1 முதல் 5ம் வகுப்பு வரை 81 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்க ஒரே ஆசிரியர்!! - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Wednesday, November 24, 2021

1 முதல் 5ம் வகுப்பு வரை 81 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்க ஒரே ஆசிரியர்!!

நாகை மாவட்டம் வேதா ரண்யம் தாலுகா தகட்டூர் ராமகோவிந்தன்காடு அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 68 மாண வர்களுடன் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு ஒரு மாணவரை வைத்து பள்ளி நடத்திய போது மூடப்பட்டது. பெற் றோர் வலியுறுத்ததால் மீண் டும் திறக்கப்பட்ட அந்த பள்ளிக்கு சுப்பிரமணியன் என்ற ஆசிரியர் பணி அமர்த்தப்பட்டார். அதன் பிறகு ஆசிரியர் சுப்பிரம ணியன் 38 மாணவர்களை இப்பள்ளியில் சேர்த்து, தற்போது மாணவர் எண் ணிக்கை 68 உயர்ந்தது.

இத்தகைய சிறப்புமிக்க இந்த அரசு பள்ளி பள்ளி பல விருதுகளை பெற்றுள் ளது. ஸ்மார்ட் கிளாஸ் மூல மும் ஆன்லைன் வகுப்பு கள் உள்ளிட்டவை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக ஒரே ஒரு ஆசிரியரை மட்டும் வைத்து இப்பள்ளியில் பாடம் நடை பெற்று வருகிறது. தலை மையாசிரியர் கிடையாது. கடந்த 18 மாதங்களாக ஒரே ஆசிரியர் மட்டும் இப்பள் ளியில் 1 முதல்5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கு முதல் வகுப் பிற்கு சேருவதற்காக 13 மாணவர்கள் தற்போதே பள்ளிக்கு வருகின்றனர். பதிவேட்டின்படி 68 மாணவ, மாணவிகளும் அடுத்த ஆண்டு சேர்க்கைக்கு 13 பேர் என மெத்தம் 81 மாணவர்கள் இப்பள்ளி யில் உள்ளனர். மாணவர் கள் இல்லாமல் முடியப் பட்ட இப்பள்ளி, மீண்டும் திறக்கப்பட்டது மகிழ்ச்சி யாக இருந்தாலும், ஆசி ரியர் இல்லாமல் மூடும் நிலைக்கு சென்றுவிடுமோ என்று பெற்றோர்கள் மத்தி யில் அச்சம் எழுந்துள்ளது.

இது குறித்து மேலும் பள்ளியின் அவலம் குறித்து பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியும் நடவடிக்கைஎடுக்க வில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இப்பள்ளிக்கு ஆசிரியரை நியமித்து மாணவர்களின் நலனில் அக்கறை காட்டு மாறு பெற்றோர்கள் வேண் டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதா வது, விரைவில் ஆசிரி யர்களை நியமித்து மாணவர்களுக்கு பாடம் நடைபெறவில்லை என் றால் வரும் இரண்டாம் தேதி வேதாரண்யத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் என் றும். எங்கள் குழந்தைக ளின் கல்வி நலன்கருதி மாற்று சான்றுபெற்று வேறு பள்ளியில் சேர்க்கும் நிலை ஏற்படும் என பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot