலைவராக சிண்டிகேட் குழு உறுப்பினர் சொக்கலிங்கம் நியமனம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதாமல் சான்றிதழ் பெற முயன்றது தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என துணைவேந்தர் தெரிவித்துள்ளார். விசாரணை குழுவின் தலைவராக சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு உறுப்பினர் சொக்கலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வியில் பயின்றதாக தேர்வு எழுதாமல் சான்றிதழ் பெற முயற்சித்ததாக புகார் எழுந்ததையடுத்து, 117 பேர் தேர்வு எழுதாமல் முறைகேடாக சான்றிதழ்களை பெற முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் விசாரணை நடைபெறுகிறது.
Read More

Thursday, December 9, 2021

வேளாண் பல்கலை. தேர்வு முடிவுகளில் குழப்பங்கள்!

December 09, 2021 0
வேளாண் பல்கலை. தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு அரசு தீர்வு காண வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட மறுதேர்வு முடிவுகளில் 90 விழுக்காடு மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், 2018, 2019, 2020 ஆகிய கல்வி ஆண்டுகளில் பயின்ற மாணவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இணையவழி மறுதேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி பெரும்பாலான மாணவர்களைத் தோல்வி அடைந்ததாக அறிவித்துள்ள பல்கலைக்கழகத்தின் செயல் கொடுங்கோன்மையானது. ஏற்கனவே மூன்று ஆண்டுகள் தாமதமாகத் தேர்வுகள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது தேர்வுத்தாள்களைத் திருத்தாமலே மீண்டும் மாணவர்கள் தோல்வி என அறிவித்திருப்பது மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

எவ்வித முறையான வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லாமல் இணைய வழியில் பாடங்களை நடத்திவிட்டு, தேர்வுகளை நடத்துவதற்கு மட்டும் ஏராளமான கட்டுப்பாடுகளை விதிப்பதும் அவற்றில் ஏதேனும் சிறு பிழை நேர்ந்தாலே கடும் தண்டனைக்கு உள்ளாக்குவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. மேலும் பல்கலைக்கழகத்தால் இணையவழி தேர்வுக்காக உருவாக்கப்பட்ட தேர்வுச்செயலியில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படுவதாக மாணவர்கள் பலமுறை புகாரளித்தும் அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தேர்வுகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களுக்கு மாணவர்களைப் பலிகடாவாக்குவதும் பல்கலைக்கழகத்தின் அலட்சியப்போக்கையே வெளிக்காட்டுகிறது. உண்மையிலேயே தேர்வில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் பல்கலைக்கழகம் கருதினால் நடைபெற்ற தேர்வினை முழுமையாக இரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக தேர்வு நடத்தியிருக்கலாம். அதைவிடுத்துத் தேர்வு எழுதிய 90 விழுக்காடு மாணவர்களைச் செய்முறைத் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாதவர்கள் என அறிவிப்பது மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் கொடுஞ்செயலாகும்.

ஆகவே வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மறுதேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு கண்டு மாணவர் நலன் காக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Read More

Monday, December 6, 2021

மத்திய அரசு பள்ளியில் வேலை வாங்கி தருவதாக மோசடி

December 06, 2021 0
செங்கல்பட்டு மாவட்டம் பெரிய நத்தம் கெங்கையம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி வேதவள்ளி. செங்கல்பட்டு அனுமந்தபொத்தேரி பகுதியை சேர்ந்த சரவணனும், லோகநாதனும் நண்பர்கள். ஆசிரியர் படிப்பு முடித்த வேதவள்ளி அரசு பள்ளி வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில், சரவணனுக்கு, சென்னை தண்டையார்பேட்டை பிரின்ஸ் வில்லேஜ் பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் ரவிக்குமார் (50) என்பவரது தொடர்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, ரவிக்குமார் சரவணனிடம், ‘‘இந்தியா முழுவதும் செயல்படும் மத்திய அரசு பள்ளிகளான கேந்திர வித்யாலாயா பள்ளியில் ஆசிரியர் மற்றும் அலுவலக பணிக்கு ஆட்கள் எடுப்பதாகவும், கேந்திர வித்யாலாயா பள்ளி தலைமை நிர்வாகத்தில் எனக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும், யாரேனும் ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள். நான் கேந்திர வித்யாலாயா பள்ளியில், இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது கட்டாயமாக வேலை வாங்கி தருகிறேன். அதற்கு பணம் செலவாகும்.’’ என ஆசைவார்த்தை கூறினார். அதில் மயங்கிய சரவணன், லோகநாதனிடம் இத்தகவலை சொல்லியுள்ளார். இதை நம்பிய வேதவள்ளி மத்திய அரசில் வேலை கிடைக்கபோகிறது என்ற கனவில் 13 லட்சத்தை சென்னை ரவிக்குமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால், ஒரு வருடமாகியும் வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திரும்ப தராமல் முறையான பதிலும் அளிக்காமல் ரவிக்குமார் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சந்தேகமடைந்த வேதவள்ளி செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் ரவிக்குமார் மீது மோசடி புகார் அளித்தார். அதனடிப்படையில், நகர காவல் ஆய்வாளர் விநாயகம் தலைமையில் தனிப்படை அமைத்து ரவிக்குமாரை கைதுசெய்து அவர்மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், செங்கல்பட்டில் மட்டும் வேதவள்ளி, சரவணன் உள்பட 5க்கும் மேற்பட்டோரிடம் சுமார் 50 லட்சம் வரை ரவிக்குமார் மோசடி செய்திருப்பதும், வேதவள்ளி தவிர மற்றவர்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரவிக்குமார் மீது புகார் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Read More

Saturday, December 4, 2021

மாணவர்கள் கல்வி உதவித்தொகையில் மெகா முறைகேடு

December 04, 2021 0
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் மெகா முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2011 முதல் 2014 காலகட்டத்தில் ரூ.17.36 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அசோக்குமார் கொடுத்த புகாரின்பேரில் பெயர் குறிப்பிடாத உயர்கல்வித்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Read More

Saturday, November 27, 2021

அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா முறைகேடு விவகாரம் - உயர்நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு

November 27, 2021 0
அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா முறைகேடு விவகாரம்: விசாரணையை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா காலத்தில் முறைகேடு நடந்தது உண்மை என உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆணையம் தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

அதில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா பதவிக்காலத்தில் சில முறைகேடுகள் நடந்துள்ளதாக விசாரணை ஆணையம் கண்டறிந்துள்ளது என தமிழ்நாடுஅரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சூரப்பா தொடர்ந்த வழக்கு, நீதிபதி பார்த்திபன் முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம், விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பித்து விட்டது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் விசாரணை ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டதால் இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என்றும் சூரப்பா பதவிக்காலத்தில் சில முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆணையம் கண்டறிந்துள்ளது எனவும் தெரிவித்தார். இதையடுத்து, விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலையும், விரிவான பதில் மனுவையும் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி பார்த்திபன், சூரப்பா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
Read More

Monday, November 15, 2021

குறைந்த காலத்தில் இரண்டு மடங்கு தருவதாக ஏமாற்றும் பவர் பேங்க் செயலி - பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க தனி எண், இமெயில் முகவரி - சிபிசிஐடி போலீசார் அறிவிப்பு

November 15, 2021 0
குறைந்த காலத்தில் இரண்டு மடங்கு தருவதாக ஏமாற்றும் பவர் பேங்க் செயலி - பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க தனி எண், இமெயில் முகவரி அறிவித்த சிபிசிஐடி போலீசார்!

பத்திரிக்கை செய்தி குறிப்பு

தமிழ்நாடு, சென்னை, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, கணினி வழி குற்றப்பிரிவில் வலைதளம் மூலம் பவர் பேங்க் என்ற செயலியில் பண முதலீடு செய்து பாதிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பவர் பேங்க் என்ற செயலி கூகுல் பிளே ஸ்டோரில் உள்ளது. இது நேரடியாக பொதுமக்களை குறைந்த காலத்திற்குள் இரண்டு மடங்கு பணம் தருவதாக ஏமாற்றும் வகையில் செயல்படுகிறது. இதன் மூலம் அதிக மக்கள் ஏமாற்றப்பட்டு மாநிலங்களில் இந்த பவர் பேங்க் செயலி சம்மந்தமாக பல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது,

இந்த பவர் பேங்க் சம்மந்தமாக பாதிக்கப்பட்ட மக்கள் யாராவது இருந்தால் விசாரணை அதிகாரி திருமதி.A.வசந்தி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்ற புலனாய்வு துறை, கணினி வழி குற்றப்பிரிவு, சென்னை என்பவரை தொலைபேசி 676001.9444128512 அணுகவும். மற்றும் மின் அஞ்சல் முகவரி cbcyber@nic.in மூலம் மேலும் மின் அஞ்சல் மற்றும் விசாரணை அதிகாரியின் அலுவலக முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மின் அஞ்சல் அஞ்சல் முகவரி cbcyber@nic.in
Read More

Post Top Ad

Your Ad Spot